Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்தம் மணம் புரிந்த பெருமாள்
+2
T.N.Balasubramanian
ayyasamy ram
6 posters
Page 1 of 1
Re: நித்தம் மணம் புரிந்த பெருமாள்
-
நித்திய கல்யாண பெருமாள் கோயில் சிறப்பு!
பெருமாள், திருக்கல்யாண கோலத்தில், பூதேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடபாகத்தில் ஏந்தி, வராக மூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையில் திருவிடந்தையில் அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் காட்சி தருகிறார்.
கோயிலின் மூலவராக ஆதிவராகப் பெருமாளும், மூலவர் தாயாராக அகிலவல்லி நாச்சியாரும், உற்சவராக நித்ய கல்யாண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகின்றனர். கல்யாண விமானமும், தலவிருட்சமாக புன்னை மரத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.
அமைவிடம் :[/b]
108 திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம், சென்னையில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ளது.
[b]
திருவிடந்தை - பெயர் காரணம் :
"திரு"வை (லட்சுமியை) தன் இடப்பக்கத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் திரு - இட - எந்தை என்பது மருவி திருவிடந்தை என பெயர் பெற்றுள்ளது.
வராக தீர்த்தமும் - கல்யாண தீர்த்தமும் :
வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்காகும்.
ராகு-கேது தோஷ நிவர்த்தி, திருமண பிரார்த்தனை தலம் :
தம்பதி சமேதராய் ஆதிசேஷன், பெருமாள் திருவடியை தாங்க சேவை சாதிப்பதால் இப்பெருமாளை சேவிப்பவர்க்கு ராகு, கேது தோஷங்கள் நீங்குகின்றன.
திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து மாலை அணிந்து வேண்டிக்கொண்டு, ஒன்பது முறை பிரதட்சணம் வந்து வீடு சென்றால் விரைவில் திருமணம் கூடி வருகிறது.
திருஷ்டிப் பொட்டு :
உற்சவர் நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டி பொட்டு அமைந்துள்ளது. மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்குகின்றன.
தம்பதி சமேதராக (ஆறரை அடி உயரத்துடன்) ஆதிவராகப் பெருமாள் சேவை சாதிக்கும் திருத்தலம் இது ஒன்றே.
புராண வரலாறு :
முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும், அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.
இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.
ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.
பாடல் சிறப்பு :
திருமங்கை ஆழ்வார் பெருமாளை 10 பாசுரங்களில் பாடி சிறப்பித்துள்ளார்.
அழகிய மணவாளதாசர் நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் 92-வது பாசுரத்தில் "தொண்டானேன் திருவிட வெந்தைக்கே செறிந்து" என பாடியுள்ளார்.
குரவை ராமனுஜதாசர் தனது நூற்றெட்டு திருப்பதி திருப்புகழில் 92-வது பாசுரத்தில் "இடவெந்தை பதிவாழ்மேவிய பெருமாளே" என பாடியுள்ளார்.
கல்வெட்டுத் தகவல்கள் :
1. விஜயராஜேந்திர சோழரின் 35-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1052) திருவிடவெந்தை ஆதிவராக பெருமாளுக்கு இந்த கிராமமே தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.
2. முதல் ராஜராஜ சோழனின் 19-வது ஆண்டு கல்வெட்டு (கி.பி.1003) பங்குனி ஊத்திரம் ஆதியாக ஒன்பது நாள் திருவிழா நடத்த மூலதனம் வழங்கிய செய்தியை கூறுகிறது.
3. இதே சோழனின் 29-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1013) பங்குனி உத்திர திருநாளில் பிராமண போஜனத்துக்கு வழங்கிய நன்கொடையை கூறுகிறது.
4. ராஜராஜ சோழனின் 17-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1001) அவர் பிறந்த ஆவணி சதயத்தை ஈறாகக் கொண்டு ஏழுநாள் திருவிழா நடத்த கட்டளையிட்டதை கூறுகிறது.
5. ராஜ ராஜ சோழனின் 19-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1003) கும்ப ஞாயிறு முழுமையும் பிராமண போஜனத்துக்கு மூலதனம் அளித்ததை கூறுகிறது.
6. திருமங்கையாழ்வார் பெயரில் கலிச்சிங்கன் மடம் ஒன்று இருந்ததையும், அமாவாசை தோறும் அங்கு பிராமண போஜனம் நடந்ததையும், குலோத்துங்க சோழனின் 45-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1115) கூறுகிறது.
திருவிழாக்களும், பூஜைகளும் :
நித்யபடி நான்கு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி சிறப்புடன் நடைபெறுகிறது.
ஆனிகருடசேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்சம் கருடசேவை, ஸ்ரீஜெயந்தி, உறியடி உற்சவம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், தனுர்மாத பூசை, மாசிமகம் கருடசேவை, பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை திருக்கோயில் மூலமும் உபயதாரகள் மூலமும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையும் சந்நிதிகள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
-
====================
தமிழ் வெப்துனியா.காம்
Re: நித்தம் மணம் புரிந்த பெருமாள்
நல்ல பகிர்வு .நன்றி .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: நித்தம் மணம் புரிந்த பெருமாள்
நல்ல பதிவு
நன்றி...
நன்றி...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: நித்தம் மணம் புரிந்த பெருமாள்
எத்தனை அழகாய் இருக்கார் தாயார், 'ஜம்' என்று பெருமாள் மேலே உட்கார்ந்து கொண்டு ..........பெருமாளும் எத்தனை அன்போடும் ஆதுரத்தோடும் தாயாரை பார்க்கிறார்...........இதைக் காண கண்கோடி வேண்டுமே!.....
.
.
.
.
பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நித்தம் மணம் புரிந்த பெருமாள்
அடியோங்கள் சில காலம் முன்பு 'திருவிடவெந்தை' சென்றிருந்தோம். வேலை ஓய்வு பெற்றபின் திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வருகின்றோம்.
நாங்கள் போன சமயம் எதோ ஒரு விழா போலிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் உத்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. மூலவரை வைகுண்ட ஏகாதசியில்தான் சேவிக்கலாம் என்றார்கள். மூலவர் எண்ணெய் காப்பில் இருந்தாரம்.
விவரம் தெரிந்தவர்கள் வருடத்தில் ஒரு முறைதான் மூலவரை சேவிக்க முடியும் என்பதற்கு காரணம் கூறுவார்களா?
அடியேன் ஜனா ராமானுஜதாசன்
நாங்கள் போன சமயம் எதோ ஒரு விழா போலிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் உத்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. மூலவரை வைகுண்ட ஏகாதசியில்தான் சேவிக்கலாம் என்றார்கள். மூலவர் எண்ணெய் காப்பில் இருந்தாரம்.
விவரம் தெரிந்தவர்கள் வருடத்தில் ஒரு முறைதான் மூலவரை சேவிக்க முடியும் என்பதற்கு காரணம் கூறுவார்களா?
அடியேன் ஜனா ராமானுஜதாசன்
Guest- Guest
Re: நித்தம் மணம் புரிந்த பெருமாள்
iyengar.jana wrote:அடியோங்கள் சில காலம் முன்பு 'திருவிடவெந்தை' சென்றிருந்தோம். வேலை ஓய்வு பெற்றபின் திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வருகின்றோம்.
நாங்கள் போன சமயம் எதோ ஒரு விழா போலிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் உத்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. மூலவரை வைகுண்ட ஏகாதசியில்தான் சேவிக்கலாம் என்றார்கள். மூலவர் எண்ணெய் காப்பில் இருந்தாரம்.
விவரம் தெரிந்தவர்கள் வருடத்தில் ஒரு முறைதான் மூலவரை சேவிக்க முடியும் என்பதற்கு காரணம் கூறுவார்களா?
அடியேன் ஜனா ராமானுஜதாசன்
வணக்கம் ஐயங்கார் , ஈகரையின் விதிமுறைகளை படித்தீர்களா ?!
முதல் விதியையே மீறியதாக உள்ளதே உங்களின் பயனர் பெயர்
இந்த பின்னூட்டத்தை கண்டவுடன் உங்களின் மாற்று பெயரை தெரிவிக்கவும் , இல்லையென்றால் உங்கள் பெயரை அனுமதிக்க இயலாது , மன்னிக்கவும்
Similar topics
» நித்தம் நித்தம் சுதந்திரம் தேடும் சுதேசிகள்...
» நித்தம் நித்தம் நெல்லுச்சோறு..... -
» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
» நித்தம் ஒரு வானம் -விமர்சனம்
» 'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா !
» நித்தம் நித்தம் நெல்லுச்சோறு..... -
» நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
» நித்தம் ஒரு வானம் -விமர்சனம்
» 'விநாயகர் அகவலை நித்தம் சொல்லுங்கோ'...மஹா பெரியவா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|