ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

5 posters

Go down

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Empty அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Post by krishnaamma Fri Jan 30, 2015 10:55 pm

சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் மரணம் அங்கு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்திருக்கிறது. சவூதியில் இன்னும் மன்னராட்சிதான் நீடிக்கிறது. அப்துல்லாவுக்கு அடுத்ததாக அவருடைய தம்பி சல்மான் பட்டத்துக்கு வந்திருக்கிறார். ஆட்சி மாற்றம் சுமுகமாக இருக்கும் என்றும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் இப்போது இருக்கும்படியே தொடரும் என்றும் சல்மான் அறிவித்திருக்கிறார். சல்மானுக்கும் வயது அதிகமாகிவிட்டதால், இளவரசர் முக்ரின், முகம்மது பின் நயீஃப் ஆகியோரை அரச பதவிக்கான வாரிசுகளாக அவர் அறிவித்திருக்கிறார்.

அப்துல்லா தனது ஆட்சிக் காலத்தில் புரட்சிகரமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இல்லையென்றாலும், அவரது ஆட்சிக் காலத்தில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. மேலும், வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கவும், ஒலிம்பிக்கில் போட்டியிடவும் பெண்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அது மட்டுமல்லாமல், தனது நாட்டின் அறிவியல் மேம்பாட்டுக்கும் அப்துல்லாவின் ஆட்சி பெருமளவு பங்களித்திருக்கிறது.

வளைகுடா பகுதியில் அரசியல் வானிலை இப்போது சரியில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெயின் விலை கடுமையாகச் சரிந்திருக்கிறது. எண்ணெய் வியாபாரத்தில் கடும் போட்டி நிலவுகிறது. எண்ணெய் வள நாடுகள் இப்போது வருவாய் இழப்பையும் பொருளாதாரச் சிக்கல்களையும் எதிர்நோக்கியுள்ளன. எனவே, சவூதி அரேபியாவில் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடைபெறுவதும், புதிய அரசு இப்போதைய கொள்கைகளை மாற்றமின்றிக் கடைப்பிடிப்பதும் அவசியம்.

சவூதி அரேபியாவில் சன்னி முஸ்லிம் பிரிவினர் ஆதிக்கம். ஈரானில் ஷியா பிரிவினர் ஆதிக்கம். இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாகக் கடுமையான போட்டி நிலவுகிறது. எனினும், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தங்கள் நாட்டுக்குள் பரவிவிடாமல் திறமையாகத் தடுத்துவருகிறது சவூதி என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுடன் ராணுவரீதியிலான நட்புறவை சவூதி பராமரித்துவருகிறது.

சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, சரக்கு தேங்கிவிட்ட நிலையில்கூட உற்பத்தி அளவைக் குறைக்காமல் சவூதி அரசு தொடர்ந்து உற்பத்தி செய்து விற்கிறது. விலையை உயர்த்துவதற்காக எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அது ஏற்கவில்லை.

சவூதி அரேபியாவுடன் இந்தியா நல்லுறவு கொண்டுள்ளது. இந்தியா வின் பெட்ரோலியத் தேவையில் 20.18% அந்நாட்டிடமிருந்துதான் பெறப்படுகிறது. லட்சக் கணக்கான இந்தியர்கள் சவூதி அரேபியாவில்தான் வேலை செய்கிறார்கள். கணிசமான தொகையை இந்தியாவுக்கு அவர்கள் அனுப்புகிறார்கள். சவூதி அரேபியாவின் ஏற்றுமதியில் 11%, இறக்குமதியில் 7.2% இந்தியாவுடன்தான் என்பதிலிருந்தே நமக்கு சவூதி எவ்வளவு முக்கியம் என்பது புலனாகும்.

தங்களுக்கு மிகவும் உற்ற நாடு என்பதால், சவூதி அரேபிய அரசின் மனித உரிமை மீறல்களைக்கூட மேற்கத்திய நாடுகள் கண்டுகொள்வதில்லை என்ற வருத்தம் பல வட்டாரங்களில் உண்டு. மக்களுக்கு அரசியல், குடிமை உரிமைகளைப் போதிய அளவில் வழங்கவில்லை என்பதுடன், பெண்களுக்கும் பல உரிமைகள் இன்னும் வழங்கப்பட வேண்டியிருக்கிறது. மன்னராட்சியிலிருந்து மக்களாட்சியை நோக்கி நகர்வதுதான் சவூதியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, சவூதியில் அமைதியும் நிலையான அரசும் தொடர்வது உலக நாடுகளுக்கு மிகமிக முக்கியம்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Empty Re: அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Post by அகிலன் Fri Jan 30, 2015 11:57 pm

மனித உரிமைகள் என்று கூறப்படுபவை எல்லாம் சர்வதேச அரசுகளின் தேவைகளுக்கு ஏற்பதான்
பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மனிதஉரிமை மீறல் குற்றங்களும், யுத்தக்குற்றங்களும்,செய்யும்போது இந்த அரசுகள் எதுவும் கூறாமல் மேலும் ஆயுத உதவியும்,பண உதவியும் செய்தார்கள்.
இன்று

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.


என்றபடி இந்தநாடுகள் பொருளாதார பிரச்சனைகளிலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களிலும் சிக்கித் தவிக்கின்றன.


நேர்மையே பலம்
அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Empty Re: அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Post by ராஜா Sat Jan 31, 2015 11:09 am

அகிலன் wrote:மனித உரிமைகள் என்று கூறப்படுபவை எல்லாம் சர்வதேச அரசுகளின் தேவைகளுக்கு ஏற்பதான்
பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் அப்பட்டமாக மனிதஉரிமை மீறல் குற்றங்களும், யுத்தக்குற்றங்களும்,செய்யும்போது இந்த அரசுகள் எதுவும் கூறாமல் மேலும் ஆயுத உதவியும்,பண உதவியும் செய்தார்கள்.
இன்று

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.


என்றபடி இந்தநாடுகள் பொருளாதார பிரச்சனைகளிலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களிலும் சிக்கித் தவிக்கின்றன.


உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Empty Re: அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Post by M.Saranya Sat Jan 31, 2015 5:26 pm

நிச்சயமாக நண்பரே .....

அந்ததந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப மனித உரிமை ஏற்றுக்கொள்ளப்படுகிறது....
இதில் அரசு மாறினால் ஒழிய மக்களை காப்பாற்ற முடியாது...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Empty Re: அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Post by M.M.SENTHIL Sat Jan 31, 2015 5:54 pm

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! 103459460 அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்! Empty Re: அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணம் தொடரட்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum