புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"சலுகை"...by Krishnaamma :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 29, 2015 10:45 am

ஒரு மாறுதலுக்காக இந்த கதையை அதன் நாயகியே சொல்வது போல எழுதி இருக்கிறேன் புன்னகை

எங்கள்  ஊரில் மாலையானால் ஒரு குறிப்பிட்ட தெருவில் காய்கறிகளும் பூ பழங்களும் விற்கப்படும். நாங்களும் தினசரி தேவைகளுக்காக நல்ல தோட்டத்து காய்கறிகளை அவை'பச் பச்' என்று இருக்கும்போதே வாங்கி உபயோகிப்பது வழக்கம்.

அந்த மாதிரி கடைகளில் ஒரு கடை தான் சங்கரனுடையது. அவர் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் ஆத்தூரில் இருந்து தன் சொந்த தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் கொண்டு வருவார். கொஞ்சம் 'கெடுபிடி' யான ஆள், ஆனால் ரொம்ப நல்லவர். தன் காய்களின் மேல் ஒருவரையும் கைகளை வைக்க விடவே மாட்டார், தானே தான் எடுத்து போடுவார். "என் காய் எல்லாமே நல்லா தான் இருக்கும்"என்பது அவர் வாதம். மேலும், தானே முத்தல் காய்களை தனியாக பொறுக்கி வைத்துவிடுவார், வத்தல் போடவோ, குழம்பில் 'தான்' போடவோ நாங்கள் அதை கேட்டு வாங்குவோம்.

அவர் கொண்டு வரும் பிஞ்சு கத்தரிக்காய் ரொம்ப அருமையாக இருக்கும். "ஆத்தூர் கத்தரிக்காய், நெய் கத்தரிக்காய் " என்று கூவி , கூவி விற்பார். நிஜமாகவே  பச்சை கலரில் நீள  நீளமாய்   இருக்கும் கத்தரிக்காய்களை  துளி உப்பு  போட்டு  வதக்கி, அப்படியே சாதத்தில் போட்டு சாப்பிட்டுவிடலாம். அவ்வளவு ருசியாக இருக்கும். மேலும் அவர், இயற்கை உரம் போட்டு வளர்ப்பதால்  சுவை கூடுதலாக  இருப்பது போல எங்களுக்கு தோன்றும்.

வெண்டைக்காயும்  அப்படித்தான்; என்றாலும் தினமும் அவர் வரமாட்டார், குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே வருவார். அது காய்கறிகளின் வளர்ச்சியை பொறுத்து என்று நான் நினைத்துக் கொள்வேன் . அதனால் தினமும் மார்க்கெட் வரும்போது, அவர் குரல் கேட்கிறதா, அவர் வந்து விட்டாரா என்று பார்த்துவிட்டுத்தான் வேறு கடைகளை பார்ப்பது வழக்கம். மேலும் நான் அப்பாவுடன் மார்க்கெட் போகும் போதிலிருந்து, அவரிடம் வாங்குவதால், அவரை  'மாமா' என்று தான்  அழைப்பேன்.  

இன்றும் அவர் குரல் கேட்டதால், முதல் அந்த திசை நோக்கி நடந்தேன், என்ன ஆச்சர்யம் ஒரு சின்ன பெண் வெண்டைக்காய்களை   பொறுக்கிக் கொண்டிருந்தாள். 'அட, மாமாவும் மாறிவிட்டாரா ? இத்தனை வருடமாய் கடை பிடித்த கொள்கையை விட்டு விட்டாரா' என்று எண்ணிக்கொண்டே  கடையை நெருங்கினேன். அவரிடம் நான் வாய் திறந்து கேட்படற்குள், ஒரு போன் வரவே, சைகையால் 1 கிலோ வெண்டைக்காய் போடும்படி சொன்னேன்.

போன் பேசியபடியே  நகர்ந்து அடுத்தவருக்கு வழி விட்டதால், மாமாவிடம் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லாமல் போனது. சரி பிறகு ஒருநாள் கேட்டால் போச்சு என்று விட்டுவிட்டேன். ஒரு 10 நாளாகிவிட்டது மீண்டும்  இன்று தான் அவர் குரல் கேட்டது. நானும் எப்போதும் போல அவர் கடை நோக்கி நடந்தேன், இன்றும் அதே சிறுமி
வெண்டைக்காய்களை   பொறுக்கிக் கொண்டிருந்தாள். இன்று எப்படியும் கேட்டுவிடுவது, 'இவள் மட்டும் என்ன ஸ்பெஷல்' என்று , என்று நினைத்துக்கொண்டு கடையை நெருங்கினேன்.

இன்னும் அவள் வெண்டைக்காய்களை   பொறுக்கிக் கொண்டிருந்தாள், நான் மாமாவிடம்,

"என்ன மாமா, 10 நாளாய் ஆளைக்காணும்? நலம் தானே? " என்று விசாரித்தேன் முதலில்.

அவரும் " வயசு ஆகலையா, அதுதான்........கொஞ்சம் தள்ளலை மா" என்றார்.

"ஒ...அதுதான் இப்போவெல்லாம், காய் மீது கை வைக்க ஒத்துக்கரீங்களா " என்று சிரித்தவாறே கேட்டேன்.

அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார், அந்த சின்ன பெண், கொஞ்சம் பெருமையாய் ( கர்வமாய்? ) "நான் எடுத்தா இந்த மாமா எதுவும் சொல்ல மாட்டார்" என்றாள்.

எனக்கு என்னவோ போல ஆகிவிட்டது............அப்போதும் மாமா வாய் திறந்தார் இல்லை. ' இவளுக்கு மட்டும் என்ன இந்த சலுகை' என்று எனக்கு மனதில் வண்டு குடைந்தது.

அவள் போகும்வரை பொறுமை காத்த மாமா, " அந்த பொண்ணு சரியா முத்தல் எல்லாம் பொறுக்கி எடுத்துட்டு போய்டும் கண்ணு, அது தான் அமைதியாய் இருந்தேன், அதுக்கும் சந்தோசம் எனக்கும் வேலை மிச்சம் பாரு, நீ சொல்லு எவ்வவளவு  போடட்டும் ? " என்றாரே பார்க்கலாம்.

சிரித்தவாறே காய் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். "சலுகை" என்பது சில சமையம் இப்படியும் கொடுக்கப்படும் என்று எனக்கு புரிந்தது .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 29, 2015 2:10 pm

நல்ல கதை.....

சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....


M.Saranya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

"சலுகை"...by Krishnaamma :)  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 29, 2015 9:31 pm

M.Saranya wrote:நல்ல கதை.....

சலுகை சில சமயம் கொடுப்பவருக்கும் கிடைப்பவர்க்கும் சாதகமாக போவதுண்டு....

மேற்கோள் செய்த பதிவு: 1117735

நன்றி சரண்யா புன்னகை...................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 29, 2015 10:07 pm

நல்ல கதை.. தொடருங்கள் உங்கள் எழுத்துப் பயணத்தை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 29, 2015 10:56 pm

M.M.SENTHIL wrote:நல்ல கதை.. தொடருங்கள் உங்கள் எழுத்துப் பயணத்தை
மேற்கோள் செய்த பதிவு: 1117788

மிக்க நன்றி செந்தில் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jan 30, 2015 8:53 am

நல்ல கதை.. "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 30, 2015 12:31 pm

"சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 4:19 pm

நவீன் wrote:நல்ல கதை.. "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834

நன்றி நவீன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 31, 2015 4:19 pm

ayyasamy ram wrote:"சலுகை"...by Krishnaamma :)  3838410834 "சலுகை"...by Krishnaamma :)  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1117828

நன்றி ராம் அண்ணா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செல்லா
செல்லா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 24
இணைந்தது : 10/09/2014

Postசெல்லா Sat Jan 31, 2015 8:55 pm

நன்றாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி



செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக