Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
4 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
First topic message reminder :
இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள்.
- சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது நீதான்.
- உலக வரலாற்றைப் பாருங்கள். மேன்மையாக ஏதாவது சாதித்த அனைவரும் மிகுந்த முயற்சியுடன் உழைத்தனர் என்பதைக் காண்பீர்கள்.
- வெற்றி என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. அது, இடைவிடாது செய்யும் முயற்சிக்குக் கிடைத்த வரமாகும்.
- உண்மையான பயனும், இடைவிடாத முயற்சியும் எப்போதும் இணைபிரியாதவை.
- இடைவிடாத முயற்சியினால் மட்டுமே உயர்ந்த, விலைமதிப்பற்ற பொருளைப் பெறமுடியும்.
- எந்தத் துறையாயினும், உயர்ந்த சாதனையை சொல்லிலும், செயலிலும் வேறுபாடற்ற, ஓய்வற்ற முயற்சியினாலேயே பெற இயலும்.
- நாம் செய்யும் செயலிலே பயனைப் பெறவேண்டுமெனில் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதனைச் செய்யவேண்டுமென்ற உறுதியுடன் முன்னேற வேண்டும்.
- செய்யும் வேலைகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்யுங்கள்.
- எதிர்கால இன்பம், கனவுகளை கற்பனை செய்துகொண்டு சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
- இந்த நாள் நல்ல நாள். நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனை எல்லாவிதங்களிலும் முயன்று, நல்ல முறையிலே பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
- எதிர்காலத் திட்டங்களிலே வெற்றிபெற வேண்டுமானால் நிகழ்காலத்தை நன்கு, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- நிகழ்காலத்தில் செயலாற்றினால் மட்டுமே சராசரியானவன் திறமைசாலியாக முடியும்.
- முழுமையாக செயலாற்றுவதற்கு நீங்கள் கற்றுக் கொண்டால், நீங்கள் யாரைப்பற்றியும் பயப்படத் தேவையில்லை.
உங்களின் திறமையில் நம்பிக்கை வையுங்கள்.
- நம் வாழ்வின் வெற்றியென்பது, ஒவ்வொரு நாளின் ஒவ்வொருமணியிலும், ஒவ்வொரு நொடியிலும் நாம் வாழும் முறையினைச் சார்ந்தே உள்ளது.
- நீங்கள் வாழும் முறையைச் சிறிது திறனாய்வு செய்துகொள்ளுங்கள். சிறிது விழிப்புணர்வுடன் உங்கள் நோக்கத்தைக் கண்டுகொள்ளுங்கள்.
- உங்களிடம் அடங்கியுள்ள ஆற்றலை, தட்டியெழுப்ப வேண்டுமெனில் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
- உங்கள் நோக்கத்தைக் குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்.
- உங்களின் இலக்கைக் குறித்த தெளிவு உங்களுக்கு இருந்தால், உங்களின் மன ஆற்றல் அந்த திசை நோக்கி பாயத் தொடங்கும்.
- சிரத்தையுடன் முயற்சி செய்தால் எதையும் அடையமுடியும்.
- தீவிரமான ஆசை மற்றும் தீவிரமான விருப்பங்களே இலக்கை சாதிப்பதற்கான சூழ்நிலைக்கு உங்களை இழுத்துச் செல்கின்றன.
- மனிதன் எதை ஆசைப்படுகிறானோ அதையே அடைகிறான்.
- உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது கண்டிப்பாகக் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அடைவதற்கு உடனே செயலில் இறங்குங்கள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
தன்னம்பிக்கை சூப் 13 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் என்பதை நம்புங்கள்.
- சோம்பேறியாக இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது. பணம் சம்பாதிக்க உழைப்பைக் கொடுத்தாக வேண்டும்.
- நேற்று என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். இன்று புதிதாகத் துவங்குகிறது.
- யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும். அதற்காக நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.
- செல்வம் சம்பாதிப்பவர்களெல்லாம் அதிகாலையில் எழுந்து, நாள்முழுவதும் கடுமையாக உழைப்பவர்களே.
- பணம் பணத்தைப் பெருக்கும் இயல்புடையது.
- சம்பாதிக்கும் பணத்தில் உங்கள் வளர்ச்சிக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வையுங்கள்.
- உங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது மிகமிக முக்கியம்.
- பல சக்திகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.
- மகிழ்ச்சி என்பது உங்களுக்குள்தான் இருக்கிறது.
- பணக்காரராக வேண்டுமென்று நீங்கள் தீவிரமாக சிந்திப்பீர்களேயானால், பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் இலட்சியத்துடன் வாழுங்கள், இலட்சியத்துடனே மூச்சு விடுங்கள், இலட்சியத்துடனே தூங்கச் செல்லுங்கள். இலட்சியத்தைவிட்டு ஒரு கணமும் பிரியாதீர்கள்.
- பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் இலட்சியக் கனவுகளை எந்நேரமும் சுமப்பவர்களாகவும், அதற்காக சில தியாகங்களைச் செய்யத் தயாராக உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
- திட்டமிடுதலே உங்கள் இலக்கை அடைவதற்கு வழிகாட்டும்.
- நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக ஒரு திட்டமிட வேண்டியதும் அதன்படி செயல்பட வேண்டியதும் அவசியம்.
- முயற்சி அதிகமாக இருந்தால் அதனால் ஏற்படும் பலனும் அதிகமாகவே இருக்கும்.
- செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் மனதைக் குவிக்க வேண்டும்.
- உங்கள் உள்மனக் குரலுக்கு மதிப்பளியுங்கள்.
- யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம், அதற்கு வயதோ, காலமோ தடையல்ல.
- செல்வந்தராக வேண்டுமானால் முதலில் அதைப்பற்றி ஆழமாகச் சிந்தியுங்கள். வழிகள் தானாகவே திறக்கும்.
- உங்களுக்கு எதுவும் அதிகமாகக் கிடைக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதிகமாகச் செயலாற்ற வேண்டும்.
- எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை இப்போதே தொடங்கிவிடுவது நல்லது.
- நேரத்தை ஒருபோதும் வீணாகக் கழிக்காதீர்கள்.
- செல்வந்தரான பிறகு கஷ்டப்பட வேண்டியதில்லை. ஆனால் அதற்கான வேலையை நீங்கள் முதலில் செய்தாக வேண்டும்.
- நீண்ட நேரத்துக்கு உங்களால் உழைக்க முடியும் என்றால், அதை சரியானவற்றின் மீது செலுத்த முடியுமென்றால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.
- உங்கள் தேவை, இலக்கு, நோக்கம் என்னவென்பதில் தெளிவாக இருங்கள்.
- சிக்கனமாக இருப்பது அவசியம்தான். அதற்காக உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்துவிடாதீர்கள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
இனிய தோழமைக்கு மிக்க நன்றி.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
subramanian sivan wrote:
நேற்று என்ன செய்தீர்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். இன்று புதிதாகத் துவங்குகிறது.
"நேற்று" என்பது நேற்று மட்டும் அல்ல : கடந்த காலம் .கடந்த காலத்தில் செய்தது சரியான செயலா /தவறான செயலா என்று ஆராய்தலே ,நம்மை /எதிர்காலத்தை செம்மை படுத்தும் என்பதே என் கருத்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
//சிக்கனமாக இருப்பது அவசியம்தான். அதற்காக உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்துவிடாதீர்கள்.//
ஆமாம், சிக்கனமாக இருக்கலாம் அதற்காக 'கஞ்சத்தனமாக' இருக்க கூடாது
ஆமாம், சிக்கனமாக இருக்கலாம் அதற்காக 'கஞ்சத்தனமாக' இருக்க கூடாது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
[quote="T.N.Balasubramanian"]
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
நேற்று என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை மீண்டும் செய்யாமல் இருப்பது அவசியம்தான் தாங்கள் கூறுவதுபோல். ஆனால் சிலர் பழைய தவறையே நினைத்து வருந்திக் கொண்டே இருப்பார்கள். மீண்டும் மீண்டும் அதையே நினைக்கும்போது எண்ண அலைகள் அதைப் போலவே பல தவறுகளை உருவாக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை உணர்த்தும் வகையில்தான் இந்த வார்த்தைகள். கண்டிப்பாக தாங்கள் கூறியபடியே நம் பழைய தவறுகளை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து மீண்டும் செய்யாமல் தவிர்க்க வேண்டியது உண்மைதான். மிக்க நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1122956subramanian sivan wrote:
"நேற்று" என்பது நேற்று மட்டும் அல்ல : கடந்த காலம் .கடந்த காலத்தில் செய்தது சரியான செயலா /தவறான செயலா என்று ஆராய்தலே ,நம்மை /எதிர்காலத்தை செம்மை படுத்தும் என்பதே என் கருத்து .
ரமணியன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
நேற்று என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை மீண்டும் செய்யாமல் இருப்பது அவசியம்தான் தாங்கள் கூறுவதுபோல். ஆனால் சிலர் பழைய தவறையே நினைத்து வருந்திக் கொண்டே இருப்பார்கள். மீண்டும் மீண்டும் அதையே நினைக்கும்போது எண்ண அலைகள் அதைப் போலவே பல தவறுகளை உருவாக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை உணர்த்தும் வகையில்தான் இந்த வார்த்தைகள். கண்டிப்பாக தாங்கள் கூறியபடியே நம் பழைய தவறுகளை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து மீண்டும் செய்யாமல் தவிர்க்க வேண்டியது உண்மைதான். மிக்க நன்றி ஐயா.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
தன்னம்பிக்கை சூப் 14 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் நம் வாழ்வை மகிழ்ச்சியாக்கும்.
- உங்களை செல்வந்தராக்கக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் நழுவவிட்டு விடாதீர்கள்.
- ஒன்றுமே செய்யாமலிருப்பதைவிட, ஏதாவது செய்வது நல்லது.
- உங்கள் திறமைகளை நாள்தோறும் சிறிதளவாவது வளர்த்துக்கொண்டே இருங்கள்.
- இந்த உலகில் உங்களைத்தவிர வேறு யாரும் உங்களைச் செல்வந்தராக்க முடியாது.
- ஒவ்வொரு நாளின் முடிவிலும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பது அவசியம்.
- உங்கள் தனித்திறமையை கண்டறிந்து அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று எதையும் ஒத்தி போடாதீர்கள். இன்றே, இப்போதே செய்துவிடுங்கள்.
- விரும்பியதை அடைய முடியாவிட்டால் கவலைப்படாதீர்கள். இன்னும் கடினமாக உழைக்க ஆரம்பித்து விடுங்கள்.
- நேர்மறையான சிந்தனைகளை வலுக்கட்டாயமாகவாவது உங்கள் மனதில் பதியவைத்து விடுங்கள்.
- வேலைகளைத் திட்டமிடுவதில்தான் உங்கள் வெற்றியின் இரகசியம் இருக்கிறது.
- எந்தச் செயலில் இறங்கினாலும் அதன் உச்சத்தை அடைவது பற்றியே உங்கள் கவனம் இருக்கட்டும்.
- உங்கள் செயல்திறனை முழுமையாகப் பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள்.
- வளர்ச்சிக்கான வழிமுறைகள் பற்றி மட்டுமே சிந்தியுங்கள்.
- எப்போதும் உற்சாகமாகவும், நேர்மறையான எண்ணத்துடனும் இருங்கள்.
- எதையும், எப்போதும் முழுமையாகச் செய்ய முயற்சி செய்யுங்கள்.
- சாதாரண வெற்றிகளை நினைத்து சந்தோஷப்படுங்கள். ஆனால் அதிலேயே தங்கிவிடாதீர்கள்.
- உங்கள் கனவை எட்டுவதற்கான தகுதி உங்களுக்கு உண்டு என்பதை உறுதியாக நம்புங்கள்.
- உங்கள் இலக்கை அடையவேண்டும் என்று தீவிரமாக நம்புங்கள். அதற்கான வழிகளை உங்கள் உள்மனமே காட்டும்.
- உங்கள் இலக்கை அடைய வேண்டுமா? அசாத்தியமான நம்பிக்கையுடன் எல்லா முயற்சிகளையும் முழு மனதோடு செய்யுங்கள்.
- உங்கள் இலக்கை அடையவேண்டுமெனில் அதுபற்றிய முயற்சிகளுக்கு தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி செயல்படுங்கள்.
- உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று தீவிரமாக ஆசைப்பட்டால் உங்கள் முன்னேற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
- ஏதேனும் தோல்வி வரும்போது நீங்கள் முன்பு அடைந்த வெற்றிகளை எண்ணிப் பாருங்கள்.
- உங்களின் வெற்றி வாசலைத் திறக்கும் சாவி உங்களின் ஆழ்மனம்தான்.
- சாதாரண வேலையைக்கூட நம்பிக்கையுடன் செய்பவர்கள்தான் அசாதாரணமான வேலையை எளிதாகச் செய்துமுடிப்பார்கள்.
- வெற்றி என்பது அதிர்ஷ்டத்தின் மூலம் வருவதல்ல. சரியான திட்டமிடல், கடும் உழைப்பு ஆகியவற்றின் மூலம் வருவது.
- உங்களிடமிருக்கும் திறமையை அடையாளம் கண்டு அதை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
- மன உறுதியிருந்தால் மலையையும் அசைத்துப் பார்க்கலாம் என்பார்கள். பலவீனங்களையும், பலமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பது மட்டும் உறுதி.
- மன மாற்றம்தான் முன்னேற்றத்தின் முதல் படி.
- உங்கள் மனதில் சிறந்த, நம்பிக்கையூட்டக்கூடிய கருத்துக்களை விதைத்துக் கொண்டே இருங்கள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
தன்னம்பிக்கை சூப் 15 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
- உங்கள் மனதை எப்போதும் திறந்த நிலையிலேயே வைத்திருங்கள். அப்போதுதான் புதிய கருத்துக்கள் உங்கள் மனதை வளமாக்கி வெற்றிக்கு வழிகாட்டும்.
- மற்றவர்களைவிட நீங்கள் சிறந்து விளங்குமெனில் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொண்டு உழைக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.
- உழைப்பில்லாமல் எந்தச் செயலும் வெற்றிபெறுவது சாத்தியமல்ல. எனவே இப்போது உழைப்பதைவிட இன்னும் அதிகமாக உழைக்கத் தொடங்குங்கள்.
- எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் உங்களிடம் இயற்கையாகவே இருக்கிறது.
- எந்த விஷயத்திலும் வெற்றியடையும்வரை முயலுங்கள்.
- உங்கள் இலட்சியத்தில் வெற்றியடையும்வரை ஓய்வுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள்.
- எந்தத் தோல்விக்கும் மனம் தளர்ந்துவிடாமல் அதை படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் முயற்சியை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள்.
- வெற்றியடைய வேண்டுமானால் உங்கள் உழைப்பை முதலீடு செய்யுங்கள்.
- எந்தத் தருணத்திலும் உங்கள் முயற்சியை நிறுத்தி விடாதீர்கள்.
- வெற்றிக்கு முக்கியத் தேவை பயிற்சியும், இடைவிடாத முயற்சியும்.
- எந்தவொரு வேலையையும் சிறுசிறு பகுதியாகப் பிரித்துச் செய்து பாருங்கள்.
- மனக்காட்சிகளை வரையும்போது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் உங்கள் இலட்சியம் பதிவாகின்றது.
- செயலில் உத்வேகமும், சொல்லில் தெளிவும் தோன்றிவிட்டால் செயலில் வெற்றி கிடைத்துவிடும்.
- உங்கள் மனக்காட்சிகளே பிற்காலத்தில் உண்மையாகின்றன.
- உங்கள் கனவை நனவாக்க உங்களுக்கு நீங்களே ஒரு கால அளவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
- திட்டமிட்டுச் செயல்படும்போது உங்கள் கனவு மெய்ப்படுகிறது.
- உங்களின் ஒவ்வொரு செயலும் உங்கள் இலட்சியத்தை நோக்கியே இருக்கட்டும்.
- உங்களின் ஆக்கப்பூர்வமான செயல்களே உங்களுக்கு வெற்றிமாலை சூட்டுகின்றன.
- எல்லையில்லாத ஆற்றல் உங்கள் ஆழ்மனதில் உள்ளது.
- வெற்றியை நோக்கிய உங்கள் பயணத்தில் இலக்கை அடையும்வரை ஓய்வில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.
- நம்மால் இதை செய்து முடிக்க முடியும் என்ற முனைப்போடு எந்தச் செயலையும் தொடங்குங்கள்.
- ஆழ்மனதில் நம்பிக்கை விதைகளைத் தூவிப் பாருங்கள். வெற்றி விருட்சம் பலன் தரும்.
- தன்னம்பிக்கையூட்டும் நூல்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- நம் வாழ்நாளுக்குள் ஆக்கப்பூர்வமாக எதையாவது சாதிக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
- வெற்றியென்பது எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பாகச் செய்து முடிப்பதில்தான் உள்ளது.
- ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய வேலைகளை முதல்நாள் இரவே திட்டமிடுங்கள்.
- நீங்கள் எடுக்கும் முடிவுகளே உங்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கின்றன.
- உங்களுடைய வெற்றியைத் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவை உங்கள் செயல்களே.
- உங்களிடமுள்ள தனித்திறமைகளைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
- இலக்கை அடையும்வரை உங்களுடைய முயற்சியை இடைவிடாமல் செய்துகொண்டே இருங்கள்.
- எந்தச் செயலையும் மன உறுதியோடு செய்யப் பழகுங்கள்.
- எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். அதற்கு முன்பாக அதை எவ்வாறு சாதிப்பது என்ற திட்டத்தை முதலில் தயார் செய்து கொள்ளுங்கள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
[quote="subramaniansivam"]
ஆம் To lament forever , is patent of some என்று நானே கூறுவேன் . கழிந்ததை ,காரணம் அறிந்து ,
தவிர்க்கவேண்டுமே அன்றி , அனத்திக்கொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை .
நன்றி சிவம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1123035T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1122956subramanian sivan wrote:
"நேற்று" என்பது நேற்று மட்டும் அல்ல : கடந்த காலம் .கடந்த காலத்தில் செய்தது சரியான செயலா /தவறான செயலா என்று ஆராய்தலே ,நம்மை /எதிர்காலத்தை செம்மை படுத்தும் என்பதே என் கருத்து .
ரமணியன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
நேற்று என்ன தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து அதை மீண்டும் செய்யாமல் இருப்பது அவசியம்தான் தாங்கள் கூறுவதுபோல். ஆனால் சிலர் பழைய தவறையே நினைத்து வருந்திக் கொண்டே இருப்பார்கள். மீண்டும் மீண்டும் அதையே நினைக்கும்போது எண்ண அலைகள் அதைப் போலவே பல தவறுகளை உருவாக்கும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை உணர்த்தும் வகையில்தான் இந்த வார்த்தைகள். கண்டிப்பாக தாங்கள் கூறியபடியே நம் பழைய தவறுகளை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து மீண்டும் செய்யாமல் தவிர்க்க வேண்டியது உண்மைதான். மிக்க நன்றி ஐயா.
ஆம் To lament forever , is patent of some என்று நானே கூறுவேன் . கழிந்ததை ,காரணம் அறிந்து ,
தவிர்க்கவேண்டுமே அன்றி , அனத்திக்கொண்டே இருப்பதில் அர்த்தமே இல்லை .
நன்றி சிவம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தன்னம்பிக்கை சூப் 19 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
subramaniansivam wrote:எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். அதற்கு முன்பாக அதை எவ்வாறு சாதிப்பது என்ற திட்டத்தை முதலில் தயார் செய்து கொள்ளுங்கள்.
ஆம் , திட்டமிடுதல் , நட்டத்தை தவிர்க்கும் .
(நட்டம் --நேரம் ,உழைப்பு ,முதலீடு முதலியவை அடங்கும் .)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள்
» சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|