புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூஜ்ஜிய வேட்டை ! by கிருஷ்ணாம்மா!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரமேஷ் க்கு இன்றுடன் 27 வயதாகிறது, அவனுடைய அப்பாவும் அம்மாவும் அவனுக்கு 1 வருடமாக பெண் பர்த்துவருகிரர்கள்..ஒன்றும் திருப்திகரமாக இல்லை. ஒருவருக்கு பிடித்தால் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பது போல தட்டிக்கொண்டே போயிற்று.
காலில் விழுந்து வணங்கிய அவனை, "இந்த வருடமாவது கல்யாணம் ஆகணும், வரும் தீபாவளி தலை தீபாவளியாக இருக்கணும்" என்று ஆசிர்வதித்தார்கள் .
அவனும் சிரித்துக்கொண்டே, "கல்யாணம் ஆகிறதோ இல்லையோ, நான் வெளிநாடு போகணும் 1வருடத்திற்கு" என்றான்.
அவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, " என்னடா, இப்படி திடீரென்று?...உள்ளூர் வேலை என்று தானே சொன்னாய்? " என்றார்கள்.
" ஆமாம் அம்ம்மா, ஆனால் ஆபீஸ் இல் அனுப்புகிறார்கள்.போகத்தான் வேண்டும்.அங்கேயே தங்கி விட மாட்டேன், நீ பயப்படாதே" என்றான்.
உமா சுரேஷ் தம்பதிகளுக்கு, ரமேஷ் ஒரே மகன், இவர்கள் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தான். ஏதோ முடிந்தவரை மகனை படிக்க வைத்தார்கள், அதற்கு ஏற்ற வேலையும் கிடைத்து விட்டது. இருப்பதைக்கொண்டு சந்தோஷமாய் வாழும் குடும்பம் அவர்களுடையது. மகனை பிரிய கஷ்டமாக இருந்தது அவர்களுக்கு, என்றாலும் உத்தியோக நிமித்தம் போகவேண்டும் என்றதால் தடை சொல்ல முடியவில்லை.
அவன் கிளம்பிப்போய் 2 மாதங்கள் கூட ஆகி இருக்காது, அவன் ஒருமுறை hangout இல் பேசும்போது, தான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொன்னான்....இவர்களுக்கு தூக்கி வாரி போட்டது............."என்னடா, யார்? என்ன? விவரம் சொல்லு, வெள்ளைக்காரியா?" என்றல்லாம் பதறினாள் அம்மா.
"இல்லை மா, face book இல் பார்த்து பழக்கம், நம் நாட்டில் தான் இருக்கிறாள் " என்றான்.
பெற்றவர்களுக்கு புரியவில்லை , இப்படியும் காதலிக்க, மணம் முடிக்க முடியுமா என்று. ஆனால் அவன் உறுதியாக சொன்னான், " அவளைத்தான் மணப்பெண்" என்று. மேலும் சொன்னான், தான் இன்னும் 1 மாதத்தில் இந்தியா வர இருப்பதாகவும் அப்போது நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னான். அந்த பெண் உஷாவின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தான்.
பெண் பார்க்க ரொம்ப நாகரீகமாக தெரிந்தாள்.......இவர்களை கவலை ஆட்கொண்டது , இவள் இந்த வீட்டுக்கு சரிப்படுவாளா ? என்று. என்றாலும், ரமேஷ் நேரில் வரட்டும் பேசிக்கலாம் என்று இருப்பதை தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு.
ஆச்சு ரமேஷ் வந்தாச்சு. இவர்களும் என்னடா இது என்று 'பிலு பிலு ' வேண்டு பிடித்துக்கொண்டர்கள். ...ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள் அவனை.............."ஒரு வருடம் என்றாய் , 6 மாதம் கூட ஆகலை வந்து விட்டாய், ஆனால் மறுபடி போகணும் என்கிறாய் .........என்னடா இது ஒன்றும் புரியலையே? " என்றால் அம்மா.
"இல்லேம்மா இது ஆபீஸ் விஷயம்...............சொன்னால் உனக்கு புரியாது..............இன்று உஷா வீட்டுக்கு போகிறோம்; பேசி நிச்சயம் பண்ணறோம்.................." என்றான். இவர்களும் போய்த்தான் பார்ப்போமே என்று ஒப்புக்கொண்டார்கள்.
இவர்களுக்கும் உஷாவை பிடித்திருந்தது ......என்றாலும் கொஞ்சம் நகர்புறத்தில் வளர்ந்த பெண் போல தோன்றியது. அவளின் அப்பா அம்மாவும் நல்லபடி பேசினார்கள். அவர்களுக்கும் ரமேஷை பிடித்துவிட்டது. எனவே, மேற்கொண்டு ஆகவேண்டியதை பேசலாம் என்றார்கள்.
இவர்களும் முதலில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம், பிறகு ரமேஷ் வந்ததும் கல்யாணம் வைக்கலாம் என்றார்கள். அதற்கு அவர்கள், " நீங்கள் சொல்வது சரி, சத்திரம் கிடப்பது கடினம், எப்படியும் ஒரு 6 மாதம் அல்லது 8 மாதம் கழித்து என்றால், நல்ல சத்திரமாய் பார்க்கலாம், எனக்கு இருப்பதோ ஒரே பெண், நல்லா கல்யாணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் " என்றார் பெண்ணின் அப்பா தனசேகரன்.
மேலும், " இவள் இப்போது டிகிரி கடைசி வருடம் படிக்கிறாள், அதுவும் முடிந்து கல்யாணம் என்றால், ரொம்ப நல்லது " என்றார். அதற்குள் ரமேஷ் குறுக்கிட்டு " எல்லாம் சரி , ஆனால் நிச்சயதர்த்தத்க்கு பதில், register marriage செய்து கொண்டால்....எனக்கு அந்த பேப்பர்களை கொண்டு போய் இவளுக்கான விசாவை ரெடி செய்ய சௌகர்யமாய் இருக்கும் " என்றான்.
பெண்ணை பெற்றவர்களுக்கு வாயெல்லாம் பல். " ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை.......அப்படி இனி கூப்பிடலாம் தானே? " என்றார்கள் கோரஸ்ஸாக .
உமாவிற்கும் சுரேஷுக்கும் ஒன்றும் புரியவில்லை , எதற்கு இத்தனை அவசரம்? எதற்கு விசா? அப்போ ரமேஷ் அங்கேயே தங்கிடப் போறனா ? இப்படி பல கேள்விகள், என்றாலும் அங்கு எதுவுமே கேட்க முடியவில்லை அவர்களால்.
" இவனும் , ஆமாம் மாமா, நானும் உஷாவும் நெட் இல் பேசி முடிவு செய்தது தானே இது"...என்று குண்டை தூக்கி போட்டான். பெற்றவர்களுக்கு பேச வாய் எழவே இல்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டு முகத்தை சிரிப்பது போல வைத்துக்கொண்டார்கள்.
மேலும் அவர்கள் பெசியவன்னமே இருந்தனர், இவர்கள் இருவரின் நினைப்பே அவர்களுக்கு இல்லை போலிருந்தது. மறுநாளே register marriage என்றனர். ஒரு போட்டோ இல்லை, ஒரு உறவு இல்லை இவர்கள் 3 பேர் அவர்கள் 3 பேர் . பக்கத்துக்கு ஒருவராக நண்பர்கள் இருவர், அவ்வளவுதான். எளிமையாக கல்யாணம் முடிந்தது. பாவம் , உமாவும் சுரேஷும் மௌனியாக நடப்பவைகளுக்கு சாக்ஷி கோபாலனாக இருந்தார்கள்.
மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்கள் . இவர்களுடன் நின்று பேசக் கூட நேரம் இல்லை ரமேஷுக்கு. ஏதோ மாறி மாறி போன் இல் பேசிய வண்ணம் இருந்தான். உஷாவுடன் வெளியே போய் வந்தான். சரியாக சாப்பிடவில்லை, வெளியே சாப்பிட்டான் அவளுடன். இவர்களிடம் பேசுவதையே அவன் தவிர்ப்பதாகவே பட்டது. எனவே இவர்களும் மௌனம் காத்தார்கள்.
விஷயம் கைமீறிப் போய்விட்டது , இவன் இப்படி மாறுவான் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்றாலும் என்ன செய்வது?........நாம் வாங்கி வந்த வரம் என்று மனம் நொந்தார்கள். இந்த அமர்க்களம் எல்லாம் ஒரு பத்தே நாள் தான், ரமேஷ் கிளம்பிவிட்டான். உஷா பரீக்ஷை முடிந்ததும், திருமணத்துக்கு நாள் குறித்து இருப்பதாக தனசேகரன் சொன்னார்.
தானும் அப்போது வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினான் ரமேஷ். கிளம்பும் முன் பெற்றவர்களை வணகியவன், " அம்மா அப்பா எதற்கும் கலங்காதிர்கள், நாம் யாருக்கும் எந்த கேடுதலும் செய்யலை நமக்கு நல்லதுதான் நடக்கும் என்று நம்புங்கள்; நான் எப்போதும் உங்கள் மகன் தான், உங்கள் மகனை நம்புங்கள்..... இதற்கு மேலே என்னால் ஏதும் சொல்ல முடியாது " என்று சொல்லி இருவரின் கைகளை படித்து அழுத்தி விட்டு சென்றான்.
இவர்களுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதலை த்தந்தாலும் சுத்தமாய் ஏதும் புரியலை. இவன் என் இப்படி சொன்னான்? என்று குழம்பினார்கள். ஒருமாதம் ஆகியும் இவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டாலும் அவன் சொல்லிப்போனதின் அர்த்தம் விளங்கலை இவர்களுக்கு.
அப்போது தான் ஒரு அசுப செய்தியுடன் ஓடிவந்தார் தனசேகரன். "சம்பந்தி, நாம் மோசம் போய்விட்டோம்" என்று அலறினார். மாப்பிள்ளை ரமேஷ் ஒரு கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டதாக எனக்கு அவர்கள் ஆபீஸ் லிருந்து போன் வந்தது. " என்றார். அதைக்கேட்டதும், சுரேஷுக்கு தலை சுற்றவே அப்படியே அமர்ந்து விட்டார். உமாவும் "ஐயோ! " என்று அலறினாள் .
தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட சுரேஷ், " தகவல் எங்களுக்கு வராமல் உங்களுக்கு எப்படி வந்தது? " என்றார்.....'சரியாக விசாரித்தீர்களா? " என்றார். இதற்குள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் வந்துவிட்டனர். அதற்கு தனசேகரன், " என்ன சார் , நீங்க கேட்கறீங்க? ... நான் எப்படி சரியாக விசாரிக்காமல் சொல்வேன்?.......மேலும் ஒரு கணவன் இறந்தால் முதலில் மனைவிக்குத்தானே விவரம் சொல்வார்கள்?............அதனால் தான் முதலில் எங்களுக்கு அவர்கள் ஆபீஸ் லிருந்து தகவல் வந்தது" என்றாரே பார்க்கலாம்.
சுற்றி இருந்தவர்கள் இது என்ன புதுக்கதை, இந்த பையனுக்கு எப்போ கல்யாணம் ஆனது என்று , வம்பு கேட்பதற்கு ஆர்வமானார்கள். நடப்பதை கவனித்தார்கள். சிலர் தனசேகரனிடமும், சிலர் சுரேஷிடமும் என்ன ஆச்சு என்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தார்கள். தனசேகர் , அழுகையிநூடே விலாவரியாக எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
சுரேஷால் பேசமுடியவில்லை, நடப்பது நிஜமா என்று கூட உணரமுடியலை. ரமேஷுக்கு என்ன ஆச்சு என்று விவரமாய் தெரியலை. தானே அவனுடைய ஆபீஸ் இல் விசாரிப்பது என்று முடிவு செய்து போன் செய்தார். அதைப்பார்த்த தனசேகர், " என்ன சார், நம்பர் தப்பா போடறீங்க , மாப்பிளையோட கம்பெனி நம்பர் ஐ போடுங்க" என்றார்.
அதைக்கேட்டதும் துணுக்குற்றார் சுரேஷ். ' என்ன இந்த எண்ணே அவனுடையது இல்லையா? நேற்று கூட பேசினோமே'... ' இதில் ஏதோ குழப்பம் இருக்கு ....' என்று எண்ணியவர் , மகன் சொல்லிப்போனதையும் அவன் வேலை செய்த இடத்தையும் நினைக்கையில் அவருக்கு ஏதோ புரிவது போல இருந்தது. மனைவிக்கும் கண்ஜாடை காட்டி பேசாமல் இருக்குமாறு சொன்னார்.
இது எதுவும் கவனிக்காத தனசேகர் , " பாருங்க சார், மகனின் போன் எண் கூட சரியாக குறித்துக்கொள்ளவில்லை...........அதே என்னைப் பாருங்கள் , அவர் எனக்கு மாப்பிளை என்று ஆனதுமே, அவர் இருக்கும் இடம், ஆபீஸ் அட்ரஸ், போன் எண்கள், அங்குள்ள வீடு வாசல் விவரம், சொத்துபத்து விவரம் என்று எல்லாமே கேட்டுக்கொண்டேன். என்ன இருந்தாலும் பெண்ணை கொடுக்கும் போது விசாரிக்கணுமே "............... என்றார்.
உமா சுரேஷ் தம்பதிகள் ரொம்ப குழம்பினார்கள் அவனுக்கு சொத்துபத்து ஏது, அதுவும் அமெரிக்காவில்?....என்ன சொல்கிறார் இவர்? என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் மௌனம் காத்தார்கள்.
" அதே போல இப்போ அவர் இறந்துட்டார் என்றதுமே, என் பெண்ணுக்கு அவர் கம்பெனி இல் வேலை வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன், settlement எல்லாம் அவர பேருக்கு வந்துடணும் என்றும் சொலிட்டேன்.......சட்டம் அப்படித்தானே இருக்கு " என்றார் பெருமையாக.
எந்த நேரத்தில் என்ன பேசுகிறார் இவர் என்று எல்லோரும் முகம் சுளித்தார்கள். அதே நேரம் " கண்டிப்பாக settlement உஷாக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் சேர்த்துத்தான்" என்கிற குரல் வந்தது. எல்லோரும் குரல் வந்த திசையை நோக்கி பார்த்தார்கள் அங்கு புன்னகையுடன் ரமேஷ் நின்று இருந்தான்.
" அப்பா ரமேஷ், உனக்கு ஒன்றும் இல்லையே ?" என்றபடி அவனிடம் ஓடினார்கள் உமாவும் சுரேஷும். அவனுடன் வந்த போலீஸ் தனசேகரை கைது செய்தது. அங்கிருந்த ஜீப்பில் உஷாவும் அவள் அம்மாவும் இருந்தார்கள். யாருக்கும் எதுவும் புரியலை. தாங்கள் வசமாய் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்ததால் தனசேகர் தலை குனிந்த வண்ணம் இருந்தார்.
" என்னடா இதெல்லாம்?" என்றார் சுரேஷ். " கொஞ்சம் இருப்பா, இதோ வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இவர்கள் பத்திரம், ஸ்டேஷன் கொண்டு போங்கள், வீடு வாசல் எல்லாம் நம் control க்கு கொண்டு வாருங்கள்.
இவர்கள் யாரிடமும் பேச அனுமதிக்க வேண்டாம். நான் அடுத்த ஜீப்பில் தொடர்ந்து வருகிறேன்" என்று மடமடவென சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு அப்பா அம்மா பக்கம் திரும்பினான்.
அதுவரை மௌனமாய் இருந்த அம்மாவும்...." சீக்கிரம் சொல்லுடா........அந்தப்பாவி என்ன சொன்னான் தெரியுமா? " என்று கேவினாள்.
ரமேஷ் சொல்லத் துவங்கினான். " கொஞ்ச காலமாகவே எங்களுக்கு ஒரு கம்ப்ளயன்ட் வந்து கொண்டிருந்தது. அதாவது, கல்யாணம் செய்து கொண்டு, ஆனால் குடும்பம் நடத்தாமலே அந்த பையனை தீர்த்து கட்டிவிட்டு, சட்டப்படி அவனுடைய சொத்துகளை ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக. அவர்கள் இப்படி கொள்ளை அடித்துவிட்டு, வேறு பேரில் வேறு ஊரில் சென்று தங்கி, மீண்டும் அடுத்த ஆளை பிடிக்கும் வேலையை ஆரம்பிப்பார்கள்."
"இதற்கு face book ஐ பயன்படுத்துகிறார்கள். நல்ல பணக்கார பையன், வெளிநாட்டில் இருக்கும் பையன், பெரும்பாலும் ஒரேமகன், கொஞ்சம் தெற்கே இருக்கும் அப்பா அம்மா , என்பது போலவும், ரொம்பவும் பின்புலம் இல்லாத ஆட்களும் இவர்களுக்கு குறி. சும்மாவே படிப்பு நடுவில் தடை பட்டு விட்டது, இப்போது இங்குள்ள காலேஜில் கடைசி வருடம் படிக்கிறாள், இவள் எங்களுக்கு ஒரே பெண் அதனால் ஒரு 6 மாதம் அல்லது 8 மாதம் கழித்து கல்யாணம் வைத்துக்கொள்ளலாம், இப்போ register marriage பண்ணலாம் என்று சொல்லி, மணம் முடிப்பார்கள். ஆனால் ஒரு போட்டோ கூட எடுக்க விடமாட்டார்கள். பையனின் மொத்த விவரங்களும் கேட்டு வாங்குவார்கள். அதனால் தான் நான் ஒரு MNC இல் வேலை செய்கிறேன் என்று அவர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாட்டை அங்கு செய்யவே அமெரிக்கா போனேன் அப்பா. " என்றான்.
மேலும் தொடர்ந்து." இவர்களை பிடிக்க நாங்கள் வலை விரித்தோம். இவர்கள் தான் என்று நாங்கள் மோப்பம் பிடித்ததும், தான் நான் மீண்டும் இங்கு வந்து கல்யாண நாடகம் ஆடினேன் . அன்று என் நண்பனாக வந்தது என் officer பா".
"நான் பல வருடங்களாக அமெரிக்காவில் இருப்பதாகவும், அங்கு எனக்கு வீடுவாசல் இருப்பதாகவும் அவளையும் அங்கே அழைத்துப் போவதாகவும் சொன்னேன். இவர்கள் என்னை அங்கேய வைத்து கொல்ல செய்த ஏற்பாட்டை முறியடித்து அவனையும் கைது செய்துவிட்டோம். நான் நேற்றே இந்தியா வந்துவிட்டேன் மா. பிறகு அங்கிருந்து நான் இறந்து விட்டதாக செய்தியும் சொல்லவைத்தோம். தனசேகர் இங்கு வந்ததும் அவங்க வீட்டுக்கு நாங்க போய் உஷா, அவ அம்மா அவர்களின் 2 அடியாட்கள் எல்லோரையும் கைது செய்துகொண்டு, உங்களுக்கு உண்மையை சொல்ல இங்கு வந்தோம். பிறகு நடந்து தான் உங்களுக்கே தெரியுமே " என்று கூறி சிரித்தான் 'சைபர் கிரைம் ஆபீசர் ரமேஷ்.
"ஒ.......ஊருக்கு போவதற்கு முன் நீ சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் இப்போ விளங்குகிறது" என்றார் சுரேஷ். "மேலும் தனசேகர் உன் ஆபீஸ் எண் தவறு என்றதுமே எனக்கு something wrong என்று பட்டுவிட்டது, பிறகு நான் பயப்படலை" என்றார்.
சுற்றி நின்ற எல்லோருக்கும் மனம் நிம்மதி அடைந்தது, அவரவர் கலைந்து சென்றனர். ரமேஷும் "ஸ்டேஷன் வரை போய்வருகிறேன் அம்மா, நல்லா சமைத்துவை, உன் சாப்பாட்டை சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு ? " என்றான். உமாவும், இன்னும் இந்த face bookkala எத்தனை குடும்பம் சீரழியப் போகிறதோ என்று சொல்லிக்கொண்டே , மகனுக்காக சமைக்க மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றாள்.
கிருஷ்ணாம்மா
காலில் விழுந்து வணங்கிய அவனை, "இந்த வருடமாவது கல்யாணம் ஆகணும், வரும் தீபாவளி தலை தீபாவளியாக இருக்கணும்" என்று ஆசிர்வதித்தார்கள் .
அவனும் சிரித்துக்கொண்டே, "கல்யாணம் ஆகிறதோ இல்லையோ, நான் வெளிநாடு போகணும் 1வருடத்திற்கு" என்றான்.
அவர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, " என்னடா, இப்படி திடீரென்று?...உள்ளூர் வேலை என்று தானே சொன்னாய்? " என்றார்கள்.
" ஆமாம் அம்ம்மா, ஆனால் ஆபீஸ் இல் அனுப்புகிறார்கள்.போகத்தான் வேண்டும்.அங்கேயே தங்கி விட மாட்டேன், நீ பயப்படாதே" என்றான்.
உமா சுரேஷ் தம்பதிகளுக்கு, ரமேஷ் ஒரே மகன், இவர்கள் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தான். ஏதோ முடிந்தவரை மகனை படிக்க வைத்தார்கள், அதற்கு ஏற்ற வேலையும் கிடைத்து விட்டது. இருப்பதைக்கொண்டு சந்தோஷமாய் வாழும் குடும்பம் அவர்களுடையது. மகனை பிரிய கஷ்டமாக இருந்தது அவர்களுக்கு, என்றாலும் உத்தியோக நிமித்தம் போகவேண்டும் என்றதால் தடை சொல்ல முடியவில்லை.
அவன் கிளம்பிப்போய் 2 மாதங்கள் கூட ஆகி இருக்காது, அவன் ஒருமுறை hangout இல் பேசும்போது, தான் ஒரு பெண்ணை விரும்புவதாக சொன்னான்....இவர்களுக்கு தூக்கி வாரி போட்டது............."என்னடா, யார்? என்ன? விவரம் சொல்லு, வெள்ளைக்காரியா?" என்றல்லாம் பதறினாள் அம்மா.
"இல்லை மா, face book இல் பார்த்து பழக்கம், நம் நாட்டில் தான் இருக்கிறாள் " என்றான்.
பெற்றவர்களுக்கு புரியவில்லை , இப்படியும் காதலிக்க, மணம் முடிக்க முடியுமா என்று. ஆனால் அவன் உறுதியாக சொன்னான், " அவளைத்தான் மணப்பெண்" என்று. மேலும் சொன்னான், தான் இன்னும் 1 மாதத்தில் இந்தியா வர இருப்பதாகவும் அப்போது நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னான். அந்த பெண் உஷாவின் புகைப்படத்தையும் அனுப்பி வைத்தான்.
பெண் பார்க்க ரொம்ப நாகரீகமாக தெரிந்தாள்.......இவர்களை கவலை ஆட்கொண்டது , இவள் இந்த வீட்டுக்கு சரிப்படுவாளா ? என்று. என்றாலும், ரமேஷ் நேரில் வரட்டும் பேசிக்கலாம் என்று இருப்பதை தவிர வேறு வழி இல்லை அவர்களுக்கு.
ஆச்சு ரமேஷ் வந்தாச்சு. இவர்களும் என்னடா இது என்று 'பிலு பிலு ' வேண்டு பிடித்துக்கொண்டர்கள். ...ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள் அவனை.............."ஒரு வருடம் என்றாய் , 6 மாதம் கூட ஆகலை வந்து விட்டாய், ஆனால் மறுபடி போகணும் என்கிறாய் .........என்னடா இது ஒன்றும் புரியலையே? " என்றால் அம்மா.
"இல்லேம்மா இது ஆபீஸ் விஷயம்...............சொன்னால் உனக்கு புரியாது..............இன்று உஷா வீட்டுக்கு போகிறோம்; பேசி நிச்சயம் பண்ணறோம்.................." என்றான். இவர்களும் போய்த்தான் பார்ப்போமே என்று ஒப்புக்கொண்டார்கள்.
இவர்களுக்கும் உஷாவை பிடித்திருந்தது ......என்றாலும் கொஞ்சம் நகர்புறத்தில் வளர்ந்த பெண் போல தோன்றியது. அவளின் அப்பா அம்மாவும் நல்லபடி பேசினார்கள். அவர்களுக்கும் ரமேஷை பிடித்துவிட்டது. எனவே, மேற்கொண்டு ஆகவேண்டியதை பேசலாம் என்றார்கள்.
இவர்களும் முதலில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்ளலாம், பிறகு ரமேஷ் வந்ததும் கல்யாணம் வைக்கலாம் என்றார்கள். அதற்கு அவர்கள், " நீங்கள் சொல்வது சரி, சத்திரம் கிடப்பது கடினம், எப்படியும் ஒரு 6 மாதம் அல்லது 8 மாதம் கழித்து என்றால், நல்ல சத்திரமாய் பார்க்கலாம், எனக்கு இருப்பதோ ஒரே பெண், நல்லா கல்யாணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன் " என்றார் பெண்ணின் அப்பா தனசேகரன்.
மேலும், " இவள் இப்போது டிகிரி கடைசி வருடம் படிக்கிறாள், அதுவும் முடிந்து கல்யாணம் என்றால், ரொம்ப நல்லது " என்றார். அதற்குள் ரமேஷ் குறுக்கிட்டு " எல்லாம் சரி , ஆனால் நிச்சயதர்த்தத்க்கு பதில், register marriage செய்து கொண்டால்....எனக்கு அந்த பேப்பர்களை கொண்டு போய் இவளுக்கான விசாவை ரெடி செய்ய சௌகர்யமாய் இருக்கும் " என்றான்.
பெண்ணை பெற்றவர்களுக்கு வாயெல்லாம் பல். " ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளை.......அப்படி இனி கூப்பிடலாம் தானே? " என்றார்கள் கோரஸ்ஸாக .
உமாவிற்கும் சுரேஷுக்கும் ஒன்றும் புரியவில்லை , எதற்கு இத்தனை அவசரம்? எதற்கு விசா? அப்போ ரமேஷ் அங்கேயே தங்கிடப் போறனா ? இப்படி பல கேள்விகள், என்றாலும் அங்கு எதுவுமே கேட்க முடியவில்லை அவர்களால்.
" இவனும் , ஆமாம் மாமா, நானும் உஷாவும் நெட் இல் பேசி முடிவு செய்தது தானே இது"...என்று குண்டை தூக்கி போட்டான். பெற்றவர்களுக்கு பேச வாய் எழவே இல்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டு முகத்தை சிரிப்பது போல வைத்துக்கொண்டார்கள்.
மேலும் அவர்கள் பெசியவன்னமே இருந்தனர், இவர்கள் இருவரின் நினைப்பே அவர்களுக்கு இல்லை போலிருந்தது. மறுநாளே register marriage என்றனர். ஒரு போட்டோ இல்லை, ஒரு உறவு இல்லை இவர்கள் 3 பேர் அவர்கள் 3 பேர் . பக்கத்துக்கு ஒருவராக நண்பர்கள் இருவர், அவ்வளவுதான். எளிமையாக கல்யாணம் முடிந்தது. பாவம் , உமாவும் சுரேஷும் மௌனியாக நடப்பவைகளுக்கு சாக்ஷி கோபாலனாக இருந்தார்கள்.
மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்கள் . இவர்களுடன் நின்று பேசக் கூட நேரம் இல்லை ரமேஷுக்கு. ஏதோ மாறி மாறி போன் இல் பேசிய வண்ணம் இருந்தான். உஷாவுடன் வெளியே போய் வந்தான். சரியாக சாப்பிடவில்லை, வெளியே சாப்பிட்டான் அவளுடன். இவர்களிடம் பேசுவதையே அவன் தவிர்ப்பதாகவே பட்டது. எனவே இவர்களும் மௌனம் காத்தார்கள்.
விஷயம் கைமீறிப் போய்விட்டது , இவன் இப்படி மாறுவான் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்றாலும் என்ன செய்வது?........நாம் வாங்கி வந்த வரம் என்று மனம் நொந்தார்கள். இந்த அமர்க்களம் எல்லாம் ஒரு பத்தே நாள் தான், ரமேஷ் கிளம்பிவிட்டான். உஷா பரீக்ஷை முடிந்ததும், திருமணத்துக்கு நாள் குறித்து இருப்பதாக தனசேகரன் சொன்னார்.
தானும் அப்போது வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினான் ரமேஷ். கிளம்பும் முன் பெற்றவர்களை வணகியவன், " அம்மா அப்பா எதற்கும் கலங்காதிர்கள், நாம் யாருக்கும் எந்த கேடுதலும் செய்யலை நமக்கு நல்லதுதான் நடக்கும் என்று நம்புங்கள்; நான் எப்போதும் உங்கள் மகன் தான், உங்கள் மகனை நம்புங்கள்..... இதற்கு மேலே என்னால் ஏதும் சொல்ல முடியாது " என்று சொல்லி இருவரின் கைகளை படித்து அழுத்தி விட்டு சென்றான்.
இவர்களுக்கு அந்த வார்த்தைகள் ஆறுதலை த்தந்தாலும் சுத்தமாய் ஏதும் புரியலை. இவன் என் இப்படி சொன்னான்? என்று குழம்பினார்கள். ஒருமாதம் ஆகியும் இவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டாலும் அவன் சொல்லிப்போனதின் அர்த்தம் விளங்கலை இவர்களுக்கு.
அப்போது தான் ஒரு அசுப செய்தியுடன் ஓடிவந்தார் தனசேகரன். "சம்பந்தி, நாம் மோசம் போய்விட்டோம்" என்று அலறினார். மாப்பிள்ளை ரமேஷ் ஒரு கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டதாக எனக்கு அவர்கள் ஆபீஸ் லிருந்து போன் வந்தது. " என்றார். அதைக்கேட்டதும், சுரேஷுக்கு தலை சுற்றவே அப்படியே அமர்ந்து விட்டார். உமாவும் "ஐயோ! " என்று அலறினாள் .
தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட சுரேஷ், " தகவல் எங்களுக்கு வராமல் உங்களுக்கு எப்படி வந்தது? " என்றார்.....'சரியாக விசாரித்தீர்களா? " என்றார். இதற்குள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் வந்துவிட்டனர். அதற்கு தனசேகரன், " என்ன சார் , நீங்க கேட்கறீங்க? ... நான் எப்படி சரியாக விசாரிக்காமல் சொல்வேன்?.......மேலும் ஒரு கணவன் இறந்தால் முதலில் மனைவிக்குத்தானே விவரம் சொல்வார்கள்?............அதனால் தான் முதலில் எங்களுக்கு அவர்கள் ஆபீஸ் லிருந்து தகவல் வந்தது" என்றாரே பார்க்கலாம்.
சுற்றி இருந்தவர்கள் இது என்ன புதுக்கதை, இந்த பையனுக்கு எப்போ கல்யாணம் ஆனது என்று , வம்பு கேட்பதற்கு ஆர்வமானார்கள். நடப்பதை கவனித்தார்கள். சிலர் தனசேகரனிடமும், சிலர் சுரேஷிடமும் என்ன ஆச்சு என்று கேள்விகளால் துளைக்க ஆரம்பித்தார்கள். தனசேகர் , அழுகையிநூடே விலாவரியாக எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
சுரேஷால் பேசமுடியவில்லை, நடப்பது நிஜமா என்று கூட உணரமுடியலை. ரமேஷுக்கு என்ன ஆச்சு என்று விவரமாய் தெரியலை. தானே அவனுடைய ஆபீஸ் இல் விசாரிப்பது என்று முடிவு செய்து போன் செய்தார். அதைப்பார்த்த தனசேகர், " என்ன சார், நம்பர் தப்பா போடறீங்க , மாப்பிளையோட கம்பெனி நம்பர் ஐ போடுங்க" என்றார்.
அதைக்கேட்டதும் துணுக்குற்றார் சுரேஷ். ' என்ன இந்த எண்ணே அவனுடையது இல்லையா? நேற்று கூட பேசினோமே'... ' இதில் ஏதோ குழப்பம் இருக்கு ....' என்று எண்ணியவர் , மகன் சொல்லிப்போனதையும் அவன் வேலை செய்த இடத்தையும் நினைக்கையில் அவருக்கு ஏதோ புரிவது போல இருந்தது. மனைவிக்கும் கண்ஜாடை காட்டி பேசாமல் இருக்குமாறு சொன்னார்.
இது எதுவும் கவனிக்காத தனசேகர் , " பாருங்க சார், மகனின் போன் எண் கூட சரியாக குறித்துக்கொள்ளவில்லை...........அதே என்னைப் பாருங்கள் , அவர் எனக்கு மாப்பிளை என்று ஆனதுமே, அவர் இருக்கும் இடம், ஆபீஸ் அட்ரஸ், போன் எண்கள், அங்குள்ள வீடு வாசல் விவரம், சொத்துபத்து விவரம் என்று எல்லாமே கேட்டுக்கொண்டேன். என்ன இருந்தாலும் பெண்ணை கொடுக்கும் போது விசாரிக்கணுமே "............... என்றார்.
உமா சுரேஷ் தம்பதிகள் ரொம்ப குழம்பினார்கள் அவனுக்கு சொத்துபத்து ஏது, அதுவும் அமெரிக்காவில்?....என்ன சொல்கிறார் இவர்? என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் மௌனம் காத்தார்கள்.
" அதே போல இப்போ அவர் இறந்துட்டார் என்றதுமே, என் பெண்ணுக்கு அவர் கம்பெனி இல் வேலை வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன், settlement எல்லாம் அவர பேருக்கு வந்துடணும் என்றும் சொலிட்டேன்.......சட்டம் அப்படித்தானே இருக்கு " என்றார் பெருமையாக.
எந்த நேரத்தில் என்ன பேசுகிறார் இவர் என்று எல்லோரும் முகம் சுளித்தார்கள். அதே நேரம் " கண்டிப்பாக settlement உஷாக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் சேர்த்துத்தான்" என்கிற குரல் வந்தது. எல்லோரும் குரல் வந்த திசையை நோக்கி பார்த்தார்கள் அங்கு புன்னகையுடன் ரமேஷ் நின்று இருந்தான்.
" அப்பா ரமேஷ், உனக்கு ஒன்றும் இல்லையே ?" என்றபடி அவனிடம் ஓடினார்கள் உமாவும் சுரேஷும். அவனுடன் வந்த போலீஸ் தனசேகரை கைது செய்தது. அங்கிருந்த ஜீப்பில் உஷாவும் அவள் அம்மாவும் இருந்தார்கள். யாருக்கும் எதுவும் புரியலை. தாங்கள் வசமாய் மாட்டிக்கொண்டோம் என்று புரிந்ததால் தனசேகர் தலை குனிந்த வண்ணம் இருந்தார்.
" என்னடா இதெல்லாம்?" என்றார் சுரேஷ். " கொஞ்சம் இருப்பா, இதோ வந்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இவர்கள் பத்திரம், ஸ்டேஷன் கொண்டு போங்கள், வீடு வாசல் எல்லாம் நம் control க்கு கொண்டு வாருங்கள்.
இவர்கள் யாரிடமும் பேச அனுமதிக்க வேண்டாம். நான் அடுத்த ஜீப்பில் தொடர்ந்து வருகிறேன்" என்று மடமடவென சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டு அப்பா அம்மா பக்கம் திரும்பினான்.
அதுவரை மௌனமாய் இருந்த அம்மாவும்...." சீக்கிரம் சொல்லுடா........அந்தப்பாவி என்ன சொன்னான் தெரியுமா? " என்று கேவினாள்.
ரமேஷ் சொல்லத் துவங்கினான். " கொஞ்ச காலமாகவே எங்களுக்கு ஒரு கம்ப்ளயன்ட் வந்து கொண்டிருந்தது. அதாவது, கல்யாணம் செய்து கொண்டு, ஆனால் குடும்பம் நடத்தாமலே அந்த பையனை தீர்த்து கட்டிவிட்டு, சட்டப்படி அவனுடைய சொத்துகளை ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக. அவர்கள் இப்படி கொள்ளை அடித்துவிட்டு, வேறு பேரில் வேறு ஊரில் சென்று தங்கி, மீண்டும் அடுத்த ஆளை பிடிக்கும் வேலையை ஆரம்பிப்பார்கள்."
"இதற்கு face book ஐ பயன்படுத்துகிறார்கள். நல்ல பணக்கார பையன், வெளிநாட்டில் இருக்கும் பையன், பெரும்பாலும் ஒரேமகன், கொஞ்சம் தெற்கே இருக்கும் அப்பா அம்மா , என்பது போலவும், ரொம்பவும் பின்புலம் இல்லாத ஆட்களும் இவர்களுக்கு குறி. சும்மாவே படிப்பு நடுவில் தடை பட்டு விட்டது, இப்போது இங்குள்ள காலேஜில் கடைசி வருடம் படிக்கிறாள், இவள் எங்களுக்கு ஒரே பெண் அதனால் ஒரு 6 மாதம் அல்லது 8 மாதம் கழித்து கல்யாணம் வைத்துக்கொள்ளலாம், இப்போ register marriage பண்ணலாம் என்று சொல்லி, மணம் முடிப்பார்கள். ஆனால் ஒரு போட்டோ கூட எடுக்க விடமாட்டார்கள். பையனின் மொத்த விவரங்களும் கேட்டு வாங்குவார்கள். அதனால் தான் நான் ஒரு MNC இல் வேலை செய்கிறேன் என்று அவர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாட்டை அங்கு செய்யவே அமெரிக்கா போனேன் அப்பா. " என்றான்.
மேலும் தொடர்ந்து." இவர்களை பிடிக்க நாங்கள் வலை விரித்தோம். இவர்கள் தான் என்று நாங்கள் மோப்பம் பிடித்ததும், தான் நான் மீண்டும் இங்கு வந்து கல்யாண நாடகம் ஆடினேன் . அன்று என் நண்பனாக வந்தது என் officer பா".
"நான் பல வருடங்களாக அமெரிக்காவில் இருப்பதாகவும், அங்கு எனக்கு வீடுவாசல் இருப்பதாகவும் அவளையும் அங்கே அழைத்துப் போவதாகவும் சொன்னேன். இவர்கள் என்னை அங்கேய வைத்து கொல்ல செய்த ஏற்பாட்டை முறியடித்து அவனையும் கைது செய்துவிட்டோம். நான் நேற்றே இந்தியா வந்துவிட்டேன் மா. பிறகு அங்கிருந்து நான் இறந்து விட்டதாக செய்தியும் சொல்லவைத்தோம். தனசேகர் இங்கு வந்ததும் அவங்க வீட்டுக்கு நாங்க போய் உஷா, அவ அம்மா அவர்களின் 2 அடியாட்கள் எல்லோரையும் கைது செய்துகொண்டு, உங்களுக்கு உண்மையை சொல்ல இங்கு வந்தோம். பிறகு நடந்து தான் உங்களுக்கே தெரியுமே " என்று கூறி சிரித்தான் 'சைபர் கிரைம் ஆபீசர் ரமேஷ்.
"ஒ.......ஊருக்கு போவதற்கு முன் நீ சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் இப்போ விளங்குகிறது" என்றார் சுரேஷ். "மேலும் தனசேகர் உன் ஆபீஸ் எண் தவறு என்றதுமே எனக்கு something wrong என்று பட்டுவிட்டது, பிறகு நான் பயப்படலை" என்றார்.
சுற்றி நின்ற எல்லோருக்கும் மனம் நிம்மதி அடைந்தது, அவரவர் கலைந்து சென்றனர். ரமேஷும் "ஸ்டேஷன் வரை போய்வருகிறேன் அம்மா, நல்லா சமைத்துவை, உன் சாப்பாட்டை சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு ? " என்றான். உமாவும், இன்னும் இந்த face bookkala எத்தனை குடும்பம் சீரழியப் போகிறதோ என்று சொல்லிக்கொண்டே , மகனுக்காக சமைக்க மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றாள்.
கிருஷ்ணாம்மா
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அம்மா முதலில் வி.பொ.பா.
மிக மிக அருமையான கதை, தற்போது நடக்கும் இணைய உலகின் மோசடிகளை தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.. கதையில் நல்ல ட்விஸ்ட்....
மிக மிக அருமையான கதை, தற்போது நடக்கும் இணைய உலகின் மோசடிகளை தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.. கதையில் நல்ல ட்விஸ்ட்....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அருமை அருமை .... அருமையான கதை ....
நல்ல திருப்பங்கள் ...
( நீங்கள் எழுதும் கதைகளை புத்தகமாக(குங்குமம் ,குமுதம் ) எழுத try செய்யுங்கள் ...என்னுடைய வாழ்த்துக்கள் ..)
நல்ல திருப்பங்கள் ...
( நீங்கள் எழுதும் கதைகளை புத்தகமாக(குங்குமம் ,குமுதம் ) எழுத try செய்யுங்கள் ...என்னுடைய வாழ்த்துக்கள் ..)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.M.SENTHIL wrote:அம்மா முதலில் வி.பொ.பா.
மிக மிக அருமையான கதை, தற்போது நடக்கும் இணைய உலகின் மோசடிகளை தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.. கதையில் நல்ல ட்விஸ்ட்....
மிக்க நன்றி செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நவீன் wrote:அருமை அருமை .... அருமையான கதை ....
நல்ல திருப்பங்கள் ...
( நீங்கள் எழுதும் கதைகளை புத்தகமாக(குங்குமம் ,குமுதம் ) எழுத try செய்யுங்கள் ...என்னுடைய வாழ்த்துக்கள் ..)
ரொம்ப ரொம்ப நன்றி நவீன்
எனக்கு யாரையும் தெரியாது, நெட் இல் அட்ரஸ் பார்த்து மெயில் போட்டு பார்க்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|