Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
+3
சிவா
krishnaamma
subramaniansivam
7 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
First topic message reminder :
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1
ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.
அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.
தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.
அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.
வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.
அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.
அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.
இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.
லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.
வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான் முட்டாள்தனம்.
வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.
தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.
தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.
தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.
தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1
ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.
அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.
தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.
அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.
வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.
அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.
அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.
இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.
லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.
வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான் முட்டாள்தனம்.
வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.
தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.
தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.
தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.
தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1119137subramaniansivam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119136சிவா wrote:தங்களின் இந்தப் பதிவுகள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள்! அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்.
பகிர்வுக்கு நன்றி, மேலும் இதுபோன்ற ஆக்ககரமான பதிவுகளைத் தாருங்கள்!
நிச்சயமாக. தொடர்ந்து 100 வரை எழுதலாம் என்றுதான் தொடங்கியுள்ளேன். தினமும் இல்லாவிட்டாலும் முடிந்தபோதெல்லாம் மொத்தமாகப் பதிவிட்டு விடுவேன். நன்றி நண்பரே
அருமை சிவம் , நேற்று இரவே போன் இல் படித்த் விட்டேன்.....தொடருங்கள் , உங்கள் முயற்சி க்கு வாழ்த்துகள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
//தனக்கென்று எந்தவிதமான தனிப்பட்ட ஆசைகளும் இல்லாமல் நாட்டின் உயர்வே தன் உயர்வு என்று பாடுபட்டார்.//
அதனால் தானே அவர் நம் தேசப்பிதா
.......பகிர்வுக்கு நன்றி சிவம் !
//கடைசிவரை நாட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காந்தியைப்போல் ஒரே இலக்கு, ஒரே லட்சியம் கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி உறுதி.//
இதைப்புரிந்து கொண்டதால் தான் ஒபாமா வும் நம் காந்தியை பின் பற்றுகிறார்
அதனால் தானே அவர் நம் தேசப்பிதா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
//கடைசிவரை நாட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காந்தியைப்போல் ஒரே இலக்கு, ஒரே லட்சியம் கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி உறுதி.//
இதைப்புரிந்து கொண்டதால் தான் ஒபாமா வும் நம் காந்தியை பின் பற்றுகிறார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 16 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 16
பாரக் ஒபாமா
ஒரு காலத்தில் கறுப்பினத்தவர்களை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தேசமாக இருந்த அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றுத் தன் இனத்திற்கே பெருமை சேர்த்தார்.
தன்னுடைய நாற்பது வயதுவரை அவர் அரசியலில் ஈடுபட்டதில்லை என்பது வியப்புக்குரிய செய்திதான்.
எந்த வயதிலும் உழைக்க முடியும், அதன் பயனாக வெற்றியையும் பெறமுடியும் என்று அவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
2008ம் ஆண்டு அவர் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றபோது அவரின் வயது 47.
ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றபோது ஒபாமாவின் தாயைப் பார்த்தார், காதல் வயப்பட்டார், மணந்தார். அவர்கள் இல்வாழ்க்கையின் பயனாக ஒபாமா பிறந்தார்.
சிறு வயதில் இந்தோனேஷியாவில் சிறிதுகாலம் வளர்ந்தார். பின்னர் அமெரிக்காவிற்குத் திரும்பினார். பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
சட்டம் படித்தார், அரசியல் சட்டமும் படித்தார். தொடர்ந்த முயற்சிகளின் விளைவாகப் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். அனைவரிடமும் இயல்பாகப் பழகும் திறனை இளமைக்காலம் முதலே பெற்றிருந்தார்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்திலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி நாட்டின் அதிபராக உயர்ந்தார் என்பது படிக்கும்போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் அவருக்குத்தான் தெரியும்.
சிக்கல்கள், சோதனைகள், போராட்டங்கள், பல்வேறு பிரச்சினைகள் ஆகியவற்றைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்க முடியும் என்பது வரலாறு கூறும் உண்மை.
வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுமா? பொறுமை, விடாமுயற்சி போன்றவை சாதனையாளர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்கள். அவை ஒபாமாவிடம் இருந்தன.
பேச்சாற்றல், தெளிவான இலக்கு, அதை அடைவதற்கான திட்டங்கள் போன்றவை அவரிடம் இருந்தன.
ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் கவரும் விதத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் பிறந்த இனமான கறுப்பினத்தவர்க்கும் அந்த மந்திரச் சொல் தன்னம்பிக்கை அளித்தது.
தொடர்ந்த போர்களினால் அமெரிக்கா களைத்துப் போயிருந்தது. பொருளாதார வீழ்ச்சி ஒருபக்கம் மக்களை வாட்டியெடுத்தது. தங்களுக்கு எப்படியாவது விடிவுகாலம் பிறக்காதா என்ற¤ருந்த அவர்களுக்கு ஒபாமாவின் பேச்சுகள் நம்பிக்கையை அளித்தன.
அவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தபோது ஒட்டுமொத்த உலகமே அமெரிக்காவைத் திரும்பிப் பார்த்தது.
அமெரிக்க அதிபராக மிடுக்குடன் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் அந்த இடத்தை அடைவதற்குத் தன்னுடைய தன்னம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டார்.
தன்னம்பிக்கை இருந்தால் ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கும் செல்லமுடியும் என்று நிரூபித்தார்.
அவர் எந்த விஷயத்திலும் பதற்றப்படாமல் நிதானமாகவே செயல்படுவார், ஓரிடத்தில் நிற்காமல் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லவேண்டும் என்பதைத் தன்னுடைய தாரக மந்திரமாகவே வைத்திருந்தார்.
கறுப்பின மக்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்களும் அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள்.
எப்படிப் பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறோம், என்ன சாதித்தோம் என்பதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்.
உங்களிடம் உள்ள திறமையை மெருகேற்றுங்கள், தொடர் முயற்சியில் ஈடுபட்டபடி இருங்கள், உங்களாலும் எந்த உயரத்திற்கும் செல்லமுடியும்.
வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் அதிலிருந்து மீண்டு வந்து உங்கள் வேலையை ஆர்வமுடன் செய்துவந்தால் வெற்றி தேவதை உங்களை அரவணைப்பாள்.
பாரக் ஒபாமா
ஒரு காலத்தில் கறுப்பினத்தவர்களை மனிதர்களாகவே மதிக்காத ஒரு தேசமாக இருந்த அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றுத் தன் இனத்திற்கே பெருமை சேர்த்தார்.
தன்னுடைய நாற்பது வயதுவரை அவர் அரசியலில் ஈடுபட்டதில்லை என்பது வியப்புக்குரிய செய்திதான்.
எந்த வயதிலும் உழைக்க முடியும், அதன் பயனாக வெற்றியையும் பெறமுடியும் என்று அவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
2008ம் ஆண்டு அவர் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றபோது அவரின் வயது 47.
ஒபாமாவின் தந்தை கென்யாவைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றபோது ஒபாமாவின் தாயைப் பார்த்தார், காதல் வயப்பட்டார், மணந்தார். அவர்கள் இல்வாழ்க்கையின் பயனாக ஒபாமா பிறந்தார்.
சிறு வயதில் இந்தோனேஷியாவில் சிறிதுகாலம் வளர்ந்தார். பின்னர் அமெரிக்காவிற்குத் திரும்பினார். பாட்டி வீட்டில் வளர்ந்தார்.
சட்டம் படித்தார், அரசியல் சட்டமும் படித்தார். தொடர்ந்த முயற்சிகளின் விளைவாகப் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். அனைவரிடமும் இயல்பாகப் பழகும் திறனை இளமைக்காலம் முதலே பெற்றிருந்தார்.
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்திலிருந்து மெல்ல மெல்ல முன்னேறி நாட்டின் அதிபராக உயர்ந்தார் என்பது படிக்கும்போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அவர் பட்ட கஷ்டங்கள் அவருக்குத்தான் தெரியும்.
சிக்கல்கள், சோதனைகள், போராட்டங்கள், பல்வேறு பிரச்சினைகள் ஆகியவற்றைத் தாண்டித்தான் சாதனைகள் படைக்க முடியும் என்பது வரலாறு கூறும் உண்மை.
வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுமா? பொறுமை, விடாமுயற்சி போன்றவை சாதனையாளர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்கள். அவை ஒபாமாவிடம் இருந்தன.
பேச்சாற்றல், தெளிவான இலக்கு, அதை அடைவதற்கான திட்டங்கள் போன்றவை அவரிடம் இருந்தன.
ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் கவரும் விதத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் பிறந்த இனமான கறுப்பினத்தவர்க்கும் அந்த மந்திரச் சொல் தன்னம்பிக்கை அளித்தது.
தொடர்ந்த போர்களினால் அமெரிக்கா களைத்துப் போயிருந்தது. பொருளாதார வீழ்ச்சி ஒருபக்கம் மக்களை வாட்டியெடுத்தது. தங்களுக்கு எப்படியாவது விடிவுகாலம் பிறக்காதா என்ற¤ருந்த அவர்களுக்கு ஒபாமாவின் பேச்சுகள் நம்பிக்கையை அளித்தன.
அவரை அதிபராகத் தேர்ந்தெடுத்தபோது ஒட்டுமொத்த உலகமே அமெரிக்காவைத் திரும்பிப் பார்த்தது.
அமெரிக்க அதிபராக மிடுக்குடன் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் அந்த இடத்தை அடைவதற்குத் தன்னுடைய தன்னம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டார்.
தன்னம்பிக்கை இருந்தால் ஒரு மனிதன் எவ்வளவு உயரத்திற்கும் செல்லமுடியும் என்று நிரூபித்தார்.
அவர் எந்த விஷயத்திலும் பதற்றப்படாமல் நிதானமாகவே செயல்படுவார், ஓரிடத்தில் நிற்காமல் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லவேண்டும் என்பதைத் தன்னுடைய தாரக மந்திரமாகவே வைத்திருந்தார்.
கறுப்பின மக்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்களும் அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள்.
எப்படிப் பிறக்கிறோம் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறோம், என்ன சாதித்தோம் என்பதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்.
உங்களிடம் உள்ள திறமையை மெருகேற்றுங்கள், தொடர் முயற்சியில் ஈடுபட்டபடி இருங்கள், உங்களாலும் எந்த உயரத்திற்கும் செல்லமுடியும்.
வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் அதிலிருந்து மீண்டு வந்து உங்கள் வேலையை ஆர்வமுடன் செய்துவந்தால் வெற்றி தேவதை உங்களை அரவணைப்பாள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 17 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 17
லெஷ்மி மிட்டல்
நீங்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை, சாதனை படைப்போம் என்ற நம்பிக்கை மட்டும் உங்கள் மனதில் வேரூன்றி விட்டால் அதை முழு மனதாக நம்பி நீங்கள் செயல்பட்டால் போதும்.
உங்களாலும் வெற்றிபெற முடியும். சாதனை படைக்க முடியும். ஆம் சாதாரண மனிதர்களாலும் சாதனை படைத்துப் புகழ்பெற முடியும் என்று காட்டுவதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்தான் இரும்புலகின் மாமனிதர் லெஷ்மி மிட்டல்.
பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது மிட்டலின் குடும்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயரவேண்டிய சூழல் ஏற்பட்டது.
வறுமையில் உழன்று கொண்டிருந்தபோதும், வாழ்க்கை வளமாக வேண்டுமானால் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அப்போது தேசம் வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்த நேரம். கட்டுமானப் பணிகள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அதற்குத் தேவையான இரும்புப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அப்போது அரசாங்கமே இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட இன்னபிற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருந்தது.
அந்தச் சூழலில் லெஷ்மி மிட்டலின் தந்தை மோகன்லால் மிட்டல் கொல்கத்தாவில் ஒரு சிறிய இரும்பு ஆலையை நிறுவினார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த லெஷ்மி மிட்டல் படித்துவிட்டு வந்தவுடன் தங்கள் இரும்பு ஆலைக்குச் சென்றுவிடுவார். குடும்பத்தின் நிலை அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்த காரணத்தால் அவர் உழைப்பதற்குத் தயங்கவில்லை. அவர் இளம் வயதிலேயே இரும்போடு பழகியதால் அதன்மேல் அவருக்குப் பாசம் ஏற்பட்டிருந்தது. தவிர தொழிலின் நேர்த்திகள் அவருக்கு அத்துப்படியாகியிருந்தன.
அவருக்குத் திருமணம் நடைபெற்றவுடன் அவரின் மாமனாரும், லெஷ்மி மிட்டலின் தந்தையும் இணைந்து இந்தோனேஷியாவில் ஒரு இரும்பு ஆலையைத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே பழகிய தொழில் என்பதால் லெஷ்மி மிட்டல் அந்த ஆலையைப் பார்த்துக் கொள்வது என்று முடிவானது.
சாதனையாளர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவர்கள் சில விஷயங்களில் மற்றவர்களைப்போல் சிந்தனை செய்யாமல் மாற்று யோசனையைப் பயன்படுத்துவது புரியும்.
மிட்டலும் அப்படித்தான், எந்த விஷயத்தையும் வேறு ஒரு கோணத்தில் பார்ப்பார். அது அவரின் வாழ்க்கை வெற்றிக்கு உதவியது என்று கூறினால் மிகையாகாது.
எதையும் தேவையில்லை என்று வீணாகத் தூக்கிப் போடுவதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார். எந்தப் பொருளுக்கும் ஒரு பயன் உண்டு என்பதை அறிந்தவர் அவர்.
இரும்புத் தொழிலில் சரியாக நடத்தப்பட முடியாமல் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்ப்பார், அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்குவார். அதன்பின்னர் அது யாரும் எதிர்பாராமல் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கும்.
நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலை என்பதால் அது மிகவும் குறைந்த விலைக்கே அவருக்குக் கிடைக்கும், அதைச் சரியாக நிர்வகித்து லாபம் ஈட்டுவது மட்டுமே அவரது வேலையாக இருந்தது.
ஓர் ஆலையை வாங்கியவுடன் அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது அவரின் வெற்றி பார்முலாக்களில் ஒன்று.
அப்படிச் செய்யும்போது ஊழியர்களின் முழுத் திறமையும் நிறுவனத்திற்குப் பயன்படும் என்பது அவரது கணிப்பு, அது கடைசிவரை பொய்த்ததில்லை.
தொழிலாளர்களுக்கிடையில் இலக்கு நிர்ணயித்து, அவர்களின் வேலையை மிகவும் ஜாலியாக, இயல்பாக, வேலை பார்க்கிறோம் என்பதே தெரியாத வகையில் மாற்றியமைத்து விடுவதால் அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் நிறுவனத்திற்காக உழைப்பார்கள்.
பல நாடுகளில் இன்று அவருக்கு நிறுவனங்கள் உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரரான அவர் உணர்ந்துகொண்டது, எதையும் தக்கபடி பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.
லெஷ்மி மிட்டல்
நீங்கள் இன்று எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை, சாதனை படைப்போம் என்ற நம்பிக்கை மட்டும் உங்கள் மனதில் வேரூன்றி விட்டால் அதை முழு மனதாக நம்பி நீங்கள் செயல்பட்டால் போதும்.
உங்களாலும் வெற்றிபெற முடியும். சாதனை படைக்க முடியும். ஆம் சாதாரண மனிதர்களாலும் சாதனை படைத்துப் புகழ்பெற முடியும் என்று காட்டுவதற்கு வாழும் உதாரணமாகத் திகழ்பவர்தான் இரும்புலகின் மாமனிதர் லெஷ்மி மிட்டல்.
பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோது மிட்டலின் குடும்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயரவேண்டிய சூழல் ஏற்பட்டது.
வறுமையில் உழன்று கொண்டிருந்தபோதும், வாழ்க்கை வளமாக வேண்டுமானால் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அப்போது தேசம் வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்த நேரம். கட்டுமானப் பணிகள் ஏராளமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அதற்குத் தேவையான இரும்புப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அப்போது அரசாங்கமே இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட இன்னபிற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருந்தது.
அந்தச் சூழலில் லெஷ்மி மிட்டலின் தந்தை மோகன்லால் மிட்டல் கொல்கத்தாவில் ஒரு சிறிய இரும்பு ஆலையை நிறுவினார்.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த லெஷ்மி மிட்டல் படித்துவிட்டு வந்தவுடன் தங்கள் இரும்பு ஆலைக்குச் சென்றுவிடுவார். குடும்பத்தின் நிலை அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்த காரணத்தால் அவர் உழைப்பதற்குத் தயங்கவில்லை. அவர் இளம் வயதிலேயே இரும்போடு பழகியதால் அதன்மேல் அவருக்குப் பாசம் ஏற்பட்டிருந்தது. தவிர தொழிலின் நேர்த்திகள் அவருக்கு அத்துப்படியாகியிருந்தன.
அவருக்குத் திருமணம் நடைபெற்றவுடன் அவரின் மாமனாரும், லெஷ்மி மிட்டலின் தந்தையும் இணைந்து இந்தோனேஷியாவில் ஒரு இரும்பு ஆலையைத் தொடங்கினார்கள்.
ஏற்கனவே பழகிய தொழில் என்பதால் லெஷ்மி மிட்டல் அந்த ஆலையைப் பார்த்துக் கொள்வது என்று முடிவானது.
சாதனையாளர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவர்கள் சில விஷயங்களில் மற்றவர்களைப்போல் சிந்தனை செய்யாமல் மாற்று யோசனையைப் பயன்படுத்துவது புரியும்.
மிட்டலும் அப்படித்தான், எந்த விஷயத்தையும் வேறு ஒரு கோணத்தில் பார்ப்பார். அது அவரின் வாழ்க்கை வெற்றிக்கு உதவியது என்று கூறினால் மிகையாகாது.
எதையும் தேவையில்லை என்று வீணாகத் தூக்கிப் போடுவதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார். எந்தப் பொருளுக்கும் ஒரு பயன் உண்டு என்பதை அறிந்தவர் அவர்.
இரும்புத் தொழிலில் சரியாக நடத்தப்பட முடியாமல் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்ப்பார், அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்குவார். அதன்பின்னர் அது யாரும் எதிர்பாராமல் வளர்ச்சியை நோக்கி நகரத் தொடங்கும்.
நஷ்டத்தில் இயங்கும் தொழிற்சாலை என்பதால் அது மிகவும் குறைந்த விலைக்கே அவருக்குக் கிடைக்கும், அதைச் சரியாக நிர்வகித்து லாபம் ஈட்டுவது மட்டுமே அவரது வேலையாக இருந்தது.
ஓர் ஆலையை வாங்கியவுடன் அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது அவரின் வெற்றி பார்முலாக்களில் ஒன்று.
அப்படிச் செய்யும்போது ஊழியர்களின் முழுத் திறமையும் நிறுவனத்திற்குப் பயன்படும் என்பது அவரது கணிப்பு, அது கடைசிவரை பொய்த்ததில்லை.
தொழிலாளர்களுக்கிடையில் இலக்கு நிர்ணயித்து, அவர்களின் வேலையை மிகவும் ஜாலியாக, இயல்பாக, வேலை பார்க்கிறோம் என்பதே தெரியாத வகையில் மாற்றியமைத்து விடுவதால் அவர்கள் நேரம் காலம் பார்க்காமல் நிறுவனத்திற்காக உழைப்பார்கள்.
பல நாடுகளில் இன்று அவருக்கு நிறுவனங்கள் உண்டு. மிகப்பெரிய கோடீஸ்வரரான அவர் உணர்ந்துகொண்டது, எதையும் தக்கபடி பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
நன்றி ! நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
வெற்றிகளுக்கு அடித்தளம் அமைப்பது தோல்விகளே,
என்பதை விளக்க ஒரு உதாரணம் ,இவரது (ஆபிரகாம் லிங்கன் )வாழ்க்கை .
ரமணியன்
என்பதை விளக்க ஒரு உதாரணம் ,இவரது (ஆபிரகாம் லிங்கன் )வாழ்க்கை .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Wed Feb 11, 2015 5:58 pm; edited 1 time in total (Reason for editing : addnl.word)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --1 அம்பிகா சிவம் ,
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --2 அம்பிகா சிவம் ,
""
"""
"""
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --17 அம்பிகா சிவம் ,
பதிவுகளில், மறவாது , அம்பிகா சிவம் பெயரை இணைக்கிறீர்கள்
சுப்ரமணியம்சிவம் நீங்கள் ,
அம்பிகா சிவம் என்று போட்டுக்கொள்வதன் பின்னணி என்னவோ ?
பகிர்வதில் , சந்தோஷம் எனில் பகிரவும் .
ரமணியன்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --2 அம்பிகா சிவம் ,
""
"""
"""
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் --17 அம்பிகா சிவம் ,
பதிவுகளில், மறவாது , அம்பிகா சிவம் பெயரை இணைக்கிறீர்கள்
சுப்ரமணியம்சிவம் நீங்கள் ,
அம்பிகா சிவம் என்று போட்டுக்கொள்வதன் பின்னணி என்னவோ ?
பகிர்வதில் , சந்தோஷம் எனில் பகிரவும் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Feb 07, 2015 2:51 pm; edited 1 time in total (Reason for editing : correction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
அருமை சிவம்..................நான் இவரைப்பற்றி படித்ததில்லை...............பகிர்வுக்கு மிக்க நன்றி !
நம்ப ஊர் பெண்......தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நம்ப ஊர் பெண்......தெரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
//மிகப்பெரிய கோடீஸ்வரரான அவர் உணர்ந்துகொண்டது, எதையும் தக்கபடி பயன்படுத்தினால் பலன் நிச்சயம்.//
ம்.ரொம்ப சரியான formula
ம்.ரொம்ப சரியான formula
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
//வாழ்க்கையில் அனைவருக்கும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் அதிலிருந்து மீண்டு வந்து உங்கள் வேலையை ஆர்வமுடன் செய்துவந்தால் வெற்றி தேவதை உங்களை அரவணைப்பாள்.//
ரொம்ப ஊக்கமான வார்த்தைகள்......பகிர்வுக்கு நன்றி சிவம் !
ரொம்ப ஊக்கமான வார்த்தைகள்......பகிர்வுக்கு நன்றி சிவம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25 பகுதி 1- 4 அம்பிகா சிவம்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல்
» சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்
» யார் யார் சிவம், நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம்
» தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல்
» சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்
» யார் யார் சிவம், நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம்
» தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல்
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|