ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Feb 16, 2015 1:57 pm

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி
அங்கத்தில் குறை இருந்தாலும்
அகத்தில் குறை இல்லாதவர்கள் !
உடலில் குறை இருந்தாலும்
உள்ளத்தில் குறை இல்லாதவர்கள் !
நடக்க முடியாவிட்டாலும் சோராதவர்கள்
பேச முடியாவிட்டாலும் பேதலிக்காதவர்கள் !
பார்க்க முடியாவிட்டாலும் அசராதவர்கள்
கேட்க முடியாவிட்டாலும் வருந்தாதவர்கள் !
கைகள் இல்லாவிட்டாலும் கலங்காதவர்கள்
குறைகள் கண்டு கரையாதவர்கள் !
நான்கு சுவருக்குள் சுருங்காதவர்கள்
நான்கு திசைகளும் செல்வர்கள் !
இல்லாததற்காக என்றும் வருந்தாதவர்கள்
இருப்பதை செம்மையாக்கும் திறனாளர்கள் !
வாய்ப்புகள் வழங்கினால் ஒளிர்வார்கள்
வசதிகள் ஏற்படுத்தினால் வளர்வார்கள் !
குறையையும் நிறையாக எண்ணுபவர்கள்
குறைக்காக என்றும் வருந்தாதவர்கள் !
பரிசுகளும் பதக்கங்களும் பெறுபவர்கள்
பலரின் பாராட்டுக்கு உரியவர்கள் !
எக்குறையும் இல்லாதோர் சிலர்
எவ்வேலையும் செய்யாமல் உளர் !
உடற்குறை இருந்தபோதும் பலர்
ஓடி ஓடி உழைப்போர் உளர் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty பார்வையற்றவர்கள் ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Feb 16, 2015 1:58 pm

பார்வையற்றவர்கள் ! கவிஞர் இரா .இரவி

புறப்பார்வை இரண்டு இல்லாவிட்டாலும்
வந்தவர் குரல் கேட்டவுடன்
வந்தவரின் பெயரை அறிவார்கள் !
பணத்தின் மதிப்பு என்ன என்பதை
பார்க்காவிடினும் விரலால் உணர்வார்கள் !
பாடல் வரிகள் மனனம் செய்து
பாடுவார்கள் வரி எதுவும் விடாமல் !
இசைக்கருவிகளை நுட்பமாக கையாண்டு
இனிமையாக இசை அமைப்பார்கள் !
மா என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர்
மாற்றுத்திறனாளி மதுரைக்காரர் !
இசைக்குழுக்கள் அமைத்து நிகழ்வுகளில்
இன்னிசை விருந்து தருபவர்கள் !
அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர்
பார்வையற்றோர் பலருக்கு ஏணி அவர் !
படிக்க வைத்து கரை சேர்க்கும் தோணி அவர் !
பலகுரல் நிகழ்ச்சியும் நடத்துவார்கள்
பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் !
கணினி இயக்கவும் கற்கிறார்கள்
கண் பார்வையின்றியே சாதிக்கிறார்கள் !
ஊன்றுகோல் தட்டியே உணர்வார்கள்
உயரம் பள்ளம் குச்சியால் அறிவார்கள் !
முதுநிலை பட்டம் கூட பெற்றுள்ளார்கள்
முத்திரைப் பதிக்கும் செயல்கள் செய்வார்கள் !
தன்னம்பிக்கை பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள்
தன்னம்பிக்கை சிகரமாக வாழ்கிறார்கள் !
பார்வையுள்ளவர்களில் சோம்பேறிகள் உண்டு
பார்வையற்றவர்களில் சோம்பேறிகள் இல்லை !
துன்பத்திற்கு துன்பம் தந்து திருக்குறள் வழி
இன்பமாய் வாழும் வல்லவர்கள் நல்லவர்கள் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





















eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Feb 16, 2015 1:59 pm

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! கவிஞர் இரா .இரவி

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று
சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் !
உலகின் முதல் மொழி தமிழ் என்று
உரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் !
உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள்
அடுக்கு மொழியில் அள்ளி விட சொற்கள்
ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு !
தமிழ் !தமிழ் !தமிழ் ! என்று உச்சரித்துப் பாருங்கள்
அமிழ்து ! அமிழ்து ! என்று ஒலி கேட்கும் !
முத்தமிழுக்கும் மகுடமாக விளங்குவது சொற்கள்
முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி !
ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு
ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை !
ஓர் எழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு
இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு !
உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து
மூவகை எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி !
பிறமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி !
பன்மொழி அறிஞர்கள் பாராட்டும் தமிழ்மொழி
பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி !
உலக உயிரினங்கள் உச்சரிக்கும் அம்மா தமிழ்
உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


















eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Feb 16, 2015 2:00 pm

பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி
தேவை விளம்பரம்
பூக்கடைக்கும்
காகிதப்பூக்கள் !
பணிவு கூட்டிடும்
கர்வம் குறைத்திடும்
புகழ் !
வாத்தியார் பிள்ளை மக்கல்ல
ஆசிரியர் பிள்ளை
பேராசிரியர் !
ஆசைப்படலாம் முடவன்
கொம்புத் தேனுக்கு
கடையில் கிடைக்கும் !
நாலு பெண்கள் கூடினால்
வேற்றுமையல்ல ஒற்றுமை
மகளிர் சுய உதவிக்குழு !
நாய் விற்ற காசு குரைக்காது
தெரிந்தது
நாயின் முகம் !
நிலையாமை ஒன்றே
நிலையானது
வாழ்க்கை !
நீர் உயர
நெல் உயரவில்லை
அழுகியது நெல் !
பெண் புத்தி பின் புத்தி
பின்னால் வருவதை
யோசிக்கும் புத்தி !
பொறுத்தார் பூமி ஆளவில்லை
இழந்தார்கள்
பூமியை !
அதிகம் வேண்டும்
ஞாபகம்
பொய்யனுக்கு !
பிறந்ததும்
கற்றது நீச்சல்
மீன்குஞ்சு !
பழம்தான்
இனிப்பதில்லை
மிளகாய்ப்பழம் !
எடுத்தால் ஓடாததால்
எடுக்கவில்லை படம்
பாம்பு !
பசுமரத்தாணியாகப் பதிகின்றன
ஊடகத்தில் காட்டும்
கெட்டவைகள் !
பழகப் பழக
புளிக்கும் பால்
இனிப்பால் காதலி !
பாம்புக்கு பால் வார்ப்பு
இலங்கைக்கு உதவும்
இந்தியா !
பாம்பு என்றால்
படையும் நடுங்கும்
அஞ்சுவதில்லை பருந்து !
பிள்ளையில்லா வீட்டில்
துள்ளவில்லை வருத்தத்தில்
கிழவன் !
உருவத்தில் சிறியது
உடல் நலத்திற்கு நல்லது
மிளகு !
மூர்த்தி சிறியது
கீர்த்தி பெரியது
மிளகு !
பல் போனால்
சொல் போகவில்லை
செயற்கைப் பற்கள் !
தோளுக்கு மிஞ்சினால்
தோழனாகப் பழகினால்
நீடிக்கும் உறவு !
பிள்ளையார் பிடிக்க
குரங்காய் முடிந்தது
அணு உலை !
சிப்பியில் விழும்
எல்லா மழைத்துளியும்
முத்தாகாது !
நல்ல மரத்தில் புல்லுருவிகள்
கல்வித்துறையில்
தனியார் !
வயதாகும் முன்பும்
நரை வரும்
இளநரை !
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
எல்லாப் பிள்ளைக்கும் வாயுண்டு
பேசத்தெரிந்த பிள்ளை பிழைக்கும் !
பயம் கொள்ளவில்லை
புலிக்குகை புகுந்த மான்
குகையில் இல்லை புலி !
இரண்டும் ஒன்று
தவளை அரசியல்வாதி
தன் வாயால் கெடுபவர்கள் !
தீட்டின மரத்திலேயே
கூர் பார்த்தனர்
கட்சி மாறி !
பசுத்தோல் போர்த்திய
புலியாக
தலைவர்கள் !
தோலிருக்க
சுளை முழங்கி
அரசியல்வாதி !
வாய்ப்பந்தல்
நிழல் தராது
தேர்தல் அறிக்கை !
நெற்றிக்கண் கண்டால்
நடுங்குகின்றனர்
இக்காலப் புலவர்கள் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Feb 16, 2015 2:01 pm


பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி
சிக்கி முக்கி கற்களை
உரசினால்தான் தீ வரும் !
கள்ளி அவள்

கண்களால் பார்த்தாலே தீ வரும் !
இமைகள் கூட
இமைக்க மறக்கின்றன
அவளைக் கண்டால் !
அவள் விழிகளிலிருந்து
வரும் விசைகளால்
ஆட்டம் காண்கிறது
மனசு !
இதழ்கள் அசைத்து
எதுவும் பேசவில்லை
எல்லாம் பேசிவிட்டாள்
விழிகளால் !
வேறு எங்கும்
நான் கண்டதில்லை
கரு விழிகள் நடனம் !
நோக்கும்போது
நோகவில்லை
நோக்காதபோது
நொந்து போனேன் !
பாவையின் பார்வை
பரவசத்தில்
நேரம் கடப்பதை
உணரவில்லை !
மேனி தீண்டல்
தேவையில்லை
பார்வை சீண்டல் போதும் !
உற்றுப்பார்ததில்
ஊட்டசத்தை
உணர்ந்தேன் !
விழி வழி
இன்பரசம்
அனுப்பும் கள்ளி
. இமைக்காமல் பார்க்கும்
போட்டியில்
வெற்றி அவளுக்கு
வசமானது !
நான் தோற்றபோதும்
மகிழ்ச்சி எனக்கு !
ஆயிரம் பேரோடு
நான் இருந்தாலும்
அழகாக காண்கிறாள்
அழகி !
தொலை தூரத்தில்
நான் இருந்தாலும்
பார்வையால் துரத்திப்
பிடித்து விடுகிறாள் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

































































eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Mon Feb 16, 2015 2:02 pm


ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி
அடிக்கிற கை
வேண்டாம் அணைக்க
குடிகாரன் !
அனைத்தையும் ரசிக்கும்
அடையும் மகிழ்ச்சி
அமைதியான மனம் !
அழுத பிள்ளை
பால் குடிக்கவில்லை
பால் விலை உயர்வு !
அம்மா இறந்தால்
அப்பாவும் இல்லை
குழந்தைக்கு !
அச்சாணி இல்லாத தேர்
முதியோர் இல்லாத
வீடு !
அறுக்கத் தெரிந்தவனுக்கு
ஒன்று போதும்
அரிவாள் !
அடியாது மாடு படியாது
தவறு
அடித்த மாடு சண்டி !
அத்தைக்கு மீசை முளைத்தாலும்
சித்தப்பா அல்ல
அத்தைதான் !
ஆடிப்பட்டம் தேடி விதை
சரி
நிலம் ?
ஆடிக்காற்றில் அம்மியும்
நகரும் சரி
அம்மி ?
இயந்திய வாழ்வை
இனிதாக்கும்
இலக்கியம் !
இலை உதிர் காலம்
இலை உதிர்ப்பதில்லை
ஈச்சம் மரம் !
இட்டுக் கெட்டார்
இங்கு உண்டு
தேர்தலில் வாக்கு !
உதடு வெல்லம்
உள்ளம் கள்ளம்
அரசியல்வாதி !
உடல் பெரிது
கண்கள் சிறிது
யானை !
உழவன் கணக்குப் பார்த்தால்
உழக்கும் மிஞ்சவில்லை
இன்று !
உலகில் எங்கு பிறந்தாலும்
நிறம் கருமைதான்
காகம் !
உலகில் இளைஞர்கள்
அதிகம் வா(ழு )டும் நாடு
இந்தியா !
ஊர் கூடி
தேர் இழுத்ததில்
வந்தது சண்டை !
எச்சிற் கையால்
காக்கை ஓட்டாதவன்
மாறினான் காதலித்ததும் !
நிறையை கூட்டத்தில்
குறையை தனிமையில் கூறுவது
நல்ல நட்பு !
ஓநாயிடம் அன்பு
ஆட்டுக்கு தீமை
இலங்கையிடம் இந்தியா !
கடன் வாங்கித் திருமணம்
குழந்தைக்கு முன்பாக
பிறந்தது வட்டி !
கண்ணுக்கு இமை
காதலனுக்கு காதலி
காவல் !
ஒரு கை தட்டினாலும்
ஓசை வந்தது
மேசை மீது தட்டியதால் !
உரைத்தார் காந்தியடிகள்
உழைக்காமல் உண்பது
திருட்டு !
கடவுளை நம்பினோர்
கைவிடப்பட்டார்
யாத்திரை விபத்து !
கட்டி வா என்றால்
வெட்டி வந்தான்
காது கேளாதவன் !
காக்கை உட்கார
பனம் பழம் விழுந்தது
தங்கத்தின் விலை குறைவு !
காற்றுக்கு சாயும்
ஒடியாது
நாணல் !
பூனையிடம் சிக்கிய கிளியாய்
குடிகாரனிடம்
மனைவி !
கேழ்வரகில் நெய்
வடிகிறது என்கிறார்
சாமியார் !
உலகில்
எங்கும் இல்லை
சைவ கொக்கு !
சனி பிணம் தனியே போகாது
வெட்டியானுக்கு இலாபம்
கோழி !
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சரி
நெல் ?
நரம்புகள் உண்டு
எலும்பு இல்லை
நாக்கு !
வைரம் அறுக்க வைரம்
அன்பைப் பெற செலுத்துக
அன்பு !
பேச்சில் அன்பிருந்தால்
உறவாகும்
உலகம் !
தன்னம்பிக்கை இழக்க
உயிர்த்தெழும்
மூட நம்பிக்கை !
மிதிக்காமல்
கொத்தாது
நல்ல பாப்ம்பு !
தீண்டாமல்
எழுப்பாது ஓசை
மணி !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty குதிரை !கவிஞர் இரா .இரவி!

Post by eraeravi Mon Feb 16, 2015 2:03 pm

குதிரை !கவிஞர் இரா .இரவி!

தொடர்ந்து ஓடும்
தொய்வின்றி ஓடும்
குதிரை !
பற்களால் யாரையும்
கடிப்பது இல்லை
குதிரை !
கொம்புகள் கிடையாது
குத்துவதும் கிடையாது
குதிரை !
ஆற்றல் விரையம் இல்லை
ஆகவே சோர்வும் இல்லை
குதிரை !
சண்டை போடாது
சஞ்சலம் அடையாது
குதிரை !
கடினமாக உழைத்த போதும்
உண்பதில்லை அசைவம்
குதிரை !
கண்களை மூடினாலும்
கவலை கொள்ளாது
குதிரை !
போட்டியில் ஓடினாலும்
பக்கத்தை பார்க்காது
குதிரை !
குறிக்கோள் அடைய
வேகமாக ஓடும்
குதிரை !
பயணம் செய்வதில்
பயம் கொள்ளாது
குதிரை !
மின்சார மோட்டாருக்கும்
சக்தியின் அளவு
குதிரை !
--



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

























eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty Re: மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி

Post by M.Saranya Mon Feb 16, 2015 3:08 pm

அருமை அருமை.....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி Empty Re: மாற்றுத்திறனாளிகள் ! கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி
» மாற்றுத்திறனாளிகள் தினம் ! கவிஞர் இரா .இரவி .
» கவித்துளி ! மாற்றுத்திறனாளிகள் குறும்பாக்கள் ! தொகுப்பு ஆசிரியர் கவித்துளி மு .குமார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum