Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
3 posters
Page 1 of 1
'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
தமிழக அரசு துவக்கியுள்ள 'அம்மா' சிமென்ட் திட்டத்தால், வெளிமார்க்கெட்டில் சிமென்ட் விலை, மூட்டைக்கு, 100 ரூபாய் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானத் துறையினர் குமுறுகின்றனர்.
தமிழகத்தில், 'அம்மா' சிமென்ட் என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனையை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சியில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் டன் 'சிமென்ட்', ஏழு தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, 470 குடோன்களில் இருப்பு வைக்கப்படவுள்ளது.'ஒரு மூட்டை (50 கிலோ), 185 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மக்களுக்கு, 190 ரூபாய்க்கு விற்கப்படும்' என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டம், ஏழை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே நேரத்தில், கட்டுமானத் துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், பொது மக்களுக்கு அரசு சார்பில், 190 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை சிமென்ட், வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட 'சிமென்ட்'டை, கூடுதலாக, 100 ரூபாய்க்கு வெளி மார்க்கெட்டில் விற்பதற்கு அரசு மறைமுகமாக ஏற்பாடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படும் தமிழ்நாடு செட்டிநாடு சிமென்ட் மூட்டை, ஆந்திராவில், 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில், ஒரு மூட்டைக்கான, 40 ரூபாய், போக்குவரத்துச் செலவும் அடக்கம். அப்படியிருக்கையில், தமிழகத்தில், 100 ரூபாய் அதிகம் விற்பதற்கு, அரசின் மலிவு விலை 'சிமென்ட்' திட்டத்துக்கு, 100 ரூபாய் விலை குறைத்துக் கொடுப்பதே காரணமென்பதே இந்த குற்றச்சாட்டு.ஆயிரத்து 500 சதுர அடி பரப்புக்குள் புதிதாக வீடு கட்டுவோர்க்கு, 750 மூட்டைகள் சிமென்ட் வழங்கப்படும்; வீடுகள் பழுது பார்க்க, புதுப்பிக்க, 10 முதல் 100 மூட்டை வரை வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, இந்த திட்டம் பொருந்தாது என்று கூறியிருப்பது, நகரங்களில் வசிக்கும் நடுத்தர மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில், நிலம் வாங்கி வீடு கட்டுவதை விட, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (பிளாட்) வாங்குவதையே பெரும்பாலான நடுத்தர மக்கள் விரும்புகின்றனர். கட்டுமான நிறுவனங்களே இவற்றைக் கட்டினாலும், அவற்றை வாங்குவது நடுத்தர மக்கள் தான். இதன் காரணமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை, மேலும் பல மடங்கு உயரும்.அது மட்டுமின்றி, பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், 100 மூட்டை 'சிமென்ட்' தரப்படுமென்று கூறுவதன் மூலமாக, பெருமளவு ஊழல் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது, வீடு புதுப்பிப்பதாகக் கூறி, 190 ரூபாய்க்கு சிமென்ட் மூட்டைகளை வாங்கி, 290 ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்பதற்கான வாய்ப்பு அதிகமென்று கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும்கட்சியினர்க்கே இதிலும் முன்னுரிமை தரப்படுமென்றும் இவர் சந்தேகம் கிளப்புகிறார். இந்த திட்டத்தால், தனியார் கட்டுமானத் துறையினர் மட்டுமின்றி, அரசு சார்பில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்களைக் கட்டும் ஒப்பந்ததாரர்களின் நிலைமையும் மோசமாகி விடும். ஏனெனில், இவர்களும், 390 ரூபாய்க்கே, சிமென்ட் மூட்டை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஏற்கனவே, வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டட அனுமதிக்கான லஞ்சம் பல மடங்கு அதிகரிப்பு என பல காரணங்களால், கட்டுமானத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், மூட்டைக்கு, 100 ரூபாய் விலையேற்றம் என்பது, இத்துறையை மொத்தமாய் முடித்துக்கட்டிவிடுமென்று தனியார் கட்டுமானத் துறை நிறுவன நிர்வாகிகளும் குமுறுகின்றனர்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இத்திட்டம், கீழ்த்தட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதோடு, ஆளும்கட்சியின் ஓட்டு வங்கியைப் பலப்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும், இத்திட்டத்திலுள்ள குளறுபடிகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி, வாய் திறக்காமல் இருப்பது, இந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
கேரளாவுக்கு கடத்த வாய்ப்பு!
கேரளாவில் தற்போது ஒரு மூட்டை சிமென்ட், 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில், 190 ரூபாய்க்குக் கிடைக்கும் 'அம்மா' சிமென்ட் மூட்டைகளை வாங்கி, கேரளாவுக்குக் கடத்தி, 300 ரூபாய்க்கு விற்றாலே பெரும் லாபம் கிடைக்கும். இதனால், 'அம்மா' சிமென்ட் மூட்டை விற்பனை, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் துவங்கினால், கேரளாவுக்குக் கடத்துவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இப்போதே, இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, கட்டுமானத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
தமிழகத்தில், 'அம்மா' சிமென்ட் என்ற பெயரில், மலிவு விலை சிமென்ட் விற்பனையை, தமிழக அரசு துவக்கியுள்ளது. முதற்கட்டமாக, திருச்சியில் துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் டன் 'சிமென்ட்', ஏழு தனியார் சிமென்ட் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு, 470 குடோன்களில் இருப்பு வைக்கப்படவுள்ளது.'ஒரு மூட்டை (50 கிலோ), 185 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, மக்களுக்கு, 190 ரூபாய்க்கு விற்கப்படும்' என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திட்டம், ஏழை மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ள அதே நேரத்தில், கட்டுமானத் துறையினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏனெனில், பொது மக்களுக்கு அரசு சார்பில், 190 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை சிமென்ட், வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, 290 ரூபாய்க்கு விற்கப்பட்ட 'சிமென்ட்'டை, கூடுதலாக, 100 ரூபாய்க்கு வெளி மார்க்கெட்டில் விற்பதற்கு அரசு மறைமுகமாக ஏற்பாடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் வெளி மார்க்கெட்டில், 390 ரூபாய்க்கு விற்கப்படும் தமிழ்நாடு செட்டிநாடு சிமென்ட் மூட்டை, ஆந்திராவில், 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில், ஒரு மூட்டைக்கான, 40 ரூபாய், போக்குவரத்துச் செலவும் அடக்கம். அப்படியிருக்கையில், தமிழகத்தில், 100 ரூபாய் அதிகம் விற்பதற்கு, அரசின் மலிவு விலை 'சிமென்ட்' திட்டத்துக்கு, 100 ரூபாய் விலை குறைத்துக் கொடுப்பதே காரணமென்பதே இந்த குற்றச்சாட்டு.ஆயிரத்து 500 சதுர அடி பரப்புக்குள் புதிதாக வீடு கட்டுவோர்க்கு, 750 மூட்டைகள் சிமென்ட் வழங்கப்படும்; வீடுகள் பழுது பார்க்க, புதுப்பிக்க, 10 முதல் 100 மூட்டை வரை வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு, இந்த திட்டம் பொருந்தாது என்று கூறியிருப்பது, நகரங்களில் வசிக்கும் நடுத்தர மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில், சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில், நிலம் வாங்கி வீடு கட்டுவதை விட, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வீடுகள் (பிளாட்) வாங்குவதையே பெரும்பாலான நடுத்தர மக்கள் விரும்புகின்றனர். கட்டுமான நிறுவனங்களே இவற்றைக் கட்டினாலும், அவற்றை வாங்குவது நடுத்தர மக்கள் தான். இதன் காரணமாக, அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை, மேலும் பல மடங்கு உயரும்.அது மட்டுமின்றி, பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், 100 மூட்டை 'சிமென்ட்' தரப்படுமென்று கூறுவதன் மூலமாக, பெருமளவு ஊழல் நடக்கவும் வாய்ப்புள்ளது. அதாவது, வீடு புதுப்பிப்பதாகக் கூறி, 190 ரூபாய்க்கு சிமென்ட் மூட்டைகளை வாங்கி, 290 ரூபாய்க்கு வெளிமார்க்கெட்டில் விற்பதற்கான வாய்ப்பு அதிகமென்று கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் நாகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும்கட்சியினர்க்கே இதிலும் முன்னுரிமை தரப்படுமென்றும் இவர் சந்தேகம் கிளப்புகிறார். இந்த திட்டத்தால், தனியார் கட்டுமானத் துறையினர் மட்டுமின்றி, அரசு சார்பில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்களைக் கட்டும் ஒப்பந்ததாரர்களின் நிலைமையும் மோசமாகி விடும். ஏனெனில், இவர்களும், 390 ரூபாய்க்கே, சிமென்ட் மூட்டை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.ஏற்கனவே, வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டட அனுமதிக்கான லஞ்சம் பல மடங்கு அதிகரிப்பு என பல காரணங்களால், கட்டுமானத்துறையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், மூட்டைக்கு, 100 ரூபாய் விலையேற்றம் என்பது, இத்துறையை மொத்தமாய் முடித்துக்கட்டிவிடுமென்று தனியார் கட்டுமானத் துறை நிறுவன நிர்வாகிகளும் குமுறுகின்றனர்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள இத்திட்டம், கீழ்த்தட்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதோடு, ஆளும்கட்சியின் ஓட்டு வங்கியைப் பலப்படுத்துமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும், இத்திட்டத்திலுள்ள குளறுபடிகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி, வாய் திறக்காமல் இருப்பது, இந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
கேரளாவுக்கு கடத்த வாய்ப்பு!
கேரளாவில் தற்போது ஒரு மூட்டை சிமென்ட், 340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில், 190 ரூபாய்க்குக் கிடைக்கும் 'அம்மா' சிமென்ட் மூட்டைகளை வாங்கி, கேரளாவுக்குக் கடத்தி, 300 ரூபாய்க்கு விற்றாலே பெரும் லாபம் கிடைக்கும். இதனால், 'அம்மா' சிமென்ட் மூட்டை விற்பனை, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் துவங்கினால், கேரளாவுக்குக் கடத்துவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. இப்போதே, இதற்கான வேலைகள் நடந்து வருவதாக, கட்டுமானத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
kshanmuganathan- பண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010
Re: 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
விலை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு
காணப்பட வேண்டும்...
-
காணப்பட வேண்டும்...
-
Re: 'அம்மா' சிமென்ட் திட்டத்துக்காக வெளி மார்க்கெட் விலை 100 ரூபாய் அதிகரிப்பு: கட்டுமானத்துறையினர் பெரும் கொந்தளிப்பு!
சிமெண்ட் ஆலைக்கு அரசால் நட்டம் ஏற்படா வண்ணம் வெளி மார்க்கெட்டில் அதிகம்விற்று ஈடு கட்டித்தானே லாபம் காணமுடியும். அரசுக்கு 100ரீ குறைவாக கொடுத்து வெளி மார்க்கெட் விலை அதை ஈடு செய்தால்தான்.............................
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சிமென்ட் விலை உயர்வு: முதல்வரால் மட்டுமே தடுக்க முடியும்!
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
» உள்ளாட்சி துறைக்கு வழங்கும் அரசு சிமென்ட் விலை உயருது
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|