புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
284 Posts - 45%
heezulia
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
19 Posts - 3%
prajai
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
7 Posts - 1%
mruthun
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_m10தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:44 am

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) BqsNas0SsixpdI3PCdIL+PGM_517_130913925

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) பத்திரம் பதியலாம்!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Pra83NDsTPGSnxpVGlxm+TN_20150113175108336455
நல்லதையே நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் 10ம் இடத்திற்கு வந்தும், ராகு மாதம் முழுமையும் நற்பலனை கொடுப்பர். செவ்வாய் பிப்.10 வரை நன்மை தருவார். சுக்கிரன் ஜன. 23ல் 11-ம் இடத்திற்கு வருவது நல்லதே. இப்போது புதன் 10ம் இடத்தில் இருப்பதால், பெண்களால் பெரிதும் முன்னேற்றம் காண்பீர்கள். அவர்களால் பொருள் சேரும். ஜன. 28ல், 9-ம் இடத்திற்கு செல்வதால் மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். விட்டுக் கொடுத்து போகவும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகல வசதிகளும் கிடைக்கும். சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். ஜன. 31, பிப். 1,2ல் ஆடம்பரபொருள் வாங்கலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டி வரும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். எதிரிகளால் தொல்லைகள், போட்டிஅதிகம் இருக்கும். ஜன. 23க்கு பிறகு நல்ல பணவரவு காணலாம்.

மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும்.போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான மகசூல் பெறுவர். காய்கறிகள், பழ வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். சொத்து வாங்க நினைப்பவர்கள் பிப்.10க்குள் பத்திரம் பதியவும்.

பெண்களுக்கு கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு பிப். 8க்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன. 15, 20, 21, 22, 23, 24, 27, 28, 31, பிப். 1, 2, 7, 8, 9, 10, 11.

கவனநாள்: ஜன. 16, 17, பிப். 12 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1,9 நிறம்: வெள்ளை, செந்தூரம்.

வழிபாடு: கிருஷ்ணர் வழிபாடு மனதைரியத்தை வரவழைக்கும். ஜன.23 வரை வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:44 am

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) வேலைப்பளு குறையும்!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) V0iwmEdUS3aqdi2kR6VG+TN_20150113175121222079

சாமர்த்தியம் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

உங்கள் நட்புக்கிரகமான புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்தும், கேது மாதம் முழுவதும், சுக்கிரன் ஜன. 23வரையும், செவ்வாய் பிப். 10 முதலும் நன்மை தருவார்கள். சூரியன் 9ல் இருப்பதால் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். ஜன. 23க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கூடும். ஜன. 29,30 பெண்களால் பணம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நிறுவனத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக அமையும். போட்டியாளர் வகையில் தொல்லையும், மாதக்கடைசியில் வீண் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், இறுதியிலும் பொல்லாப்பை சந்திக்கலாம். வேலைப்பளு குறைவால்
நிம்மதியாக இருக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்துசேரும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வர்.

விவசாயிகளுக்கு வளம் கொழிக்கும். மாதக் கடைசியில் புதிய சொத்து வாங்கும் நிலை உருவாகலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள் நிதி நிலைமையில் வளர்ச்சியடைவர். கணவருடன் இணக்கமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஜன. 16,17 மகிழ்ச்சியாக அமையும். குடும்ப சுகம் மேம்படும். விருந்து-விழா என சென்று வரலாம். புத்தாடை, நகை வாங்கலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். சிறு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவரைச் சந்தித்து விடுவது நல்லது.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 23, 24, 25, 26, 29, 30, பிப். 3, 4, 10, 11, 12.

கவன நாள்: ஜனவரி 18, 19 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்தியையும், செவ்வாய்,வெள்ளியில் சிவ பார்வதியையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:47 am

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சுப நிகழ்ச்சி!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) S233fsknQzin1ztL3IZw+TN_20150113175133904901
புத்திசாலித்தனம் மிக்க மிதுன ராசி அன்பர்களே!

மாத தொடக்கத்தில் நற்பலன் உண்டாகும். புதன் ஜன. 28ல் வக்ரம் அடைந்து சாதகமற்ற நிலைக்கு வந்தாலும், பிப். 8ல் வக்ரம் நிவர்த்தி அடைந்து நற்பலன் தருவார். மாத தொடக்கத்தில் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டபடி குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். சுக்கிரன் ஜன. 23ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். பொருளாதார வளம் மேம்படும். பெண்களால் நற்சுகம் ஏற்படும். பிப். 10க்கு பிறகு அண்டை வீட்டாரின் தொல்லை ஏற்படும்.

தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும். செவ்வாயால் பொருள் நஷ்டம் வரலாம். சூரியன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது. பணியாளர்கள் சந்தித்த பிரச்னை அனைத்தும் குருவால் இருந்தஇடம் தெரியாமல் மறையும். அரசாங்க ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும்.அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் சிறந்த மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். குரு பக்கபலமாக இருப்பதால் சற்று முயற்சி எடுத்தால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணத்தை தள்ளி வைக்கவும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

நல்ல நாள்: ஜன.16, 17, 18, 19, 25, 26, 27, 28, 31 பிப். 1, 2, 5, 6, 12

கவன நாள்: ஜன. 20, 21, 22 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: காலையில் எழுந்து சூரியனை வணங்குங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு தைரியத்தை வரவழைக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:48 am

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) மனதில் உற்சாகம்!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) Dq0xXrr5TVekkwyBVkPf+TN_20150113175142812516
திட்டமிட்டு பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் பிற்பகுதியில் நன்மை மேலோங்கும். அதற்கு காரணம் சுக்கிரன் ஜன. 23ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மனதில் உற்சாகம் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ராகு மாதம் முழுவதும் சாதகமாக நின்று நன்மை வழங்குவார். புதன் ஜன. 28 முதல் பிப்.8 வரை வக்ரம் அடைவதால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் குழப்பம் நிலவும். கணவன்-மனைவி இடையே உண்டான மனக்கசப்பு ஜன. 28 க்கு பிறகு மறையும். அதன் பிறகு உங்கள் முயற்சியில் வெற்றி கிட்டும். ஆடை, அணிகலன் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியாளர்கள் மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் அதிகமாக உழைக்க நேரிடும். உழைப்புக்கு மரியாதையும், வருமானமும் கிடைக்கும். ஜன. 28க்கு பிறகு பணியில் சிறப்பான பலனை பெறுவர்.

தொழில், வியாபாரிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும். பொருளாதார வளம் கூடும். செவ்வாயால் பிப். 9 க்கு பிறகுஅலைச்சல் அதிகரிக்கும். எதிரியால் இடையூறு வரலாம். பகைவரை வெற்றி கொள்வீர்கள்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடா முயற்சிஎடுக்க வேண்டியதிருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் உழைப்புக்கேற்ற பலனை எதிர் பார்க்க முடியாது. பிப். 9க்கு பிறகு முயற்சியில் தடையும் ஏற்படும்.

மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். பிப். 8க்குப் பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு பொருளாதார வளத்தில் எந்த குறையும் இருக்காது. ஆனால் கடின உழைப்பு தேவைப்படும். கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் இருக்காது. பெண்களுக்கு அண்டை வீட்டார்
அனுகூலமாக இருப்பர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைவர். ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.

நல்ல நாள்: ஜன. 18, 19, 20, 21, 22, 27, 28, 29, 30, பிப். 3, 4, 7, 8, 9

கவன நாள்: ஜன.14,15,16 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,7 நிறம்: நீலம், வெள்ளை

வழிபாடு: விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும். கேதுவை அர்ச்சிப்பதால் செயல்தடை நீங்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:49 am

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம்1) பதவி உயர்வு! பதவி உயர்வு!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) XZ9pLdAR1CZBRVjMLCLK+TN_20150113175151158530
துணிவே துணை என எண்ணும் சிம்ம ராசி அன்பர்களே!

சூரியன், புதனால் சிறப்பான பலன்கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் புதன் ஜன. 28 முதல் பிப். 8 வரை வக்ரம் அடைவதால் கவனமாக இருக்க வேண்டும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற நேரிடும்.சூரியனால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மாதத் தொடக்கத்தில் எடுத்த காரியம் வெற்றி பெறும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். ஜன. 28க்குப் பிறகு கணவன்- மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். புதன் பிப். 8ல் வக்ர நிவர்த்தி அடைவதால் பிரச்னைகள் மறைந்து குடும்ப ஒற்றுமை ஏற்படும். தம்பதிஇடையே அன்பு பெருகும்.

தொழில், வியாபாரிகளுக்கு பகைவரால் தொல்லை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். ஜன. 28 க்கு பிறகு கூடுதல் வளர்ச்சியும் பணவரவும் இருக்கும்.பணியாளர்கள் மாதத்தின் மத்தியில் சிறப்பான வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வு நல்ல முறையில் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் தடை குறுக்கிடலாம். ஜன.23 க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.

அரசியல்வாதிகளுக்கு கடின அலைச்சல் ஏற்படும். போட்டியாளர்களால் பிரச்னை குறுக்கிடும். மாணவர்கள் இந்த மாதம் புதனால் கூடுதல் நன்மை காணலாம். அதிக மதிப்பெண்கள் பெறுவதோடு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவர்.

விவசாயிகளுக்கு நெல், கேழ்வரகு, பச்சை காய்கறிகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். விருந்து, விழா என சென்று வரும் வா#ப்பு கிடைக்கும்.

நல்ல நாள்: ஜன. 15, 20, 21, 22, 23, 24, 29, 30, 31, பிப். 1, 2, 5, 6, 10, 11

கவன நாள்: ஜன.25, 26 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 3, 9 நிறம்: பச்சை, செந்துõரம்

வழிபாடு:வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வணங்குங்கள்.
ஏழைக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:50 am

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) அமோக லாபம்!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) UU7sZUAuSvSDJ480JbBQ+TN_20150113175206742958
பாச உணர்வுடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!

குரு,சனி இந்த மாதம் நற்பலனை தருவார்கள். சுக்கிரன் ஜன. 23 வரையும் , செவ்வாய் பிப்.10 வரையும் நன்மையளிப்பர். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். பெரியோர்களின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். தக்க சமயத்தில் உறவினர், நண்பர்கள் உதவி செய்வர். குடும்பத் தேவை பூர்த்தியாகும். ஜன. 28 க்கு பிறகு எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடைபெறலாம். பிப். 8 க்கு பிறகு கணவன் - மனைவி இடையே அன்னியோன்யம் இருக்காது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கூடும். முக்கிய முடிவுகளை பிப். 8 க்குள் செய்வது நல்லது. அதன் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜன. 23 க்கு பிறகு முயற்சியில் தடை ஏற்படும்.

அரசியல்வாதிகள் சீரான பலனை பெறுவர். பிப்ரவரி 9க்கு பிறகு அலைச்சல் ஏற்படும்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பிப்ரவரி 8-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது

விவசாயிகள் ஆடு, மாடு மூலம் நல்ல வளம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர். ஜன. 25,26 ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக பொருள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சிநிலைத்திருக்கும்.

நல்ல நாள்: ஜன. 16, 17, 23, 24, 25, 26, 31, பிப். 1, 2, 3, 4, 7, 8, 9, 12

கவன நாள்: ஜன. 27, 28 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,3 நிறம்: சிவப்பு, மஞ்சள்

வழிபாடு: புதன் கிழமை குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:50 am

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) அபார ஆற்றல்!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) F0WQdz2BTyeSotYlMY2n+TN_20150113175216648974
நடப்பது நன்மைக்கே என நினைக்கும் துலாம் ராசி அன்பர்களே!

செவ்வாய் பிப். 10ல் கும்பத்தில் இருந்து மீனத்துக்கு மாறி நன்மை செய்வார். புதன் ஜன. 28 வரையும், பிப். 8 க்கு பிறகும் நற்பலனைக் கொடுப்பார். கேது, சுக்கிரனாலும் நன்மையே உண்டாகும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அபார ஆற்றல் பிறக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். ஜன. 23க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பிப். 8க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சூரியனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர்களிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதேநேரம், உங்களுக்கு இடைஞ்சல் செய்தவர்களால் ஏற்பட்ட தொல்லை தீரும் ஆற்றல் பிறக்கும். ஜன. 28 க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.பணியாளர்கள் சுக்கிரனின் பலத்தால் நன்மையான பலன் பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த சலுகை தற்போது கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஜன. 28க்கு பிறகு புதனால் அலைச்சல் அதிகரிக்கும்.

கலைஞர்கள் சிறப்பான பலன் பெறலாம். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் மாதக்கடைசியில் நற்பெயர், பொருளாதர வளம் பெறுவர்.

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். ஜன. 28க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் படிப்பில் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும்.

விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. நல்ல மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் பிப். 10க்கு பிறகு கை கூடும்.

பெண்கள் குதுõகலமாக இருப்பர்.

நல்ல நாள்: ஜன. 15, 18, 19, 25, 26, 27, 28, பிப். 3, 4, 5, 6

கவன நாள்: ஜன. 29, 30 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4, 8

நிறம்: சிவப்பு,வெள்ளை

வழிபாடு: சனியன்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள் கோவிலுக்கும் சென்று வாருங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:51 am

விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) பெண்களால் நன்மை!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) OunOM7KZQ2CODf0maIcj+TN_20150113175228754596
சுறுசுறுப்புடன் திகழும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் சூரியன் சாதகமான 3-ம் இடத்திற்கு வந்துள்ளார். புதன் ஜன. 28ல் வக்கிரம் அடைந்து நற்பலனை கொடுப்பார். அதோடு மாதம் முழுவதும் ராகு, குரு, சூரியன், சுக்கிரனும் நற்பலனை தருவார்கள். பெண்களால் நன்மைஅதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் சிறப்பாக இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறு மறையும். பார்ட்னர்களிடையே ஒற்றுமை ஏற்படும். மாதக்கடைசியில் எதிர்மறையான போக்கு ஏற்படும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஜன.28க்கு பிறகு அலைச்சல் குறையும். பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பர்கள், மாத பிற்பகுதியில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைத்தால் சிக்கல் வரலாம்.

கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு, புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு ஓரளவு ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பதவி கிடைக்க தாமதமாகும்.

மாணவர்களுக்கு ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் படிப்பில் பின்தங்கும் நிலை தெரிவதால், மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் சுமாரான வருமானம் காண்பர். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கால்நடைகள் கைகொடுக்கும்.

பெண்கள் சிறப்பான பலன் காணலாம். கன்னியருக்கு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குழந்தைகளின் நடத்தையைகண்காணிப்பது நல்லது. ஜனவரி 29,30ல் நல்ல தகவல் எதிர்பார்க்கலாம். புத்தாடை, நகை வாங்கலாம்.

நல்ல நாள்: ஜனவரி 16, 17, 20, 21, 22, 27, 28, 29, 30 பிப்ரவரி 5, 6, 7, 8, 9, 12.

கவன நாள்: ஜன. 31, பிப். 1, 2 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு: கேது, சனி கிரகங்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாளை வணங்குங்கள். இதனால் கிரகதோஷம் குறைந்து நன்மை அதிகரிக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:52 am

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வாகன யோகம்!
ஜனவரி 13,2015

தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) QZlv0FmTJmWYlCfYKOcw+TN_20150113175239409415
பெரியவர்களுக்கு மதிப்பளிக்கும் தனுசு ராசி அன்பர்களே!

சுக்கிரன் ஜன. 23ல் இடம்மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையளிப்பார். செவ்வாயால் பிப். 10 வரை நன்மை உண்டாகும். சந்திரன் பெரும்பாலான நாட்கள் சாதகமாக இருப்பதாலும் நன்மை உண்டு. மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செவ்வாயால் பக்தியுணர்வு மேம்படும். எடுத்த முயற்சியில் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. ஜன. 23 க்கு பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர். புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான பலன் கிடைக்கும். ஜன. 23 க்குள் அரசின் சலுகை கிடைக்கும். உங்கள் நேரடி பார்வையில் நிறுவனம் செயல்படுவது நல்லது. பணியாளர்களுக்கு பணிச்சுமை, வீண் அலைச்சல் ஜன. 23க்கு பிறகு மறையும். சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான நிலை காணலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். பிப். 10க்கு பிறகு அவப்பெயர் வரலாம். சக மாணவர்களுடன் வீண் விவாதம் கூடாது.

கலைஞர்கள் பெயரும், புகழும் தொடர்ந்து கிடைக்கப் பெறுவர். அரசிடம் விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் எளிதாக வந்து சேரும். அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மக்கள் நலப்பணியில் ஆர்வம் கூடும்.

விவசாயிகள் புதிய சொத்து வாங்கலாம். எள், பனை பொருள், மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு. கைவிட்டுப்போன பொருள் பிப். 10க்குள் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பைப் பெறுவர். பிள்ளைகளின் நலனில் ஆர்வம் காட்டுவர்.

நல்ல நாள்: ஜன. 15, 18, 19, 23, 24, 29, 30, 31, பிப். 1, 2, 7, 8, 9, 10, 11

கவன நாள்: பிப். 3, 4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3, 5 நிறம்: சிவப்பு, வெள்ளை

வழிபாடு: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். தினமும் ராமபிரானை வணங்குங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 11:53 am

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மதிப்பு கூடும்!
ஜனவரி 13,2015
தை மாத ராசி பலன் - (15.1.2015- 12.2.2015) RxU9qjhNRVC4VTGELHY4+TN_20150113175248972233
அமைதியை விரும்பும் மகர ராசி அன்பர்களே!

இந்த மாதக் கடைசியில் செவ்வாய் நற்பலனைக் கொடுப்பார். இதனால் Œமூக மதிப்பு மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியே. பொருளாதார வளம் உயரும். மேலும் சனி, கேது, குரு, சுக்கிரனின் பலன்களும் தொடர்ந்து கிடைக்கும். இதனால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். Œமூக மதிப்பு சிறப்பாக இருக்கும். புதனால் ஜன. 28 வரை செல்வாக்கு பாதிக்கப்படலாம். ஜன.23க்கு பிறகு பணவரவு இருக்கும். பிப். 8க்கு பிறகு கணவன்-மனைவி இடையே சிற்சில மனக்கசப்புகள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஜனவரி 23க்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். செவ்வாயால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமாய் இருக்கவும். போட்டியாளர் வகையில் தொல்லை வரலாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மாதஇறுதியில் இந்த நிலை மாறி பொருளாதார வளம் மேம்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பலன் கிடைக்கும். ஜன.28க்குள் இடமாற்றம் காணலாம். பொருள் விரயம் ஏற்படும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். பெண்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு தற்போதைக்கு உரிய பலன் கிடைக்காவிட்டாலும், உங்கள் கடினமான மனப்பயிற்சிக்குரிய பலன் பின்னால் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக இருந்த தொய்வு நிலை மாதக்கடைசியில் மாறும். நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வகையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். புத்தாடை, நகை வாங்கலாம். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

நல்ல நாள்: ஜன. 15, 16, 17, 20, 21, 22, 25, 26, 31, பிப். 1, 2, 3, 4, 10, 11, 12.

கவனநாள்: பிப். 5, 6

அதிர்ஷ்ட எண்: 4, 6 நிறம்: மஞ்சள்,வெள்ளை

வழிபாடு: ராகு சாதகமற்ற நிலையில் உள்ளதால், காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். பைரவர் வழிபாடும் உங்களை முன்னேற்றும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக