Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்! ’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
3 posters
Page 1 of 1
வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்! ’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
சொல்லி அடித்துவிட்டார் டெல்லி கெஜ்ரிவால். திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டமாக ஆகிவிட்டது தலைநகரில்!
'தேக்கோ தேக்கோ
ஆம் ஆத்மி தாக்கத்து தேக்கோ...
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்... (அஞ்சு வருஷம் கெஜ்ரிவால்)
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
- விஷால் தத்லானி அன்கோ உருவாக்கிய இந்தப் பாட்டை கடந்த இரண்டு மாதங்களாக தேசியகீதம் போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரவர்களுக்கு பிடித்த மெட்டில் பாடிக் கலக்கினார்கள். டெல்லி நகருக்கு உள்ளேயும் புறநகர் பகுதிகளிலும் மால்கள், பஜார்கள், தெருக்கள், கிராமங்கள் என்று எங்கேயும் திடீரென தோன்றும் டீ சர்ட், ஜீன்ஸ், ட்ரவுசர் என ஹை லுக் இளைஞர்களும் பல பாடல்களை பாடியபடியே டான்ஸ் ஆடுவார்கள். கூட்டம் கூடியதும், தலையில் காந்தி குல்லாவை வைத்துக்கொண்டு 'பாஞ்ச் சால் கெஜ்ரிவால்’ பாடலைத் தொடங்குவார்கள். அதன் விளைவுதான் ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. ஒருபக்கம் பி.ஜே.பி மண்ணைக்கவ்வ... இன்னொரு பக்கம் காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை. இந்திய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் கெஜ்ரிவால் பற்றித்தான் பேச்சு.
மோடி எதிர்பார்க்காத ரிசல்ட்!
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சோனியாவுக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. போட்டியே பி.ஜே.பிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்றுதான் காங்கிரஸ் தலைமை நினைத்தது. காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் மீண்டும் முதல்வர் ஆகலாம் என்றும் கணக்குப் போட்டது. ஆனால், பி.ஜே.பியோ நிச்சயம் தங்களது ஆட்சிதான் என்று நம்பியது. அதனால்தான் காங்கிரஸைவிட கெஜ்ரிவாலை கடுமையாக பி.ஜே.பி விமர்சித்தது. இப்படியொரு தேர்தல் முடிவை மோடி எதிர்பார்க்க வில்லை. கெஜ்ரிவாலை 'அராஜகவாதி’ என்றார் மோடி. அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் நண்பர் கிரண் பேடியை அழைத்து வந்து, முதல்வர் வேட்பாளராக மாற்றினார்கள். 100க்கும் மேற்பட்ட பி.ஜே.பி எம்.பிக்கள் டெல்லியில் வலம் வந்தார்கள். 20 மத்திய அமைச்சர்கள் பிரசாரத்தில் குதித்தனர். இதுதவிர ஸ்டார் பேச்சாளர்கள் 40 பேர். பி.ஜே.பிக்காக இவ்வளவு பேர் இருந்தும் ஏனோ வாக்காளர்கள் மனதை மாற்ற முடியவில்லை.
அப்படியே உல்டா ஆனது!
டெல்லியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வாங்கிய வாக்குகளைக் கணக்கிட்டால் அந்தக் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளில்தான் முன்னணியில் இருந்தது. இதில் பி.ஜே.பி 60 தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸுக்கு ஓர் இடமும் இல்லை. இந்தமுறை அப்படியே உல்டா ஆகிவிட்டது. சீட்டுகள் மாறினாலும் பி.ஜே.பியின் ஓட்டு வங்கி அவ்வளவாக அடி வாங்கவில்லை. 2008 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பிக்கு 36.3 சதவிகிதம், 2013 தேர்தலில் 33.1 சதவிகிதம். இப்போது 32.2 சதவிகிதம். கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு சதவிகித வாக்குகள் சரிந்துள்ளன. புதிய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்தக் கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. இது மட்டுமல்ல. டெல்லி தேர்தலின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பாகிஸ்தானிலிருந்து வந்த பஞ்சாபி அகதிகளும் வியாபாரிகளும்தான் ஜனசங்கத்திலும் பின்னர் பி.ஜே.பியிலும் வெறியோடு இருந்தனர். அவர்களது வாக்குகளை அந்தக் கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. டெல்லியில் பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்தது 1993-ல் மட்டும்தான். அந்த ஐந்து வருடத்திலும் மூன்று பேர்கள் முதலமைச்சர் ஆனார்கள். வெவ்வேறு மத இன வட்டார மக்களைக்கொண்ட டெல்லி மாநகரில் பி.ஜே.பிக்கு இடமில்லாமல்தான் இருந்தது. இப்போதும் அந்த கோஷ்டிப்பூசல் அதிகமாகத்தான் இருக்கிறது. இதில் கிரண் பேடியை வேட்பாளராக அறிவித்ததே அந்தக் கட்சிக்கு நெகடிவ் ஆகிவிட்டது.
கரைந்தது காங்கிரஸ்!
அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து டெல்லியில் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். 1977, 1993 ஆகிய இரண்டு தேர்தலில் மட்டும்தான் அந்தக் கட்சி ஜெயிக்கவில்லை. காங்கிரஸுக்கு 52 சதவிகிதம் முதல் 40 சதவிகித வாக்குகள் எப்போதும் இருக்கும். சராசரியாக 40 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும். ஆம் ஆத்மி கட்சி இல்லாத 2008 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 40.3 சதவிகிதம். ஆனால் 2013 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்தது 24.55 சதவிகித வாக்குகள்தான். வெற்றிபெற்றது எட்டு தொகுதிகள் மட்டும்தான். இங்குதான் காங்கிரஸ் கட்சியின் சரிவு ஆரம்பமானது. காங்கிரஸ் வாக்குகள் கைமாறிய இடம் ஆம் ஆத்மி.
இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 29.49 சதவிகித வாக்குகள் கிடைத்தன. இப்போது காங்கிரஸ் மேலும் அடிவாங்கி வெறும் 9.7 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. கிட்டதட்ட 30 சதவிகித வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் படிப்படியாக தாரை வார்த்துள்ளது. இந்த முறை ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகள் 54.3 சதவிகிதம். காங்கிரஸ் வாக்குகள் மட்டுமல்ல, மாயாவதியின் பி.எஸ்.பி 2008-ல் பெற்ற 14.5 சதவிகித வாக்குகளும் ஆம் ஆத்மி பக்கம் திரும்பியுள்ளன.
அரவிந்தின் அமைதி ஊர்வலம்!
தமிழகம் மாதிரிதான் டெல்லி. பல்வேறு தரபட்ட மத, சாதி மக்களைக் கொண்டது. இங்குள்ள தலித் வாக்குகளும் சிறுபான்மை இன வாக்குகளும் யாருக்குப் போகிறதோ அந்தக் கட்சிகளால் அந்தந்த தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் பெற்றுவந்த வாக்குகள் மட்டுமின்றி, மாயாவதியின் வாக்கு வங்கியும் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுதியாகவும் முற்றிலும் திரும்பிவிட்டது. தமிழகத்தில் ஆழமாக இருந்த காங்கிரஸ் நிலைமையை திராவிடக் கட்சிகள் மாற்றியதுபோல, டெல்லி காங்கிரஸ் இடத்தில் ஆம் ஆத்மி கட்சி நிரப்பியது. டெல்லி திருலோக் புரியில் இனக்கலவரம் நடந்தது. இங்கு ஆம் ஆத்மி கட்சி நுழைந்து அமைதி ஊர்வலத்தை நடத்தியது. ஆனால், இங்கு மறைமுகமாக இருந்த அமித் ஷாவின் அரசியல் அணுகுமுறை டெல்லிக்கு பொருந்தவில்லை.
வெற்றிக்குப் பின்னால்?
ஆம் ஆத்மி கட்சியின் பிரசார கமிட்டியின் தலைவராக இருப்பவர் ஆசிஸ் தல்வார். இவர்தான் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசார மேடையை உருவாக்கி ஊர்வலங்களுக்கும் ஏற்பாடு செய்தவர். 3,500 பேர்களைக் கொண்ட பூத்தொண்டர் படையும் இவரது ஏற்பாடுதான். இந்த டீம்தான் வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
சமூக வலைதளங்களில் கெஜ்ரிவால் பற்றியும், ஆம் ஆத்மி கட்சி பற்றியுமான வீடியோக்கள் குவிந்துள்ளன. சமூக வலைதளங்கள் வழியாக ஆம் ஆத்மியை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் அன்கிட் லாலின் பங்கு மிக முக்கியமானது.
அடுத்து ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை. அடிமட்டத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அவர்களிடமே கேட்டு வாங்கியவர் ஆசிஸ் கேத்தான். வந்து குவிந்த மக்கள் கருத்துகளில் இருந்து 'டெல்லி டயலாக்’ என்ற பெயரில் 70 அம்சத் திட்டங்களை தேர்தல் அறிக்கையாகத் தயார் செய்தவர் இவர். இந்த மூவர் டீமும் மக்களிடம் கேட்டதும், சொன்னதும் இதுதான்... ''மோடி எட்டு மாதத்தில் உங்களுக்கு என்ன செய்தார். உங்களுக்கு மோடியால் நல்ல நாள் வரப்போவதில்லை. அதேபோல் உங்கள் வாக்குகள் காங்கிரஸுக்கு போடுவது வீண். அந்தக் கட்சி தோல்விதான் அடையப்போகிறது. அவர்களால் எந்த நல்லதும் நடக்காது!'' அவர்கள் கேட்ட கேள்விக்கு பலன் கிடைத்துவிட்டது.
இந்த வெற்றியை எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறார், எப்படி தக்கவைக்கப் போகிறார் என்பதைப் பொருத்தே அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது!
67-ல் 7 பத்திரிகையாளர்கள்!
ஆம் ஆத்மி கட்சியில் வெற்றி பெற்ற 67 எம்.எல்.ஏகளில் 7 பேர் பத்திரிகையாளர்கள். சீக்கியர்கள் விவகாரத்துக்கு ப.சிதம்பரத்தின் மீது ஷூ வீசிய தைனிக் ஜாக்ரன் பத்திரிகையாளர் ஜர்னெல் சிங்கும் இதில் ஒருவர். இவர் டெல்லி ரஜோரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
நன்றி-ஜூனியர் விகடன்
'தேக்கோ தேக்கோ
ஆம் ஆத்மி தாக்கத்து தேக்கோ...
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்... (அஞ்சு வருஷம் கெஜ்ரிவால்)
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
- விஷால் தத்லானி அன்கோ உருவாக்கிய இந்தப் பாட்டை கடந்த இரண்டு மாதங்களாக தேசியகீதம் போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரவர்களுக்கு பிடித்த மெட்டில் பாடிக் கலக்கினார்கள். டெல்லி நகருக்கு உள்ளேயும் புறநகர் பகுதிகளிலும் மால்கள், பஜார்கள், தெருக்கள், கிராமங்கள் என்று எங்கேயும் திடீரென தோன்றும் டீ சர்ட், ஜீன்ஸ், ட்ரவுசர் என ஹை லுக் இளைஞர்களும் பல பாடல்களை பாடியபடியே டான்ஸ் ஆடுவார்கள். கூட்டம் கூடியதும், தலையில் காந்தி குல்லாவை வைத்துக்கொண்டு 'பாஞ்ச் சால் கெஜ்ரிவால்’ பாடலைத் தொடங்குவார்கள். அதன் விளைவுதான் ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. ஒருபக்கம் பி.ஜே.பி மண்ணைக்கவ்வ... இன்னொரு பக்கம் காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை. இந்திய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் கெஜ்ரிவால் பற்றித்தான் பேச்சு.
மோடி எதிர்பார்க்காத ரிசல்ட்!
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சோனியாவுக்கு எந்த அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை. போட்டியே பி.ஜே.பிக்கும் ஆம் ஆத்மிக்கும் என்றுதான் காங்கிரஸ் தலைமை நினைத்தது. காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் மீண்டும் முதல்வர் ஆகலாம் என்றும் கணக்குப் போட்டது. ஆனால், பி.ஜே.பியோ நிச்சயம் தங்களது ஆட்சிதான் என்று நம்பியது. அதனால்தான் காங்கிரஸைவிட கெஜ்ரிவாலை கடுமையாக பி.ஜே.பி விமர்சித்தது. இப்படியொரு தேர்தல் முடிவை மோடி எதிர்பார்க்க வில்லை. கெஜ்ரிவாலை 'அராஜகவாதி’ என்றார் மோடி. அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் நண்பர் கிரண் பேடியை அழைத்து வந்து, முதல்வர் வேட்பாளராக மாற்றினார்கள். 100க்கும் மேற்பட்ட பி.ஜே.பி எம்.பிக்கள் டெல்லியில் வலம் வந்தார்கள். 20 மத்திய அமைச்சர்கள் பிரசாரத்தில் குதித்தனர். இதுதவிர ஸ்டார் பேச்சாளர்கள் 40 பேர். பி.ஜே.பிக்காக இவ்வளவு பேர் இருந்தும் ஏனோ வாக்காளர்கள் மனதை மாற்ற முடியவில்லை.
அப்படியே உல்டா ஆனது!
டெல்லியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வாங்கிய வாக்குகளைக் கணக்கிட்டால் அந்தக் கட்சி 10 சட்டமன்றத் தொகுதிகளில்தான் முன்னணியில் இருந்தது. இதில் பி.ஜே.பி 60 தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸுக்கு ஓர் இடமும் இல்லை. இந்தமுறை அப்படியே உல்டா ஆகிவிட்டது. சீட்டுகள் மாறினாலும் பி.ஜே.பியின் ஓட்டு வங்கி அவ்வளவாக அடி வாங்கவில்லை. 2008 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பிக்கு 36.3 சதவிகிதம், 2013 தேர்தலில் 33.1 சதவிகிதம். இப்போது 32.2 சதவிகிதம். கடந்த ஆறு ஆண்டுகளில் நான்கு சதவிகித வாக்குகள் சரிந்துள்ளன. புதிய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கையை இந்தக் கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. இது மட்டுமல்ல. டெல்லி தேர்தலின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பாகிஸ்தானிலிருந்து வந்த பஞ்சாபி அகதிகளும் வியாபாரிகளும்தான் ஜனசங்கத்திலும் பின்னர் பி.ஜே.பியிலும் வெறியோடு இருந்தனர். அவர்களது வாக்குகளை அந்தக் கட்சியால் தக்கவைக்க முடியவில்லை. டெல்லியில் பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்தது 1993-ல் மட்டும்தான். அந்த ஐந்து வருடத்திலும் மூன்று பேர்கள் முதலமைச்சர் ஆனார்கள். வெவ்வேறு மத இன வட்டார மக்களைக்கொண்ட டெல்லி மாநகரில் பி.ஜே.பிக்கு இடமில்லாமல்தான் இருந்தது. இப்போதும் அந்த கோஷ்டிப்பூசல் அதிகமாகத்தான் இருக்கிறது. இதில் கிரண் பேடியை வேட்பாளராக அறிவித்ததே அந்தக் கட்சிக்கு நெகடிவ் ஆகிவிட்டது.
கரைந்தது காங்கிரஸ்!
அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து டெல்லியில் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி காங்கிரஸ்தான். 1977, 1993 ஆகிய இரண்டு தேர்தலில் மட்டும்தான் அந்தக் கட்சி ஜெயிக்கவில்லை. காங்கிரஸுக்கு 52 சதவிகிதம் முதல் 40 சதவிகித வாக்குகள் எப்போதும் இருக்கும். சராசரியாக 40 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளும். ஆம் ஆத்மி கட்சி இல்லாத 2008 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் 40.3 சதவிகிதம். ஆனால் 2013 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்தது 24.55 சதவிகித வாக்குகள்தான். வெற்றிபெற்றது எட்டு தொகுதிகள் மட்டும்தான். இங்குதான் காங்கிரஸ் கட்சியின் சரிவு ஆரம்பமானது. காங்கிரஸ் வாக்குகள் கைமாறிய இடம் ஆம் ஆத்மி.
இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 29.49 சதவிகித வாக்குகள் கிடைத்தன. இப்போது காங்கிரஸ் மேலும் அடிவாங்கி வெறும் 9.7 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. கிட்டதட்ட 30 சதவிகித வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் படிப்படியாக தாரை வார்த்துள்ளது. இந்த முறை ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகள் 54.3 சதவிகிதம். காங்கிரஸ் வாக்குகள் மட்டுமல்ல, மாயாவதியின் பி.எஸ்.பி 2008-ல் பெற்ற 14.5 சதவிகித வாக்குகளும் ஆம் ஆத்மி பக்கம் திரும்பியுள்ளன.
அரவிந்தின் அமைதி ஊர்வலம்!
தமிழகம் மாதிரிதான் டெல்லி. பல்வேறு தரபட்ட மத, சாதி மக்களைக் கொண்டது. இங்குள்ள தலித் வாக்குகளும் சிறுபான்மை இன வாக்குகளும் யாருக்குப் போகிறதோ அந்தக் கட்சிகளால் அந்தந்த தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் பெற்றுவந்த வாக்குகள் மட்டுமின்றி, மாயாவதியின் வாக்கு வங்கியும் ஆம் ஆத்மி கட்சிக்கு உறுதியாகவும் முற்றிலும் திரும்பிவிட்டது. தமிழகத்தில் ஆழமாக இருந்த காங்கிரஸ் நிலைமையை திராவிடக் கட்சிகள் மாற்றியதுபோல, டெல்லி காங்கிரஸ் இடத்தில் ஆம் ஆத்மி கட்சி நிரப்பியது. டெல்லி திருலோக் புரியில் இனக்கலவரம் நடந்தது. இங்கு ஆம் ஆத்மி கட்சி நுழைந்து அமைதி ஊர்வலத்தை நடத்தியது. ஆனால், இங்கு மறைமுகமாக இருந்த அமித் ஷாவின் அரசியல் அணுகுமுறை டெல்லிக்கு பொருந்தவில்லை.
வெற்றிக்குப் பின்னால்?
ஆம் ஆத்மி கட்சியின் பிரசார கமிட்டியின் தலைவராக இருப்பவர் ஆசிஸ் தல்வார். இவர்தான் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசார மேடையை உருவாக்கி ஊர்வலங்களுக்கும் ஏற்பாடு செய்தவர். 3,500 பேர்களைக் கொண்ட பூத்தொண்டர் படையும் இவரது ஏற்பாடுதான். இந்த டீம்தான் வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
சமூக வலைதளங்களில் கெஜ்ரிவால் பற்றியும், ஆம் ஆத்மி கட்சி பற்றியுமான வீடியோக்கள் குவிந்துள்ளன. சமூக வலைதளங்கள் வழியாக ஆம் ஆத்மியை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் அன்கிட் லாலின் பங்கு மிக முக்கியமானது.
அடுத்து ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை. அடிமட்டத்தில் உள்ள மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை அவர்களிடமே கேட்டு வாங்கியவர் ஆசிஸ் கேத்தான். வந்து குவிந்த மக்கள் கருத்துகளில் இருந்து 'டெல்லி டயலாக்’ என்ற பெயரில் 70 அம்சத் திட்டங்களை தேர்தல் அறிக்கையாகத் தயார் செய்தவர் இவர். இந்த மூவர் டீமும் மக்களிடம் கேட்டதும், சொன்னதும் இதுதான்... ''மோடி எட்டு மாதத்தில் உங்களுக்கு என்ன செய்தார். உங்களுக்கு மோடியால் நல்ல நாள் வரப்போவதில்லை. அதேபோல் உங்கள் வாக்குகள் காங்கிரஸுக்கு போடுவது வீண். அந்தக் கட்சி தோல்விதான் அடையப்போகிறது. அவர்களால் எந்த நல்லதும் நடக்காது!'' அவர்கள் கேட்ட கேள்விக்கு பலன் கிடைத்துவிட்டது.
இந்த வெற்றியை எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறார், எப்படி தக்கவைக்கப் போகிறார் என்பதைப் பொருத்தே அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது!
67-ல் 7 பத்திரிகையாளர்கள்!
ஆம் ஆத்மி கட்சியில் வெற்றி பெற்ற 67 எம்.எல்.ஏகளில் 7 பேர் பத்திரிகையாளர்கள். சீக்கியர்கள் விவகாரத்துக்கு ப.சிதம்பரத்தின் மீது ஷூ வீசிய தைனிக் ஜாக்ரன் பத்திரிகையாளர் ஜர்னெல் சிங்கும் இதில் ஒருவர். இவர் டெல்லி ரஜோரி கார்டன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
நன்றி-ஜூனியர் விகடன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்! ’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
நல்லது இனி நடந்தால் மகிழ்ச்சியே ....................
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: வெற்றிக்குப் பின்னால் மூன்று முகங்கள்! ’பாஞ்ச் சால் கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
பார்ப்போம் எப்படி நடத்துகிறார் ஆட்சி என்று
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» வெற்றிக்குப் பின்னால் உள்ள காரணிகள்
» வெற்றிக்குப் 7 வழிகள்
» வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
» ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
» வெற்றிக்குப் 7 வழிகள்
» வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!
» ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….
» மூன்று ஜப்பானியர்களும்.. மூன்று நம்ம ஆள்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|