Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
+2
anirudh
சிவா
6 posters
Page 1 of 1
தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் ஏழாவது மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புவாய் எழுந்தருளி இருக்கின்றார்.
இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.
தென்னகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் இது. சிவன் அமர்ந்த மலை என்பதாலும், கயிலாயத்திற்கு ஒப்பான தட்பவெட்ப நிலை இங்கு நிலவுவதாலும், இம்மலை தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது.
இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது.
மலையடிவாரத்தில் அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் அம்மன் செளந்திர நாயகியுடன் இணைந்து அருள்பாலித்து வருகிறார். இவருடன் விநாயகர், முருகன் என பிற கடவுள்களும் உள்ளனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து, மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊருக்கு பேருந்து வசதியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்.
இம்மலையின் மீது ஆண்களும், வயது (பருவம்) அடையா சிறுமிகளும், மூதாட்டிகளும் ஏறி வழிபடுகின்றனர். இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
மலை உச்சியில் பாறைகள் சூழ சிவப் பெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர். கையில் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஏறுதல் சிறப்பு ஆகும். மேலும் சுமார் 3000 ஆண்டுகளாக மலை வாழ் மக்களால் வழிபட்டு வரும் ஒரு தொன்மையான இடமாகும்.
### ஓம் நமச்சிவாய ###
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது. மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது.
சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.
பூண்டியை அடிவாரமாகக் கொண்ட வெள்ளியங்கிரியின் ஏழு மலைகளிலும் மனி்த உடலில் உள்ள மேற்கண்ட ஏழு சக்கரங்களின் அம்சங்கள், ஒவ்வொரு மலையிலும் ஒவ்வொரு ஆதாரத்தின் அம்சமா௧ அடங்கியுள்ளதாக் ஆன்மீகச் சான்றோர்கள சொல்வதுண்டு்.
சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும்.
முதல் மலை | பிரணவ சொரூபம் | வெள்ளிவிநாயகர் உறைவிடம் |
இரண்டாம் மலை | சுவாதிஷ்டானம் | பாம்பாட்டிச் சுனை |
மூன்றாம் மலை | மணிப்பூரகம் | அக்னிஅம்சம், கைதட்டிச்சுனை |
நான்காம் மலை | அநாகதம் | ஒட்டர் சித்தர் சமாதி உள்ள இடம் |
ஐந்தாம் மலை | விசுக்தி நிலை | பீமன் களியுருண்டை மலை |
ஆறாம் மலை | ஆக்ஞை நிலை | சேத்திழைக்குகை, ஆண்டி சுனை |
ஏழாவது மலை | சஹஸ்ரஹாரம் | சுயம்புலிங்கம், (வெள்ளியங்கிரி ஆண்டவர்) |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
நல்ல பதிவு அண்ணா... நான் ஈஷா யோகா மையம் செல்லும்போது, இந்த கோவிலின் அடிவாரத்தில் சென்று தரிசித்து வருவேன்...
மிக அருமையான இயற்கை சூழல் உள்ள இடம்.. வாழ்வில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும்...
மிக அருமையான இயற்கை சூழல் உள்ள இடம்.. வாழ்வில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
"ஓம் நமசிவாய , தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
படிக்கும் போதே சிலிர்க்கிறது தல , நேரில் அந்த அனுபவங்கள் இன்னும் அப்படியே பசுமையாக இருக்கிறது.
எனது தம்பி & அவர்கள் சகாக்கள் வருடா வருடம் ருத்ராக்ஷ கோட்டையை மாலையாக பாவித்து அணிந்து சித்திராபவுர்ணமி அன்று மலையேறி சென்று சிவபெருமானை தரிசித்து வருவார்கள். இதற்கென 30 முதல் 48 நாட்கள் விரதமிருந்து செல்வார்கள்.
அதை பார்த்து ஒருமுறை நானும் (அப்போது சென்னையில் வேலைசெய்து கொண்டிருந்தேன்) வருகிறேன் என்று ஆவல் மிகுதியால் சொல்லிவிட்டேன், அவர்கள் விரதமிருக்கணும் காலில் செருப்பு இல்லாமல் நடக்கணும் என்று ஏகப்பட்ட கட்டுபாடுகள். நான் அதெல்லாம் முடியாது கோவிலுக்கு செல்லும் முதல் நாள் ஊருக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் சரியென்று சொல்லிவிட்டார்கள்.
முதல் மலை ஏறும்போது ஒன்றும் தெரியவில்லை , அடுத்த மலை சிரமமாக ஆகிவிட்டது மூன்று அதை விட கஷ்டம், நாலு ஒருவழியா தாண்டிட்டேன். ஐந்தாம் மலையை கடக்கையில் உடம்பில் ஒரு துள்ளி கூட பலமில்லை ஒரு அடி எடுத்துவைத்தால் கெண்டைகால் சதை பந்து போல ஏறிவிடுகிறது அப்படியே படுத்துவிட்டேன். அனைவரையும் நீங்கள் மேலே சென்று வாருங்கள் நான் இங்கேயே படுத்துருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன், ஆனால் தம்பியின் நண்பர் ஒருவர் அதெல்லாம் முடியாது அண்ணே இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள் இன்னும் ஒரு மலை தான் அடுத்தமலை வெள்ளியங்கிரி ஆண்டவர் இருக்கிறார் அவர் பார்த்துகொள்வார் வாருங்கள் , எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒய்வு எடுத்துகொண்டு அப்புறமா நடங்கள் நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
எனக்கு வலியினாலும் , அசதியினாலும் கடுமையாக வெள்ளியங்கிரியாரை திட்டிவிட்டேன். என்னை இன்று அழைத்து கொள்ளவில்லை என்றால் இனியொருமுறை நினைத்துகூட பார்க்கமாட்டேன் அது இது இன்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிவிட்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பலம் வந்தது , அப்படியே நடந்து , தவழ்ந்து , உருண்டு ஒருவழியாக தென்கைலாயத்தை அடைந்தேன். இறைவனை பார்த்ததும் அந்த உணர்வு அப்பப்பா விவரிக்க முடியாதது
அந்த வருடம் இறுதியில் வெளிநாடு பயணம் , வாழ்க்கை முறையே மாறியது. எல்லாம் அந்த வெள்ளியங்கிரியாரின் மகிமை தான்.
இன்னொரு முறை எப்படியாவது சென்று இறைவனை தரிசித்துவிட வேண்டும் என்று மனதில் நீங்கா ஆசை இருக்கிறது , எப்போ என்னை அழைக்கிறாரோ தெரியவில்லை.
எனது நினைவுகளை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி தல
Re: தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
மேற்கோள் செய்த பதிவு: 1115705ராஜா wrote:
"ஓம் நமசிவாய , தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
படிக்கும் போதே சிலிர்க்கிறது தல , நேரில் அந்த அனுபவங்கள் இன்னும் அப்படியே பசுமையாக இருக்கிறது.
எனது தம்பி & அவர்கள் சகாக்கள் வருடா வருடம் ருத்ராக்ஷ கோட்டையை மாலையாக பாவித்து அணிந்து சித்திராபவுர்ணமி அன்று மலையேறி சென்று சிவபெருமானை தரிசித்து வருவார்கள். இதற்கென 30 முதல் 48 நாட்கள் விரதமிருந்து செல்வார்கள்.
அதை பார்த்து ஒருமுறை நானும் (அப்போது சென்னையில் வேலைசெய்து கொண்டிருந்தேன்) வருகிறேன் என்று ஆவல் மிகுதியால் சொல்லிவிட்டேன், அவர்கள் விரதமிருக்கணும் காலில் செருப்பு இல்லாமல் நடக்கணும் என்று ஏகப்பட்ட கட்டுபாடுகள். நான் அதெல்லாம் முடியாது கோவிலுக்கு செல்லும் முதல் நாள் ஊருக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களும் சரியென்று சொல்லிவிட்டார்கள்.
முதல் மலை ஏறும்போது ஒன்றும் தெரியவில்லை , அடுத்த மலை சிரமமாக ஆகிவிட்டது மூன்று அதை விட கஷ்டம், நாலு ஒருவழியா தாண்டிட்டேன். ஐந்தாம் மலையை கடக்கையில் உடம்பில் ஒரு துள்ளி கூட பலமில்லை ஒரு அடி எடுத்துவைத்தால் கெண்டைகால் சதை பந்து போல ஏறிவிடுகிறது அப்படியே படுத்துவிட்டேன். அனைவரையும் நீங்கள் மேலே சென்று வாருங்கள் நான் இங்கேயே படுத்துருக்கிறேன் என்று சொல்லிவிட்டேன், ஆனால் தம்பியின் நண்பர் ஒருவர் அதெல்லாம் முடியாது அண்ணே இவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள் இன்னும் ஒரு மலை தான் அடுத்தமலை வெள்ளியங்கிரி ஆண்டவர் இருக்கிறார் அவர் பார்த்துகொள்வார் வாருங்கள் , எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஒய்வு எடுத்துகொண்டு அப்புறமா நடங்கள் நானும் உங்களுடன் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.
எனக்கு வலியினாலும் , அசதியினாலும் கடுமையாக வெள்ளியங்கிரியாரை திட்டிவிட்டேன். என்னை இன்று அழைத்து கொள்ளவில்லை என்றால் இனியொருமுறை நினைத்துகூட பார்க்கமாட்டேன் அது இது இன்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிவிட்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பலம் வந்தது , அப்படியே நடந்து , தவழ்ந்து , உருண்டு ஒருவழியாக தென்கைலாயத்தை அடைந்தேன். இறைவனை பார்த்ததும் அந்த உணர்வு அப்பப்பா விவரிக்க முடியாதது
அந்த வருடம் இறுதியில் வெளிநாடு பயணம் , வாழ்க்கை முறையே மாறியது. எல்லாம் அந்த வெள்ளியங்கிரியாரின் மகிமை தான்.
இன்னொரு முறை எப்படியாவது சென்று இறைவனை தரிசித்துவிட வேண்டும் என்று மனதில் நீங்கா ஆசை இருக்கிறது , எப்போ என்னை அழைக்கிறாரோ தெரியவில்லை.
எனது நினைவுகளை பகிர வாய்ப்பளித்தமைக்கு நன்றி தல
உங்கள் அனுபவங்கள் என்னை ஒரு கணம் சிலிர்க்க வைத்தது தல.. இறைவன் உண்மையில் தி கிரேட்... வேறு என்ன சொல்ல...
நானும், என் மகளும் ஐந்து முக ருத்ராட்சம் போட்டுள்ளோம்... தினமும் ஓம் நம சிவாய என்று நூற்றி எட்டு முறை சொல்லி வருகிறோம்.. அந்த வார்த்தைக்கே அத்தனை பவர் என்று நான் கண் கூடாக காண்கிறேன்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: தென்கயிலாயம் - வெள்ளியங்கிரி மலை
நல்ல பதிவு நன்றி
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?
» திருக்கழுக்குன்றம்:-#தென்கயிலாயம் என வழங்கப்படும் திருக்கழுக்குன்றம்.
» திருக்கழுக்குன்றம்:-#தென்கயிலாயம் என வழங்கப்படும் திருக்கழுக்குன்றம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|