Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
+3
சிவா
krishnaamma
subramaniansivam
7 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
First topic message reminder :
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1
ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.
அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.
தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.
அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.
வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.
அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.
அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.
இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.
லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.
வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான் முட்டாள்தனம்.
வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.
தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.
தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.
தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.
தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1
ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.
தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.
அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.
ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.
தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.
அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.
அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.
வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.
தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.
அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.
ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.
அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.
நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.
இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.
லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.
வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான் முட்டாள்தனம்.
வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.
தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.
தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.
தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.
தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.
தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
//கல்பனா தன் உயிர் விண்ணிலேயே பிரிய வேண்டுமென்று முன்பே சொல்லியிருந்ததுதான். அவரது ஆசைப்படியே விண்வெளியில் அவரது உடல் சிதைந்து உயிர் பிரிந்தது.//
பாவம்
//இலட்சியத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதை அடைவீர்கள் கல்பனாவைப் போல். உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.//
ரொம்ப சரி , அது தான் அவர் பேரில் விருது வழங்குகிறார்கள்
பாவம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
//இலட்சியத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதை அடைவீர்கள் கல்பனாவைப் போல். உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.//
ரொம்ப சரி , அது தான் அவர் பேரில் விருது வழங்குகிறார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 6 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -6
பகத்சிங்
இருந்தாலும், இறந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று பழைய பாடல் வரிகள் உண்டு. அதைப்போல சிறு வயதிலேயே இறந்துவிட்டாலும் பாரத மண்ணின் விடுதலை என்ற இலட்சியத்திற்காகவே உயிர் துறந்ததால் இன்றும் நம்மிடையே இறவாமல் வாழ்ந்துவரும் பகத்சிங் போற்றத்தக்கவர்.
புரட்சிக்கு வித்திட்டு, தூக்குக் கயிற்றையும் துணிவோடு எதிர்கொண்ட வீரன் அவன்.
பஞ்சாப் மாநிலத்தில், பலமுறை நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை சென்ற தியாகிபங்காவிற்கும், வித்யாவதிக்கும் மகனாகப் பிறந்தவர் பகத்சிங்.
பகத்சிங்கின் குடும்பமே விடுதலைப்போரில் ஈடுபாடு கொண்டிருந்தது. அவரின¢ சித்தப்பா சர்தார் அஜீத் என்பவர் லாலா லஜபதிராய்க்கே அரசியல் குருவாக விளங்கிய பெருமையுடையவர்.
படிக்கும் காலத்திலேயே பாரத் சங்கம், நவ ஜவான் போன்ற பல்வேறு அமைப்புகளைத் தொடங்கி நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்.
இளைஞர்களைக் கவரும் விதத்தில் பேசக்கூடிய வல்லமை அவருக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.
விடுதலைப் போராட்டம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. கான்பூரில் வெடித்த புரட்சியில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பிஸ்மல் என்பவரை பகத்சிங் சந்தித்தபோதுதான் அவருக்குள் புரட்சிவிதை வலுவாக ஊன்றப்பட்டது.
இன்குலாப் ஜிந்தாபாத் என்ற தாரக மந்திரத்தை தன் வாழ்நாள் முழுவதும் முழங்கி சுதந்திரப் போரில் புதிய சகாப்தம் படைத்தார்.
சைமன் கமிஷனை எதிர்த்த லாலா லஜபதிராய் ஆங்கிலேயர்களால் படுகாயமுற்று பின்னாளில் மரணமடைந்தார். அது பகத்சிங்கின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது.
1929, ஏப்ரல், 8-ம் தேதி டில்லி மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசினார். அதற்காக கைது செய்யப்பட்ட அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
பின்னர் சாண்டர்ஸ் கொலைவழக்கும் சேர்ந்துகொள்ள சிறைச்சாலையிலேயே பகத்சிங்கின்மீது விசாரணை நடைபெற்றது. 1930, அக்டோபர், 27ம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது.
தாய்மண்ணின் விடுதலைக்காகப் போரிட்ட அவர்களைக் காப்பாற்குவதற்காக நாட்டின் முன்னணித் தலைவர்கள் பலரும் முயன்றும் தீர்ப்பை மாற்ற இயலவில்லை.
பகத்சிங்கின் தந்தை மகன் மேல் இருந்த பாசத்தின் காரணமாக கருணை மனு அனுப்பினார். ஆனால் அதற்காக பகத்சிங் மனம் வருந்தினார். உயிரைவிட மானம் பெரிது என்று வாழ்ந்த அந்த இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் அவர் மனம் வாடிவிடவில்லை. சுதந்திர கீதங்களை இசைப்பது, நல்ல நூல்களைப் படிப்பது என்று தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார்.
1931, மார்ச் 24ம் தேதி அதிகாலையில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்தார்கள். எங்கே அவர் தப்பிவிடுவாரோ என்று பயந்த ஆங்கிலேய சிறை அதிகாரிகள் முதல்நாள் இரவு ஏழரை மணிக்கே அவரை தூக்கில் போடுவதறக்£க அழைத்தார்கள். அப்போது அவர் லெனினுடைய வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
Òசிறிதுநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள், ஒரு புரட்சியாளன் மற்றொரு புரட்சியாளனுடன் உறவாடிக் கொண்டிருக்கிறான்Ó என்று துணிவுடன் கூறினார்.
பொதுவாக தூக்கில் போடும்போது முகத்தை கறுப்புத் துணியால் மறைப்பது சிறை வழக்கம். ஆனால் அதையும் பகத்சிங் எதிர்த்தார். நான் பிறந்த தாய்மண்ணைப் பார்த்தவாறே என் உயிர் பிரிய வேண்டும் என்று அவர் கூறினார்.
எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதிவரை வாழ்ந்த அவர் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்.
பகத்சிங்
இருந்தாலும், இறந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று பழைய பாடல் வரிகள் உண்டு. அதைப்போல சிறு வயதிலேயே இறந்துவிட்டாலும் பாரத மண்ணின் விடுதலை என்ற இலட்சியத்திற்காகவே உயிர் துறந்ததால் இன்றும் நம்மிடையே இறவாமல் வாழ்ந்துவரும் பகத்சிங் போற்றத்தக்கவர்.
புரட்சிக்கு வித்திட்டு, தூக்குக் கயிற்றையும் துணிவோடு எதிர்கொண்ட வீரன் அவன்.
பஞ்சாப் மாநிலத்தில், பலமுறை நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறை சென்ற தியாகிபங்காவிற்கும், வித்யாவதிக்கும் மகனாகப் பிறந்தவர் பகத்சிங்.
பகத்சிங்கின் குடும்பமே விடுதலைப்போரில் ஈடுபாடு கொண்டிருந்தது. அவரின¢ சித்தப்பா சர்தார் அஜீத் என்பவர் லாலா லஜபதிராய்க்கே அரசியல் குருவாக விளங்கிய பெருமையுடையவர்.
படிக்கும் காலத்திலேயே பாரத் சங்கம், நவ ஜவான் போன்ற பல்வேறு அமைப்புகளைத் தொடங்கி நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்.
இளைஞர்களைக் கவரும் விதத்தில் பேசக்கூடிய வல்லமை அவருக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.
விடுதலைப் போராட்டம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. கான்பூரில் வெடித்த புரட்சியில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட பிஸ்மல் என்பவரை பகத்சிங் சந்தித்தபோதுதான் அவருக்குள் புரட்சிவிதை வலுவாக ஊன்றப்பட்டது.
இன்குலாப் ஜிந்தாபாத் என்ற தாரக மந்திரத்தை தன் வாழ்நாள் முழுவதும் முழங்கி சுதந்திரப் போரில் புதிய சகாப்தம் படைத்தார்.
சைமன் கமிஷனை எதிர்த்த லாலா லஜபதிராய் ஆங்கிலேயர்களால் படுகாயமுற்று பின்னாளில் மரணமடைந்தார். அது பகத்சிங்கின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது.
1929, ஏப்ரல், 8-ம் தேதி டில்லி மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசினார். அதற்காக கைது செய்யப்பட்ட அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
பின்னர் சாண்டர்ஸ் கொலைவழக்கும் சேர்ந்துகொள்ள சிறைச்சாலையிலேயே பகத்சிங்கின்மீது விசாரணை நடைபெற்றது. 1930, அக்டோபர், 27ம் தேதி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டது.
தாய்மண்ணின் விடுதலைக்காகப் போரிட்ட அவர்களைக் காப்பாற்குவதற்காக நாட்டின் முன்னணித் தலைவர்கள் பலரும் முயன்றும் தீர்ப்பை மாற்ற இயலவில்லை.
பகத்சிங்கின் தந்தை மகன் மேல் இருந்த பாசத்தின் காரணமாக கருணை மனு அனுப்பினார். ஆனால் அதற்காக பகத்சிங் மனம் வருந்தினார். உயிரைவிட மானம் பெரிது என்று வாழ்ந்த அந்த இளைஞனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும் அவர் மனம் வாடிவிடவில்லை. சுதந்திர கீதங்களை இசைப்பது, நல்ல நூல்களைப் படிப்பது என்று தன்னுடைய நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொண்டார்.
1931, மார்ச் 24ம் தேதி அதிகாலையில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்று தீர்ப்பு கூறியிருந்தார்கள். எங்கே அவர் தப்பிவிடுவாரோ என்று பயந்த ஆங்கிலேய சிறை அதிகாரிகள் முதல்நாள் இரவு ஏழரை மணிக்கே அவரை தூக்கில் போடுவதறக்£க அழைத்தார்கள். அப்போது அவர் லெனினுடைய வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
Òசிறிதுநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள், ஒரு புரட்சியாளன் மற்றொரு புரட்சியாளனுடன் உறவாடிக் கொண்டிருக்கிறான்Ó என்று துணிவுடன் கூறினார்.
பொதுவாக தூக்கில் போடும்போது முகத்தை கறுப்புத் துணியால் மறைப்பது சிறை வழக்கம். ஆனால் அதையும் பகத்சிங் எதிர்த்தார். நான் பிறந்த தாய்மண்ணைப் பார்த்தவாறே என் உயிர் பிரிய வேண்டும் என்று அவர் கூறினார்.
எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதிவரை வாழ்ந்த அவர் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 7 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 7
லால் பகதூர் சாஸ்திரி
வெற்றிபெறுவதற்கு நம்முடைய உருவம் ஒருபோதும் தடையில்லை என்று நிரூபித்துக் காட்டியவர் லால் பகதூர் சாஸ்திரி.
அவர் சற்றே குள்ளமான தோற்றம் கொண்டவர்தான் ஆனால் அவருடைய செயல்கள் விஸ்வரூபம் எடுத்தவை.
எதற்கெடுத்தாலும் என் விதி அப்படி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஒரு ஆசிரியருக்கு மகனாகப் பிறந்தாலும், வறுமையில் வாடினாலும், உறுதியான மனதுடன் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றவர் லால் பகதூர்.
நாம் எப்படிப் பிறந்தோம் என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்து, என்ன சாதிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதற்கேற்ப அவருடைய வாழ்வு அமைந்தது.
1904- ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி சாரதா பிரசாத், இராம் துலாரி ஆகிய தம்பதியருக்கு மகனாக லால் பகதூர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா.
பள்ளியில் படிக்கும் காலத்தில் அவர் தன்னுடைய உருவத்தை ஒருபோதும் தாழ்வாக எண்ணவில்லை. மற்றவர்களிடம் அன்புடன் பழகிய அவருடைய குணத்தால் மற்றவர்களும் அவருடைய உருவம் குள்ளமாக இருந்தது என்பதைப் பொருட்படுத்தவில்லை. கல்வியில் அக்கறை கொண்டவராக இருந்தபோதும் சராசரி மாணவராகவே அவர் விளங்கினார்.
படிக்கும் காலத்தில் திலகர், காந்தி போன்றவர்களின் பேச்சைக் கேட்ட காரணத்தால் விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
படித்து முடித்தவுடன் முசபர் நகர் என்ற இடத்தில் வசித்துவந்த ஹரிஜன மக்களின் வாழ்க்கை நலனுக்காக ஒரு வருடம் பணிபுரிந்தார். பின்னர் அலகாபாத் நகருக்குச் சென்று பொதுமக்களின் வாழ்க்கை நலனுக்காகப் பாடுபட்டார். பொதுமக்களுடன் நெருங்க¤ப் பழகி அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள அது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைத்தண்டனை பெற்றார். 1936ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றியடைந்து ஐக்கிய மாகாண சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நில சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படக் காரணமாக இருந்த அறிக்கையைத் தயாரித்தளித்ததில் முக்கியப் பங்கு வகித்தார். அதன்மூலம் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. நாடெங்கும் இருந்த விவசாயிகள் மகிழ்ந்தனர்.
மாகாண முதல்வரின் பார்லிமென்டரி காரியதரிசி, போலீஸ் மந்திரி போன்ற பதவிகள் அவரைத் தேடி வந்தன. அவர் பதவிகளை விரும்பாவிட்டாலும் அவரின் திறமையை அறிந்த நேரு போன்றவர்கள் பதவியை வழங்கி அவரை கௌரவித்தனர்.
நேரு பதவியேற்றவுடன் லால் பகதூர் இரயில்வே மந்திரியாக நியமிக்கப்பட்டார். பின்னர் செய்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். 1961ம் ஆண்டு உள்துறை அமைச்சரானார்.
எந்தவிதமான ஊழலும் செய்யாமல் நேர்மையாகப் பணியாற்றினார். அப்போதும் ஒரு வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். சொந்தவீடு கூட இல்லாத அவரை ஹோம்லெஸ் ஹோம் மினிஸ்டர் என்று மக்கள் செல்லமாக அழைத்து மகிழ்ந்தார்கள்.
நேருவிற்குப் பிறகு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரின் சிறிய உருவத்தைக் கண்டு அவரைக் குறைவாக மதிப்பிட்டவர்கள்கூட அவரின் செயல்பாடுகளைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். வியந்து போற்றினார்கள். ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து அவரை எடைபோடக்கூடாது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார்.
அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார். அதன்மூலம் அவரின¢ புகழ் உலகெங்கும் பரவியது.
எப்போதும் சமாதானத்தையே விரும்பிய அவர் சமாதான ஒப்பந்தம் செய்தபின்னர் மர்மமான முறையில் இறந்து போனார்.
எப்படிப் பிறந்தோம் என்பது முக்கியமில்லை. என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
//எப்போதும் சமாதானத்தையே விரும்பிய அவர் சமாதான ஒப்பந்தம் செய்தபின்னர் மர்மமான முறையில் இறந்து போனார். //
இது ரொம்ப வருத்தத்துக்கு உரியது, இன்னும் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்த பாடில்லை
...நல்ல பகிர்வு.நன்றி !
.
.
.
நான் நேற்றறே சொன்னேனே, உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்
இது ரொம்ப வருத்தத்துக்கு உரியது, இன்னும் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்த பாடில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
.
நான் நேற்றறே சொன்னேனே, உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
//பொதுவாக தூக்கில் போடும்போது முகத்தை கறுப்புத் துணியால் மறைப்பது சிறை வழக்கம். ஆனால் அதையும் பகத்சிங் எதிர்த்தார். நான் பிறந்த தாய்மண்ணைப் பார்த்தவாறே என் உயிர் பிரிய வேண்டும் என்று அவர் கூறினார்.
எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதிவரை வாழ்ந்த அவர் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்//
அந்த கொள்கை பிடிப்புக்க்காகவும், தைரியத்துக்காகவும் தான் அவர் இன்னமும் நம் மனங்களில் வாழுகிறார்
.....................
எடுத்துக்கொண்ட கொள்கையிலிருந்து இம்மியளவும் விலகாமல் இறுதிவரை வாழ்ந்த அவர் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்//
அந்த கொள்கை பிடிப்புக்க்காகவும், தைரியத்துக்காகவும் தான் அவர் இன்னமும் நம் மனங்களில் வாழுகிறார்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 8 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 8
மகாகவி பாரதி
சிறிய தடைகளைக் கண்டாலே அஞ்சி, மனம் பதைத்து தம் வேலைகளைத் தவறவிடும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.
ஆனால் தடைகள் எத்தனை வந்தபோதும் அவற்றைக் கண்டு அஞ்சாமல், தன்னிலை இழக்காமல், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர் கவிஞர் பாரதியார்.
தன் லட்சியத்தை விட்டு அவர் எதற்காகவும், எப்போதும் வளைந்து கொடுத்ததே இல்லை. சிறு வயதிலேயே அரசவையில் கவிதை பாடி வலம் வந்தவர் அவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் 1882, டிசம்பர் 11ம் நாள் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் சுப்ரமணியன்.
சிறுவனாக இருந்தபோதே அவரின் புலமை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. பள்ளிக்குச் சென்ற காலத்தில் இயற்கையை ரசிப்பதில் அவர் அதிக ஆவல் கொண்டிருந்தார். புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.
சின்னசாமி ஐயர் எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்ததால் அவருடன் அவ்வப்போது அரண்மனைக்குச் செல்வதுண்டு. அரசரே பாரதியின் அறிவுத்திறனைக் கண்டு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் பாரதி என்ற பெயராலேயே அறியப்படுகிறார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு காசிக்குச் சென்ற பாரதி அங்கு தலையில் இருந்த குடுமியை வெட்டியதுடன், கம்பீரமான மீசையையும் வளர்க்கத் தொடங்கினார். சுயமரியாதையின் அடையாளமாக தலைப்பாகையும் கட்டத் தொடங்கினார்.
சிறிது காலத்திற்குப் பிறகு எட்டயபுரம் திரும்பினார், பின்னர் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன்பின்னர் சுதேசமித்திரன் இதழில் வேலைக்குச் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாரதியின் கவிதை வரிகள் உற்சாகம் அளித்தன. அவரின் கவிதை பாடும் ஆற்றலும்,பேச்சுத் திறனும் ஆங்கிலேயர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தன.
வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்களுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.
எவருக்கும் அஞ்சாமல் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை வெளியிடும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. திலகரின் பால் பற்றுக் கொண்டிருந்த பாரதி காங்கிரஸின் தீவிரவாதிகள் பிரிவினரால் விரும்பப்பட்டவராக இருந்தார்.
சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து பொதுமக்களிடையே தேச விடுதலை குறித்த உணர்வைத் தூண்டினார். அவர் பேசும் கூட்டங்களும், நடத்திய ஊர்வலங்களும் ஆங்கிலேயர்களை அச்சமடைய வைத்தன.
பாரதியின் பாடல்களால் இந்திய மக்களிடையே தோன்றும் வீரத்தைக் கண்ட ஆங்கிலேய அரசு இந்தியாவில் எந்த இடத்திலும் பாரதியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அப்படிப் பாடுவது தேசத் துரோகம் என்றும் சட்டம் இயற்றியது.
அதற்கெல்லாம் அவர் ஒருபோதும் அஞ்சவில்லை, தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வந்தார்.
வறுமை நிலையில் இருந்தபோதும் அவர் மகிழ்வுடனேயே இருந்தார். வறுமையோ, ஆங்கிலேயரோ அவர் எதைக்கண்டும் அஞ்சவில்லை. அஞ்சாமை மட்டுமன்றி அன்பு செலுத்துதலும் அவரிடம் இருந்த அரிய குணங்களில் ஒன்று.
மற்ற உயிரினங்களையும் அவர் நேசித்தார். கழுதைக் குட்டியைத் தோள்மீது தூக்கி வைத்துக் கொஞ்சியதாகட்டும், காட்டு ராஜாவே நான் கவிராஜன் வந்திருக்கிறேன் என்று சிங்கத்திடம் பேசியதாகட்டும், யானையை அன்புடன் தடவிக் கொடுத்ததாகட்டும் அதையெல்லாம் விட அவர் பாடலில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற வரிகளே அவர் மற்ற உயிரினங்களின் மேல் வைத்திருந்த அன்பைக் காட்டும்.
அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், யாருக்கும் அஞ்சாமல் செயல்புரியுங்கள். மனதை எப்போதும், எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். உங்களை உலகம் ஒருபோதும் மறக்கவே மறக்காது.
மகாகவி பாரதி
சிறிய தடைகளைக் கண்டாலே அஞ்சி, மனம் பதைத்து தம் வேலைகளைத் தவறவிடும் இளைஞர்கள் பலர் உள்ளனர்.
ஆனால் தடைகள் எத்தனை வந்தபோதும் அவற்றைக் கண்டு அஞ்சாமல், தன்னிலை இழக்காமல், தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தவர் கவிஞர் பாரதியார்.
தன் லட்சியத்தை விட்டு அவர் எதற்காகவும், எப்போதும் வளைந்து கொடுத்ததே இல்லை. சிறு வயதிலேயே அரசவையில் கவிதை பாடி வலம் வந்தவர் அவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் 1882, டிசம்பர் 11ம் நாள் பிறந்தார். பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் சுப்ரமணியன்.
சிறுவனாக இருந்தபோதே அவரின் புலமை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. பள்ளிக்குச் சென்ற காலத்தில் இயற்கையை ரசிப்பதில் அவர் அதிக ஆவல் கொண்டிருந்தார். புத்தகங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் இருந்தது.
சின்னசாமி ஐயர் எட்டயபுரம் அரண்மனையில் பணிபுரிந்ததால் அவருடன் அவ்வப்போது அரண்மனைக்குச் செல்வதுண்டு. அரசரே பாரதியின் அறிவுத்திறனைக் கண்டு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அன்றிலிருந்து இன்றுவரை அவர் பாரதி என்ற பெயராலேயே அறியப்படுகிறார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு காசிக்குச் சென்ற பாரதி அங்கு தலையில் இருந்த குடுமியை வெட்டியதுடன், கம்பீரமான மீசையையும் வளர்க்கத் தொடங்கினார். சுயமரியாதையின் அடையாளமாக தலைப்பாகையும் கட்டத் தொடங்கினார்.
சிறிது காலத்திற்குப் பிறகு எட்டயபுரம் திரும்பினார், பின்னர் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
அதன்பின்னர் சுதேசமித்திரன் இதழில் வேலைக்குச் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாரதியின் கவிதை வரிகள் உற்சாகம் அளித்தன. அவரின் கவிதை பாடும் ஆற்றலும்,பேச்சுத் திறனும் ஆங்கிலேயர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தன.
வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்களுடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார்.
எவருக்கும் அஞ்சாமல் தன் மனதில் தோன்றிய கருத்துக்களை வெளியிடும் நெஞ்சுரம் அவரிடம் இருந்தது. திலகரின் பால் பற்றுக் கொண்டிருந்த பாரதி காங்கிரஸின் தீவிரவாதிகள் பிரிவினரால் விரும்பப்பட்டவராக இருந்தார்.
சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து பொதுமக்களிடையே தேச விடுதலை குறித்த உணர்வைத் தூண்டினார். அவர் பேசும் கூட்டங்களும், நடத்திய ஊர்வலங்களும் ஆங்கிலேயர்களை அச்சமடைய வைத்தன.
பாரதியின் பாடல்களால் இந்திய மக்களிடையே தோன்றும் வீரத்தைக் கண்ட ஆங்கிலேய அரசு இந்தியாவில் எந்த இடத்திலும் பாரதியாரின் பாடல்களைப் பாடக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. அப்படிப் பாடுவது தேசத் துரோகம் என்றும் சட்டம் இயற்றியது.
அதற்கெல்லாம் அவர் ஒருபோதும் அஞ்சவில்லை, தொடர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டு வந்தார்.
வறுமை நிலையில் இருந்தபோதும் அவர் மகிழ்வுடனேயே இருந்தார். வறுமையோ, ஆங்கிலேயரோ அவர் எதைக்கண்டும் அஞ்சவில்லை. அஞ்சாமை மட்டுமன்றி அன்பு செலுத்துதலும் அவரிடம் இருந்த அரிய குணங்களில் ஒன்று.
மற்ற உயிரினங்களையும் அவர் நேசித்தார். கழுதைக் குட்டியைத் தோள்மீது தூக்கி வைத்துக் கொஞ்சியதாகட்டும், காட்டு ராஜாவே நான் கவிராஜன் வந்திருக்கிறேன் என்று சிங்கத்திடம் பேசியதாகட்டும், யானையை அன்புடன் தடவிக் கொடுத்ததாகட்டும் அதையெல்லாம் விட அவர் பாடலில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற வரிகளே அவர் மற்ற உயிரினங்களின் மேல் வைத்திருந்த அன்பைக் காட்டும்.
அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், யாருக்கும் அஞ்சாமல் செயல்புரியுங்கள். மனதை எப்போதும், எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். உங்களை உலகம் ஒருபோதும் மறக்கவே மறக்காது.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 9 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 9
ஜே.கே.ரவுலிங்
சராசரியாகவே வாழ்ந்து பலர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்வில் எதையாவது சாதிப்பதன்மூலம் தங்கள் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி சிலர்தான் வாழ்கிறார்கள்.
அந்த வரிசையில் சிறு வயதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு இடையில் சில காலம் சாதாரணமான வேலையைப் பார்த்து, பின்னர் முழு வீச்சில் எழுதத் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்தான் ஜே.கே.ரவுலிங்.
ஒரு படம் வெளியாகும் தினத்திற்கு முதல்நாள் இரவே தியேட்டர் வாசலில் காத்துக் கிடந்தவர்களை உலகம் பார்த்திருக்கிறது. ஆனால் ஒரு புத்தகம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பே கியூவில் நிற்பவர்களை உலகம் கண்டது அதுதான் முதல் முறை.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் செகரட்டரி வேலை பார்த்து வந்த ரவுலிங்கிற்கு தினசரி வாழ்க்கை ஒரேபோல் சென்று கொண்டிருந்தது. அதே ரயில் பயணம், அதே அலுவலகம், அதே வேலை என்று சாதாரண மனிதர்களைப் போல்தான் அவரும் வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனாலும் அவரின் அடி மனதில் எழுத்தாளராக வேண்டுமென்ற ஆசை தகித்துக் கொண்டிருந்தது.
அலுவலகத்திற்குப் போய் வரும் நேரத்தில் ரயில் பயணத்தின்போது ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பது அவரின் வழக்கம்.
ஒருநாள் ரயில் ஏதோ காரணத்திற்காக நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதுதான் ரவுலிங்கின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ரயில் நின்ற அந்த நேரத்தில் அவர் மனதில் ஒரு கதாபாத்திரம் உருவெடுத்தது. தினமும் பள்ளிக்குச் செல்வதை விரும்பாத குழந்தைகள்கூட மாயாஜால, மந்திரஜாலப் படங்களைப் பார்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். பள்ளியே ஒரு மாயாஜாலப் பள்ளியாக இருந்தால்? இதுதான் ரவுலிங்கின் மனதில் உதித்த கற்பனை. மாந்திரீகம் கற்றுத் தரும் பள்ளி என்ற ஒரே ஒரு அவுட்லைன் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ரயில் கிளம்பி ஸ்டேஷனை அடையும்வரை தவிப்புடனே காட்சியளித்த அவர் ரயில் நின்றவுடன் அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்குள் சென்று ஆர்டர் செய்துவிட்டு ஒரு பேப்பரை எடுத்து எழுதத் தொடங்கினார்.
ஹாரிபாட்டர் என்ற ஒரு கதாபாத்திரம், அவர் எழுதத் தொடங்கியவுடனேயே உயிர்பெற்று உலகப் புகழ் பெற்றது.
முதல் நாவலை அவ்வளவு ஆர்வமாக எழுதிய ரவுலிங்கிற்கு அதை வெளியிட முடியவில்லை. பல பதிப்பகங்கள் அந்தக் கதையை கற்பனைக் கதையாக இருக்கிறது என்று காரணம் சொல்லி மறுத்தன. லண்டனில் இருந்த ப்ளூம்ஸ்பெரி என்ற சிறிய பதிப்பம் நூலை வெளியிட முன்வந்தது.
அந்தப் பதிப்பக உரிமையாளரின் மகள் அந்தக் கதையை ஆர்வமாகப் படித்தாள் என்பதுதான் காரணம்.
நாவல் வெளிவந்தது. சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள்.
மாபெரும் வெற்றி.
சிறுவர்களின் மனதைக் கொள்ளைகொண்ட கதையாக அது இருந்ததால் அதன் அடுத்தடுத்த பாகங்களை வெளியிட பல பதிப்பகங்கள் முன்வந்தன.
ரவுலிங் ஒரு ஏலத்திற்கு ஏற்பாடு செய்தார். ஸ்கொலாஸ்டிக் நிறுவனம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு அடுத்த பாகத்தின் கதைக்கான உரிமையை ஏலம் எடுத்தது.
ரவுலிங்கிற்கு பெரிய அதிர்ச்சி. அவ்வளவு பணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்த பாகங்களை விரைவாக எழுதிக் குவித்தார். அவருடைய திருமண வாழ்க்கையில் அவர் வெற்றிபெறாவிட்டாலும் சிறுவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
இன்று ஹாரிபாட்டர் நாவலாக மட்டுமின்றி, திரைப்படங்களாகவும் வெளிவந்து வெற்றிவாகை சூடியுள்ளது.
அவரின் வெற்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. உங்கள் மனதில் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கியே உங்கள் பயணம் அமையட்டும். வெற்றி தேவதை உங்களை ஆசிர்வதிப்பாள்.
ஜே.கே.ரவுலிங்
சராசரியாகவே வாழ்ந்து பலர் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் வாழ்வில் எதையாவது சாதிப்பதன்மூலம் தங்கள் பெயர் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்படி சிலர்தான் வாழ்கிறார்கள்.
அந்த வரிசையில் சிறு வயதிலிருந்தே எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு இடையில் சில காலம் சாதாரணமான வேலையைப் பார்த்து, பின்னர் முழு வீச்சில் எழுதத் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களின் மனதிலும் இடம் பிடித்தவர்தான் ஜே.கே.ரவுலிங்.
ஒரு படம் வெளியாகும் தினத்திற்கு முதல்நாள் இரவே தியேட்டர் வாசலில் காத்துக் கிடந்தவர்களை உலகம் பார்த்திருக்கிறது. ஆனால் ஒரு புத்தகம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பே கியூவில் நிற்பவர்களை உலகம் கண்டது அதுதான் முதல் முறை.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பில் செகரட்டரி வேலை பார்த்து வந்த ரவுலிங்கிற்கு தினசரி வாழ்க்கை ஒரேபோல் சென்று கொண்டிருந்தது. அதே ரயில் பயணம், அதே அலுவலகம், அதே வேலை என்று சாதாரண மனிதர்களைப் போல்தான் அவரும் வேலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனாலும் அவரின் அடி மனதில் எழுத்தாளராக வேண்டுமென்ற ஆசை தகித்துக் கொண்டிருந்தது.
அலுவலகத்திற்குப் போய் வரும் நேரத்தில் ரயில் பயணத்தின்போது ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பது அவரின் வழக்கம்.
ஒருநாள் ரயில் ஏதோ காரணத்திற்காக நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதுதான் ரவுலிங்கின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ரயில் நின்ற அந்த நேரத்தில் அவர் மனதில் ஒரு கதாபாத்திரம் உருவெடுத்தது. தினமும் பள்ளிக்குச் செல்வதை விரும்பாத குழந்தைகள்கூட மாயாஜால, மந்திரஜாலப் படங்களைப் பார்ப்பதில் மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். பள்ளியே ஒரு மாயாஜாலப் பள்ளியாக இருந்தால்? இதுதான் ரவுலிங்கின் மனதில் உதித்த கற்பனை. மாந்திரீகம் கற்றுத் தரும் பள்ளி என்ற ஒரே ஒரு அவுட்லைன் அவருக்குப் போதுமானதாக இருந்தது. ரயில் கிளம்பி ஸ்டேஷனை அடையும்வரை தவிப்புடனே காட்சியளித்த அவர் ரயில் நின்றவுடன் அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்குள் சென்று ஆர்டர் செய்துவிட்டு ஒரு பேப்பரை எடுத்து எழுதத் தொடங்கினார்.
ஹாரிபாட்டர் என்ற ஒரு கதாபாத்திரம், அவர் எழுதத் தொடங்கியவுடனேயே உயிர்பெற்று உலகப் புகழ் பெற்றது.
முதல் நாவலை அவ்வளவு ஆர்வமாக எழுதிய ரவுலிங்கிற்கு அதை வெளியிட முடியவில்லை. பல பதிப்பகங்கள் அந்தக் கதையை கற்பனைக் கதையாக இருக்கிறது என்று காரணம் சொல்லி மறுத்தன. லண்டனில் இருந்த ப்ளூம்ஸ்பெரி என்ற சிறிய பதிப்பம் நூலை வெளியிட முன்வந்தது.
அந்தப் பதிப்பக உரிமையாளரின் மகள் அந்தக் கதையை ஆர்வமாகப் படித்தாள் என்பதுதான் காரணம்.
நாவல் வெளிவந்தது. சிறுவர்கள் மிகவும் விரும்பிப் படித்தார்கள்.
மாபெரும் வெற்றி.
சிறுவர்களின் மனதைக் கொள்ளைகொண்ட கதையாக அது இருந்ததால் அதன் அடுத்தடுத்த பாகங்களை வெளியிட பல பதிப்பகங்கள் முன்வந்தன.
ரவுலிங் ஒரு ஏலத்திற்கு ஏற்பாடு செய்தார். ஸ்கொலாஸ்டிக் நிறுவனம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு அடுத்த பாகத்தின் கதைக்கான உரிமையை ஏலம் எடுத்தது.
ரவுலிங்கிற்கு பெரிய அதிர்ச்சி. அவ்வளவு பணத்தை அவர் எதிர்பார்க்கவில்லை.
அடுத்தடுத்த பாகங்களை விரைவாக எழுதிக் குவித்தார். அவருடைய திருமண வாழ்க்கையில் அவர் வெற்றிபெறாவிட்டாலும் சிறுவர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.
இன்று ஹாரிபாட்டர் நாவலாக மட்டுமின்றி, திரைப்படங்களாகவும் வெளிவந்து வெற்றிவாகை சூடியுள்ளது.
அவரின் வெற்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. உங்கள் மனதில் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கியே உங்கள் பயணம் அமையட்டும். வெற்றி தேவதை உங்களை ஆசிர்வதிப்பாள்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 10 அம்பிகா சிவம்
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 10
மாவீரன் அலெக்ஸாண்டர்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றொரு பழமொழி உண்டு. சிறு வயதாக இருக்கும்போதே அறிவாற்றல் நிரம்பியவர்களாக விளங்குபவர்கள் பிற்காலத்தில் அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பதற்காகச் சொன்ன பழமொழி அது.
அதேபோல் சிறு வயதிலேயே வீரம் நிறைந்தவராக விளங்கிய அலெக்ஸாண்டர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மாவீரனாக மாறிப்போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
சிறு வயதிலேயே தன் தந்தையான கிரேக்க மன்னர் பிலிப்பின் முன்பாக, யாராலும் அடக்க முடியாத குதிரையைத் தன்னுடைய அறிவாற்றல் திறனால் அடக்கி அதன்மீது அமர்ந்து சபையோரின¢ கைதட்டல்கள் ஒலிக்க வலம் வந்தவர்தான் மாவீரன் அலெக்ஸாண்டர்.
மன்னருக்கு மகனாகப் பிறந்தாலும் தன்னுடைய திறமையாலும் அறிவு நுட்பத்தாலும் தன்னிகரற்ற வீரத்தாலும் அகில உலகையும் வெல்லப் புறப்பட்டவர் அவர்.
இந்தியாவின்மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், நாணயங்களில் உருவங்கள் பொறிக்கும் முறையை அறிமுகம் செய்தவர், ஐரோப்பா கண்டத்தில் பிறந்து, ஆசியாக் கண்டத்தில் இறந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தில் புதைக்கப்பட்ட ஒரே மன்னர், உலகம் போதாது என்று சொன்னவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக உள்ளது என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொன்னவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு.
அரிஸ்டாட்டிலின் சீடராகத் திகழ்ந்தவர் என்பதும், தான் போரிட்டு நாடுகளைப் பிடிக்கச் சென்றபோதும், தன்னுடனேயே கிரேக்க வீரகாவியங்களான இலியட், ஒடிஸி போன்றவற்றை எடுத்துச் சென்றவர் என்பதும் அவரின் மற்றொரு பக்கத்தைக் காட்டுபவை.
தன்னுடைய குதிரையான பியூரிபேலஸ் மீது மிகுந்த அன்பு கொண்டவராகத் திகழ்ந்தார்.
ஒன்பதே ஆண்டுக்குள் உலகின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியவர், இந்தியாவின் ஒரு பகுதியை வென்றவுடன் உலகின் கடைசிப் பகுதியை வென்றுவிட்டதாகக் கருதி இனி நான் வெல்வதற்கு நாடு இல்லையே என்று கண்ணீர் சிந்தியதாகக் கூறுவார்கள்.
உலக வரலாற்றில் அவர் இடம் பிடித்ததற்குக் காரணம் அவரின் வீரம்தான். மிகக் குறுகிய காலத்திலேயே தான் ஒரு மாவீரன் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்தார்.
நாம் என்ன செய்தோம் என்று உலகைச் சொல்ல வைக்க வேண்டும். அதுதான் வெற்றியாளனின் பண்பு. அதை நிரூபித்துக் காட்டியவர் அலெக்ஸாண்டர்.
முதல் போரிலேயே வெற்றி பெற்றார் அவர். எகிப்தைக் கைப்பற்ற அவர் முயன்றபோது கடும் எதிர்ப்பு. ஆனால் அதையெல்லாம் மீறி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அங்கு அவர் பெயரில் ஒரு நகரைத் தோற்றுவித்தார். அதையடுத்து பல போர்களில் ஈடுபட்டார்.
இந்தியாவில் போரஸ் மன்னருடன் போரிட்டு வென்றபோதும், போரஸ் Ôஎன்னை ஒரு மன்னனாக நடத்துங்கள்Õ என்று கேட்டுக் கொண்டதால் அவரிடமே நாட்டைத் திருப்பிக் கொடுத்து பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அதுவே அலெக்ஸாண்டரின் கடைசிப்போர்.
அதன்பிறகு அவருடைய வீரர்கள் அவருக்கு சரியானபடி ஒத்துழைப்புத் தரவில்லை. அதன் காரணமாக அவர் நாட்டிற்குத் திரும்பும் வழியிலேயே மலேரியா காய்ச்சலில் இறந்தார்.
அவர் இறந்தாலும் அவர் புகழ் இன்றுவரை நிலைத்துள்ளது.
அவரின் லட்சியம் நாடு பிடிப்பது. அதில் அவர் முழுமூச்சாக ஈடுபட்டார். பல வெற்றிகளைக் குவித்தார். ஒரு வெற்றிக்குப் பிறகு அவர் ஓய்வெடுக்கவில்லை. அடுத்த இலக்கு, அடுத்த வெற்றி என்று கடைசிவரை பயணித்துக் கொண்டே இருந்தார்.
எனவே வெற்றிக்குப் பிறகு உடனடியாக அடுத்த இலக்கை நிர்ணயித்து அதைநோக்கி வெற்றிநடை போடத் தொடங்குங்கள் என்பதை வாழ்ந¢து காட்டியவர் அலெக்ஸாண்டர். அவர் ஒரு மாவீரனாக வளர்ந்தார், வாழ்ந்தார், இறந்தார்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது, அதைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், அடுத்தவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் வெற்றிக்கனியை எளிதாகப் பறிக்கலாம்.
மாவீரன் அலெக்ஸாண்டர்
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றொரு பழமொழி உண்டு. சிறு வயதாக இருக்கும்போதே அறிவாற்றல் நிரம்பியவர்களாக விளங்குபவர்கள் பிற்காலத்தில் அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பதற்காகச் சொன்ன பழமொழி அது.
அதேபோல் சிறு வயதிலேயே வீரம் நிறைந்தவராக விளங்கிய அலெக்ஸாண்டர் பிற்காலத்தில் உலகம் போற்றும் மாவீரனாக மாறிப்போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
சிறு வயதிலேயே தன் தந்தையான கிரேக்க மன்னர் பிலிப்பின் முன்பாக, யாராலும் அடக்க முடியாத குதிரையைத் தன்னுடைய அறிவாற்றல் திறனால் அடக்கி அதன்மீது அமர்ந்து சபையோரின¢ கைதட்டல்கள் ஒலிக்க வலம் வந்தவர்தான் மாவீரன் அலெக்ஸாண்டர்.
மன்னருக்கு மகனாகப் பிறந்தாலும் தன்னுடைய திறமையாலும் அறிவு நுட்பத்தாலும் தன்னிகரற்ற வீரத்தாலும் அகில உலகையும் வெல்லப் புறப்பட்டவர் அவர்.
இந்தியாவின்மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர், நாணயங்களில் உருவங்கள் பொறிக்கும் முறையை அறிமுகம் செய்தவர், ஐரோப்பா கண்டத்தில் பிறந்து, ஆசியாக் கண்டத்தில் இறந்து, ஆப்பிரிக்கக் கண்டத்தில் புதைக்கப்பட்ட ஒரே மன்னர், உலகம் போதாது என்று சொன்னவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக உள்ளது என்று தன் கல்லறையில் பொறிக்கச் சொன்னவர் என்று பல பெருமைகள் அவருக்கு உண்டு.
அரிஸ்டாட்டிலின் சீடராகத் திகழ்ந்தவர் என்பதும், தான் போரிட்டு நாடுகளைப் பிடிக்கச் சென்றபோதும், தன்னுடனேயே கிரேக்க வீரகாவியங்களான இலியட், ஒடிஸி போன்றவற்றை எடுத்துச் சென்றவர் என்பதும் அவரின் மற்றொரு பக்கத்தைக் காட்டுபவை.
தன்னுடைய குதிரையான பியூரிபேலஸ் மீது மிகுந்த அன்பு கொண்டவராகத் திகழ்ந்தார்.
ஒன்பதே ஆண்டுக்குள் உலகின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியவர், இந்தியாவின் ஒரு பகுதியை வென்றவுடன் உலகின் கடைசிப் பகுதியை வென்றுவிட்டதாகக் கருதி இனி நான் வெல்வதற்கு நாடு இல்லையே என்று கண்ணீர் சிந்தியதாகக் கூறுவார்கள்.
உலக வரலாற்றில் அவர் இடம் பிடித்ததற்குக் காரணம் அவரின் வீரம்தான். மிகக் குறுகிய காலத்திலேயே தான் ஒரு மாவீரன் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்தார்.
நாம் என்ன செய்தோம் என்று உலகைச் சொல்ல வைக்க வேண்டும். அதுதான் வெற்றியாளனின் பண்பு. அதை நிரூபித்துக் காட்டியவர் அலெக்ஸாண்டர்.
முதல் போரிலேயே வெற்றி பெற்றார் அவர். எகிப்தைக் கைப்பற்ற அவர் முயன்றபோது கடும் எதிர்ப்பு. ஆனால் அதையெல்லாம் மீறி மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றார். அங்கு அவர் பெயரில் ஒரு நகரைத் தோற்றுவித்தார். அதையடுத்து பல போர்களில் ஈடுபட்டார்.
இந்தியாவில் போரஸ் மன்னருடன் போரிட்டு வென்றபோதும், போரஸ் Ôஎன்னை ஒரு மன்னனாக நடத்துங்கள்Õ என்று கேட்டுக் கொண்டதால் அவரிடமே நாட்டைத் திருப்பிக் கொடுத்து பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அதுவே அலெக்ஸாண்டரின் கடைசிப்போர்.
அதன்பிறகு அவருடைய வீரர்கள் அவருக்கு சரியானபடி ஒத்துழைப்புத் தரவில்லை. அதன் காரணமாக அவர் நாட்டிற்குத் திரும்பும் வழியிலேயே மலேரியா காய்ச்சலில் இறந்தார்.
அவர் இறந்தாலும் அவர் புகழ் இன்றுவரை நிலைத்துள்ளது.
அவரின் லட்சியம் நாடு பிடிப்பது. அதில் அவர் முழுமூச்சாக ஈடுபட்டார். பல வெற்றிகளைக் குவித்தார். ஒரு வெற்றிக்குப் பிறகு அவர் ஓய்வெடுக்கவில்லை. அடுத்த இலக்கு, அடுத்த வெற்றி என்று கடைசிவரை பயணித்துக் கொண்டே இருந்தார்.
எனவே வெற்றிக்குப் பிறகு உடனடியாக அடுத்த இலக்கை நிர்ணயித்து அதைநோக்கி வெற்றிநடை போடத் தொடங்குங்கள் என்பதை வாழ்ந¢து காட்டியவர் அலெக்ஸாண்டர். அவர் ஒரு மாவீரனாக வளர்ந்தார், வாழ்ந்தார், இறந்தார்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது, அதைப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும், அடுத்தவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்துகொண்டால் வெற்றிக்கனியை எளிதாகப் பறிக்கலாம்.
subramaniansivam- பண்பாளர்
- பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
ஆனால் பாவம் அந்த யானையே அவரை தூக்கி போட்டுவிட்டதே,......இல்லாவிட்டால் இன்னும் எவ்வளவு காலம் அவர் நம்முடன் இருந்திருப்பாரோ ? ...............குறைந்த பக்ஷம் விடுதலையை அவர் கண்ணால் பார்த்திருக்கலாம் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
நல்ல பகிர்வு சிவம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
.
.
நல்ல பகிர்வு சிவம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்
![சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம் - Page 2 ITij04NRhKE3sYgZYPjG+alexander_the_great_by_serathus-d3bhbum](https://www.filepicker.io/api/file/ITij04NRhKE3sYgZYPjG+alexander_the_great_by_serathus-d3bhbum.png)
Alexander The Great !
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம் - Page 2 BHHw1sEyROOX7uTnHhtr+images](https://www.filepicker.io/api/file/bHHw1sEyROOX7uTnHhtr+images.jpg)
சொல்லும்போதே நமக்கும் வீரம் வரும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25 பகுதி 1- 4 அம்பிகா சிவம்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல்
» சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்
» யார் யார் சிவம், நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம்
» தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல்
» சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் மின்னூல்
» சாதிக்கப் பிறந்தவர்கள் நீங்கள்-விவேகானந்தர்
» யார் யார் சிவம், நீ நான் சிவம் வாழ்வே தவம் அன்பே சிவம்
» தனித்துவ நடிப்பால் ஒளிர்ந்த அம்பிகா - அம்பிகா பிறந்தநாள் ஸ்பெஷல்
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|