புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_c10'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_m10'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_c10 
5 Posts - 63%
heezulia
'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_c10'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_m10'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_c10'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_m10'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 10:39 am

ஒரு சிறிய டவுனிலிருந்து  மகன் வீட்டுக்கு வந்திருந்த  சிவகாமி  அம்மாளும் பக்கத்து வீடு பார்வதி அம்மாளும் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் பேசக்கிடைத்தது சிவகாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

"இந்த வீடு பரவாஇல்லை, ஏதோ அக்கம் பக்கம் பேசுவதற்கு, ஏதோ அவசரம் ஆத்திரம் என்றால் ஒரு குரல் கூப்பிட வாகாக மனிதர்கள் இருக்கிறீர்கள், என் சின்ன பிள்ளை flat  இல் இருக்கிறான். அங்கு பக்கத்து flat  இல் இருப்பது யார் என்று கூட நமக்கு தெரியாது....தப்பித்தவறி யாரையாவது பார்த்தால் ஒரு சிரிப்பு ஒரு விசாரிப்பு கூட கிடையாது. சின்ன பசங்க கூட போன் ஐ கை இல் வைத்துக்கொண்டு, காதில் எதையோ மாட்டிக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு, தப்பித்தவறி கூட அடுத்தவர்கள் பேச்சு நம் காதில் விழவேண்டாம் என்பது போல தனியாகவே இருக்கிறார்களே ?....ஏன் இப்படி இருக்கிறார்கள் ? ..ஓடி ஆடி விளையாடும் சிறுவர்களை பார்ப்பதே அபூர்வமாய் இருக்கே ? "

"மகனும் மருமகளும் ஆபீஸ் போவதால், flat  வாசலில் கிரில் கேட் வேறு. ...ஜெயில் மாதிரி...எப்பவும் பூட்டியே   வைக்க சொல்வார்கள். 'யாராவது வந்தால் கிரில் கதவை திறக்காமலேயே பேசு, போஸ்ட் வந்தாலும் அந்த கதவின் இடுக்கு வழியே வாங்கு....பத்திரம் , பத்திரம்.....இது நீ இருக்கும் கிராமம் போல இல்லை  ' என்று தினமும் ஒரு நூறு முறையாவது சொல்லிவிட்டுத்தான் கிளம்புவார்கள்......."

அவர்கள் சொல்வதும் வாஸ்தவம் தான், தினமும் பேப்பரில் தான் பார்க்கிறோமே, இங்கு கொள்ளை அங்கு கொலை என்று......மாலை ஆனால் பறவைகள் போல கூட்டில் அடைகிறார்கள்..............மறுபடியும் கம்ப்யூட்டர் , போன் , இல்லாவிட்டால் டிவி என்று .....இயந்திரம் போல, இயந்திரகளாகவே........ "

"ஹும்...நாம எதைத்தேடி ஓடறோம் என்றே இவர்களுக்கு புரிவதில்லை.........மனிதர்களுடன் பேசவே  பேசாமல், எந்த  மனித உறவுகளுமே இல்லாமல்  இவர்கள் வெறும் மெஷின்களுடன் என்ன வாழ்க்கை வாழுகிறார்களோ ?.ஒண்ணும் பிடிபடலை எனக்கு "

"அங்கு இரண்டு நாளிலேயே எங்களுக்கு  மூச்சு முட்டிவது போல ஆகிவிட்டது............"உங்களுக்கு எப்போ எங்களைப்  பார்க்கணும் என்று தோன்றுகிறதோ அப்போ நம்ப வீட்டுக்கு வந்துடுங்கப்பா" என்று சொல்லி கிளம்பிவிட்டோம் நாங்கள் என்றாள்.

"அப்புறம் இவனும் மருமகளும் கூப்பிட்டதால் இங்கு வந்திருக்கோம், நீங்க எப்படி இங்கேயே இருகீங்க?" என்று சிரித்தபடி  பார்வதி அம்மாவை பார்த்து கேட்டாள்.

அதற்கு பார்வதியும், "எனக்கும் முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது, எனவே தான் அதுபோல இருக்கும் flat  களிலிருந்து இது போல வீட்டுக்கு மாறி வந்து விட்டோம். இங்கு கொஞ்சம் பரவாஇல்லை, அக்கம் பக்கம் நீங்க சொல்வது போல பார்க்க பேசி பழக மனிதர்கள் உண்டு " என்றாள்.

" ம்... எங்க ஊரில் முன்பு போல வாசல் திண்ணைகள் இல்லையே தவிர, அக்கம் பக்கம் பேச, கொள்ள, ஒரு பண்டிகை பருவம் என்றால் நாம் சமைத்ததை அடுத்த வீடுகளுக்கு கொடுத்து அனுப்ப , என்று ஒரு நாலு பேராவது இருக்கிறார்கள். அத்தை, மாமா, அக்கா , அண்ணா என்று கூட இருப்பவர்களை முறை சொல்லி கூப்பிட்டு பழகுவோம்.........ஒரு தபால்காரர்  வந்தால் கூட உட்காரவைத்து ரெண்டு வார்த்தை பேசி, ஒரு டம்ளர் மோர் கொடுத்து அனுப்புவோம்...... இங்க தவிச்ச வாய்க்கு தண்ணி தரவே யாருக்கும் நேரம் இல்லை...........

"அங்கே, யாருக்காவது ஒன்று என்றால் எல்லோரும் ஓடுவோம்... ஆனால் இங்கு, , அடுத்தவன் ரோட்டில் அடிபட்டு இருந்தால் கூட பார்த்துக்கொண்டே செல்பவர்கள் தானே அதிகமாய்ப் போனார்கள்...........அவங்களுக்கு உதவக்கூட ஆள் இல்லையே.....இதுக்கும் இப்போ எல்லோரும் கையில்  போன் ஐ  வைத்துக்கொண்டு திரிகிறார்கள்........கொஞ்சம் கூட  மனிதாபிமானமே இல்லாமல் போச்சு இன்றைய மனிதர்களிடம்...............இப்படி இருந்தால் எப்படி நாடு விளங்கும்? எங்கிருந்து மழை வரும்..." என்று வருத்தத்துடன் அங்கலாய்த்தாள்   சிவகாமி அம்மாள்.

பார்வதி அம்மாளுக்கு என்ன சொல்வது என்று தெரியலை. பிறகு " நீங்க சொல்வது வாஸ்த்தவம் தான், நாம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே, கொஞ்சம் கொஞ்சமாய் உறவுகள் அவற்றின் நற்பண்புகள் எல்லாம் குறைந்து  கொண்டே வருகிறது.... நம் உணவுகள், பண்புகள், கலாச்சாரம் எல்லாவற்றையும் இந்த மேற்கத்திய மோகம் என்கிற வெள்ளம் அடித்து சென்றுவிடும் போல இருக்கு.........எல்லோரும் பல்லக்கில் ஏற ஆசைப்படுவதன் விளைவு இது....தனக்கு தகுதி இருக்கோ இல்லியோ, ஒரேநாளில் பணக்கரனாகிடணும்  , என்கிற எண்ணம் எல்லோருக்குமே வந்து விட்டது தான் காரணம் என்று நினைக்கிறேன்....." என்றாள்.

இவர்கள் இப்படி பேச ஆரம்பித்ததிலிருந்து சிவகாமி அம்மாளின் மருமகள் லக்ஷ்மி, வாசலில்
கீரைக்காரியுடன்  பேரம் பேசிக்கொண்டிருந்தாள். ஒருவழியாக கீரை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவளை
" அம்மா லக்ஷ்மி, அந்த கீரையை இப்படிக்கொடு, நான் ஆய்ந்து வைக்கிறேன்" என்றாள் சிவகாமி.

" வேண்டாம் ம்மா, நான் பார்த்துக்கறேன்" என்றாள் லக்ஷ்மி.

" பரவாஇல்லை சும்மாத்தானே இருக்கேன், கொடு இப்படி " என்றாள் மருமகளிடம்.

அவளும் கீரைக் கட்டுகளை இவர்களின் அருகில் கொண்டுவைத்துவிட்டு, பார்வதி அம்மாளை பார்த்து ,
" லதாவும், கேசவனும் ஆபீஸ் போயாச்சா  ஆண்டி'? என்றாள்.

பார்வதியும் சிரித்தவாறே," ம்.. போயச்சுமா, உங்க மாமியாரை பார்த்தேன் அது தான், கதவை பூட்டிக்கொண்டு இங்கு வந்துட்டேன் " என்றாள்.

உடனே  சிவகாமியும், " இங்க உறவு முறைகள் கூட ரெண்டு தான் 'ஆண்டி அங்கிள்'....என்னவோ போங்கோ, எதுவும் மனசுக்கு பிடிக்கலை".என்றபடி கீரையை ஆயத் துவங்கினாள். வாசலில் இன்னும் கீரைக்காரி காத்திருக்கவே,

" என்னமா, இன்னும் கீரைக்காரிக்கு  பணம் கொடுக்கலையா, அவள் காத்திருக்காளே, எப்பவும் பர்சுடன் தானே காய் வாங்க போவாய் ? " என்றாள் சிவகாமி.  

அதற்கு, " இல்லம்மா, அவளுக்கு ஜுரம் அடிப்பது போல இருக்காம், தலையை சுற்றுகிறதாம் , அது தான் ஒரு நாலு இட்லி சாப்பிட்டுவிட்டு, இந்த மாத்திரையை போட்டுக்கோ, இதுக்கும் கேட்காவிட்டால், காய் விற்று விட்டு வரும்போது, தெருக்கோடி  டாக்டர் அங்கிள் , கிளினிக் முடிந்து வந்திருப்பார், அவரிடம் போ என்று சொன்னேன் . அது தான் காத்திருக்கா" என்று  உள்ளிருந்து பதில் சொல்லியபடிய  வந்த லக்ஷ்மி இன் கைகளில் நாலு இட்லி  வைத்த தட்டும் குடிக்க ஒரு டம்ளர் தண்ணீரும் இருந்தது.

" இதோ கொடுத்து விட்டு வரேன் ம்மா" என்றபடி சென்றாள்.

இதைப்பார்த்த சிவகாமிக்கு மனம் நிறைந்தது, தான் பயந்த படி இன்னும் மனிதாபிமானம் பூரணமாய் சாகவில்லை என்கிற நினைப்பே  மனதை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. பார்வதியை பார்த்து சந்தோஷமாய் சிரித்தாள். என்றாலும், கீரைகாரியை அனுப்பிவிட்டு உள்ளே வந்த லக்ஷ்மி இடம்,

" என்னமா 4 கத்தை கீரைக்கு அத்தனை நேரம் போராடுன, பேரம் பேசின, 'பொசுக்குனு' நாலு இட்டிலி, சாம்பார், மாத்திரை என்று கொடுத்துட்டே" என்றாள்.

அதற்கு லக்ஷ்மி, " அது வியாபாரம் மா, இது மனிதாபிமானம், ரெண்டையும் குழப்பிக்க கூடாது  " என்று
சொல்லிவிட்டு, ஆய்ந்த கீரைகளை உள்ளே கொண்டு சென்றாள் இயல்பாக.

சிவகாமியும் பார்வதியும் மன மகிழ்ச்சியாக  சிரித்தனர். "இது போல சிலரால் தான் இன்னும் மழை பெய்கிறது"  என்று பார்வதி சொன்னாள்.... சிவகாமியும் தன் மருமகளின் இயல்பான ஈகை குணத்தால்  மனம் நிறைந்தாள்.

கிரிஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Feb 02, 2015 11:57 am

அருமை அம்மா....

பிளாட் ல் நடப்பது உண்மை அம்மா...

இன்னும் நார்மல்வீடுகளில் கூட இந்த மாதிரி இப்போ கதவை பூட்டிக் கொண்டு தான் உள்ளனர்....

நானும் அம்மா இங்க இருந்த அப்போ அப்படி தன சொல்வேன் அம்மா கதவை open பண்ண கூடாது நான் வந்ததும் call பன்றேன் அப்போ தன ஓபன் பண்ணனும் என்று ...

flat life மற்றும் மனிதாபிமானம் இரண்டையும் இணைத்து அருமை அம்மா....

விரைவில் புக் வெளி இடுங்கள் அம்மா... தோழிகளிடம் இந்த கதை ஆசிரியர் எனக்கு தெரிந்தவர் மற்றும் புகைப்படம் எடுத்து உள்ளேன் என்று சொல்லி கொள்ளலாம் புன்னகை





'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  M'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  A'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  D'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  H'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  U



'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 02, 2015 1:17 pm

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 4:18 pm

மதுமிதா wrote:அருமை அம்மா....

பிளாட் ல் நடப்பது உண்மை அம்மா...

இன்னும் நார்மல்வீடுகளில் கூட இந்த மாதிரி இப்போ கதவை பூட்டிக் கொண்டு தான் உள்ளனர்....

நானும் அம்மா இங்க இருந்த அப்போ அப்படி தன சொல்வேன் அம்மா கதவை open  பண்ண கூடாது நான் வந்ததும் call பன்றேன் அப்போ தன ஓபன் பண்ணனும் என்று ...

flat life மற்றும் மனிதாபிமானம் இரண்டையும் இணைத்து அருமை அம்மா....

விரைவில் புக் வெளி இடுங்கள் அம்மா... தோழிகளிடம் இந்த கதை  ஆசிரியர் எனக்கு தெரிந்தவர் மற்றும் புகைப்படம் எடுத்து உள்ளேன் என்று சொல்லி கொள்ளலாம் புன்னகை


நன்றி மது  நன்றி  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் ................ஆமாம் மது, உங்க அம்மாவுக்கும் பெங்களுரு  புதிது .......பாஷை தெரியாது  ........ஜாக்கிரதையாக  இருப்பது தவறில்லை.
.
.
.
'புக்' தானே ?...........வெளி இட்டால் போச்சு, நான் பெங்களூர் வந்ததும் சொல்றேன், எதிரே தானே இருக்கீங்க வந்துடுங்கோ புன்னகை ...ஹா....ஹா..ஹா..............அன்னைக்கு சாதாரண டிரஸ் இல் போட்டோ எடுத்தோம், இப்போ 'பர்பசாக' ட்ரெஸ் செய்து கொண்டு எடுத்துப்போம் மது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 02, 2015 4:23 pm

ayyasamy ram wrote:'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1118364

நன்றி ராம் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
பொதுவாக நம் திரிகளையே பாருங்களேன்.எத்தனை பேர் படிகிறார்கள்? ......படிக்க அவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டவர்களுக்கு , பிடித்தது அல்லது இப்படி இருந்திருக்கலாம் என்று மனதில் பட்டதை, .........ஒரு வரி அல்லது ஒரு 'smiley ' போடக் கூட மனம் இல்லாமல் தானே வெளியே போகிறார்கள்?????????????...எனக்கு எப்பவுமே இந்த வருத்தம் உண்டு.........

நாம் என்ன சொல்ல முடியும் அவர்களை?.....................ஆனால், ஏதோ என்னால் முடிந்தது, நான் படித்ததும் பின்னுட்டம் போட்டுவிடுவேன், நல்லா இருந்தால் 'விருப்பம்' போடுவேன், நான் துவங்கும் திரிகளில் தவறாமல் ' தேங்க்ஸ்' பட்டன் அழுத்திடுவேன்.அவ்வளவுதான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக