Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
3 posters
Page 1 of 1
சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
சிவராத்திரி சிந்தனைகள்
--அண்ணாமலை சுகுமாரன்
சிவராத்ரிக்கு என்று அன்று ,சில ஊர்களுக்கு ,சிதம்பரம் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் என்றுஅவ்வப்போது
சென்றதுண்டு .ஒரு முறை தஞ்சை பெரியகோயிலில் பெரு உடையாரை சிவராத்ரியன்று கண்டு தரிசிக்கும்
வாய்ப்பும் கிடைத்தது .
எத்தனை பெரிய கோயில் எத்தனைப்பெரிய மூர்த்தி ,கட்டியவர் எத்தனைப்பெரியவர் என்பதை
அதன் பிரம்மாண்டமே உணர்த்தும் விதம் THE MAGIC OF THINKING BIG என்பதை உணர்ந்த முதல் தமிழன்
இவர்தானோ .
அன்று ஒரு பெரிய மேடையில் பதமாசுப்பிரமணியம் அவர்களின் அற்புதமான நாட்யாஞ்சலி நடைபெற்றது .
இந்த ஆண்டு அவ்வாறு எங்கும் செல்லவில்லை
,சிவராத்ரியைப்பற்றிய சிந்தனைகளுடன் இந்தராத்ரியை கழிக்க எண்ணினேன் .
சிவராத்ரியன்று மட்டும் காணக்கிடைக்கும் மாணிக்கவாசகர் சொல்ல ,அந்த தென்னாடுடைய சிவனே எழுதி
அவரின் கையேப்பமிட்ட ஓலைச் சுவடியைக் காண அம்பலத்தாடியார்மடத்திற்குக்கூட செல்லவில்லை .
சிவனைப்பற்றிய சிந்தனையுடன் சிவனே என இருக்க முடிவு செய்தேன் .
ராத்திரி எனும் பெயரில் சிவனைக்குறித்து ,துதித்து வணங்கப்படும் விரத நாள் சிவராத்ரியாகும் .
இந்தவிரதம் நித்திய சிவராத்த்ரி, பட்ச சிவராத்திரி ,மகா சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளது .
மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் ராத்த்ரி சிவராத்திரி யாகும் ,
இன்னொரு பண்டிகையும் சதுத்தசி திதியில் வருவதுண்டு அது தான் அந்த இனிப்பான திபாவளி ஆகும் .
இந்த இரண்டுமே இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்களாகும் .
தீபாவளி இருட்டில் பிறப்பதால் தீபவரிசை வழிப்படும் விழாவானது .
ராத்திரிஎன்றாலே இருட்டுதான் .
அந்த இருட்டைப்போக்க்க தீபாவளிக்கு தீபம் வந்தது .போலும்
சிவராத்திரியில் இருட்டேனும் மாயைப்போக்கும் சிவன் எனும் ஞான ஒளி
வரும் இரவானது தான் .விரதமானது .
பிரபஞ்சம் எனப்படுவது மாயை ,காலம் என்பது மாயை இருள் என்பது மாயை .
எதுவெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறதோ அவையெல்லாம் மாயை .
மாயையின் தோற்றங்கள் அணைத்தும் இகம் என்று பெயர்
அதற்க்கு அப்பால் இருக்கும் பெரு நிலை பரம் எனப்படும் .
மாயைப்போக்கும் பரமசிவன் எனும் தத்துவம் பிறக்கும் ராத்திரி சிவராதிரியானது .
மாயைக்குப்பின் பரம் பொருள் ஒன்று உண்டு என்பதுதான் பிரம்ம வாதம் எனப்படும் ,ஞானயோகம் ஆகும்
அதுவே இந்த ராதிரிக்குப்பின் பிறக்கிறது
சிவம் எனப்படுவது அசைலம் எனப்படும் அசைவற்றதும ,அதேசமயம்
உச்சக்கட்ட அசைவையுடைய ஆனந்த நடனம் ஆடும் ,எல்லாமுடைய
பூதபூத பூதேஸ்வரன் ,அதுவே
காலகால காலேச்வரன் ,அதுவே ,
மகாகாலன் அதுவே
சித்தசித்த சித்தேச்வரன் .
அதுவே ஆதி சித்தர்
யோகயோக யோகேஸ்வரன்
அதுவே ஆதி மகாயோகி எனப்படுவது
சிவனைப்பற்றிய சிந்தனைகள் நம் தமிழ் மரபில் எப்போதில் இருந்து இருந்து வந்தது என்றால் ,
சிவன் என்ற பெயரே பண்டைய சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை என்பது தான் உண்மை .
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படையும் ,பரிப்பாடலும் சமயத்தொடர்புடயவை .
திருமுருகாற்றுப்படை முருகனை பட்டுடைத்தலவனாகக்கொண்டது ,
பரிப்படலில் கருப்பு நிறக்கடவுளான திருமால் குறிக்கப்படுகிறார் .
மேலும் கொற்கை இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில்
உள்ளது .ஆனால் சிவனைக்குறிக்கும் சொற் தொடார்கள் பரவலாக காணப்படுகிறது .
முக்கட் செல்வன் ,தாழ்சடையன் ,முப்புரம் எரித்தவன் ,ஆலமர்க்கடவுள் ,,கங்கையைத்தாங்கியவன்
கைலையில் இருந்தான் போன்ற பல சொற்தொடர்கள் பரவலாக இடம் பெற்றுள்ளது .
ராவணன் கைலைமலையை எடுத்த செய்தி கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது .
ஆக சிவனைப்பற்றி இன்று நாம் அறியும் அத்தனை புராண கதைகள் சங்ககால தமிழர் அறிந்திருந்தனர் என்று
தெரிகிறது .ஆனால் ஏனோ சிவன் எனும் பெர்யர் மட்டும் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை .
அதே சமயம் அந்த சங்ககாலம் மதம் எனும் நிறுவனம் ஒன்று உருவாகாத காலம் .
தெய்வங்கள் இருந்தன ஆனால் மதம் இல்லை .
சிவன் எனும்பெயரில் முழுமுதல் கடவுளும் முழுமையாக உருவாகாதக்காலம் .
அடுத்துதோன்றிய சிலப்பதிகாரமும் , மணிமேகலையும்கடவுள்ப்பற்றி பெருவாரியான பெயர்களும்
,கொள்கைகளும் குறிக்கப்படும் காப்பியங்களாக திகழ்கிறது .
ஒருவேளை அந்தக்காலக்கட்டதில் தான் சமயக்கொள்கைகள் சமயத்தொடங்கியதோ எனத்தோன்றுகிறது .
சைவம் என்ற சொல்லே முதன்முதலில் மணிமேகலையில் தான் காணப்படுகிறது .
கி மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 4 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் பிராமி கல்வெட்டுகளில்
84 கல்வெட்டுகள் சமணருடையது ,
கி பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 6 ஆம் நூற்றாண்டு வரை 96 வட்டெழுத்து கல்வெட்டுகள் சமணருடயவை
கிடைத்துள்ளது .
புத்தசமயம்மற்றும் சமண சமயங்கள் தமிழககத்தில் கி மு -கி பி கிடையே செழித்து வளர்ந்ததற்கு சான்றுகள்
பல கிடைத்துள்ளன
புத்த சமண சமயங்கள் ஒரு நிருவண த்தன்மையோடு கிபி 300 முத்தம் கிபி 600 வரை களப்பிரர்கள் ஆட்சியில்
செல்வாக்கு பெற்றிருந்தன .
இந்த செய்திகள் திருப்புகலூர் கல்வெட்டுகள் ,காசாக்குடி செப்பேடுகள் , வேள்விக்குடி செப்பேடுகள் ,பெரியபுராணம்
,முதலியவைகள் மூலம் தெரியவருகிறது .
கி பி 610-முதல் 630 வரையிலான மகேந்திர பல்லவனின் ஆட்சிக்காலம் சமுதாய , வரலாற்றில்
மிகமுக்கியமானது .
அவர்எழுதிய மந்தவிலாச பிரகசனம் என்னும் சம்ஸ்கிருத நகைச்சுவை நாடகம் அந்தக்கால சமய சார்பை
வெளிப்படுத்துகிறது .
கபாலிகர் எனும் சமயதினரையும் ,புத்த மதத்தினரையும் அது மிகவும்கிண்டல் செய்கிறது
அதன்மூலம் அப்போது சிவனின் மதத்தின் ஒரு .பிரிவினரான கபாலிகர் அப்போது செல்வாக்குடன்
இருந்ததையும் ,புத்த மதபிக்குகளின் நிலையையும் அறியமுடிகிறது .
கிபி 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவம் எனும் மதம் புத்துயுர் பெறத்தொடங்கியது .
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிலும் ,சுந்தரர் சேர நாட்டிலும் ,திருநாவுக்கரசர் பல்லவ நாட்டிலும் நிலை
நாட்டினர் .
திருநாவுக்கரசர் 191 கோயில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார்
சுந்தரர் 83 கோயில்களுக்கு சென்று வழிபட்டிருக்கிறார்
திருஞானசம்பந்தர் 262 கோயில்களுக்கு சென்று வழிபட்டு இருக்கிறார்
அனைவருமே சிவனையே பாடி இருக்கின்றனர் .
அப்போது அத்துணை சிவ ஆலயங்கள் சிறப்புடன் இருந்திருக்கின்றன .
அப்போதுதான் சிவன் பெருமை உயர்ந்திருந்திருக்கிறது .
இராஜராஜன் காலத்திய (985-1014) நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி
மற்றும் சுந்தரர் தன திருத்தொண்டர் தொகையில் (685-720) ராஜசிங்கன் எனும் மன்னனின் காலத்தில்
சிவா தொண்டர்களின் பெருமைகளை விவரிப்பதில் இருந்து அந்த காலக்கட்டத்தில் சிவ வழிபாடு சிறந்திருந்ததை
அறியலாம்
சங்க இலக்கியங்களான புறநானூறு போன்றவற்றிலும் , வேதங்களிலும் சிவன் என்ற பெயர் நேரடியாக
குறிப்பிடப்படாமலேயே , குறிப்பால் உணர்த்தும் பல பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன .என்பது தெரியவருகிறது
கி பி 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து சிவனின் பெயர் தொடர்ச்சியாக இடம் பெற்று
,சைவ சித்தானந்தம் எனும் பழைய மரபு
தெற்க்கிலிருந்து வடக்கே சென்ற மரபு மீண்டும் தமிழகத்தில் ஆழமாக நிலைகொண்டது
சிவன் எனும் பெயர் சிகப்பு எனும்பொருளில் ஆதியில் இருந்த சூரிய வழிப்பாட்டை
வைத்து வந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் சேமம் செம்மை முதளியவைகளைக்குறிக்கிறது
என்று டாக்டர் ராஜமாணிக்கம் தெரிவிக்கிறார் .
ஆனால் முத்தாய்ப்பாக நமது சித்தர் திருமூலர் சிவனை எத்தனை பெயர் அழைத்தாலும்
அவரை அன்பே சிவம் என்று ஒற்றைவரியிலேயே
சிவம் என்பது என்னஎன்பதை தெளிவாக்கிவிடுகிறார் .
திருமூலர் அன்பு எனும் சொல்லை 15 இடங்களில் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார் .
அருள் எனும் அன்பின் குழவி என்பதே அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் சைவத்தின்
வழியாகும் .
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழர் பண்பாடு .ஆக அதுவே மலர்ந்தது .
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
--அண்ணாமலை சுகுமாரன்
சிவராத்ரிக்கு என்று அன்று ,சில ஊர்களுக்கு ,சிதம்பரம் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் என்றுஅவ்வப்போது
சென்றதுண்டு .ஒரு முறை தஞ்சை பெரியகோயிலில் பெரு உடையாரை சிவராத்ரியன்று கண்டு தரிசிக்கும்
வாய்ப்பும் கிடைத்தது .
எத்தனை பெரிய கோயில் எத்தனைப்பெரிய மூர்த்தி ,கட்டியவர் எத்தனைப்பெரியவர் என்பதை
அதன் பிரம்மாண்டமே உணர்த்தும் விதம் THE MAGIC OF THINKING BIG என்பதை உணர்ந்த முதல் தமிழன்
இவர்தானோ .
அன்று ஒரு பெரிய மேடையில் பதமாசுப்பிரமணியம் அவர்களின் அற்புதமான நாட்யாஞ்சலி நடைபெற்றது .
இந்த ஆண்டு அவ்வாறு எங்கும் செல்லவில்லை
,சிவராத்ரியைப்பற்றிய சிந்தனைகளுடன் இந்தராத்ரியை கழிக்க எண்ணினேன் .
சிவராத்ரியன்று மட்டும் காணக்கிடைக்கும் மாணிக்கவாசகர் சொல்ல ,அந்த தென்னாடுடைய சிவனே எழுதி
அவரின் கையேப்பமிட்ட ஓலைச் சுவடியைக் காண அம்பலத்தாடியார்மடத்திற்குக்கூட செல்லவில்லை .
சிவனைப்பற்றிய சிந்தனையுடன் சிவனே என இருக்க முடிவு செய்தேன் .
ராத்திரி எனும் பெயரில் சிவனைக்குறித்து ,துதித்து வணங்கப்படும் விரத நாள் சிவராத்ரியாகும் .
இந்தவிரதம் நித்திய சிவராத்த்ரி, பட்ச சிவராத்திரி ,மகா சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளது .
மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் ராத்த்ரி சிவராத்திரி யாகும் ,
இன்னொரு பண்டிகையும் சதுத்தசி திதியில் வருவதுண்டு அது தான் அந்த இனிப்பான திபாவளி ஆகும் .
இந்த இரண்டுமே இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்களாகும் .
தீபாவளி இருட்டில் பிறப்பதால் தீபவரிசை வழிப்படும் விழாவானது .
ராத்திரிஎன்றாலே இருட்டுதான் .
அந்த இருட்டைப்போக்க்க தீபாவளிக்கு தீபம் வந்தது .போலும்
சிவராத்திரியில் இருட்டேனும் மாயைப்போக்கும் சிவன் எனும் ஞான ஒளி
வரும் இரவானது தான் .விரதமானது .
பிரபஞ்சம் எனப்படுவது மாயை ,காலம் என்பது மாயை இருள் என்பது மாயை .
எதுவெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறதோ அவையெல்லாம் மாயை .
மாயையின் தோற்றங்கள் அணைத்தும் இகம் என்று பெயர்
அதற்க்கு அப்பால் இருக்கும் பெரு நிலை பரம் எனப்படும் .
மாயைப்போக்கும் பரமசிவன் எனும் தத்துவம் பிறக்கும் ராத்திரி சிவராதிரியானது .
மாயைக்குப்பின் பரம் பொருள் ஒன்று உண்டு என்பதுதான் பிரம்ம வாதம் எனப்படும் ,ஞானயோகம் ஆகும்
அதுவே இந்த ராதிரிக்குப்பின் பிறக்கிறது
சிவம் எனப்படுவது அசைலம் எனப்படும் அசைவற்றதும ,அதேசமயம்
உச்சக்கட்ட அசைவையுடைய ஆனந்த நடனம் ஆடும் ,எல்லாமுடைய
பூதபூத பூதேஸ்வரன் ,அதுவே
காலகால காலேச்வரன் ,அதுவே ,
மகாகாலன் அதுவே
சித்தசித்த சித்தேச்வரன் .
அதுவே ஆதி சித்தர்
யோகயோக யோகேஸ்வரன்
அதுவே ஆதி மகாயோகி எனப்படுவது
சிவனைப்பற்றிய சிந்தனைகள் நம் தமிழ் மரபில் எப்போதில் இருந்து இருந்து வந்தது என்றால் ,
சிவன் என்ற பெயரே பண்டைய சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை என்பது தான் உண்மை .
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படையும் ,பரிப்பாடலும் சமயத்தொடர்புடயவை .
திருமுருகாற்றுப்படை முருகனை பட்டுடைத்தலவனாகக்கொண்டது ,
பரிப்படலில் கருப்பு நிறக்கடவுளான திருமால் குறிக்கப்படுகிறார் .
மேலும் கொற்கை இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில்
உள்ளது .ஆனால் சிவனைக்குறிக்கும் சொற் தொடார்கள் பரவலாக காணப்படுகிறது .
முக்கட் செல்வன் ,தாழ்சடையன் ,முப்புரம் எரித்தவன் ,ஆலமர்க்கடவுள் ,,கங்கையைத்தாங்கியவன்
கைலையில் இருந்தான் போன்ற பல சொற்தொடர்கள் பரவலாக இடம் பெற்றுள்ளது .
ராவணன் கைலைமலையை எடுத்த செய்தி கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது .
ஆக சிவனைப்பற்றி இன்று நாம் அறியும் அத்தனை புராண கதைகள் சங்ககால தமிழர் அறிந்திருந்தனர் என்று
தெரிகிறது .ஆனால் ஏனோ சிவன் எனும் பெர்யர் மட்டும் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை .
அதே சமயம் அந்த சங்ககாலம் மதம் எனும் நிறுவனம் ஒன்று உருவாகாத காலம் .
தெய்வங்கள் இருந்தன ஆனால் மதம் இல்லை .
சிவன் எனும்பெயரில் முழுமுதல் கடவுளும் முழுமையாக உருவாகாதக்காலம் .
அடுத்துதோன்றிய சிலப்பதிகாரமும் , மணிமேகலையும்கடவுள்ப்பற்றி பெருவாரியான பெயர்களும்
,கொள்கைகளும் குறிக்கப்படும் காப்பியங்களாக திகழ்கிறது .
ஒருவேளை அந்தக்காலக்கட்டதில் தான் சமயக்கொள்கைகள் சமயத்தொடங்கியதோ எனத்தோன்றுகிறது .
சைவம் என்ற சொல்லே முதன்முதலில் மணிமேகலையில் தான் காணப்படுகிறது .
கி மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 4 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் பிராமி கல்வெட்டுகளில்
84 கல்வெட்டுகள் சமணருடையது ,
கி பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 6 ஆம் நூற்றாண்டு வரை 96 வட்டெழுத்து கல்வெட்டுகள் சமணருடயவை
கிடைத்துள்ளது .
புத்தசமயம்மற்றும் சமண சமயங்கள் தமிழககத்தில் கி மு -கி பி கிடையே செழித்து வளர்ந்ததற்கு சான்றுகள்
பல கிடைத்துள்ளன
புத்த சமண சமயங்கள் ஒரு நிருவண த்தன்மையோடு கிபி 300 முத்தம் கிபி 600 வரை களப்பிரர்கள் ஆட்சியில்
செல்வாக்கு பெற்றிருந்தன .
இந்த செய்திகள் திருப்புகலூர் கல்வெட்டுகள் ,காசாக்குடி செப்பேடுகள் , வேள்விக்குடி செப்பேடுகள் ,பெரியபுராணம்
,முதலியவைகள் மூலம் தெரியவருகிறது .
கி பி 610-முதல் 630 வரையிலான மகேந்திர பல்லவனின் ஆட்சிக்காலம் சமுதாய , வரலாற்றில்
மிகமுக்கியமானது .
அவர்எழுதிய மந்தவிலாச பிரகசனம் என்னும் சம்ஸ்கிருத நகைச்சுவை நாடகம் அந்தக்கால சமய சார்பை
வெளிப்படுத்துகிறது .
கபாலிகர் எனும் சமயதினரையும் ,புத்த மதத்தினரையும் அது மிகவும்கிண்டல் செய்கிறது
அதன்மூலம் அப்போது சிவனின் மதத்தின் ஒரு .பிரிவினரான கபாலிகர் அப்போது செல்வாக்குடன்
இருந்ததையும் ,புத்த மதபிக்குகளின் நிலையையும் அறியமுடிகிறது .
கிபி 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவம் எனும் மதம் புத்துயுர் பெறத்தொடங்கியது .
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிலும் ,சுந்தரர் சேர நாட்டிலும் ,திருநாவுக்கரசர் பல்லவ நாட்டிலும் நிலை
நாட்டினர் .
திருநாவுக்கரசர் 191 கோயில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார்
சுந்தரர் 83 கோயில்களுக்கு சென்று வழிபட்டிருக்கிறார்
திருஞானசம்பந்தர் 262 கோயில்களுக்கு சென்று வழிபட்டு இருக்கிறார்
அனைவருமே சிவனையே பாடி இருக்கின்றனர் .
அப்போது அத்துணை சிவ ஆலயங்கள் சிறப்புடன் இருந்திருக்கின்றன .
அப்போதுதான் சிவன் பெருமை உயர்ந்திருந்திருக்கிறது .
இராஜராஜன் காலத்திய (985-1014) நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி
மற்றும் சுந்தரர் தன திருத்தொண்டர் தொகையில் (685-720) ராஜசிங்கன் எனும் மன்னனின் காலத்தில்
சிவா தொண்டர்களின் பெருமைகளை விவரிப்பதில் இருந்து அந்த காலக்கட்டத்தில் சிவ வழிபாடு சிறந்திருந்ததை
அறியலாம்
சங்க இலக்கியங்களான புறநானூறு போன்றவற்றிலும் , வேதங்களிலும் சிவன் என்ற பெயர் நேரடியாக
குறிப்பிடப்படாமலேயே , குறிப்பால் உணர்த்தும் பல பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன .என்பது தெரியவருகிறது
கி பி 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து சிவனின் பெயர் தொடர்ச்சியாக இடம் பெற்று
,சைவ சித்தானந்தம் எனும் பழைய மரபு
தெற்க்கிலிருந்து வடக்கே சென்ற மரபு மீண்டும் தமிழகத்தில் ஆழமாக நிலைகொண்டது
சிவன் எனும் பெயர் சிகப்பு எனும்பொருளில் ஆதியில் இருந்த சூரிய வழிப்பாட்டை
வைத்து வந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் சேமம் செம்மை முதளியவைகளைக்குறிக்கிறது
என்று டாக்டர் ராஜமாணிக்கம் தெரிவிக்கிறார் .
ஆனால் முத்தாய்ப்பாக நமது சித்தர் திருமூலர் சிவனை எத்தனை பெயர் அழைத்தாலும்
அவரை அன்பே சிவம் என்று ஒற்றைவரியிலேயே
சிவம் என்பது என்னஎன்பதை தெளிவாக்கிவிடுகிறார் .
திருமூலர் அன்பு எனும் சொல்லை 15 இடங்களில் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார் .
அருள் எனும் அன்பின் குழவி என்பதே அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் சைவத்தின்
வழியாகும் .
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழர் பண்பாடு .ஆக அதுவே மலர்ந்தது .
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Re: சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்
நல்ல பகிர்வு
...நன்றி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராத்திரி நேரத்துப் பூஜையில்...
» இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி.....
» மழைபெய்த அந்த ராத்திரி
» இது தான் முதல் ராத்திரி
» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
» இப்படித்தாங்க ஒருநாளு ராத்திரி.....
» மழைபெய்த அந்த ராத்திரி
» இது தான் முதல் ராத்திரி
» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|