ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

+3
கோ. செந்தில்குமார்
M.M.SENTHIL
ayyasamy ram
7 posters

Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by ayyasamy ram Sat Jan 24, 2015 8:18 am


அரசு வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு குற்ற வழக்கை, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி எம்.பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அரசு தரப்பு வழக்குரைஞர் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி சென்னையில் பிறப்பித்த உத்தரவு:

திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலிருந்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கை சம்பந்தப்பட்ட அமர்வு நீதிமன்றம் ஜூன் 30-ஆம் தேதிக்குள் முடித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவுடன் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதே சமயம், அரசு வழக்குரைஞர்கள் மாநிலத்துக்காகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மட்டுமே வழக்குகளை நடத்த வேண்டும். இதை விடுத்து, ஆளும் கட்சியினருக்காக வழக்கில் செயல்படக் கூடாது.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அரசு தலைமை வழக்குரைஞர்களும் இது போன்றுதான் நியமனம் செய்யப்படுகின்றனர்.

திறமை, அனுபவத்தின் அடிப்படையில் அரசு வழக்குரைஞர்களை நியமனம் செய்யாமல், கட்சி உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களும், கட்சிக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடுவர்கள் மட்டும்தான் அரசு வழக்குரைஞர் பதவிக்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இதனால், குற்ற வழக்குகளில் தண்டனை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கட்சியில் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வழங்க முடியாதவர்களுக்கு, இது போன்று அரசு வழக்குரைஞர் பதவியை அரசியல் கட்சிகள் வழங்குகின்றன. முழு நேர அரசியல்வாதிகள் கூட, பல மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்படுகின்றனர். மேலும், அரசு வழக்குரைஞர் பதவி என்பது அரசியல் பதவி அல்ல. இது சட்டத்தை நிர்வகிக்கக் கூடிய பொறுப்புள்ள பதவி. தகுதி, திறமை, ஒருமைப்பாடு உள்ளவர்களை மட்டுமே இந்தப் பதவியில் நியமனம் செய்ய வேண்டும்.

எனவே, வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என தனது உத்தரவில் தெரிவித்தார்.
==========
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by M.M.SENTHIL Sat Jan 24, 2015 3:29 pm

நல்லத்தான் சொல்லி இருக்காரு, இத நம்ம ஆளும் கட்சியும், மத்த கட்சிகளும் கேட்கணுமே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by கோ. செந்தில்குமார் Sat Jan 24, 2015 11:24 pm

நீதித்துறையில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் பலருக்கு சட்டமே தெரியாது என்பது உங்களுக்கும் தெரியுமே அய்யா...! அதுக்கும் சேர்த்து ஒரு உத்தரவை போட்டா நல்லா இருக்குமே...!! உங்களுக்கு புண்ணியமா போகும் அய்யா...!!!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by murugesan Sun Jan 25, 2015 12:37 pm

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. அரசு தலைமை வழக்குரைஞர்களும் இது போன்றுதான் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் தான் நீதிமன்றத்தில் லஞ்சம் வாங்கப்பட்டு குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர்கதையாக இருக்கிறது..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by T.N.Balasubramanian Sun Jan 25, 2015 2:44 pm

சோ அவர்களின் , " உண்மையே, உன் விலை என்ன ?"
நாடகம் நினைவிற்கு வருகிறது . அதில் நீதி படும் பாடு , விவரிக்க இயலாது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by Dr.S.Soundarapandian Sun Jan 25, 2015 4:10 pm

நீதிபதி என் கிருபாகரன் வாழ்க!

கிருபாகரன் சொன்னது வழக்கறிஞர்களுக்கு மட்டும்தான் என்றாலும்
உயர் பதவிக்காரர்கள் அனைவருக்கும் பொருந்துமே ?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by krishnaamma Sun Jan 25, 2015 6:27 pm

//அரசு வழக்குரைஞர்கள் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களைத் தெரிந்தவர்களாக இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது//

அவர் சொல்றது கேட்க நல்லாதான் இருக்கு...............ஆனால் கேட்கணுமே !.
.
.
.
கேட்டால்..........ரொம்ப நல்லா இருக்கும் , நாடு விளங்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம் Empty Re: அரசு வழக்குரைஞர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும்: அரசியல் தலைவர்களை அல்ல! உயர் நீதிமன்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தைகள் திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது: உயர் நீதிமன்றம் உத்தரவு
» மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவிகிதம் பாதுகாப்பானவை அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
» கல்வி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்
» மாபியா கும்பலின் பிடியில் கேரள அரசு-உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
» ஜெயலலிதா உடல் நிலை ; 6ம் தேதிக்குள் விளக்கம் வேண்டும் : உயர் நீதிமன்றம் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum