ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?

5 posters

Go down

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Empty பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?

Post by சிவா Mon Feb 23, 2015 4:34 pm

அரசும் மக்களும் கைகோத்தால் மட்டுமே தொற்றுநோய்களை அடியோடு ஒழிக்க முடியும்

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் மத்திய மாநிலங்களில் மக்களை அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் வந்து மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது.

இதுவரை 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள். 12,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இத்தனைக்கும் இது ஓர் உயிர்க்கொல்லி நோய் இல்லை. எளிதாகத் தடுத்துவிடக் கூடியதுதான். உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவை நமக்குச் சவால் விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. தோற்றுத்தான் போகிறோம். ஊட்டச்சத்துக் குறைபாடும், நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்து காணப்படுகிற நம் சமுதாயத்தில், தொற்றுக் காய்ச்சலால் ஏற்படுகிற உயிர்ப் பலிகளை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை. எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம், நம்மிடம் போதுமான எச்சரிக்கை விழிப்புணர்வு இல்லை. நோயை ஆரம்பத்திலேயே உறுதி செய்யும் பரிசோதனைக்கூடங்கள் மிகவும் குறைவு. இதனால், நோயைக் கணிப்பதற்குள் நோயாளிக்கு மரணம் நெருங்கிவிடுகிறது.

பன்றிக் காய்ச்சல் தோற்றம்

முதன்முதலில் 2009-ல் மெக்சிகோவில் இந்தக் காய்ச்சல் பரவி, லட்சக் கணக்கில் உயிர்ப் பலி வாங்கியது. பன்றியிடம் காணப்பட்ட வைரஸும் மனிதரிடம் காணப்பட்ட வைரஸும் ஒன்றுபோலிருந்த காரணத்தால், இதற்கு ‘பன்றிக் காய்ச்சல்’(Swine Flu) என்று பெயரிட்டார்கள். இது காற்று மூலம் பரவும் தொற்றுநோய். பன்றியிடமிருந்து மனிதருக்குப் பரவுவதில்லை. ‘ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா வைரஸ்’ எனும் வைரஸ் கிருமி மனிதரைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல் வருகிறது. மற்ற பருவக் காலங்களைவிட, குளிர்காலத்தில் இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது. தென்னிந்திய மாநிலங்களில் இன்னமும் அதிக அளவில் குளிர் நீடிப்பதால் பன்றிக் காய்ச்சல் பரவ சாதகமாகிவிட்டது.

எப்படிப் பரவும்?

நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. ஆறு அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் பரவக்கூடியவை. ஆகவே, காற்றில் பரவும் மற்ற தொற்றுநோய்களைப் போல் மிக நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரவும் என்று அலட்சியமாக இருக்க முடியாது. இந்தக் காய்ச்சல் மக்களிடம் வேகமாகப் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மூன்று வகை நோயாளிகள்

சாதாரண ஃபுளு காய்ச்சலைச் சேர்ந்ததுதான் பன்றிக் காய்ச்சல். இதன் அறிகுறிகளை வைத்து நோயாளிகளை மூன்று வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். முதல் வகையில் மிதமான காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரியும். இவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்காது. எனவே, ரத்தப் பரிசோதனை தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்தில் நோய் கட்டுப்பட்டுவிடும். இரண்டாம் வகையில், இந்த அறிகுறிகளுடன் காய்ச்சல் கடுமையாக இருக்கும். மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். சோர்வு கடுமையாகும். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை அவசியம். காய்ச்சலைக் குறைக்க ‘டாமிஃபுளு’ மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மூன்றாம் வகையில், மேற்சொன்ன அறிகுறிகளுடன் மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இவர்களுக்கு ‘டாமிஃபுளு’ மாத்தி ரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும் தேவைப்படும்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டவர்கள் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், கல்லீரல் நோய், இதயநோய், புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது. இவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தடுப்பது எப்படி?

இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப்போட்டுத் தண்ணீரில் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும் கூடாது.கைகுலுக்காதீர்கள். பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப்போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். வெளியில் செல்லும்போது முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடியை அணியுங்கள். சுய மருத்துவம் வேண்டாம். காய்ச்சல், சளி உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.

ஃபுளு காய்ச்சலைத் தடுக்க உதவுகின்ற ‘வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’யை (Trivalent inactivated vaccine - TIV) மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் போட்டுக்கொள்ளலாம். இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும். எனவே, வருடாவருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் எப்போதும் வராது.

அரசின் கடமை

இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் இப்போது ஆண்டுதோறும் குளிர்காலத்தில் பரவுகிற பருவக் காய்ச்சலாக மாறிவருகிறது. நடைமுறையில், நோய் பரவி இறப்போர் எண்ணிக்கை அதிகமாகும்போதுதான் மாநிலஅரசும் மத்தியப் பொதுசுகாதாரத் துறையும் களத்தில் இறங்குகின்றன. பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்துவதில் மாத்திரை, மருந்துகளைவிடவும் மிக முக்கியமானது நோய்த்தடுப்பு. பன்றிக் காய்ச்சலுக்குரிய கிருமிகளின் தன்மையைத் தொடர்ந்து கண்காணிப்பதும், நோய் பரவ வாய்ப்புள்ள மழைக்காலத்துக்கு முன்பே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை உஷார்படுத்துவதும் நோய் தொடங்கிய பகுதிகளில் சிறப்பு முகாம்களை ஏற்படுத்துவதும் இந்தக் கொள்ளைநோயால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க சரியான வழி. தவிர, இந்தக் காய்ச்சலை உறுதிசெய்யும் ரத்தப் பரிசோதனை வசதியை அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயமாக்கிவிட்டால், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி உயிரைக் காப்பாற்ற முடியும்.

பன்றிக் காய்ச்சலுக்குரிய தடுப்பூசி இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை 500-லிருந்து 1,000 ரூபாய் வரை இருக்கிறது. இதனால், இதை மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே போடுகிறார்கள்.இதையே உள்நாட்டில் தயாரித்தால் இதன் விலை 100 ரூபாய்க்குத் தர முடியும். அப்போது பொதுமக்களுக்கும் அதைப் போட முடியும். இதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களைப் பொறுத்தவரை பொது சுத்தம் மிக முக்கியம்.

இப்படி அரசும் மக்களும் கைகோத்தால் மட்டுமே பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை அடியோடு ஒழிக்க முடியும்.

டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்


பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Empty Re: பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?

Post by krishnaamma Mon Feb 23, 2015 4:40 pm

நல்ல விழிப்புணர்வு பகிர்வு சிவாபுன்னகை....நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Empty Re: பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?

Post by ஜாஹீதாபானு Mon Feb 23, 2015 5:43 pm

நல்ல தகவல் நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Empty Re: பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?

Post by சிவனாசான் Tue Feb 24, 2015 5:17 am

நல்ல தகவல் பதிவு.......... நன்றி நன்றி.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Empty Re: பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?

Post by Powenraj Tue Feb 24, 2015 8:26 am

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? 1571444738 பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? 1571444738 பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? 1571444738


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? Empty Re: பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum