புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
62 Posts - 57%
heezulia
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
104 Posts - 59%
heezulia
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_m10பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 17, 2015 10:25 pm

பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! HdIHxY4AQYUIqYHQfQwQ+064687bd-1469-4bee-a6c2-257e5b9c8374_S_secvpf

ருத்திராட்சம் என்பதன் பொருள் சிவனின் கண். பிரபஞ்ச சக்தியின் மிக சக்திவாய்ந்த வெளிப்பாடு என்று கூறப்படுகின்றது. ருத்திராட்சம் பூமிக்கும் தேவலோகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. ருத்ராட்ச மரத்தின் பழத்தின் விதைகளே ருத்ராட்ச கொட்டை.

அதிகமாக இந்தோனேஷியாவிலும், ஜாவா, சுமித்ரா போன்ற இடங்களிலும், நேபாளத்திலும் இது விளைகிறது. ருத்திராட்சம் பயன்படுத்திய 48 மணி நேரத்திலேயே நோய், மன அமைதி, பிரச்சனைகள் இவற்றில் முன்னேற்றம் தெரிய வரும் என்றாலும், நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே அணிவது நல்லது.

ருத்ராட்சத்தின் மேல் கோடுகள் ஆரஞ்சு பழ சுளைகளில் இருப்பதுபோல் இருக்கும். இதனை ஒவ்வொரு முகம் என்பர். முகத்திற்கு ஏற்ற தெய்வ அம்சமும், பலன்களும் கொண்டதாகக் கருதப்படுகின்றது. ஒருமுக ருத்திராட்சம் மிகவும் உயர்ந்தது, அரிதானது. மனித சமூகத்திற்கான அரிய பொக்கிஷம்.

ருத்ராட்சங்களின் அரசன், பரமசிவனாகவே கருதப்படுகின்றது. காமம், மோகம், லோபம் போன்ற மாயைகளிலிருந்து இது விடுபட வைக்கிறது. தொடர் பிறப்பிலிருந்து விடுவிக்கும். உலகத்திலும், மேல் உலகத்திலும் வெற்றியைத் தரும்.

* ஏக முக ருத்திராட்சம் அணிபவருக்கு அநேக வெற்றிகளைத் தரும்.

* தியானத்திற்கு உகந்தது.

* குற்றங்களை நீக்குவது

* வாழ்க்கை விடுதலைத் தருவது

* மன அமைதி தருவது

* சக்தி அளிப்பது

* தலை உச்சியில் உள்ள ‘சகஸ்ர சக்கரத்தோடு’ தொடர்புடையது. இதன் மந்திரம் ‘ஓம் நம சிவாய’ அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்துவது. இரண்டு முக ருத்திராட்சம் அர்த்தநாரீஸ்வரரை குறிக்கும். சக்தி, சிவன் இரண்டையும் ஒருங்கே கொண்டது.

ஒற்றுமை, மகிழ்ச்சி இவற்றினைக் குறிக்கிறது. உமா, மஹேஸ்வரன் இருவரின் ஆசியினையும் ஒருங்கே பெற்றுத்தருவது. சிவ புராணம், பகவத் கீதை, ஸ்கந்த புராணம் இப்படி புராணங்களின்படி இருமுக ருத்திராட்சம் உயர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இரு முக ருத்திராட்சம் உறவுகளில் ஒற்றுமை, நல் உறவு, குறிப்பாக கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படுத்தும்

* குழந்தைச் செல்வத்திற்கு அருள் செய்கிறது

* பயத்தினை நீக்குகிறது

* மன நிறைவு, அமைதி தருகிறது

* சுவாதிஷ்டான சக்கரத்துடன் தொடர்புடையது

* சிறு நீரக, கருப்பை, குடல், தசை நோய்களை நீக்குகிறது - மூன்று முக ருத்திராட்சம் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் குறிக்கிறது. இது அணிபவருக்கு வெற்றியினைத் தரும். பூர்வ ஜென்ம கர்மாக்களை நீக்கும்

* அழிவுப்பூர்வ எண்ணங்களை நீக்கும்

* ஜீரண உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது

* மன உளைச்சலை நீக்குகிறது

* முயற்சிகளில் வெற்றித்தருகிறது

* மணிப்பூரக சக்கரத்தோடு தொடர்புடையது நான்கு முக ருத்திராட்சம் பிரம்மா, சரஸ்வதியினைக் குறிக்கின்றது. அறிவு, ஞானம் பெற இது பெரிதும் உதவுகின்றது. விழிப்பு, தூக்கம், கனவு, உயர்நிலை இவை நான்கிலுமே பூரண உணர்வோடு இருக்கும் நிலையினையும் அறியாமை என்ற இருட்டினையும் போக்குகின்றது.

* ஆன்மீகமும், ஞானமும் உயரும்

* படிப்பு, படிப்பித்தல், மேதை, எழுத்தாளர், ஆய்வு படிப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது.

* தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்ய உதவுகிறது.

* சுவாச மண்டலம் வேலை செய்ய சிறந்தது.

* விசுக்தி சக்ராவுடன் தொடர்புடையது.

* பாடுபவர்கள், மேடைப் பேச்சாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். 5 முகம் கொண்ட பஞ்சமுக ருத்திராட்சம் ருத்திரனைக் குறிக்கின்றது. புத்தி விருத்தி அளிக்கின்றது. நீண்ட ஆயுளை கொடுக்க வல்லது. துர் மரணத்தினை தவிர்க்கின்றது.

ஆன்மிக வலிமையினையும், உள்ளுணர்வினையும் தருகின்றது. உறுதியான மனநிலையினைக் கொடுக்கின்றது. விசுக்தி சக்கரத்தோடு தொடர்புடையது. ஆறுமுக ருத்திராட்சம் ஆறுமுகன், கார்த்திகேயனைக் குறிக்கின்றது. இதை அணிந்தால் ஆசைகள் நிறைவேறும். இளமையோடு இருப்பார்கள்.

* ஞானம் அளிக்கும்.

* சக்தி, வேகம் அளிக்கும்.

* கீழ்த்தர ஆசைகள், கர்வம் நீங்கும்

* பொறுமை கூடும்

* ஒழுக்கம் ஏற்படும்

* தீய குணங்கள் நீங்கும்

* மூலாதார சக்கரத்தோடு தொடர்புடையது

* தலைமை, காவல், நிர்வாகம் போன்ற துறைகளில் வெற்றி அளிக்கும் சப்த முக அதாவது ஏழு முக ருத்திராட்சம் மகாலட்சுமியைக் குறிக்கின்றது. வளம், செழுமை, உயர் அதிகாரம் இவற்றினைக் குறிக்கின்றது. லட்சுமியை நாராயணனோடு சேர்த்துதான் வழிபட வேண்டும்.

.....................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 17, 2015 10:29 pm

பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! L2DjU84DRVaDnjRsbpDZ+download

* ஏழு முக ருத்திராட்சம் மகிழ்ச்சி, செல்வம் அளிக்கும்

* தீயனவற்றை நீக்கும்

* உடல்நலம் நன்கு இருக்கும்

* மணிப்பூரக சக்கரத்தோடு சம்பந்தப்பட்டது.

எட்டு முக ருத்திராட்சம்:-

இதனை மகா கணபதியாக வழிபடுகின்றனர். இதை அணிந்தால் தடைகளை நீக்கி வெற்றியினை பெறலாம்.

* எதிரிகளை பலமிழக்கச் செய்யும்.

* கெட்ட கனவு, நுரையீரல் நோய், பாதம், தோல் போன்ற பாதிப்புகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகின்றது.

* சர்ப்ப தோஷத்தினை நீக்குகிறது

* ஜோதிடர்களுக்குச் சிறந்தது

* நரம்பு கோளாறுகள், பாம்பு பயம் போன்றவற்றிற்கும் உகந்தது. தொழில் முன்னேற்றம் அளிக்கிறது.

ஒன்பது முக ருத்திராட்சம்:

நவ துர்க்கையின் அம்சமாக கூறப்படுகின்றது. பைரவர், யமன், கபில முனி இவர்களைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகின்றது. நவக்கிரகத்தில் கேது பகவானால் ஏற்படும் தீய பாதிப்புகளிலிருந்து காப்பதாகக் கூறப்படுகின்றது.

மனச்சோர்வு, சக்தியின்மை, தோல்வி இவைகளை நீக்குகின்றது. செல்வம், சிறந்த வாழ்க்கை இவற்றினை அளிக்கின்றது. சிகப்பு கயிற்றினால் இடது கையிலோ, கழுத்திலோ அணிவிக்கப்படுகின்றது.

பத்துமுக ருத்திராட்சம்:

பகவான் லட்சுமி நாராயணனைக் குறிக்கின்றது. விஷ்ணு பக்தர்களுக்கு உகந்தது. தாழ்வு மனப்பான்மையை நீக்குகிறது. நவக்கிரகங்களுக்கும் ஏற்றது. சுவாதிஷ்டமான சக்கரத்துடன் தொடர்புடையது.

பதினொரு முக ருத்திராட்சம்:

பதினொரு ருத்ரர்களால் ஆளப்படுவது. 1000 அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தருகிறது. ஐம்புலன்களை அடக்க உதவுகிறது. பனிரெண்டு முக ருத்திராட்சம் சூரியனைக் குறிப்பது. சூரியனைப் போல் பிரகாசிப்பும், ஞானம் அளிப்பது. வாத, கப நோய்களுக்கு உகந்தது. ஜீரண உறுப்புகளுக்கு சக்தி அளிக்கும்.

புகழோடு இருப்பர். பதிமூன்று முக ருத்ராட்சத்தினை இந்திரன், காமதேவன் என்பர். உலக ஆசைகளை நிறைவேற்றித் தருவது. குண்டலினி சக்தியினை உயர்த்துவது. குழந்தை வரம் வேண்டுவோருக்கு உதவும். பதினான்கு முக ருத்ராட்சத்தினை தெய்வ மணி என்கின்றனர். பகவான் ஆஞ்சநேயரால் ஆளப்படுவது.

இதை அணிபவர் உறுதியான மனம் கொண்டவராக இருப்பார்கள். உடல் தசை, எலும்பு இவற்றினை உறுதியாய் வைத்திருப்பது. நவக்கிரகங்களின் தோஷங்களை நீக்குகிறது. மூட்டு வலி, கூடிய எடை, மூலம் இவற்றினை குணப்படுத்த உதவுவதாகக் கூறப்படுவது. மூலாதார சக்கரத்தோடு தொடர்பு உடையது.

பதினைந்து முக ருத்திராட்சம் பசுபதி நாதரின் பிரதி பலிப்பாகக் கருதப்படுகின்றது. இருதய சக்கரத்தோடு தொடர்புடையது. சோகம், தனிமை, இருதய நோய்களுக்குத் தீர்வானது. தன்னை உணரச் செய்வது. பாச, பந்தங்களில் ஏற்படும் மன வலியினை நீக்குகிறது. ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்துகிறது.

ஆஸ்துமா, அலர்ஜி போன்றவைகளையும் நீக்குகிறது. பதினாறு முக ருத்ராட்சத்தினை மகா ம்ருத்யுஞ்ச சிவனின் அம்சமாகப் பார்க்கின்றனர். மரண பயத்தினை நீக்குகிறது. இந்த ருத்ராட்சத்தினை அணிவது தினமும் 1,25,000 முறை ம்ருத்யுஞ்ச ஜபத்தினை ஜபித்ததன் பலனாகின்றது என்று கூறுகின்றனர்.

கடும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. சுவாதிஷ்டான சக்கரத்துடன் தொடர்பு கொண்டது. பதினேழு முக ருத்திராட்சம் விஸ்வகர்மாவால் ஆளப்படுகிறது. இதனை அணிபவர் அனைத்துச் சக்திகளோடும், திடீர் செல்வத்தோடும் இருப்பார்கள். காத்யாயினி தேவி துர்கையின் ஆளும் அம்ச தேவியின் ஸ்வரூபமாக 17 முக ருத்திராட்சம் கருதப்படுகின்றது.

பதினெட்டு முக ருத்திராட்சம் பூமாதேவியின் ஸ்வரூபமாகக் கருதப்படுகின்றது. பூமியில் ஏக போக சுகங்களோடு வாழ இந்த ருத்திராட்சம் அருளுவதாகக் கூறப்படுகின்றது. சோம்பேறித்தனம், சோர்வு இவற்றினை நீக்குகின்றது. கால், முட்டி வலிகளை நீக்க உதவுகிறது. பூமா தேவியினைப் போன்ற பொறுமையினை அளிக்கிறது.

பத்தொன்பது முக ருத்திராட்சம் பகவான் நாராயணனோடு சம்பந்தப்பட்டது. கடுமையான நோய்களை நீக்கவும், நல்ல வாழ்க்கைத் துணையினை பெறுவதற்கும் உதவுகின்றது. உயர் சக்திகளைப் பெற உதவுகின்றது. முன்வினைப் பாவங்களை நீக்க துணையாகின்றது என மிகவும் உயர்வாக இந்த ருத்ராட்சத்தினைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

இருபது முக ருத்திராட்சம், பிரம்மாவால் ஆளப்படுகிறது. கலைகளுக்கு உகந்தது. தொழில், வியாபாரம் புரிவோருக்கு உதவுகிறது. அஷ்ட (எட்டு) திக்கிலும் பலம் பெற்றுத் தருகிறது. இருபத்தோரு முக ருத்திராட்சம் மிகவும் அரிதானது. குபேரனால் ஆளப்படுகிறது. இதனை ஒரு ஏழை அணிந்தாலும், செல்வம் பெறுவார் என்று கூறப்படுகின்றது.

இது தவிர, இரண்டு ருத்திராட்சம் ஒட்டினாற் போல் இருப்பது சிவ பார்வதியாகக் கருதப்படுகின்றது. நல்ல குடும்ப உறவும், தியான முன்னேற்றமும் அளிக்கவல்லது. ருத்ராட்சத்தினைப் பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதில், இதில் காந்த சக்தியும், மின் சக்தியும் இருப்பதினை நிரூபித்துள்ளனர். ருத்திராட்சம் பயன்படுத்துபவர்கள் அசைவம், மது, புகை இவைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

நன்றி : மாலைமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 17, 2015 10:43 pm

மிகவும் அருமை கிருஷ்ணாம்மா. அறிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள். பகிர்வுக்கு நன்றி.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிரச்சினைகளை தீர்க்கும் ருத்திராட்சம் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக