Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)
+2
ayyasamy ram
சிவா
6 posters
Page 1 of 1
சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)
ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாள் ‘தாய்மொழி நாளாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்கதேச மொழியுரிமை போராளிகளின் நினைவாக 2000-மாவது ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
மொழிகள் இனங்களை அடையாளம் காட்டுவன; அந்தந்த இனமக்களின் அமைதியான வாழ்வுக்கு மொழிகள் அடிப்படையாகத் திகழ்வன சமுதாய ஒருமைப்பாட்டுக்கும் நிலையான வளர்ச்சிக்கும் துணை நிற்பன.
தற்போது உலகமெங்கும் சுமார் 7000 மொழிகள் பேச்சு வழக்கிலும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் ஏட்டில் இடம்பெறாத நிலையிலும் உள்ளன. ஏட்டில் இடம்பெற்று பேச்சில் இடம்பெறாத மொழிகள் ஏட்டிலும் பேச்சிலும் இடம் பெற்று இலக்கிய வளம் பெறாத மொழிகள் இலக்கிய வளம் பெற்றும் ஆட்சியில் இடம் பெறாத மொழிகள் என்று பல நிலைகளில் மொழிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
வளமான மொழிகளிலேயேகூட ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் கல்வி மொழியாக ஊடக மொழியாக கணினிமொழியாக ஆக்கப்படவில்லை என்றும் இப்போது பேச்சு வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகளில் சரிபாதி அடுத்த சில தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்றும் கூறுகிறார் யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்.
மொழிகள் அழிந்தால் அது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே ஆபத்தாகும். மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால் சிந்தனைகள் குறையும். மொழிகளின் அழிவைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம். ஒவ்வொரு மொழிக் குடும்பத்தாரும் தத்தமது மொழியை தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்று அந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும். அதற்கிணங்க ஐ.நா. தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம் பிரெஞ்சு சீனம் ஸ்பானிஷ் ரஷியன் அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல் அனைத்தையும் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டும் என்றும் தம் அறிக்கைகள் ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது.
தாய்மொழியை அனைத்து மக்களும் கற்றுப் பயன்படுத்துவதுடன் தேசிய மொழி ஒன்றையும் பன்னாட்டு மொழி ஒன்றையும் கூடக் கற்றுக் கொள்வது நல்லதுதான். உலகமயமாகும் இக்காலச் சூழலில் பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும்தான். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
“”ஆங்கில மொழியில் எழுதுவதை விடப் பேசுவதைவிட என் தாய்மொழி குஜராத்தில் எழுதினால் பேசினால் எளிமையாக என்னால் கருத்துகளை வெளிப்படுத்த முடியும்””- மகாத்மாவின் இந்த சிந்தனையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
செம்மொழியான தமிழ்மொழி
உலக மொழிகள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் அது அறுநூறு. அவற்றுள் இலக்கியம் மற்றும் இலக்கணம் உடையவை என்று பார்த்தால் வெறும் முன்னூறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உடைய மொழிகள் எத்தனை என்று பார்த்தால் எண்ணிக்கை ஒற்றை இலக்கில்தான் உள்ளது.
அதாவது ஆறு மொழிகள் மட்டுமே அத்தகைய சிறப்பு கொண்டவை.
1. தமிழ்
2. சீனம்
3. சமஸ்கிருதம்
4. இலத்தீன்
5. ஹீப்ரு
6. கீரிக்
இந்த ஆறு மொழிகளில் முதலிடம் வகிப்பது தமிழ். தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளை நுண்ணிய உணர்வுகளை மிகத் தெளிவாக அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கின்றார்.
உலக மொழிகளில் காந்த சக்தி கொண்டது தமிழ். ஒரு மொழியை நன்கு ஆய்வு செய்த பின்னரே அம்மொழியின் வளம் பற்றி பேச முடியும். ஆச்சார்யா வினோபா பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து உலகுக்கு உரைத்தவர். அவர் அன்னைத் தமிழின் பெருமைகளை கூறும் போது இவ்வாறு கூறுகிறார், “”லத்தீன் மொழியைப் போன்று தமிழ்மொழி அளவற்றவினைச் சொற்களைக் கொண்டுள்ளது. ஒரு மொழியின் வளம் அதன் வினைச் சொற்களில் அளவில் அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் உயர் தனிச்செம்மொழி என்பதில் ஐயமில்லை”” என்று கூறியிருக்கிறார்.
ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்றநூலில் மொஹஞ்சாதாரோ ஹரப்பா ஆகிய இடங்களில் திராவிட நாகரிகம் இருந்ததாக குறிப்பிட்டு எழுதியுள்ளார். அப்படிப்பட்ட நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நம்முடைய மொழி தமிழ்மொழி.
செம்மொழி மாநாட்டின்போது நாடு நகரமெங்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினையை மக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். கடல்கோள்களை எதிர் கொண்டும் காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகள் அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளுவதாக அழகிய பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது மாநாட்டின் இலச்சினை. அறம் பொருள் இன்பம் எனும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் அவர் மூன்று விரல்களைக் காட்டுவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் ஹரப்பாவிலிருந்த குறியீடுகளும் இடம் பெற்றிருந்தன.
செம்மொழி மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக ‘பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்’ என்பது அமைந்திருந்தது. ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும், இச்சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.
‘என்றுமுள தென்றமிழ்’ என்று கம்பன் தமிழின் இனிமையை தன் படைப்புக் காப்பியங்களில் உணர்த்தியிருக்கிறார். எம்மொழியும் பெறாத முச்சங்கம் அதாவது தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று சங்கம் வைத்து வளர்ந்த செம்மையான மொழி நம் தமிழ்ச் செம்மொழி.
உலக மொழிகள் பலவற்றுக்கும் தாயாகிய மொழி நம் தமிழ்மொழி. நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுத்து மொழியாய் ஏறுநடை போட்ட மொழி தமிழ்மொழி. மொழி பேசுவதற்குரிய ஒரு கருவி என்று சொல்லப்பட்டாலும் நம்மொழி வாழ்வியல் மொழியாய் வளர்ந்து செழித்து தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் தழுவிக் கொண்டு தமிழனத்தை வளர்த்த மொழி. நம் தாய்மொழியான தமிழ்மொழியை போற்றுவோம் வணங்குவோம் பாதுகாப்போம்.
மனோகரன் பி.கே
மொழிகள் இனங்களை அடையாளம் காட்டுவன; அந்தந்த இனமக்களின் அமைதியான வாழ்வுக்கு மொழிகள் அடிப்படையாகத் திகழ்வன சமுதாய ஒருமைப்பாட்டுக்கும் நிலையான வளர்ச்சிக்கும் துணை நிற்பன.
தற்போது உலகமெங்கும் சுமார் 7000 மொழிகள் பேச்சு வழக்கிலும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் ஏட்டில் இடம்பெறாத நிலையிலும் உள்ளன. ஏட்டில் இடம்பெற்று பேச்சில் இடம்பெறாத மொழிகள் ஏட்டிலும் பேச்சிலும் இடம் பெற்று இலக்கிய வளம் பெறாத மொழிகள் இலக்கிய வளம் பெற்றும் ஆட்சியில் இடம் பெறாத மொழிகள் என்று பல நிலைகளில் மொழிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
வளமான மொழிகளிலேயேகூட ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் கல்வி மொழியாக ஊடக மொழியாக கணினிமொழியாக ஆக்கப்படவில்லை என்றும் இப்போது பேச்சு வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகளில் சரிபாதி அடுத்த சில தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்றும் கூறுகிறார் யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்.
மொழிகள் அழிந்தால் அது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே ஆபத்தாகும். மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால் சிந்தனைகள் குறையும். மொழிகளின் அழிவைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம். ஒவ்வொரு மொழிக் குடும்பத்தாரும் தத்தமது மொழியை தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்று அந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும். அதற்கிணங்க ஐ.நா. தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம் பிரெஞ்சு சீனம் ஸ்பானிஷ் ரஷியன் அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல் அனைத்தையும் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டும் என்றும் தம் அறிக்கைகள் ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் வெளியிட்டு வருகிறது.
தாய்மொழியை அனைத்து மக்களும் கற்றுப் பயன்படுத்துவதுடன் தேசிய மொழி ஒன்றையும் பன்னாட்டு மொழி ஒன்றையும் கூடக் கற்றுக் கொள்வது நல்லதுதான். உலகமயமாகும் இக்காலச் சூழலில் பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும்தான். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
“”ஆங்கில மொழியில் எழுதுவதை விடப் பேசுவதைவிட என் தாய்மொழி குஜராத்தில் எழுதினால் பேசினால் எளிமையாக என்னால் கருத்துகளை வெளிப்படுத்த முடியும்””- மகாத்மாவின் இந்த சிந்தனையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
செம்மொழியான தமிழ்மொழி
உலக மொழிகள் என்று எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் அது அறுநூறு. அவற்றுள் இலக்கியம் மற்றும் இலக்கணம் உடையவை என்று பார்த்தால் வெறும் முன்னூறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு உடைய மொழிகள் எத்தனை என்று பார்த்தால் எண்ணிக்கை ஒற்றை இலக்கில்தான் உள்ளது.
அதாவது ஆறு மொழிகள் மட்டுமே அத்தகைய சிறப்பு கொண்டவை.
1. தமிழ்
2. சீனம்
3. சமஸ்கிருதம்
4. இலத்தீன்
5. ஹீப்ரு
6. கீரிக்
இந்த ஆறு மொழிகளில் முதலிடம் வகிப்பது தமிழ். தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளை நுண்ணிய உணர்வுகளை மிகத் தெளிவாக அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கின்றார்.
உலக மொழிகளில் காந்த சக்தி கொண்டது தமிழ். ஒரு மொழியை நன்கு ஆய்வு செய்த பின்னரே அம்மொழியின் வளம் பற்றி பேச முடியும். ஆச்சார்யா வினோபா பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அவர் தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து உலகுக்கு உரைத்தவர். அவர் அன்னைத் தமிழின் பெருமைகளை கூறும் போது இவ்வாறு கூறுகிறார், “”லத்தீன் மொழியைப் போன்று தமிழ்மொழி அளவற்றவினைச் சொற்களைக் கொண்டுள்ளது. ஒரு மொழியின் வளம் அதன் வினைச் சொற்களில் அளவில் அமைந்துள்ளது. அந்த வகையில் தமிழ் உயர் தனிச்செம்மொழி என்பதில் ஐயமில்லை”” என்று கூறியிருக்கிறார்.
ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் எழுதிய ‘உலக சரித்திரம்’ என்றநூலில் மொஹஞ்சாதாரோ ஹரப்பா ஆகிய இடங்களில் திராவிட நாகரிகம் இருந்ததாக குறிப்பிட்டு எழுதியுள்ளார். அப்படிப்பட்ட நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நம்முடைய மொழி தமிழ்மொழி.
செம்மொழி மாநாட்டின்போது நாடு நகரமெங்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினையை மக்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். கடல்கோள்களை எதிர் கொண்டும் காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகள் அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளுவதாக அழகிய பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது மாநாட்டின் இலச்சினை. அறம் பொருள் இன்பம் எனும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் அவர் மூன்று விரல்களைக் காட்டுவதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் ஹரப்பாவிலிருந்த குறியீடுகளும் இடம் பெற்றிருந்தன.
செம்மொழி மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக ‘பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்’ என்பது அமைந்திருந்தது. ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும், இச்சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.
‘என்றுமுள தென்றமிழ்’ என்று கம்பன் தமிழின் இனிமையை தன் படைப்புக் காப்பியங்களில் உணர்த்தியிருக்கிறார். எம்மொழியும் பெறாத முச்சங்கம் அதாவது தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கம் என்று சங்கம் வைத்து வளர்ந்த செம்மையான மொழி நம் தமிழ்ச் செம்மொழி.
உலக மொழிகள் பலவற்றுக்கும் தாயாகிய மொழி நம் தமிழ்மொழி. நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுத்து மொழியாய் ஏறுநடை போட்ட மொழி தமிழ்மொழி. மொழி பேசுவதற்குரிய ஒரு கருவி என்று சொல்லப்பட்டாலும் நம்மொழி வாழ்வியல் மொழியாய் வளர்ந்து செழித்து தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் தழுவிக் கொண்டு தமிழனத்தை வளர்த்த மொழி. நம் தாய்மொழியான தமிழ்மொழியை போற்றுவோம் வணங்குவோம் பாதுகாப்போம்.
மனோகரன் பி.கே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)
//இந்த ஆறு மொழிகளில் முதலிடம் வகிப்பது தமிழ். தமிழ் மொழி மட்டுமே மனித சிந்தனைகளை நுண்ணிய உணர்வுகளை மிகத் தெளிவாக அழுத்தந்திருத்தமாக உணர்த்தும் ஆற்றல் கொண்ட மொழி என்று மொழியியல் தந்தை எமினோ கூறியிருக்கின்றார்.//
நல்ல பகிர்வு சிவா
...நன்றி !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நல்ல பகிர்வு சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21)
அற்புதமான பகிர்வு.....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![சர்வதேச தாய் மொழி நாள் (பிப்.21) W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நாம் தமிழன்
செம்மொழி மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக ‘பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்’ என்பது அமைந்திருந்தது. ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதாகும், இச்சிந்தனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.
நல்ல பதிவு
நாம் தமிழன் என்று பெருமை அடைவோம்
ராஜி ராணி
நல்ல பதிவு
நாம் தமிழன் என்று பெருமை அடைவோம்
ராஜி ராணி
rajirani- பண்பாளர்
- பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கை விடுதலை அடைந்த நாள் (பிப்.4, 1948)
» தாய் மொழி
» " தாய் மொழி "
» தாய் மொழி !
» தாய் தமிழ் மொழி ....!
» தாய் மொழி
» " தாய் மொழி "
» தாய் மொழி !
» தாய் தமிழ் மொழி ....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|