ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் !  நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம்  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Feb 16, 2015 1:33 pm

நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் !
நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் !
humourkingilasai@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
புகழ் பதிப்பகம் நிர்மல் அக்ரிணி குடியிருப்பு ,ஆண்டாள் புரம் , மதுரை .3அலைபேசி 9843062817 விலை ரூபாய் 140.
அழகப்பா பல்கலை கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு .பாண்டி அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக நூலிற்கு அழகு சேர்கின்றது .நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களைப் போலவே எழுத்து ,பேச்சு இரண்டு துறையிலும் முத்திரை பதித்து வருபவர் .
. மதுரை வானொலியில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பின்பு ஓய்வுக்கு ஓய்வு தந்து உழைத்து வருபவர். உலகில் இவர் செல்லாத நாடு இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நாடுகள் சென்று பேசி வருபவர் .நான் எந்த வெளிநாடு இதுவரை சென்றது இல்லை .ஆனால் எல்லா நாட்டிலும் நண்பர்களும் கவிதை ரசிகர்களும் எனக்கு உண்டு .அவர் ஜெர்மனி போகிறேன் லண்டன் போகிறேன் என்றால் ஜெர்மனி ,லண்டன் நண்பர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி விடுவேன் .அவர்கள் வந்து நூல் ஆசிரியர் முனைவர் இளசை சுந்தரம்அவர்களை சந்தித்து வரவேற்று மகிழ்வார்கள் .
உலகம் சுற்றும் வாலிபன் என்று எம் ஜி .ஆரை சொல்வார்கள் .அது போலவே இவரையும் உலகம் சுற்றும் வாலிபன் என்றே சொல்லலாம் பல நாடுகள் சென்று உரையாற்றி வருபவர் ' நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம்'என்ற தலைப்பில் நூல் எழுதியது மிகப் பொருத்தம் .சொற்பொழிவாளர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல் .
பேச்சுக்கலை ரகசியத்தை ,நுட்பத்தை நன்கு விரிவாக விளக்கி உள்ளார் .எப்படி தொடங்குவது எப்படி முடிப்பது .தொடக்கவுரை எப்படி இருக்க வேண்டும் சிறப்புரை எப்படி இருக்க வேண்டும் .தொகுப்புரை எப்படி இருக்க வேண்டும் என்று நன்கு எழுதி உள்ளார்.புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சுவைபட எழுதி உள்ளார்.
தேசப்பிதா காந்தியடிகள் வெளிநாடு சென்று பட்டம் பெற்று வந்த போதும் இந்தியாவில் முதன் முதலில் வழக்கறிஞர் தொழில் புரியும்போது நீதிபதி முன் பேச முடியாமல் தவித்தார் .பின்னாளில் உலகம் வியக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார் .இந்த நிகழ்வை நூலில் எழுதி உள்ளார் .
அறிஞர் அண்ணா பேச மேடையேறியபோது ஒலிவாங்கி மேடை உயரமாக இருந்தது .உடன் ஒரு தொண்டர் பலகை கொண்டு வந்து போட்டு அதன் மீது ஏறி அறிஞர் அண்ணாவை பேச வைத்தார் .உடன் அறிஞர் அண்ணா தொண்டர்களால்தான் அறிஞர் அண்ணா உயர்ந்தார் என்றார்கள் .அது இன்று மெய்யாகி விட்டது என்றார் .இந்த நிகழ்வும் நூலில் எழுதி உள்ளார் .
அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது சட்டமன்றதில் ஒரு கேள்வி வந்தது .
யாகாவார் ஆயினும் நாகாக்க ;காவாக்கால் ( 127)
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு .
பேருந்தில் இந்த திருக்குறள் எழுதி உள்ளனர் .நாகாக்க என்பது ஓட்டுனருக்கா ? நடத்துனருக்கா ? பயணிகளுக்கா ? என்றனர் . உடனே அறிஞர் அண்ணா சொன்னார் நா உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றார் .இந்த நிகழ்வும் நூலில் எழுதி உள்ளார் .அறிஞர் அண்ணாவின் பேச்சு ஆற்றலை நன்கு உணர்த்தி உள்ளார் . நேரு அவர்கள் லண்டன் பி .பி .சி யில் உரையாற்றிய போது பதிவு செய்யும் முன் நோட்டமாக பேசிட சொன்னார்கள் .நேரு அவர்களும் சிறிதும் தயக்கமின்றி முன்னோட்டமாக பேசி காண்பித்தார் .இந்த நிகழ்வும் நூலில் எழுதி உள்ளார் .
அடிசன் என்ற அறிஞர் பேசும்போது I CONCEIVE, I CONCEIVE , I CONCEIVE நான் நினைக்கிறேன் ,நான் நினைக்கிறேன் ,நான் நினைக்கிறேன்.என்று முன்று தடவை சொல்லி விட்டு அதற்கு மேல் பேச முடியாமல் அமர்ந்து விட்டார் .கன்சீவ் எனபதற்கு கருவுறுதல் என்றும் ஒரு பொருள் உண்டு .உடன் அடுத்தவர் எழுந்து அடிசன் அவர்கள் மூன்று முறை கருவுற்றார் ஆனால் ஒரு முறை கூட பிரசவம் ஆகவில்லை என்றார் . இந்த நிகழ்வையும் எழுதி உள்ளார் .
சிலர் ஒலி வாங்கியை கையில் வாங்கினாலே பயம் வந்து விடும் பேச்சு வராது .ஆனால் ஒரு சிலர் ஒலி வாங்கியை கையில் வாங்கினாலே பார்வையாளர்களுக்கு பயம் வந்து விடும் இவர்பேச்சை நிறுத்தவே மாட்டாரே என்று . அப்படி இல்லாமல் இனிமையாக பேசுவது எப்படி என்பதை நன்கு விளக்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
வீட்டில் தனி அறையில் கண்ணாடி முன்னின்று பேசிப் பழகச் சொல்கிறார் .ஆற்றில், தோப்பில், வரப்பில் பேசிப் பழகச் சொல்கிறார் .பல யுத்திகளை எழுதி உள்ளார் .கடைபிடித்தால் பேச்சில் முத்திரை பதிக்கலாம் .
கோழி முட்டையின் மீது சதா ஆடை காத்துக் கொண்டு இருப்பது போல நீங்கள் பேச எடுத்துக் கொண்ட விசயத்தைப் பற்றிச் சதா சிந்தித்துக் கொண்டே இருந்தால் கோழியின் முட்டையிலிருந்து குஞ்சுகள் கிளம்புவது போலப் புதிய கருத்துக்கள் துள்ளி வரும் பிரௌன் என்ற அறிஞர் சொன்ன கருத்தையும் எழுதி நூலிற்கு பெருமை சேர்த்து உள்ளார் .
உலகப் பொது மறை வடித்த திருவள்ளுவரின் திருக்குறளையும் பொருந்தமான இடங்களில் பயன் படுத்தி உள்ளார் . சொற்பொழிவாளர்அதிக நூல் படிக்க வேண்டிய அவசியத்தையும் நன்கு உணர்த்து உள்ளார் .தொழில் முறை பேச்சாளர்கள் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமல்ல மட்டுமல்ல தொழில் புரிவோரும் ,பணி புரிவோரும் அனைவரும் இந்த நூல் படித்தால் பிறரிடம் எப்படி பேசினால் நன்மை பயக்கும் என்பதை விளக்கும் நூல். பலநூறு மேடைகள் கண்ட அனுபவசாலி அவர்களின் அனுபவ நூல் .
நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» வா ... வியாபாரி ஆகலாம் ! நூல் ஆசிரியர் 'அமுதா' B. பாலகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வான் தொட்டில் ! நூல் ஆசிரியர் : காவல் உதவி ஆணையர், கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum