புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
தடம் தொலைத்த தடயங்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1120741தடம் தொலைத்த தடயங்கள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-16-5-A, கே.கே. நகர், வத்தலக்குண்டு642 202. விலை:ரூ. 120 vathilaipraba@gmail.com பேச 9629652652
ஓவியா பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. பதிப்பாளர், இனிய நண்பர் வதிலை பிரபா விமர்சனத்திற்காக அனுப்பி வைத்தார். நூலாசிரியர் கவிஞர் பிரகாசக்கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கு வழங்கி உள்ள பிரகாசக்கவி என்ற பட்டம், பொருத்தமாகவே உள்ளது. ஒவ்வொரு பொருளிலும் ஆழ்ந்து சிந்தித்து பிரகாசமாக கவிதை வடித்துள்ளார். தடம் தொலைத்த தடயங்கள் நூலின் தலைப்பும் வித்தியாசமாக உள்ளது. பாராட்டுக்கள்.
சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ப. பானுமதி இவர் (ஆதிரா முல்லை) என்ற புனைப்பெயரில் முகநூலில் கவிதைகள் எழுதி வரும் கவிஞர். இவரது அணிந்துரை நூலிற்கு அழகுரையாக உள்ளது. இலங்கையில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர் நூலாசிரியர்.எனவே அவர் அங்கு பல சோக நிகழ்வுகளை நேரடியாக பார்த்திட்ட அனுபவம் இருக்கும். வறுமையை, ஏழ்மையை கவிதையில் படம் பிடித்து காட்டி உள்ளார்.
வாழ்க்கைக் கோலங்கள் !
இடைவேளையில்
எல்லோரும்
ஆப்பிள் ஆரஞ்சு என்று
வயிறு நிறைக்க
நானோ
தண்ணீரால் வயிறு நனைத்தேன்
எல்லோரும் சுற்றுலா செல்ல
என் கண்களோ
வகுப்பறைச் சுவற்றில் தொங்கும்
உலகப் படத்தில்
சுற்றுலா சென்றது.
ஏழை நான்
முயற்சியின் எல்லை வரை சென்று !
கல்வியியல் கல்லூரியில் வறுமையோடு போராடி, கல்லுரியில் பட்டம் பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்ததை கவிதையாக வடித்துள்ளார்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்,கடின உழைப்பின் காரணமாக நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் மன அமைதியோ, மன மகிழ்ச்சியோ அடைவது இல்லை. சிந்தையின் ஒரு ஓரத்தில் பிறந்த மண் பற்றிய சிந்தனை, வருத்தம், வேதனை இருந்து கொண்டே தான் இருக்கும். இசையரசர் இளையராஜா அவர்கள், ஒரு பாடலில் பாடுவார், சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா? என்று. எனக்கும் அப்படித்தான், சென்னை, பெங்களூர் என்று நவீன நகரங்களுக்கு சென்ற போதும் பிறந்த ஊரான மதுரைக்கு ஈடாகாது. மதுரைக்கு வந்த பிறகே மனம் மகிழ்வு அடையும் .அந்த பிறந்த மண் பற்று உணர்த்தும் கவிதை மிக நன்று.
இயற்றி விடு !
கூழோ கஞ்சியோ
குடிசையில் குடித்து
தாய் நாட்டில் நாங்கள் வாழ
சீதனச் சட்டம்
இயற்றுவது
இன்றைய கட்டாய தேவையாச்சு !
ஆற்று மணலை கொள்ளையடிக்கிறான் ,மலைகளை வெட்டி கொள்ளையடிக்கிறான் ,வனங்களை அழித்து கொள்ளையடிக்கிறான், நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கிறான். இயற்கையை மனிதன் சேதப்படுத்தி மகிழ்கிறான். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து இயற்கை மனிதனை சிதைத்து வருகின்றது. இயற்கையின் சீற்றம் தானே சுனாமி.
சுனாமி !
ஏய் கடலே
உன்னில்
இதுவரை
வள்ளங்கள்
மிதக்கக் கண்டோம்
பின்னர்
பிணங்களையும்
மிதக்கக் கண்டோம்
நீ கொடையரசியா
இல்லை
கொலைகாரியா
நீ அமையின் சின்னம்மா
இல்லை
அழுகையின் கிண்ணமா?.
அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள் பிறந்த நாளை அவர்களாகவே சுவரொட்டிகள் அடித்து விளம்பரப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். சிலர் பிறந்த நாள் என்ற பெயரில் தொண்டர்களிடமிருந்து வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றனர். இவற்றைக் கண்ட நூலாசிரியர் வடித்த கவிதை.
பிரியும் நாள் !
பிரயோசனம் இன்றி
பிரிந்து போகும் நாளை
பிறந்த நாள் என்று
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
பிரியாவிடை வைக்கிறார்கள்
புண்ணாக்கு
மடையர்கள் இன்று
வயது ஒன்று
கூடி விட்டதால்
சிரிக்கும் மானிடனே
உன் ஆயுளும் குறைந்து விட்ட
உண்மைதனை
நீ அறிந்தால்
தொடருமா உன் சிரிப்பு?
நூலாசிரியர் இலங்கையில் வாழ்ந்து வருபவர், இன்றைய நடப்பை, உள்ளதை உள்ளபடி அப்படியே பதிவு செய்துள்ளார். பாருங்கள்.
தம்பட்டம்!
போர் முடிந்ததாய்
பெருமுழக்கம்
குதிரை குட்டியீன்ற
யானை முட்டை போல
ஆங்காங்கே தோரணங்கள்
அதன் நடுவில் காரணங்கள்
ஒடிந்து போன
ஓராயிரம் விதிகளுக்கு
ஓட்டு போட்டாயிற்று
தமிழர் கால் உடைத்து
குளிருக்கு குதூகலமாய்
சூப்பும் குடிச்சாச்சு
வாந்தி வருவதாய்
தேரைகள்
தேவாரம் பாடலாச்சு
ஆனால் இன்னும்
சுதந்திரம் வந்து போனதாய்
சுவடுகள் தானுமில்லை இங்கு!
இலங்கையில் அமைதி நிலவுவதாக தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதாக வெளி உலகிற்கு போலியாகவே பிரகடனம் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் அங்கு தமிழர்கள் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்ற உண்மையை கவிதையில் பதிவு செய்த நூலாசிரியர் கவிஞர் எம்.பீ. அன்வர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சிங்கள இன உணர்வை தூண்டி விட்டு வன்முறைக்கு வித்திட்ட புத்த பிட்சுக்கு நம் நாட்டில் அஞ்சல் தலை வெளியிட்டு மகிழ்வது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது . உள்ளத்து உணர்வுகளை மிக நுட்பமாக கவிதையாக்கி உள்ளார். கண்டதை, உணர்ந்ததை, நடந்ததை, நடப்பதை கவிதையாக்கி உள்ளார். இவரது கவிதைச் சுவடுகள் அழியாதவை.
ஆடு மேய்க்கும் ஓநாய்கள்!
ஆடுகள் ஒருபோதும்
குரைப்பதில்லை நாய்களைப் போல
அதனால் தான்
இன்றும் சில ஓநாய்களால்
ஊளையிட்டுக் கொண்டே இருக்க முடிகிறது
வல்லரசு எனும் வல்லூறுகளாய்
ஆனால் ஒன்று மட்டும் இது வரை
ஓநாய்களுக்குப் புரியவேயில்லை
புலிகள் பதுங்குவது ஓய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று!
நவீன இன்றைய மனிதர்கள் வணிக வளாகங்களுக்கு செல்லும் போது அவர்களிடம் பேரம் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் நூற்றுக்கணக்கில் இலாபம் வைத்து இருந்தாலும் கேட்ட பணத்தை மறுப்பின்றி கொடுப்பார்கள். ஆனால் இல்லம் வந்து தேடி வந்து விற்கும் ஏழை வியாபாரிகளிடம் வாய் வலிக்க பேரம் பேசும் நிலை உள்ளது. அதனை ஒரு சிறுகதை போல எள்ளல் சுவையுடன் நெறி போதிக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார். மிக நன்று.
வைத்தெரிச்சல் !
ஐநூறு ரூபாய் விற்ற மீன்களை
வாதாடி கூத்தாடி
இருநூறு ரூபாய்க்கு வாங்கிச் சென்றதில்
பெருமிதம் அவனுக்கு
இவன் சாதனையை
அவன் மனைவி கூட
புகழ்ந்து
பேசுகிறாள்
அவளது தோழிகளிடம் .
பாவம் இவன்
தொண்டைக்குழியில்
தொக்கி நின்று
தொல்லை செய்த
மீன்முள்ளை துரத்திவிட
அவன்செய்த
கலவரங்களால்
திடீர்என்று அவன் வீடு ஓர்
குட்டிப் போர்க்களமாய் மாறிப் போனது
அப்போது தான் அங்கே
அவன் வீட்டுப் பூனையும்
எதிர்வீட்டுப்
பூனையும் பேசிக்கொள்கின்றன
மீன்காரன் வைத்தெரிச்சல்
சும்மா விடுமா என்று.
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கும், ஓவியா பதிப்பாளர் இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள் .i .
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-16-5-A, கே.கே. நகர், வத்தலக்குண்டு642 202. விலை:ரூ. 120 vathilaipraba@gmail.com பேச 9629652652
ஓவியா பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. பதிப்பாளர், இனிய நண்பர் வதிலை பிரபா விமர்சனத்திற்காக அனுப்பி வைத்தார். நூலாசிரியர் கவிஞர் பிரகாசக்கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கு வழங்கி உள்ள பிரகாசக்கவி என்ற பட்டம், பொருத்தமாகவே உள்ளது. ஒவ்வொரு பொருளிலும் ஆழ்ந்து சிந்தித்து பிரகாசமாக கவிதை வடித்துள்ளார். தடம் தொலைத்த தடயங்கள் நூலின் தலைப்பும் வித்தியாசமாக உள்ளது. பாராட்டுக்கள்.
சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ப. பானுமதி இவர் (ஆதிரா முல்லை) என்ற புனைப்பெயரில் முகநூலில் கவிதைகள் எழுதி வரும் கவிஞர். இவரது அணிந்துரை நூலிற்கு அழகுரையாக உள்ளது. இலங்கையில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர் நூலாசிரியர்.எனவே அவர் அங்கு பல சோக நிகழ்வுகளை நேரடியாக பார்த்திட்ட அனுபவம் இருக்கும். வறுமையை, ஏழ்மையை கவிதையில் படம் பிடித்து காட்டி உள்ளார்.
வாழ்க்கைக் கோலங்கள் !
இடைவேளையில்
எல்லோரும்
ஆப்பிள் ஆரஞ்சு என்று
வயிறு நிறைக்க
நானோ
தண்ணீரால் வயிறு நனைத்தேன்
எல்லோரும் சுற்றுலா செல்ல
என் கண்களோ
வகுப்பறைச் சுவற்றில் தொங்கும்
உலகப் படத்தில்
சுற்றுலா சென்றது.
ஏழை நான்
முயற்சியின் எல்லை வரை சென்று !
கல்வியியல் கல்லூரியில் வறுமையோடு போராடி, கல்லுரியில் பட்டம் பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்ததை கவிதையாக வடித்துள்ளார்.
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்,கடின உழைப்பின் காரணமாக நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் மன அமைதியோ, மன மகிழ்ச்சியோ அடைவது இல்லை. சிந்தையின் ஒரு ஓரத்தில் பிறந்த மண் பற்றிய சிந்தனை, வருத்தம், வேதனை இருந்து கொண்டே தான் இருக்கும். இசையரசர் இளையராஜா அவர்கள், ஒரு பாடலில் பாடுவார், சொர்க்கமே என்றாலும், அது நம்மூரைப் போல வருமா? என்று. எனக்கும் அப்படித்தான், சென்னை, பெங்களூர் என்று நவீன நகரங்களுக்கு சென்ற போதும் பிறந்த ஊரான மதுரைக்கு ஈடாகாது. மதுரைக்கு வந்த பிறகே மனம் மகிழ்வு அடையும் .அந்த பிறந்த மண் பற்று உணர்த்தும் கவிதை மிக நன்று.
இயற்றி விடு !
கூழோ கஞ்சியோ
குடிசையில் குடித்து
தாய் நாட்டில் நாங்கள் வாழ
சீதனச் சட்டம்
இயற்றுவது
இன்றைய கட்டாய தேவையாச்சு !
ஆற்று மணலை கொள்ளையடிக்கிறான் ,மலைகளை வெட்டி கொள்ளையடிக்கிறான் ,வனங்களை அழித்து கொள்ளையடிக்கிறான், நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கிறான். இயற்கையை மனிதன் சேதப்படுத்தி மகிழ்கிறான். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து இயற்கை மனிதனை சிதைத்து வருகின்றது. இயற்கையின் சீற்றம் தானே சுனாமி.
சுனாமி !
ஏய் கடலே
உன்னில்
இதுவரை
வள்ளங்கள்
மிதக்கக் கண்டோம்
பின்னர்
பிணங்களையும்
மிதக்கக் கண்டோம்
நீ கொடையரசியா
இல்லை
கொலைகாரியா
நீ அமையின் சின்னம்மா
இல்லை
அழுகையின் கிண்ணமா?.
அரசியல்வாதிகள், திரைப்பட நடிகர்கள் பிறந்த நாளை அவர்களாகவே சுவரொட்டிகள் அடித்து விளம்பரப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். சிலர் பிறந்த நாள் என்ற பெயரில் தொண்டர்களிடமிருந்து வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றனர். இவற்றைக் கண்ட நூலாசிரியர் வடித்த கவிதை.
பிரியும் நாள் !
பிரயோசனம் இன்றி
பிரிந்து போகும் நாளை
பிறந்த நாள் என்று
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
பிரியாவிடை வைக்கிறார்கள்
புண்ணாக்கு
மடையர்கள் இன்று
வயது ஒன்று
கூடி விட்டதால்
சிரிக்கும் மானிடனே
உன் ஆயுளும் குறைந்து விட்ட
உண்மைதனை
நீ அறிந்தால்
தொடருமா உன் சிரிப்பு?
நூலாசிரியர் இலங்கையில் வாழ்ந்து வருபவர், இன்றைய நடப்பை, உள்ளதை உள்ளபடி அப்படியே பதிவு செய்துள்ளார். பாருங்கள்.
தம்பட்டம்!
போர் முடிந்ததாய்
பெருமுழக்கம்
குதிரை குட்டியீன்ற
யானை முட்டை போல
ஆங்காங்கே தோரணங்கள்
அதன் நடுவில் காரணங்கள்
ஒடிந்து போன
ஓராயிரம் விதிகளுக்கு
ஓட்டு போட்டாயிற்று
தமிழர் கால் உடைத்து
குளிருக்கு குதூகலமாய்
சூப்பும் குடிச்சாச்சு
வாந்தி வருவதாய்
தேரைகள்
தேவாரம் பாடலாச்சு
ஆனால் இன்னும்
சுதந்திரம் வந்து போனதாய்
சுவடுகள் தானுமில்லை இங்கு!
இலங்கையில் அமைதி நிலவுவதாக தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதாக வெளி உலகிற்கு போலியாகவே பிரகடனம் செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் அங்கு தமிழர்கள் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்ற உண்மையை கவிதையில் பதிவு செய்த நூலாசிரியர் கவிஞர் எம்.பீ. அன்வர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சிங்கள இன உணர்வை தூண்டி விட்டு வன்முறைக்கு வித்திட்ட புத்த பிட்சுக்கு நம் நாட்டில் அஞ்சல் தலை வெளியிட்டு மகிழ்வது தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது . உள்ளத்து உணர்வுகளை மிக நுட்பமாக கவிதையாக்கி உள்ளார். கண்டதை, உணர்ந்ததை, நடந்ததை, நடப்பதை கவிதையாக்கி உள்ளார். இவரது கவிதைச் சுவடுகள் அழியாதவை.
ஆடு மேய்க்கும் ஓநாய்கள்!
ஆடுகள் ஒருபோதும்
குரைப்பதில்லை நாய்களைப் போல
அதனால் தான்
இன்றும் சில ஓநாய்களால்
ஊளையிட்டுக் கொண்டே இருக்க முடிகிறது
வல்லரசு எனும் வல்லூறுகளாய்
ஆனால் ஒன்று மட்டும் இது வரை
ஓநாய்களுக்குப் புரியவேயில்லை
புலிகள் பதுங்குவது ஓய்வெடுக்கவல்ல
பாய்வதற்கு என்று!
நவீன இன்றைய மனிதர்கள் வணிக வளாகங்களுக்கு செல்லும் போது அவர்களிடம் பேரம் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் நூற்றுக்கணக்கில் இலாபம் வைத்து இருந்தாலும் கேட்ட பணத்தை மறுப்பின்றி கொடுப்பார்கள். ஆனால் இல்லம் வந்து தேடி வந்து விற்கும் ஏழை வியாபாரிகளிடம் வாய் வலிக்க பேரம் பேசும் நிலை உள்ளது. அதனை ஒரு சிறுகதை போல எள்ளல் சுவையுடன் நெறி போதிக்கும் விதமாக கவிதை வடித்துள்ளார். மிக நன்று.
வைத்தெரிச்சல் !
ஐநூறு ரூபாய் விற்ற மீன்களை
வாதாடி கூத்தாடி
இருநூறு ரூபாய்க்கு வாங்கிச் சென்றதில்
பெருமிதம் அவனுக்கு
இவன் சாதனையை
அவன் மனைவி கூட
புகழ்ந்து
பேசுகிறாள்
அவளது தோழிகளிடம் .
பாவம் இவன்
தொண்டைக்குழியில்
தொக்கி நின்று
தொல்லை செய்த
மீன்முள்ளை துரத்திவிட
அவன்செய்த
கலவரங்களால்
திடீர்என்று அவன் வீடு ஓர்
குட்டிப் போர்க்களமாய் மாறிப் போனது
அப்போது தான் அங்கே
அவன் வீட்டுப் பூனையும்
எதிர்வீட்டுப்
பூனையும் பேசிக்கொள்கின்றன
மீன்காரன் வைத்தெரிச்சல்
சும்மா விடுமா என்று.
நூல் ஆசிரியர் : கவிஞர் பிரகாசக் கவி எம்.பீ. அன்வர் அவர்களுக்கும், ஓவியா பதிப்பாளர் இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களுக்கும் பாராட்டுக்கள் .i .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|