புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 4%
prajai
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 4%
viyasan
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 2%
Rutu
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 2%
சிவா
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
10 Posts - 83%
Rutu
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_m10 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் வெற்றி! - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 19, 2015 12:21 am


முன்னொரு காலத்தில் அறிவழகாபுரியை அறிவழகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த வீரனாகவும், கல்வி, கேள்விகளில் வல்லவனாகவும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் பாராட்டினான். அவன் ஆட்சியில் தர்மம் தழைத்தோங்கியது.மன்னன் அறிவழகனின் வீரதீர, பராக்கிரம செயல்களைக் கண்டு அண்டை நாட்டு மன்னர்களும் அஞ்சுவர்.

பக்கத்து நாடான செருமாந்தபுரியை செறிவழகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனும் சிறந்த அறிவாளி. ஆனால், செருக்கு மிக்கவன். அவன் பலமுறை அறிவழகாபுரியின் மீது படை எடுத்து மன்னன் அறிவழகனிடம் போரிட்டு தோற்றுப் போனான். அறிவழகன் புகழ் தரணி எங்கும் பரவுவதை அறிந்து தீரா பகையுடன் பொறாமை கொண்டு நெஞ்சம் நொந்து வெந்து வருந்தினான். வீரத்தால் வெல்ல முடியாத அறிவழகனை தனது அறிவுத் திறந்தால் வெல்லலாம் என நினைத்தான். அதனால், அவன் அறிவழகனை தன்னுடன் போட்டிக்கு வருமாறு அழைத்தான். அறிவழகனும் அதற்கு ஒப்புக்கொண்டு தனது நாட்டு தர்பாரில் போட்டி நடக்கும் எனத் தெரிவித்தான். போட்டி குறித்து நாட்டு மக்களிடையே முரசு கொட்டி அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் மாலையில் தென்றலின் சுகத்தை அனுபவித்தவாறு செறிவழகனை அறிவுத்திறத்தால் எவ்வாறு வெல்லலாம் என்று யோசித்தவாறு அரண்மனை பூஞ்சோலையில் உலாவிக் கொண்டிருந்தான் மன்னன் அறிவழகன். அப்போது அங்கு ஒரு தேனீ அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதைக் கண்ட அறிவழகன் சினம் கொண்டு காவலரை அழைத்தான். உடனே தேனீ,""அரசே நான் வழி தவறி இங்கு வந்து விட்டேன், என்னை மன்னியுங்கள்.'' என்று கெஞ்சியது. உயிர்களிடத்து அன்பு கொண்ட அறிவழகன் ""சரி பிழைத்துப் போ'' என்றான். அப்போது தேனீ, ""மிக்க நன்றி அரசே. நான் உங்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவுவேன்'' என்று சொல்லி அங்கிருந்து பறந்தது. போட்டிக்குரிய நாளும் வந்தது. இரு நாட்டு மக்களும் அரசு தர்பாரில் கூடியிருந்தனர். செறிவழகன் தனது நாட்டுக் கொடியை ஏந்தியவாறு முரசரைந்து தர்பார்க்குள் நுழைந்தான். ""உன்னை என் படைத் திறத்தால் வெல்ல முடியவில்லை. அறிவால் வெல்லலாம் என்று இங்கு வந்துள்ளேன். நீ இந்தப் போட்டியில் தோற்றால் நீ நாட்டை விட்டே ஓடி விட வேண்டும், வென்றால் நான் உனக்கு அடிமை. என்ன சம்மதமா? போட்டிக்கு ஆயத்தமா?'' என்று ஆணவத்துடன் கேட்டான். அறிவழகனும் போட்டிக்குத் தயார் என்றான்.

""முதலில் விடுகதை..., இதைக் கண்டுதான் பல முறை தோல்வியுற்ற மன்னன் ஒருவன் மீண்டும் போரிட்டு வென்றான்..., விடாமுயற்சிக்கு இது எடுத்துக்காட்டு. அது பஞ்சுபோல் இருக்கும் பஞ்சல்ல, நூல் போல் இருக்கும் நூலல்ல, உடை போலிருக்கும் உடையல்ல, நெய்தவனுக்கே அது வீடு. அது எது?'' என்று கேட்டான் செறிவழகன். மன்னர் அறிவழகன் சற்றும் யோசியாமல் ""சிலந்தி'' என்றான். உடனே செறிவழகன். ""மனிதர்கள் முகத்தில் செலவில்லாமல் அணிந்திருக்கும் நகை எது?'' எனக் கேட்டான். உடனே அறிவழகன் அடுத்த நொடியே ""புன்னகை'' என்றான். அடுத்த கேள்வி, ""கரையில்லாதது மட்டுமல்ல இது கரையாத செல்வமும் கூட அது எது?'' என்றான் செறிவழகன் உடனே ""கல்வி'' என்று புன்னகைத்தவாறே பதிலளித்தாள் அறிவழகன். அறிவழகாபுரி மக்கள் மன்னனின் அறிவுத் திறத்தைக் கண்டு கைகொட்டி ஆர்ப்பரித்தனர். மன்னன் அறிவழகன் சற்றும் யோசிக்காமல் கூறிய விடைகளைக் கேட்டு செறிவழகன் அசந்து போனான்.

பின்னர், செறிவழகன் தன் பக்கதிலிருந்த இருட்டறையைக் காட்டி, ""இந்த அறையில் நீ சற்றும் இடைவெளி இல்லாமல் ஏதேனும் இட்டு நிரப்ப வேண்டும். சிறு இடைவெளிகூட இருக்கக் கூடாது'' என்றான். மன்னன் அறிவழகன் சற்று நேரம் யோசித்தான். அதைக் கண்ட செருமாந்தபுரி மக்கள் சிரித்தனர். பின்னர் அறிவழகன், தனது மந்திரி ஒருவரை அழைத்தான். ""மன்னா, இந்த அறை முழுவதுமாக நமது நாட்டில் அதிகமாக விளைந்துள்ள நெல்மணிகளைக் கொண்டு நிரப்பலாமா? அல்லது பஞ்சுகளைக் கொண்டு நிரப்பலாமா?'' என்று கேட்டார் மந்திரி. ""மந்திரியாரே. பதட்டம் கொள்ளாதீர், அந்த திருக்கோயிலிலிருந்து அகல் விளக்கை கொண்டு வாரும்'' என்றான். உடனே மந்திரி ஓடிச் சென்று அகல்விளக்கை கொண்டு வந்தான். அதை அந்த இருட்டறையில் வைத்தான் மன்னன் அறிவழகன். அவ்வளவுதான். அந்த அறையில் இருள் மறைந்து, ஒளி நிறைந்தது. எங்கும் இடைவெளி இல்லாமல் ஒளியைக் கொண்டு அந்த அறை முழுவதும் நிரப்பிய அறிவழகனின் அறிவாற்றலைக் கண்டு மன்னர் செறிவழகன் வியந்தான். மன்னன் அறிவழகனின் அறிவுத் திறத்தை கண்ட இரு நாட்டு மக்களும் கைதட்டி எழுந்து நின்று தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். செறிவழகனின் முகம் வாடியது.

பொறுமையிழந்த செறிவழகன் சற்று கோபமாக, ""இப்போது நான் வைக்கும் போட்டியில் உன்னால் ஜெயிக்க முடியாது'' என்றான். அதைக் கேட்டு அறிவழகன்,
""என்ன போட்டி? ...., சொல்'' என்றான். உடனே செறிவழகன்,"" யாரங்கே? இங்கே வாரும்!'' என்று அழைத்தான். அப்போது அங்கே வந்த செருமாந்தபுரியைச் சேர்ந்த கைவினைஞர்கள் ஆயிரம் அழகான மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ண வண்ணப் பூக்களை கையிலே ஏந்தியவாறு வந்தனர். அந்த மலர்களின் அழகும், நறுமணமும் மக்களுக்கு இனிமையாகக் காட்சி அளித்தன. ""அறிவழகா, எங்கள் கைவினைஞர்கள் திறம் மிகப் படைத்தவர்கள். இவர்கள் வைத்துள்ள அழகான ஆயிரம் மலர்களின் ஒரே ஒரு மலர் மட்டும் இயற்கையானது. அது எது என்று உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?'' என்று இறுமாப்புடன் கேட்டான். அதைக் கேட்ட அறிவழகன் சற்று நிலைகுலைந்து போனான். ஏனெனில் கைவினைஞர்கள் வைத்துள்ள அனைத்து மலர்களுமே இயற்கையானது போலத்தான் இருந்தன. சற்று யோசித்தான் அறிவழகன். அப்போது செறிவழகன். ""என்ன நீ முட்டாள் என ஒப்புக்கொள்கிறாயா?'' எனக் கேட்டவாறு, ஹா...ஹா என சிரித்தான். ""எனது நாட்டு கைவினைஞர்கள் உம் நாட்டு கைவினைஞர்களைவிட அதிக திறம் படைத்தவர்கள் என்பதை இப்போதாவது உன்னால் உணர முடிகிறதா?'' என்று ஆணவத்துடன் கேட்டான்.

அறிவழகன் அந்த மலர்களைக் கையால் தொட்டுப் பார்த்தான். அந்த மலர்கள் இயற்கையான மலர்களைப்போல் மெல்லியதாக மென்மையாகத்தான் இருந்தது. நுகர்ந்தும் பார்த்தான். இயற்கையான மலருக்குள்ள வாசம்தான் எல்லா மலருள்ளுமிருந்து வந்தது. ""உன்னால் இந்தக் பூக்களில் எது இயற்கையான மலர் என்பதை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையா, தோல்வியை ஒப்புக்கொள்'' என்றான் செறிவழகன் சற்று செருக்குடன். மன்னன் அறிவழகன் சற்று குழம்பிப் போனான். அப்போது அங்கே ரீங்காரம் ஓசை கேட்டது. அந்த ஓசையை அறிவழகன் மட்டுமே அறிந்திருந்தான். ""மன்னா! கவலைப்படாதே அன்று நீ என்னைக் கொல்லாமல் விட்டாய். அதற்காக உனக்கு நான் கைமாறு செய்ய இங்கு வந்துள்ளேன். நான் எந்த மலர் மீது சென்று அமருகிறனோ அதுதான் இயற்கையான மலர். நீ அந்த மலரை செறிவழகனிடம் சுட்டிக்காட்டு'' என்றது. அதேபோன்று மன்னன் தேனீ அமர்ந்த மலரைச் சுட்டிக்காட்டி, ""இதுதான் இயற்கையான மலர்'' என்று அறிவழகன் சொன்னான். ""அதுதான் இயற்கையான மலரா?'' என்று செறிவழகன் தொங்கிய முகத்துடன் கைவினைஞர்களிடம் கேட்டான். ""ஆமாம், மன்னா'' என்று தலைகுனிந்தவாறு சொன்னார்கள் கைவினைஞர்கள். தேனீக்கு நன்றி சொன்னான் அறிவழகன்.

செறிவழகன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, மன்னா! நீ அறிவாளி என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் எனது நாட்டை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன். இன்று முதல் உன்னடிமை என்றான். மன்னன் அறிவழகன், செறிவழகா, போட்டி இருக்கலாம். ஆனால், பொறாமைதான் கூடாது. நீயே உன் நாட்டை ஆள். மக்களிடம் பழகு. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாதே என்றான்.

-பா.இராதாகிருஷ்ணன்




 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 19, 2015 5:36 am

 அன்பின் வெற்றி! - சிறுவர்கதை 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக