புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
284 Posts - 45%
heezulia
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
19 Posts - 3%
prajai
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
7 Posts - 1%
mruthun
உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_m10உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 21, 2015 6:13 pm

காதல் திருமணங்கள் என்றாலே த்ரில்தான். அப்படி ஒரு த்ரில் திருமணம்தான், மாதேஷ் அனிதாவுடையதும்! வலுக்கட்டாயமாக இன்னொரு வருடன் மணமேடை வரை கொண்டு செல்லப்பட்ட தன் காதலியை, உயிரைப் பணயம் வைத்துப் போராடி தன் மனைவியாக்கியிருக்கிறார் மாதேஷ்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்துள்ள ராமாபுரத்தில் வசிக்கும் இந்த புதுமணத் தம்பதியை, வியப்பு கலந்த வாழ்த்துகளுடன் சந்தித்தோம்.

உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி N6RaaIqQnqNsXqsEMABk+p91
''நீங்க கொஞ்ச நேரத்துல சாகப்போறீங்க; உங்க காதலிக்கு வேறொருத்தரோட கல்யாணம் நடக்கப் போகுது... இப்படி ஒரு சூழல்ல, என்ன பண்ணுவீங்க? 'என்னதான் ஆகுது பார்த்துருவோம்டா’னு ஒரு வீரம் வரும் பாருங்க... அந்த தைரியம்தான் இன்னிக்கு அனிதாவை எங்கிட்ட சேர்த்திருக்கு!''

வெட்கம் பூக்கிறது மாதேஷ் முகத்தில்.

''பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். அப்பா, அம்மா, ரெண்டு தம்பிங்க... இதுதான் என் குடும்பம். லோன் போட்டு ஒரு சுமோ கார் வாங்கி, ஓசூர்ல ஓட்டினேன். பெங்களூருல இருக்குற ஒரு கார்மென்ட் கம்பெனிக்கு வேலையாட்களை அழைச்சிக்கிட்டுப் போற கான்ட்ராக்ட் கிடைச்சது. அப்படி ஆணும் பொண்ணுமா ஏத்திட்டுப் போன 10 பேர்ல ஒருத்தர்தான், அனிதா!''

அறிமுகம் தந்து நிறுத்தினார் மாதேஷ்.

அனிதாவுக்குப் பூர்விகம் ஆந்திரா. ''குடும்பத்தோட சூளகிரிக்கு பக்கத்துல இருக்குற கொரளத்தொட்டிக்கு வந்துட்டோம். ஒரு அண்ணன், ரெண்டு தங்கச்சி, நான்னு வீட்டுல மொத்தம் நாலு பசங்க. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கூலி வேல. பத்தாவதுக்கு மேல எனக்கு படிப்பு வரல. கார்மென்ட் கம்பெனி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்போதான் இவரைப் பார்த்தேன். ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சோம்.

ரெண்டு பேரோட குடும்பச் சூழலையும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டதால, கடமைகளை கொஞ்சம் முடிச்சிட்டு, ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். எங்கூட வேலைபார்க்குற ஒருத்தர், இதை எங்கம்மாகிட்ட சொல்லிட்டாங்க. உடனே சட்டுனு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க. மாதேஷுக்கு போன் பண்ணி, 'எப்படியாச்சும் என்னைக் கூட்டிட்டுப் போயிடுங்க’னு அழுதேன். ஜனவரி 22-ம் தேதி பந்தல் நாள், 23-ம் தேதி சூளகிரியில கல்யாணம். '22-ம் தேதி ராத்திரி என் ஃப்ரெண்ட்ஸை அனுப்புறேன். அவங்ககூட வந்துடு’னு சொன்னார் மாதேஷ்.

கல்யாணத்துக்கு முதல் நாள் நைட், மண்டபத்துல திடீர்னு லைட் ஆஃப் ஆயிருச்சு. ஒரே சத்தம். வெளிய வந்து பார்த்தா, மாதேஷோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர், எங்க சொந்தக்காரங்க பிடியில இருக்காங்க. லைட்டை ஆஃப் பண்ணிட்டு என்னைக் கூட்டிட்டுப் போக என் ரூமுக்கு வந்திட்டிருந்ததை எங்க மாமா பார்த்துட்டார். பொண்ணைத் தூக்க வந்திருக்காங்கனு தெரிஞ்சுபோச்சு. ஆனா, அதை வெளிய சொல்ல முடியாதுங் கிறதால, திருடனுங்கனு சொல்லி போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துட்டாங்க. என்னையும் ரூம்ல அடைச்சு வெச்சுட்டாங்க. மாதேஷ் வருவார்ங்கிற நம்பிக்கை எனக்கு சுத்தமா போயிருச்சு. மறுநாள் காலையில முகூர்த்த நேரத்துக்கு நான் மணமேடைக்கு வந்துட்டேன். மாப்பிள்ளையும் வரப்போறார். திடீர்னு என் எதிர்ல வந்து நிக்குறார் மாதேஷ்!'' சினிமா காட்சியின் விறுவிறுப்போடு சென்றது கதை!

''அப்புறம் என்ன நடந்துச்சுன்னா...''

மாதேஷ் குரலில் பூரிப்பு.

''நான் அனுப்பின மூணு ஃப்ரெண்ட்ஸ்ல ரெண்டு பேர்தான் மாட்டினாங்க. இன்னொருத்தன் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டான். என்ன பண்றதுனு தெரியாம, இயலாமையில விடியக்காத்தால விஷத்தைக் குடிச்சிட்டேன். சாகப்போற பயம் ஒரு பக்கம்; என் காதலிக்குக் கல்யாணம்ங்கிற வலி ஒரு பக்கம். என்னதான் நடக்குதுனு பார்த்துடலாம்னு ஒரு தைரியம் வந்துருச்சு.

உயிரைப் பணயம் வைத்து ஒரு காதல்! சினிமாவை மிஞ்சும் ரியல் ஸ்டோரி OaeiVcwtScGrtJnXXqX9+p92

மஞ்சகொம்புல தாலி ஒண்ணு ரெடி பண்ணி பாக்கெட்ல வெச்சிக்கிட்டு, மொய் கவரோட மேடைக்குப் போனேன். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியான அனிதா ஒரே அழுகையா அழுதா. ஆகுறதைப் பாத்துக்கலாம்னு பாக்கெட்ல வெச்சிருந்த தாலியை எடுத்து அவ கழுத்துல போட்டுட்டேன். அவ சொந்தக்காரங்க எல்லோரும் சேர்ந்து என்னை வெளுத்தப்போ, அதுல ஒருத்தர் என் பாக்கெட்ல இருந்த விஷ பாட்டிலை பார்த்துட்டார். 'பையன் விஷம் குடிச்சுருக்கான்'னு அவர் சொல்ல, அடிச்சவங்க எல்லோரும் விலகிட்டாங்க. போலீஸுக்குத் தகவல் கொடுத்து, என்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க, அங்க நான் பொழச்சுட்டேன்!''

மாதேஷ் நிறுத்த...

"எனக்கு முடிவாகியிருந்த மாப்பிள்ளை, என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லி, அதே மேடையில அவரோட அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அப்பக்கூட எங்க வீட்டுல என்னை இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்காம, எங்க அத்தை பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசினாங்க. எங்க அத்தை ஒப்புக்கல. அப்புறம் கிராமத்து ஆளுங்க எங்க ரெண்டு வீட்டுலயும் பேசி கல்யாணத்தை முடிச்சு வெச்சாங்க!''

ஒருவழியாக சுப க்ளைமாக்ஸ் விழுந்ததைச் சொன்னார் அனிதா!

''ரெண்டு பேரும் வேற வேற ஜாதி. கல்யாணத்துக்கு அப்புறம் அனிதா வீட்டுக்காரங்க எங்கிட்ட, 'இந்தாப்பா... எங்க கிராமத்துக் காரங்க உங்களை ஏத்துக்க மாட்டாங்க. நீங்க எங்க வீட்டுக்கு வர முடியாது, வரவும் வேண்டியதில்ல. நல்லாயிருந்தா சரி!’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஒரு நாள் அவங்களே தேடி வந்து எங்களை ஏத்துக்குற மாதிரி நாங்க வாழ்ந்து காட்டுவோம்!''

அனிதாவின் கைகோத்துச் சொல்கிறார் மாதேஷ்!

வாழ்வின் உத்வேகம் காதல்தானே!

நன்றி-அவள்விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 7:03 pm

ம்..............படம் பார்த்த மாதிரி இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக