ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வீகத் திருத்தலங்கள்

Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty தெய்வீகத் திருத்தலங்கள்

Post by சிவா Thu Feb 26, 2009 11:30 pm

இரவுசேரி: சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையிலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளது இரவுசேரி என்ற ஊர். இராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது ஜடாயுவின் சிறகை ஒடித்து போட்ட இடம்தான் இந்தத்தலம் என்பர். இதனால் இறகுசேரி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது இத்தலம். பின்னர் பெயர் மறுவி இரவுசேரி என்றாகி விட்டதாம்.

காவியத் திருத்தலங்கள்: உலகப்புகழ் படைத்த காவியங்கள் பல ஆண்டவனின் சன்னிதானத்தில் அரங்கேறிய தாகக் கூறுவர். கம்பர் தம் கம்பராமாயணத்தை ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள மேட்டழகிய சிங்கர் பெருமாள் சன்னிதானத்திலேயே அரங்கேற்றினாராம். சமயக்குறவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவிலில் அரங்கேற்றப்பட்டது.

ரங்கநாதன் தங்கச்சி: அன்னை பார்வதியை பெருமாளின் சகோதரியாகக் கருதி வணங்குவர். சமயபுரம் மாரியம்மன் முதலில் இருந்ததாகக் கூறப்படும் இடம் எது தெரியுமா? ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில்தான். இவ்வாலயத்தில் வைஷ்ணவி என்ற நாமத்தில் அருள்பாலித்த அம்மனின் உக்ரம் தாங்காது அவளது விக்கிரகத்தை தற்போது சமயபுரம் என்றழைக்கப்படும் கண்ணனூரில் பிரதிஷ்டை செய்து கண்ணனூர் மாரி என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்கள்.

நந்தித் திருத்தலங்கள்: நந்தியம்பெருமானுக்கென்று சிறப்புப்பெற்ற பல சிவத்தலங்கள் உண்டு. நந்தி நின்றக் கோலத்தில் அருள் புரிவது திருமேற்பேறு திருத்தலம். நந்தி விலகியிருந்த திருத்தலங்கள் பட்டீச்சுரம், திருப்பூனகூர், திருப்பூந்துருத்தி ஆகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by சிவா Fri Feb 27, 2009 12:15 am

தட்சிணாமூர்த்தி திருத்தலம்:

தக்கோலம் தட்சிணா மூர்த்தி அருள் தரும் திவ்வியத்திருத்தலம். இத்தலம் போன்றே கேரளத்திலும் தட்சிணாமூர்த்திக்கென ஒரு திருத்தலம் உண்டு. சுகபுரம் எனப்படும் அத்தலத்தில்தான் ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றினார் என்பார்கள்.

லிங்கத் திருத்தலங்கள்:

ஆதிசங்கரர் ஐந்து லிங்கங்களை தம் கைப்பட பிரதிஷ்டை செய்த இடங்கள் புகழ் பெற்றவை. அவர் முக்திலிங்கத்தை பத்ரிநாத்திலும், வர லிங்கத்தை நேபாளத்தில் உள்ள நீலகண்ட சேத்திரத்திலும், மோட்சலிங்கத்தை சிதம்பரத்திலும், போகலிங்கத்தை சிருங்ககிரியிலும், யோகலிங்கத்தை காஞ்சிபுரத்திலும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

ஐந்து மலை திருத்தலங்கள்:

கோவையில் உள்ள தொண்மையான ஒரு சிவன் கோயில் திருப்பேரூர் கோயில். அதைச்சுற்றி ஐந்து தெய்வங்களுக்குரிய ஐந்து மலைகள் உள்ளன. சிவமயமாக வெள்ளி மலை, நீலிமலை என வழங்கப்பெறும் உமாதேவியார் மலை, பிரம்மன் மலை, பெருமாள் முடி எனப்படும் விஷ்ணுவுக்குரிய மலை, முருகக்கடவுளின் மருதமலை இவ்வைந்துமே புகழ்பெற்ற மலைத்தலமாக திகழ்கின்றன.

வெண்ணைக் காளி:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சொக்கநாதர் சன்னதிக்கு எதிரே உள்ளது காளி சன்னதி. இங்கு காளிக்கு எப்போதும் வெண்ணை சாத்து நடந்துகொண்டே இருக்கும். நித்திய வெண்ணைக் காளியாக அன்னை காட்சித் தருவதால் வெண்ணை காளி என்றே இவ்வன்னையை அழைத்து வழிபடுகிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by சிவா Fri Feb 27, 2009 12:43 am

அறுபது அடி நாகம்: திருச்செங்கோடு கோயிலில் சிவ,பார்வதி இணைந்த வடிவான அர்த்த நாரிசுவர விக்கிரகத்தின் அற்புதம் நாமெல்லாம் அறிந்ததே. இத்தலத்துக்கு சிறப்புச்சேர்க்கும் வெறொரு மகிமையும் உண்டு. அதாவது இங்குள்ள மலையில் 60 அடி உயரத்துக்கு நாகத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

பிச்சாடனர் கோயில்: திருச்சி அரியலூர் ரெயில் மார்க்கத்தில் உள்ள தலம் பிச்சாடனர் கோயில். இது கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள திவ்விய சேத்திரம். இங்கே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் கோயில் கொண்டுள்ளனர். இந்த சேத்திரத்தில்தான் பிரம்மன் மீண்டும் சிருஷ்டிக்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறுவர்.

சூரிய விநாயகர்: நேபாளத்தில் சூரிய விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. தினமும் சூரியனின் முதல் கதிர் இக்கோயிலில் உள்ள கணேசப்பெருமானின் விக்கிரகத்தில் விழுமாறு அழகிய சிற்ப வேலைகளோடு திருக்கோவிலை கட்டியுள்ளனராம்.

லவன்-குசன் கோயில்: இராமாயணக் காவியத்தின் தலைவன் ஸ்ரீ ராமனின் மைந்தர்களான லவன், குசன் இருவருக்கும் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

யானைகளின் ஊர்வலம்: கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரில் ஆண்டவனை நகர்வலம் அழைத்து வரும்போது கோயில் யானைகள் ஆண்டவனுக்கு முன் ஊர்வலத்தில் செல்வது வழக்கம். அப்போது யானைகள் உற்சவமூர்த்திக்கு பின்புறத்தை காட்டியபடி செல்லாமல், ஆண்டவனைப் பார்த்தபடி அதாவது பின்னோக்கியவாறே நடந்து செல்லுமாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by Guest Fri Jun 19, 2009 9:31 am

அ௫மை.

போட்டோவுடன் விளக்கியி௫ந்தால் மேலும் அ௫மையாக இ௫க்கும் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

தெய்வீகத் திருத்தலங்கள் Empty Re: தெய்வீகத் திருத்தலங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum