புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
10 Posts - 43%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
2 Posts - 9%
VENKUSADAS
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
10 Posts - 43%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
2 Posts - 9%
VENKUSADAS
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_lcapசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_voting_barசாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 5 I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:26 pm

First topic message reminder :

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1


ஆப்ரஹாம் லிங்கன்

ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற  அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.

அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.

ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.

தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.

அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.

அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.

வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.

அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக  அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.

அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.

நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.

இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.

லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.

வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான்  முட்டாள்தனம்.

வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.

தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.

தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.

தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.

தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.

தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 07, 2015 3:43 pm

//ஆர்வமுள்ள துறையே தங்களுக்கு வாய்க்கப் பெற்றவர்கள் அதை மேலும் மெருகேற்றிக் கொள்வது எளிதாக இருக்கும். //

ஆமாம், இது தான் பெரும்பாலானவர்களின் வெற்றிக்கு காரணம் ...தொழிலை காதலிக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 07, 2015 3:49 pm

//1895ம் ஆண்டு அவர் உயில் எழுதிவைத்தார். தன்னுடைய இறப்பிற்குப் பிறகு தன்னுடைய சொத்துகளை வங்கிகளில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியைக் கொண்டு ஐந்து பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யும்படி அதில் கூறியிருந்தார்.//

Great Man ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

//உலகத்தில் உள்ள அனைத்துப் பரிசுகளிலும் தலைசிறந்த நோபல் பரிசை வழங்க ஏற்பாடுகள் செய்த அவர் பெயர் உலகம் உள்ளளவும் மறையாது என்பது நிச்சயம்.//

ரொம்ப சரி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 07, 2015 9:29 pm

T.N.Balasubramanian wrote:சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --1 அம்பிகா சிவம் ,
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --2 அம்பிகா சிவம் ,  
""
"""
"""
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --17 அம்பிகா சிவம் ,
பதிவுகளில், மறவாது , அம்பிகா சிவம் பெயரை இணைக்கிறீர்கள்  

சுப்ரமணியம்சிவம்   நீங்கள் ,
அம்பிகா சிவம் என்று போட்டுக்கொள்வதன் பின்னணி என்னவோ ?

பகிர்வதில் , சந்தோஷம் எனில் பகிரவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1119495

நான் பல பெயர்களில் நூல்கள் எழுதி வருகிறேன். சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற தொடரை வெற்றிப்பாதை, தன்னம்பிக்கை இதழ்களில் எழுதியபோது அம்பிகா சிவம் என்ற பெயரிலேயே எழுதுகிறேன். அதனால் அந்தப் பெயர். என் மனைவியின் பெயரை இணைத்து அம்பிகா சிவம் என்று எழுதுகிறேன். மேலும் தேவாம்பிகா, தேவாம்பிகா சுப்ரமணியன், அம்பி மணி, ஆர்.எஸ்.எம். மேலூர் தென்றல் என்னும் பெயர்களிலும் எழுதுகிறேன். பதிப்பாளர்கள் வேறு வேறு பெயரில் எழுதுமாறு கேட்டுக் கொள்வதால் அப்படி. வேறொன்றுமில்லை நண்பரே.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 07, 2015 9:31 pm

krishnaamma wrote:அருமை சிவம்..................நான் இவரைப்பற்றி படித்ததில்லை...............பகிர்வுக்கு மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நம்ப ஊர் பெண்......தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119503

நம்ம ஊர்ப் பெண்கள் இப்ப எல்லாத் துறையிலும் கலக்குறாங்க. உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக்குங்க. தினமும் எத்தனை பதிவுகள் இடுகிறீர்கள்? உங்க அளவுக்கு எங்களால் எழுத முடிவதில்லையே. தொடர்ந்து கலக்குங்க

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 07, 2015 9:33 pm

krishnaamma wrote://ஆர்வமுள்ள துறையே தங்களுக்கு வாய்க்கப் பெற்றவர்கள் அதை மேலும் மெருகேற்றிக் கொள்வது எளிதாக இருக்கும். //

ஆமாம், இது தான் பெரும்பாலானவர்களின் வெற்றிக்கு காரணம் ...தொழிலை காதலிக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119510

எதையுமே ஆர்வத்துடன் ரசித்துச் செய்யும்போது விளைவுகள் நமக்குச் சாதகமாகத்தான் இருக்கும்.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Sat Feb 07, 2015 9:34 pm

krishnaamma wrote://வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் அதிலிருந்து மீண்டு வந்து உங்கள் வேலையை ஆர்வமுடன் செய்துவந்தால் வெற்றி தேவதை உங்களை அரவணைப்பாள்.//

ரொம்ப ஊக்கமான வார்த்தைகள்......பகிர்வுக்கு நன்றி சிவம் !
மேற்கோள் செய்த பதிவு: 1119509

தொடர்ந்து என் பதிவுகளுக்கு மறுமொழியிடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 07, 2015 9:44 pm

மிக்க மகிழ்ச்சி , தகவலுக்கு நன்றி .
தொடர்ந்து ,ரசிக்கும் ,செய்திகள் தாருங்கள் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Mon Feb 09, 2015 12:10 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 18

சர்தார் வல்லபாய் பட்டேல்

நம்முடைய நாடு இந்தியா என்று கூறிக்கொள்வதில் நாம் பெருமைப்படுகிறோம். ஆனால் அந்த இந்தியா என்ற நாட்டைக் கட்டியமைத்தவர் ஒருவர். அவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.

சுதந்திரத்தின்போது பல்வேறு சமஸ்தானங்களாகப் பிளவுபட்டிருந்த அரசுகளை ஒன்றிணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய பெருமை பட்டேலையே சேரும்.

அதனால்தான் அவரை இந்தியாவின் இரும்பு மனிதர், இந்தியாவின் பிஸ்மார்க் என்றெல்லாம் சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறோம்.

குஜராத் மாநிலத்தில் கரம்சாத் என்னுமிடத்தில், பட்டிதார் என்ற விவசாயக் குடும்பத்தில் ஜாவர்பாய், லாட்பாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சகோதரர் விட்டல்பாய் பட்டேல்.
அந்தக்காலத்தில் லண்டனில் பாரிஸ்டர் பட்டம் படித்தார். அந்த ஆண்டில் பட்டம் பெற்ற மாணவர்களில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திரும்பினார்.

அதன்பின்னர் அகமதாபாத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தார் பட்டேல்.

வழக்கறிஞர் தொழிலைப் பணம் சம்பாதிக்கும் தொழிலாக நினைக்காமல் மற்றவர்களுக்குப் பயன்தரும் தொழிலாக நினைத்துச் செயல்பட்டார்.
ஏழை, எளிய மக்களுக்காக வாதாடுவதுகூட ஒருவிதமான சமூக சேவைதான் என்று நினைத்தார்.

சபர்மதியில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த மகாத்மா காந்தியைச் சந்தித்தார். அவரின் எளிமையான தோற்றம் பட்டேலைக் கவர்ந்தது.
அதுவரை ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் அதற்குப் பின்னர் எளிமையானவராக மாறிப்போனார்.

அதன்பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிப்போனார்கள். காந்தி அறிவித்த வரிகொடா இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார் பட்டேல்.
பர்தோலியில் வரிகொடா இயக்கம் மாபெரும் வெற்றிபெற பட்டேலே காரணம் என்று கூறலாம்.

இந்தப் போராட்டம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பர்தோலி சத்தியாக்கிரகம் என்று பெயர்பெற்றது.

அதன் காரணமாக மகாத்மா காந்தியால் சர்தார் என்று அழைக்கப்பட்டார், பின்னாட்களில் அது அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது.

அதற்குப் பிறகு வந்த ஒத்துழையாமை இயக்கத்தின்போது தனது தொழிலைத் துறந்து நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடத் தொடங்கினார்.

1924ம் ஆண்டு அகமதாபாத் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். நகர்மன்றத் தலைவராக ஐந்தாண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.

1936ம் ஆண்டு அவரது சிறப்பான நிர்வாகத் திறமையைக் கண்ட காந்தி அமைச்சர்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக அவரை நியமித்தார்.
1942ம் ஆண்டு நடைபெற்ற வௌ¢ளையனே வௌ¤யேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறைக்குச் சென்றார்.

1946ம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால மந்திரி சபையில் துணைப் பிரதமராகப்  பொறுப்பேற்றுக் கொண்டார்.

1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றவுடன் நாடு துண்டாக்கப்பட்டது.

அந்தச் சமயத்தில்தான் தன்னுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார் சர்தார் வல்லபாய் பட்டேல்.

இந்தியாவுடன் சேராத சமஸ்தானங்களைப் பல நடவடிக்கைகளின்மூலம் சேர்த்து ஐக்கிய இந்தியாவை உருவாக்கினார்.

1950ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி மரணமடைந்த அவருக்கு 1991ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கையில் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம் அவரின் மன உறுதி.

மன உறுதியிருந்தால் எதையும் சாதிக்க முடியும், எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Mon Feb 09, 2015 12:14 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 19

கொலம்பஸ்

புதிய விஷயங்களைத் தேடிக்கொண்டே இருங்கள், அது உங்களின் பெயரை வரலாற்றில் பொறிக்கும் அளவிற்கு உயர்த்தும்.

இத்தாலியில் உள்ள ஜீனோவா நகரில் 1451ம் ஆண்டு கொலம்பஸ் பிறந்தார்.

அவரின் தந்தை ஆட்டின் ரோமத்திலிருந்து கம்பளி ஆடைகள் நெய்து விற்பனை செய்து வந்தார்.

கொலம்பஸ் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் கற்றுத்தருவதை மிகவும் கவனமாகக் கற்றார். அவருக்கு பூகோளப் பாடத்தில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

கடல், கப்பல் என்ற சொற்கள் அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தன. கடல் பயணம் செய்துவந்த மாலுமிகளிடம் கதை கேட்பதில் அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது. தானும் அவர்களைப்போல் கடலில் பயணம் செய்து பல நாடுகளைப் பார்க்க வேண்டும் என்று சி-று வயதிலேயே முடிவு செய்தார்.

உலக வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதை ஆராய்வது அவரின் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.

பேவியா என்ற ஊரிலிருந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வானவியல், பூகோளம் போன்றவற்றைப் படித்தார்.

படிப்பு முடிந்தவுடன் மரக்கலங்களில் பயணம் செய்யத் தொடங்கினார். கப்பல்களிலும் பயணம் செய்து மேலும் அனுபவ அறிவை வளர்த்துக்கொண்டார்.

அவரைக் கப்பலோட்டுவதில் மிகவும் சிறந்தவர் என்று மற்றவர்கள் பாராட்டத் தொடங்கினார்கள்.

கடலுக்கு அந்தப் புறத்தில் பல நாடுகள் உள்ளன என்று அவர் நம்பினார். அப்போது பூமி தட்டையானது என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த நேரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆர்வம் அவருக்குள் துளிர்விட்டது. அவருக்குத் திருமணம் நடைபெற்றது. கப்பல் தலைவராகப் பணிபுரிந்த அவருடைய மாமனார் தான் சென்ற கடற்பயணங்கள் பற்றி பல்வேறு குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அவையனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்தார். அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொண்டார்.

அப்போது போர்ச்சுக்கல் நாட்டினர் இந்தியாவுடன் தரைவழியில் வியாபாரம் செய்துவந்தனர். அதற்கு துருக்கியர்கள் தடை விதித்ததால் இந்தியாவிற்குப் புதிய கடல்வழியைக் காணவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்துவிட்டால் இந்தியாவை அடைந்துவிடலாம் என்று கொலம்பஸ் நம்பினார். அதற்கு பெரும் செலவாகும் என்பதால் பெரும் தனவந்தர்களிடம் உதவி கேட்டார். சிலர் கொடுத்தார்கள், மேலும் சிலர் அவரின் திட்டத்தைக் கேட்டு கேலி செய்தார்கள்.

அவர் எதற்கும் கவலைப்படாமல் தன் முயற்சியைத் தொடர்ந்தார். போர்ச்சுக்கல் அரசர் அவருக்கு உதவிபுரிய முன்வந்தார். ஆனால் அவருடைய அமைச்சர்கள் பலர் அந்தத் திட்டம் நிறைவேறாமல் சதி செய்தார்கள்.

ஸ்பெய¤ன் அரசரும் அரசியும் கொலம்பஸின் கடல் பயணத்திற்கு உதவினார்கள். அரசியின் கட்டளைப்படி சாந்தாமேரியா, பிண்டா, நீனா என்ற மூன்று கப்பல்களுடன் கடலில் இறங்கினார் கொலம்பஸ்.
கப்பலில் அவருடன் சென்றவர்கள் பாதி வழியிலேயே உயிருடன் மீண்டும் திரும்புவோமா என்று சந்தேகப்படத் தொடங்கினார்கள், மனம் கலங்கினார்கள். கொலம்பஸ் அவர்களுக்கு ஆறுதல் கூற¤த் தேற்றினார்.
தொடர்ந்த பயணத்தில் ஜான் சால்வடார் தீவைக் கண்டுபிடித்து அங்கு ஸ்பெயின் நாட்டுக் கொடியை நட்டு வைத்தார்.

அடுத்தடுத்த பயணங்களில் டாமினிகா, குவாடலூப், அண்டிகுவா, வர்ஜின், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் போன்ற தீவுகளைக் கண்டறிந்தார். முன்பே அவர் அமெரிக்காவைக் கண்டறிந்திருந்தாலும், 1503ம் ஆண்டு அமெரிகே வெஸ்புக்கி என்ற இத்தாலியர் அந்தப் பகுதியைக் கண்ட புகழ் தனக்கே உரியது என்று கூறினார். 1506ம் ஆண்டு மே, 20ம் தேதி கொலம்பஸ் மரணமடைந்தார்.

புதியவைகளைக் கண்டுபிடிக்க அவர் காட்டிய ஆர்வம் அசாத்தியமானது. உயிரைப் பணயம் வைத்து சாதித்துக் காட்டிய அவர் போற்றத்தக்கவர்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 10, 2015 12:00 am

நல்ல பகிர்வு சிவம் புன்னகை...நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக