ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

+2
மாணிக்கம் நடேசன்
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Sun Jan 18, 2015 1:39 am

First topic message reminder :

ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதி

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக வக்கீல் எஸ்.வளர்மதி போட்டியிடுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள 50 பேர் கொண்ட குழுவையும் அவர் அறிவித்துள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி, ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வக்கீல் வளர்மதி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, பிப்ரவரி 13-ந் தேதி நடைபெற உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைச்செயலாளர் வக்கீல் எஸ்.வளர்மதி தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

50 பேர் கொண்ட குழு

அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் உள்பட 50 பேர் கொண்ட குழுவையும் அவர் நியமித்துள்ளார்.

அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க.வினரும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளார்.

வாழ்த்து பெற்றார்

இதற்கிடையே ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வாழ்க்கை குறிப்பு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள எஸ்.வளர்மதிக்கு 48 வயது ஆகிறது. வழக்கறிஞரான இவர் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் ஆகவும், மாநகராட்சி 58-வது வார்டு கவுன்சிலர் ஆகவும் இருக்கிறார்.

இவரது கணவர் பெயர் சீதாராமன். இவர் பாய்லர் ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வளர்மதி- சீதாராமன் தம்பதியினருக்கு ஹரி, ஸ்ரீராம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கல்லூரி படிப்பை முடித்துவிட்ட ஹரி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஸ்ரீராம், கல்லூரியில் படித்து வருகிறார். வளர்மதி திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் வசித்து வருகிறார். இவர் முத்தரையர் இனத்தை சேர்ந்தவர்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by மாணிக்கம் நடேசன் Mon Jan 19, 2015 7:03 pm

தி மு காவுக்கு ஆதரவா இந்த ராமதாசு என்னமோ அறிக்கை விட்டுகிட்டு இருக்காரு, என்னா சங்கதின்னு கேளுங்க மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty ஸ்ரீரங்கம் தேர்தலை மையமாக எதிர்பார்த்த, எந்த ஆதரவும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து கிடைக்கவில்லை. தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்க யாருமே முன்வராததால், கருணாநிதி விரக்தி அடைந்துள்ளார்.

Post by kshanmuganathan Thu Jan 22, 2015 5:02 am

ஸ்ரீரங்கம் தேர்தலை மையமாக வைத்து, தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்கி விடலாம் என்ற வியூகத்தை, தி.மு.க., வகுத்திருந்தது. அதை செயல்படுத்தும் திட்டத்துடன், இத்தொகுதியில் முதல் கட்சியாக களம் இறங்கியது. ஆனால், அக்கட்சி எதிர்பார்த்த, எந்த ஆதரவும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து கிடைக்கவில்லை. தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்க யாருமே முன்வராததால், கருணாநிதி விரக்தி அடைந்துள்ளார். கடும் நெருக்கடியில் தி.மு.க., சிக்கியுள்ளது.

தற்போதைய அரசியல் சூழலில், ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ள கட்சிகளில், ஒருமித்த கருத்துடைய தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்று திரட்டி, பலமிக்க புதிய அணியை ஏற்படுத்த வேண்டும் என, தி.மு.க., திட்டமிட்டது. அதற்கான களமாக, ஸ்ரீரங்கத்தைப் பயன்படுத்த தி.மு.க., எண்ணியது. அந்த எண்ணமும், எதிர்பார்ப்பும்
இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.அ.தி.மு.க., எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் உள்ள, பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள், தேர்தலை புறக்கணித்துள்ள போதிலும், தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டன.

புதிதாக வந்துள்ள த.மா.கா.,(மூ) - தே.மு.தி.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க.,வை ஆதரிக்க தயாராக இல்லை. கடைசியாக, காங்கிரஸ் ஆதரவைப் பெற நடந்த முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டதாக தெரிகிறது. தி.மு.க., வுக்கு ஆதரவு அளிக்க, தமிழக காங்கிரஸ் தலைமை விரும்பிய போதிலும், கட்சி மேலிடம் கைவிரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அவசர ஆலோசனை: இதனால் ஏற்பட்டுஉள்ள
நெருக்கடியை போக்க, தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள, 15க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலர்களை அழைத்து, சென்னை யில் நேற்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து, தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகள், தி.மு.க.,வை ஆதரிக்க முன்வரும் என்று, முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான், தி.மு.க., வேட்பாளரை, பொது வேட்பாளராகக் கருதி ஆதரவு தர வேண்டும் என, கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்த கட்சிகள் கூட, இந்த அறிக்கைக்குப் பின், தி.மு.க.,வை ஆதரிக்க முன்வரவில்லை. அதுகூட பரவாயில்லை. களத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே மட்டுமே போட்டி என்ற நிலை உருவானால் போதும் என்று எதிர்பார்த்தோம்.

பா.ஜ., தலைவர் சந்திப்பு:அதிலும் இப்போது சிக்கல் வந்து விட்டது. பா.ஜ., தலைவர் தமிழிசை, விஜயகாந்தை சந்தித்து, போட்டியிடுவது குறித்து பேசியுள்ளார். பா.ஜ., ஆதரவுடன், தே.மு.தி.க., போட்டியிடுமானால், அக்கட்சி கணிசமான ஓட்டுகளை பெற வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சி களின் சார்பில், மார்க்சிஸ்ட் போட்டி யிடுவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
இது நடந்தால், தி.மு.க., கூட்டணி யில், தற்போது உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலை மாறலாம் என, அஞ்சப்படுகிறது.இதுபோன்ற குழப்பமான சூழ்நிலையில், தி.மு.க.,வின் ஓட்டுகள், எந்தவிதத்திலும் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே, மாவட்டச் செயலர்களுடன்
ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின். இவ்வாறு, அந்த

Advertisement
தி.மு.க., நிர்வாகி தெரிவித்தார்.
சம்பாதித்ததை செலவு பண்ணுங்க!ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., பணிக்குழு உறுப்பினர்களின்
ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள்
20 பேரிடம், தேர்தல் செலவு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:ஆளுங்கட்சிக்கு இணையாக, பணத்தால் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே, வெற்றி பெற முடியும். அதனால்,
சம்பாதித்ததை செலவு பண்ணுங்க. கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டு குறைந்து விடக்கூடாது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால், அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என, அ.தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அதை முறியடிக்க, சொத்து குவிப்பு வழக்கின் உண்மை
நிலவரங்களை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். ஓட்டுகள் குறைந்தால், பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by T.N.Balasubramanian Fri Jan 23, 2015 11:51 am

கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாக, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:ஆளுங்கட்சிக்கு இணையாக, பணத்தால் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே, வெற்றி பெற முடியும். அதனால்,
சம்பாதித்ததை செலவு பண்ணுங்க.

அர்த்தத்தை, ஆழ்ந்துப் பார்த்தால் அனர்த்தம் ஆகிவிடும் போல் உள்ளதே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Wed Feb 11, 2015 10:00 pm

அ.தி.மு.க. அரசுக்கு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாடம் புகட்டவேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய அ.தி.மு.க. அரசுக்கு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் பாடம் புகட்டவேண்டும் என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

2–வது நாளாக பிரசாரம்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக என்.ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரசாரத்தை தொடங்கினார். நேற்று 2–வது நாளாக அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், அல்லூர், ஜீயபுரம், கொடியாலம் கேட், திருப்பராய்த்துறை, பெருகமணி, சிறுகமணி, பெட்டவாத்தலை, கருப்பூர், குழுமணி, கோப்பு, எட்டரை, வியாழன்மேடு, கொய்யாதோப்பு ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று வீதி, வீதியாக பிரசாரம் செய்தார்.

இந்த பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–

பிரசாரத்திற்கு ஏன் வரவில்லை?

1991 முதல் 1996–ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்–அமைச்சர் பதவி வகித்தபோது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சொத்துக்களை குவித்தார். இதற்காக தொடரப்பட்ட வழக்கில் தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள ஆனந்த், ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இப்போது அவர் மீண்டும் நிற்கிறார்.

ஆனால் ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாமல் போனது மட்டும் இன்றி பிரசாரத்திற்கு கூட வரவில்லை. குற்ற வழக்கில் தண்டனை அடைந்ததால் அவர் தேர்தலில் நிற்க முடியாது என்பது தான் சட்டமாகும். ஆனால் அவர் பிரசாரத்திற்கு செல்லக்கூடாது என்று எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.

கடிதத்தில் ஒப்புதல் வாக்குமூலம்

குற்றவாளி என்ற முகத்தோடு தேர்தல் களத்திற்கு வர விரும்பாத ஜெயலலிதா வாக்காளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் சதி, விதி காரணமாக பிரசாரத்திற்கு வரமுடியவில்லை என கூறி இருக்கிறார்.

சதி என்றால் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சேர்ந்து செய்த கூட்டு சதி, விதி என்பது பெங்களூர் தனி கோர்ட்டு அவருக்கு அளித்த தீர்ப்பு. இந்த இரண்டையும் ஜெயலலிதா அந்த கடிதத்தில் ஒப்புதல் வாக்குமூலமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

2016–ல் தி.மு.க. ஆட்சி

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போவது இல்லை. தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்று விட்டால் நாளைக்கே தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடும் என்பதும் அல்ல. 2016 சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். அதற்கான அச்சாரமாக இந்த தேர்தல் முடிவு இருக்கவேண்டும். எனவே தி.மு.க. ஆட்சியில் இந்த பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை தவிர்த்து அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீரங்கம் தொகுதியில் முகாமிட்டு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம், 3 ஆயிரம் என பணம் கொடுத்து உள்ளனர். பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி ஏமாற்றி விடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு வாக்காளர்கள் இடம் கொடுத்து விடக்கூடாது.

விலைவாசி உயர்வு

தி.மு.க. ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. தி.மு.க. ஆட்சியில் துவரம்பருப்பு கிலோ ரூ.60, தற்போது ரூ.88, உளுந்தம்பருப்பு தி.மு.க. ஆட்சியில் கிலோ ரூ.46 இப்போது கிலோ 92. ரூ.38–க்கு விற்கப்பட்ட புளி தற்போது ரூ.90 ஆக உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் கிலோ ரூ.84–க்கு விற்கப்பட்ட நல்லெண்ணை தற்போது சதம் அடித்து 100 ரூபாயை எட்டி விட்டது. பால் விலை சொல்லவே வேண்டாம். 3 முறை உயர்த்தப்பட்டது. பஸ் கட்டணமும் உயர்த்தப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய அ.தி.மு.க. அரசுக்கு ஸ்ரீரங்கம் வாக்காளர்கள் பாடம் புகட்டவேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலினுடன் வேட்பாளர் ஆனந்த் கும்பிட்டபடியே நின்றார். மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் நேரு, துணை செயலாளர் குடமுருட்டி சேகர், மாநகர செயலாளர் அன்பழகன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கதிர்வேல் உள்பட நிர்வாகிகள் சென்று இருந்தனர்.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by ayyasamy ram Wed Feb 11, 2015 10:40 pm

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 103459460
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Fri Feb 13, 2015 12:07 am

ஸ்ரீரங்கம் தேர்தலில் கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை: தலைமை தேர்தல் அதிகாரி

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தன. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் தேர்தலில் கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஸ்ரீரங்கம் தேர்தலில் யாராவது கள்ள ஓட்டு போட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். வாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம். 741 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாளை பயன்படுத்தப்பட உள்ளது. தமிழக போலீசார் 2 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக தேர்தலையொட்டி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து முடித்துவிட்டதாக திமுக புகார் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Mon Feb 16, 2015 3:08 pm


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பா.ஜனதா, கம்யூ. கட்சிகள் டெபாசிட் இழக்கின்றன

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி முன்னிலை வகித்து வருகிறார். அவர் 11வது சுற்று முடிவில் 73 ஆயிரத்து 564 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் 24 ஆயிரத்து 749 வாக்குகளும், பா.ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் 2 ஆயிரத்து 776 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் அண்ணாதுரை 789 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட தற்போது போட்டியிடும் வளர்மதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார்.

கடந்த தேர்தலில் ஜெயலலிதா 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த எண்ணிக்கையை 11–வது சுற்று முடிவிலேயே வளர்மதி தாண்டிவிட்டார். இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வளர்மதி அமோக வெற்றி பெறுகிறார்.

இதற்கிடையில் பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் 11–வது சுற்று முடிவில் முறையே 2 ஆயிரத்து 776, 789 வாக்குகளே பெற்றுள்ளனர். இதனால் அந்த இரு கட்சிகளும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட்டை பெற வேண்டும் என்றால் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் 1 பங்கு வாக்குகள் பெற வேண்டும். அந்த எண்ணிக்கையை அடைந்து தி.மு.க. டெபாசிட்டை பெறுகிறது.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Mon Feb 16, 2015 3:09 pm

14.59 PM: 16-வது சுற்று முடிவில், திமுகவை விட 66,735 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

14.58 PM: 16-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,06,184,திமுகவின் என்.ஆனந்த் - 39,449, பாஜகவின் சுப்பிரமணியம் - 3633, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1089.

14.49 PM: 15-வது சுற்று முடிவில், திமுகவை விட 63,825 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

14.47 PM: 15-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 1,00,749,திமுகவின் என்.ஆனந்த் - 36,924, பாஜகவின் சுப்பிரமணியம் - 3419, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 1015.

14. 35 PM: 14-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 94,278, திமுகவின் என்.ஆனந்த் - 34,052, பாஜகவின் சுப்பிரமணியம் - 3235, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 938

14.30 PM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை தங்கள் கட்சி புறக்கணித்தது நியாயமானதே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். |ஸ்ரீரங்கம் தேர்தலை காங். புறக்கணித்தது நியாயமே: இளங்கோவன்|

14.20 PM: 13-வது சுற்று முடிவில், திமுகவை விட 56,975 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

14.15 PM: 13-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 88,013, திமுகவின் என்.ஆனந்த் - 31,038, பாஜகவின் சுப்பிரமணியம் - 3104, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 904

13.52 PM: 12-வது சுற்று முடிவில், திமுகவை விட 53,102 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

13.45 PM: 12-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 80,864, திமுகவின் என்.ஆனந்த் - 27,762, பாஜகவின் சுப்பிரமணியம் - 2,937, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 868

13.00 PM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது என பாஜக வேட்பாளர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். |ஸ்ரீரங்கம் பிரச்சாரத்தை விஜயகாந்த் புறக்கணித்திருக்கக் கூடாது|

12.35 PM: 11-வது சுற்று முடிவில், திமுகவை விட 48,815 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக

12.30 PM: 11-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 73,564, திமுக - 24,749, பாஜகவின் சுப்பிரமணியம் - 2,763, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 780

12.30 PM: கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி. |வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி|

12.25 PM: 10-வது சுற்று முடிவில், திமுகவை விட 45,504 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக

12.20 PM: 10-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 67,296, திமுக - 21,792, பாஜகவின் சுப்பிரமணியம் - 2,536, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 736

12.16 PM: சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 10-வது சுற்று முடிவில் 749 வாக்குகள் பெற்றுள்ளார்.

12.15 PM: 9-வது சுற்று முடிவில், திமுகவை விட 40,073 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக

12.10 PM: 9-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 60,134, திமுக - 20,062, பாஜக - 2,035, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 672 வாக்குகள் பெற்றுள்ளன.

11.47 AM: 8-வது சுற்று முடிவில், திமுகவை விட 35,177 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

11.45 AM: 8-வது சுற்று முடிவில், கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 53,586, திமுகவின் என்.ஆனந்த் - 18,409, பாஜகவின் சுப்பிரமணியம் - 1,715, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 573

11.44 AM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்து ஆளும் அதிமுக வாக்குகளைப் பெற்றுள்ளது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு. |ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலத்துக்கு வெற்றி: தமிழிசை|

11.35 AM: 7-வது சுற்று முடிவில், திமுகவை விட 30,078 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

11.32 AM: 7-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுகவின் எஸ்.வளர்மதி - 45,545, திமுகவின் என்.ஆனந்த் - 15,467, பாஜகவின் சுப்பிரமணியம் - 1418, மார்க்சிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை - 451

11.16 AM: 6-வது சுற்று முடிவில், திமுகவை விட 24,923 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

11.15 AM: 6-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 38,784, திமுக - 13,861, பாஜக - 1180, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 384

10.55 AM: 5-வது சுற்று முடிவில், திமுகவை விட 19,987 வாக்குகள் முன்னிலை வகிக்கிறது அதிமுக.

10.55 AM: 5-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 32,066, திமுக - 12,079, பாஜக: 890, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 311

10.50 AM: 4-வது சுற்று முடிவில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள்: அதிமுக - 24,888, திமுக: 9.414, பாஜக: 671, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 244

10.32 AM: 3-வது சுற்று முடிவில் முன்னிலை நிலவரம்: அதிமுக: 19137, திமுக: 6740, பாஜக: 513, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: 179

10.15 AM: 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

10.10 AM: தொடர்ந்து அதிமுக முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10.00 AM: 2-வது சுற்று முன்னிலை நிலவரம் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி- 12233 வாக்குகள், திமுக வேட்பாளர் என்.ஆனந்த்- 4140 வாக்குகள், பாஜக வேட்பாளர்- 351 வாக்குகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 83 வாக்குகள் பெற்றுள்ளனர்.

9.45 AM: 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி- 5999 வாக்குகள் பெற்றுள்ளார்.

9.35 AM: இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக முன்னிலை.

9.32 AM: அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி 4284 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

8.35 AM: முதல் சுற்று முடிவில் அதிமுக 4284 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

8.30 AM: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்: அதிமுக: 6234, திமுக: 1950 பாஜக: 170 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: 27

8.25 AM: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 81.83% வாக்குகள் பதிவாகின. மொத்தம் பதிவான வாக்குகள்: 2,21,172.

8.20 AM: தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டது. அதில்,ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. அதுவும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பதிவாகியிருந்தது.

8.05 AM: கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா அவரை எதிர்த்துப் போடியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்தை 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

8.03 AM: வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளாக நடைபெறுகிறது.

8.00 AM: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள்:

வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் என 3 பேர் வீதம், மொத்தம் 42 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி என்.கே.போயம் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். இவர், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி மற்றும் அலுவலர்களுடன் நேற்று வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் பார்வையிட்டார்.

மூன்று அடுக்கு பாதுகாப்பு:

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் உள்ளூர் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தியும், தடுப்புகளை அமைத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by சிவா Mon Feb 16, 2015 3:09 pm

வாக்கு வித்தியாசம்: ஜெயலலிதாவை முந்தினார் வளர்மதி

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி.

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா, தன்னை எதிர்த்துப் போடியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்தை விட 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலலிதா மொத்தம் 1,05,328 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் என்.ஆனந்த் மொத்தம் 63,480 வாக்குகள் பெற்றார். வெற்றி வாக்கு வித்தியாசம் 41,848 ஆகும்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், 10-வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் என்.ஆனந்த விட 48,815 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி முன்னிலை வகிக்கிறார். வெற்றி வாக்கு வித்தியாசத்தில் 10-வது சுற்றிலேயே ஜெயலலிதாவை முந்திவிட்டார் எஸ்.வளர்மதி.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. | படிக்க - நிகழ்நேரப் பதிவு: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் |


ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by M.Saranya Mon Feb 16, 2015 3:14 pm

நன்றி .....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் - Page 2 Empty Re: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum