ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

5 posters

Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by krishnaamma Mon Feb 02, 2015 1:10 am

சொந்தக்காரங்கள கண்டாலே வெறுப்பா இருக்கு; பொறாமைப்பட்டு சாகுறாங்க... நான் கஷ்டப்பட்ட போது எவனாவது உதவி செய்ய முன் வந்தானுங்களா?' என்று வெறுப்பை கக்கி, நெருப்பை உமிழ்கிறவர்களை நிறைய பார்க்கிறோம்.

உறவு, தாமாக வந்த பந்தம்; நட்பு, நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பந்தம்.

நம் மனச் சவுகரியத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளும் போது, மன அலைவரிசைகளை பார்க்கிறோம். 'நாம் மத்திய அலை; அவர்கள் சிற்றலையா? அப்படியானால் வேண்டாம்...' என முடிவு செய்து, ரயில் சந்திப்பில், பெட்டிகளைக் கழற்றி விடுவது போல கழற்றி விட்டு, நம் பயணத்தை தொடர்கிறோம்.

ஆனால், உறவினர் கதை அப்படி அல்ல; 'கார்டு' பெட்டி போல, காலமெல்லாம் இழுத்தபடி பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், இந்த, 'கார்டு' பெட்டியையும் சுமை என்று வர்ணித்து, கழற்றி விடப் பார்க்கிறவர்களை பற்றி தான் நமக்கு அக்கறை.

உறவினர் விஷயத்தில், இத்தனாம் பெரிய வாரமலர் இதழில், பல லட்சம் பேர் படிக்கிற பத்திரிகையில், கீதையின் மீது கை வைத்து, நீதிமன்றத்தில் சொல்வது போல் இரண்டு வாக்கியங்களை சொல்லட்டுமா...
ஆம்... நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையை தவிர வேறு இல்லை.

அதாவது, உறவினருள் எவரோடும் எனக்கு பகை என்பதே கிடையாது; அனைவரோடும் கிளை தான். இந்த விஷயம் சாத்தியப்படுவதற்கான சூத்திரங்களை தான் உங்கள் முன் வைக்கிறேன்...

உறவினர் வீட்டு நல்லது, கெட்டதுகளில், சம்பிரதாயங்கள் பார்க்காமல், தவறாமல் கலந்து கொள்வதுடன், மிகுந்த ஈடுபாடு காட்டி, பொறுப்புகளை எடுத்துக் தோளில் போட்டு செய்ய வேண்டும். கணக்குப் பார்த்துக் கலந்து கொண்டால், கீறல் விழ ஆரம்பித்து, அது சீறலில் முடிந்து விடும்.

உறவுக் கூட்டம் என்றால், அது, எதிர்பார்க்கிற கூட்டம் தான். உடலால் மெனக்கெடல், வாய் வார்த்தைகளால் ஆறுதல் - தேறுதல், செல்வாக்கைப் பயன்படுத்தி உதவுதல், பொருளாதாரத்தில் உதவுதல் என, நான்கு வகை உதவிகளில், முடிந்தவற்றை நமக்கு பாதிப்பு இன்றி எதை செய்ய இயலும் என பார்க்க வேண்டும்.
உறவினர்கள் பலரும் ஆழ்ந்த சம்பிராதாயங்களில் ஊறிப் போனவர்கள் என்பதால், இந்த விஷயத்தில் அவர்கள் எதிர்பார்க்குமளவுக்கு இறங்கிப் போக வேண்டும்.

விலகிப் போன சொந்தங்களை இணைக்க, நல்ல சந்தர்ப்பங்கள் வாய்த்தால், நழுவ விடக் கூடாது. உறவு புதுப்பிக்கப்படும் போது, 'அடடா... இதல்லவா வாராது வந்த மாமணி...' என மகிழும்படி இருக்கும். 'இவ்வளவு நாள் ஏன் விட்டு வைத்திருந்தோம்?' என்றும் தோன்றும்.

வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் சரிவரச் செய்தால், உறவினர்கள், நண்பர்களாக ஆகிவிடுவர்.
உறவுக்காய்களை நகர்த்துவதில், நாம், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனைப் போல் ஆகாவிட்டாலும், மாஸ்டராகவாவது ஆகலாம்.

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by அகிலன் Mon Feb 02, 2015 3:41 am

உறவினர்கள் விடயத்தில் நான் கடைப்பிடிக்கும் இரண்டு ஒழுங்கு முறைகளை இங்கு பதிகிறேன்.

-- உறவினர்கள் எவருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அவர்கள் என்னிடம் கேட்டாலும் சரி ,
கேட்காமல் விட்டாலும் சரி என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரங்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் அவர்களிடம் எதிபார்ப்பது என்னுடன் எப்பொழுதும் நல்ல உறவினராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

காரணம் ஒன்றை கொடுத்துத்தான் இன்னொன்றை பெற முடியும்
நான் உதவியை கொடுத்து உறவை பெற்றுக் கொள்ளுகிறேன்.

-- அடுத்தது உறவினர்களுடன் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அது உறவினர்களை விலக வைத்துவிடும் அல்லது பகைவர்கள் ஆக்கிவிடும்.

இந்த இரண்டையும் நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், உங்களுக்கும் நிறைய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள்.


நேர்மையே பலம்
உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by krishnaamma Mon Feb 02, 2015 10:59 am

அகிலன் wrote:உறவினர்கள் விடயத்தில் நான் கடைப்பிடிக்கும் இரண்டு ஒழுங்கு முறைகளை இங்கு பதிகிறேன்.

-- உறவினர்கள் எவருக்கும் என்ன உதவி தேவைப்பட்டாலும் அவர்கள் என்னிடம் கேட்டாலும் சரி ,
கேட்காமல் விட்டாலும் சரி என்னால் முடிந்த உதவியை செய்வேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பிரதி உபகாரங்களும் எதிர்பார்ப்பதில்லை. நான் அவர்களிடம் எதிபார்ப்பது என்னுடன் எப்பொழுதும் நல்ல உறவினராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

காரணம் ஒன்றை கொடுத்துத்தான் இன்னொன்றை பெற முடியும்
நான் உதவியை கொடுத்து உறவை பெற்றுக் கொள்ளுகிறேன்.

-- அடுத்தது உறவினர்களுடன் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் அது உறவினர்களை விலக வைத்துவிடும் அல்லது பகைவர்கள் ஆக்கிவிடும்.

இந்த இரண்டையும் நீங்களும் கடைப்பிடித்துப் பாருங்கள், உங்களுக்கும் நிறைய நல்ல உறவினர்கள் கிடைப்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1118308

இது ரொம்ப சரி, இதில் எனக்கு கசப்பான அனுபவங்கள் உண்டுசோகம்சோகம்சோகம் ...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by ayyasamy ram Mon Feb 02, 2015 12:52 pm

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by மதுமிதா Mon Feb 02, 2015 6:43 pm

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 103459460
வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும். wrote:

ஆனால் அவர்களும் நம்மை அதே ஆர்வத்துடன் அழைக்க வேண்டுமே ...!


உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Mஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! Aஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! Dஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! Hஉறவுக் காய்களை நகர்த்தும் கலை! U



உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by krishnaamma Sun May 10, 2015 6:52 pm

மதுமிதா wrote:உறவுக் காய்களை நகர்த்தும் கலை! 103459460
வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் அழைப்புக் கொடுக்கப் போகாமல், ஆண்டிற்கு ஒருமுறையாவது அவர்களை சாக்கு போக்கு வைத்து, சந்திக்க வேண்டும். wrote:

ஆனால் அவர்களும் நம்மை அதே ஆர்வத்துடன் அழைக்க வேண்டுமே ...!
மேற்கோள் செய்த பதிவு: 1118453

ம்..........ஹா....ஹா....ஹா... அதச்சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 7:00 pm

நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உறவுக் காய்களை நகர்த்தும் கலை! Empty Re: உறவுக் காய்களை நகர்த்தும் கலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum