புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 6%
heezulia
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_m10தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் - மகேசன் தீர்ப்பு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 11, 2015 10:06 pm

சுதந்திர இந்தியாவின் சரித்திரம் எழுதப்படும்போது, நேற்று முடிவுகள் வெளியாகி இருக்கும் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சாதனைத் தேர்தலாக நிச்சயம் பதிவு செய்யப்படும். 49 நாள்கள் முதல்வராக இருந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் நாள் பதவி விலகிய அரவிந்த் கேஜரிவால், அதே நாளில் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார். கடந்த முறை சிறுபான்மை அரசின் முதல்வராகப் பதவி வகித்த அரவிந்த் கேஜரிவால், இப்போது அசுரப் பெரும்பான்மை பலத்துடன் மறுபடியும் ஆட்சி அமைக்க இருக்கிறார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படியொரு ஆழிப்பேரலை வெற்றியை அரவிந்த் கேஜரிவாலைத் தவிர இதுவரை யாரும் நிகழ்த்திக் காட்டியதில்லை என்பது உண்மைதான் என்றாலும், ஊடகங்களின் ஒட்டுமொத்த வெளிச்சமும் குவிந்திருக்கும். தலைநகர் தில்லியில் நிகழ்ந்திருப்பதால் இதற்கு முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. 1989-ஆம் ஆண்டில் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கிம் சங்க்ராம் பரிஷத் கட்சி அத்தனை தொகுதிகளை வென்றபோதும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில், அப்போது மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரஸிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி அமைத்து வெற்றி பெற்று புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி அமர்ந்தபோதும் அந்த வெற்றிகளை மத்திய ஆட்சிக்கு எதிரான வாக்கு என்று யாரும் வர்ணிக்கவில்லை.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதுவே பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு எதிரான தீர்ப்பு என்று கூறிவிட முடியாது. 1980 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்திக்கு ஆதரவாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்கள், அன்றைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தபோது மீண்டும் எம்.ஜி.ஆரையே முதல்வராகத் தேர்ந்தெடுத்ததை இங்கே நாம் நினைவுகூர வேண்டும்.

இதை ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பதா இல்லை அரவிந்த் கேஜரிவாலின் வெற்றி என்பதா என்று பிரித்துப் பார்க்க முடியவில்லை. கடந்த முறை முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவி வகித்த 49 நாள்களில், தில்லியில் சாதாரண அடித்தட்டுக் குடிமகன் கண்கூடாகக் கண்ட மாற்றம்தான் இந்த இமாலய வெற்றிக்குக் காரணம் என்று கூற வேண்டும். தெருவோர வியாபாரிகள், குடிசைப்புறவாசிகள், அரசு அலுவலகங்களில் குறைகளுக்குத் தீர்வு காணச் செல்லும் மத்தியதர, சாமானியக் குடிமகன் என்று தலைநகர்வாழ் மக்களில் பலரும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் கண்கூடாகக் கண்டனர். மாமூல் கேட்காத காவல்துறையினரும் அரசு ஊழியர்களும், மக்களின் குறைகளை நேரில் போய் கேட்டறிந்த மக்கள் பிரதிநிதிகளும்தான் அந்த மாற்றத்திற்கான காரணங்கள்.

கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போதே, ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதன் மூலம் வாக்குகள் பிளவுபட்டு காங்கிரஸ் வெற்றி பெற்று விடுமோ என்கிற ஐயப்பாட்டில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தவர்கள் பலர். ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்று தெரிந்திருந்தால், தனிப்பெரும்பான்மையுடன் கடந்த தேர்தலிலேயே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கக் கூடும். இந்த முறை போட்டி ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் என்பது தெளிவாக இருந்ததால், மக்களின் ஏகோபித்த ஆதரவு ஆம் ஆத்மிக்குக் கிடைத்ததிலும், தில்லி சட்டப்பேரவையில் 70 இடங்களில் 67 இடங்களை அந்தக் கட்சி வென்றதிலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆம் ஆத்மி அடைந்திருக்கும் வெற்றி மகத்தானது. அதேநேரத்தில் ஆட்சியில் அமர இருக்கும் அந்தக் கட்சி எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் அதைவிட மகத்தானவை. தில்லி அரசு இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருப்பது போன்ற அதிகாரங்கள் இல்லாத ஒன்று. தில்லி முதல்வருக்குக் கட்டுப்பட்டதல்ல காவல்துறையும், இந்திய அரசுப் பணியினரும். நிதி நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டாலும் தில்லி அரசு மத்திய நிதியமைச்சகத்தைச் சார்ந்துதான் இருந்தாக வேண்டும். தில்லி அரசோ, முதல்வரோ நினைத்தால், ஓர் அங்குலம் நிலத்தைக்கூடத் தன்னிச்சையான அதிகாரத்துடன் பயன்படுத்த முடியாது.

இவை மட்டுமல்ல. தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் தில்லி அரசு அண்டை மாநிலங்களான ஹரியாணாவையும், ராஜஸ்தானையும், உத்தரப் பிரதேசத்தையும்தான் சார்ந்திருக்க வேண்டும். முன்பு காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, ஹரியாணாவிலும், ராஜஸ்தானிலும் அந்தக் கட்சியே ஆட்சியில் இருந்ததால்தான், அன்றைய முதல்வர் ஷீலா தீட்சித்தால் பிரச்னையில்லாமல் ஆட்சி நடத்த முடிந்தது. இப்போது, பாஜகவின் தயவில்லாமல் அரவிந்த் கேஜரிவால் மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் அவர் எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சிக்கல்.

கூட்டாட்சித் தத்துவத்தில், மாற்றுக் கட்சியினர் ஆட்சியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படை தர்மம். தில்லியில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சியும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சியும் மக்களின் நலனுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் எதிர்பார்ப்பது மாற்றத்தை, மாற்றை அல்ல என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கும் தில்லிவாழ் மக்களின் தீர்ப்பு, சாதாரணத் தீர்ப்பல்ல, மகேசன் தீர்ப்பு!

தினமணி



தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள்  - மகேசன் தீர்ப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக