ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் உறையும் இடம் கோவில்!

Go down

இறைவன் உறையும் இடம் கோவில்! Empty இறைவன் உறையும் இடம் கோவில்!

Post by ayyasamy ram Tue Feb 10, 2015 8:29 pm

இறைவன் உறையும் இடம் கோவில்! TIsjubF9R3aHLi6g4WOI+E_1423042044
-
நம் கோவில்கள் ஒவ்வொன்றும் ஞான நிலையம்.
கோவில்கள் எல்லாம் தெய்வம் சாந்நித்யம் நிறைந்த
இடங்கள். இதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்ச்சி
இது:

நாராயணபுரத்தை யாதவன் என்ற மன்னன் ஆண்டு
வந்தார். சிவபக்தரான அவரது ஆட்சியில், மக்கள்
எல்லா வளமும் பெற்று நலமாக வாழ்ந்து வந்தனர்.
அரண்மனை பணியாளர்கள் கூட, சிவ பக்தியில்
சிறந்தவர்களாக, அனைவரிடமும் அன்போடு நடந்து
வந்தனர்.

அவர்களில் பொற்கொடி எனும் பெண், அரசர் உணவு
உண்ணப் பயன்படுத்தும் தங்கப் பாத்திரங்களை
தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள். அவள்
கைகள் பணிகளை செய்தாலும், மனமானது சிவ
தியானத்திலேயே லயத்திருக்கும். இவ்வாறு விநாடி
நேரம் கூட சிவ சிந்தனையில் இருந்து வழுவாமல்
வாழ்ந்து வந்தாள்.

ஒரு நாள், அவளுடைய இல்லத்திற்கு, சிவனடியார்
ஒருவர் வந்தார். ஒளிவீசும் திருமேனியுடன் இருந்த
அவரை, வரவேற்று உபசரித்தாள் பொற்கொடி. இதன்
காரணமாக, அரண்மனைக்கு குறித்த நேரத்தில்
செல்லத் தவறி விட்டாள்.

அதேசமயம், அரசர் உணவு உண்ண அமர்ந்து விட்டார்.
உணவு அருந்துவதற்கான தங்கப் பாத்திரங்கள் எடுத்து
வைக்கப்படாததால், ‘எங்கே அந்த பொற்கொடி?’ என்று
கோபத்துடன் கேட்டார் மன்னன். அவள் இன்னும்
பணிக்கு வரவில்லை என்ற தகவலை தெரிவித்தனர்
பணியாளர்கள். இதனால், பெரும் கோபம் கொண்ட
மன்னன், ‘அவளை இழுத்து வந்து மொட்டை அடியுங்கள்…’
என்று ஆணையிட்டார்.

அரச கட்டளை அப்போதே நிறைவேற்றப்பட்டது.
மொட்டைத் தலையுடன் வீட்டிற்கு சென்ற பொற்கொடி,
சிவனடியார் காலில் விழுந்து, நடந்ததை கூறி, அழுதாள்.

அவளுக்கு ஆறுதல் சொல்லி, பொற்கொடியின் தலையில்,
தன் திருக்கரத்தை வைத்தார் சிவனடியார்.
உடனே, அவளது மொட்டைத் தலையில் முன்பை விட
நீண்டு, கறுத்து, அடர்ந்த கூந்தல் வளர்ந்தது.

பொற்கொடிக்கு மெய் சிலிர்த்தது. ஆனந்த கண்ணீர் சிந்தி,
சிவனடியாரை வணங்கினாள்.

மறுநாள், வழக்கம்போல அரண்மனைக்கு சென்றாள்.
அவள் கூந்தலை பார்த்து, அதிர்ச்சி அடைந்த மன்னர்,
வீரர்களை அழைத்து, ‘என்ன இது… நான் இட்ட
தண்டனையை நேற்று நீங்கள் நிறைவேற்றவில்லையா?’
என்றார் கோபத்துடன்.

அவர்களும் அவள் தலையை பார்த்து அதிசயித்து நின்றனர்.
அப்போது, பொற்கொடி, ‘அரசே… நேற்று உங்கள் உத்தரவுபடி
தண்டனை நிறைவேற்றப்பட்டது; இப்போது தாங்கள் காண்பது
சிவனடியாரின் அருள்…’ என்று நடந்ததை விவரித்தாள்.

சிவபக்தரான அரசருக்கு, இதைக் கேட்டதும், கோபம் தணிந்து,
கண்ணீர் மல்க, சிவ நாமத்தை உச்சரித்தபடி, பொற்கொடி
வீட்டை நோக்கி ஓடி, அங்கு இருந்த சிவனடியாரின்
திருவடிகளில் விழுந்து, வணங்கினார்.

‘அரசே… இப்பகுதியில் தென் கயிலாயம் இருப்பதாக அறிந்து
வந்தோம். ஆனால், என்ன செய்ய? அகில உலகத்தையும்
காக்கும் ஆண்டவனுக்கு அங்கே கோவில் இல்லை;
பெண்ணின் தலையை மொட்டையடிக்கும் உன்னைப்
போன்றோருக்கு பெரிய பெரிய மாளிகை உள்ளது…’ என்றார்
சிவனடியார்.

மன்னருக்கு சுருக்கென்றது. ‘ஸ்வாமி… தென் கயிலாயம்
எங்குள்ளது?’ என, கேட்டார்.

அத்தலம் குறித்து விளக்கிய சிவனடியார், ‘அவ்விடத்தில்
கோவில் கட்ட வேண்டியது சிவ பக்தனான உன் கடமை…’
என்று கூறினார்.

பக்திப் பெருக்குடன், மன்னர் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்
போதே, சிவனடியார் இருந்த இடத்தில், ஒரு பெரும் ஜோதி
தோன்றியது. பொற்கொடி அதற்குள் நுழைய, ஜோதி மறைந்தது.
மன்னரும், மற்றவர்களும் தரையில் விழுந்து வணங்கினர்.

அடியார் வடிவில் வந்தது அரன் என்பதை உணர்ந்த மன்னர்,
அவர் கூறியபடியே கோவில் கட்டினார். அக்கோவில்தான்,
சீகாளத்தி எனப்படும் திருக்காளத்தி. இவ்வாறான ஆலயங்களின்
பெருமையை உணர்ந்து, அவற்றை அசுத்தப்படுத்தாமல், நல்ல
விதமாக பராமரிப்பதே வழிபாடுதான்.

————————————

பி.என்.பரசுராமன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இறைவன் இருக்கும் இடம்
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
» யார் சொன்னது இறைவன் இல்லையென்று -நின்று கொள்ளும் இறைவன் ராஜபக்ஷேவை ஆங்கில கட்டுரை
» ஸ்ரீ ராஜ காளியம்மன் கோவில் - மலேசியாவின் முதல் கண்ணாடிக் கோவில்
» சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்! - 3

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum