Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 !
2 posters
Page 1 of 1
லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 !
லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 ! (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.
![லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 ! WjQJjnR6S9OnvfWDH7js+LBS](https://www.filepicker.io/api/file/wjQJjnR6S9OnvfWDH7js+LBS.jpg)
அக்டோபர் இரண்டு என்றால் எல்லாருக்கும் காந்தியை ஞாபகம் வரும். இன்னொரு தலைவருக்கும் அக்டோபர் இரண்டு தான் பிறந்த நாள். அவர் லால் பகதூர் சாஸ்திரி. சாஸ்திரி படித்து பெற்ற பட்டம் - சாதி பெயர் இல்லை. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர்.
இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும். படகில் போக காசில்லாத நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரி படிக்கிற காலத்தில் விடுதலைப்போரில் மனிதர் பங்குகொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில் அடைக்கும் வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
திருமணம் செய்து கொண்டார் சாஸ்திரி. பெரும் வரதட்சணை பெறுவது வழக்கமாக இருந்த காலத்தில் கதராடை ஒன்று, ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே பெற்றுக்கொண்டார் .
அடிக்கடி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை போவது இவருக்கு வழக்கம். ஒரு முறை மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று பதினைந்து நாள் அனுமதி பெற்று வந்தார். மகள் அந்த காலம் முடிவதற்குள்ளாகவே இறந்து போனார். இன்னம் சில நாட்கள் பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறை சென்றார் சாஸ்திரி.
இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. எளிமை,நேர்மை இது தான் அவர். வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்துக்கொண்டவர். அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ,"இனிமேல் நம் வீட்டில், சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.
இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது தீர்க்கமாக வழிநடத்தியவர் . இந்தியாவின் எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரு இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை இவர் அளவுக்கு தையல்காரர் தைத்து கொடுத்தார்.
அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் சொன்னார்,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார்!" என்று . சாஸ்திரி மாதிரி உன்னத ஆத்மாக்கள் அரிதாகத்தான் அரசியலில் தோன்றுகிறார்கள்!
விக்கிபீடியா + ஹிந்து
![லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 ! WjQJjnR6S9OnvfWDH7js+LBS](https://www.filepicker.io/api/file/wjQJjnR6S9OnvfWDH7js+LBS.jpg)
அக்டோபர் இரண்டு என்றால் எல்லாருக்கும் காந்தியை ஞாபகம் வரும். இன்னொரு தலைவருக்கும் அக்டோபர் இரண்டு தான் பிறந்த நாள். அவர் லால் பகதூர் சாஸ்திரி. சாஸ்திரி படித்து பெற்ற பட்டம் - சாதி பெயர் இல்லை. எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர்.
இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்க செல்ல வேண்டும். படகில் போக காசில்லாத நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரி படிக்கிற காலத்தில் விடுதலைப்போரில் மனிதர் பங்குகொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில் அடைக்கும் வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
திருமணம் செய்து கொண்டார் சாஸ்திரி. பெரும் வரதட்சணை பெறுவது வழக்கமாக இருந்த காலத்தில் கதராடை ஒன்று, ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே பெற்றுக்கொண்டார் .
அடிக்கடி விடுதலைப்போரில் ஈடுபட்டு சிறை போவது இவருக்கு வழக்கம். ஒரு முறை மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று பதினைந்து நாள் அனுமதி பெற்று வந்தார். மகள் அந்த காலம் முடிவதற்குள்ளாகவே இறந்து போனார். இன்னம் சில நாட்கள் பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறை சென்றார் சாஸ்திரி.
இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில் தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. எளிமை,நேர்மை இது தான் அவர். வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்துக்கொண்டவர். அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக ரீதியாக பொறுப்பற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ,"இனிமேல் நம் வீட்டில், சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.
இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது தீர்க்கமாக வழிநடத்தியவர் . இந்தியாவின் எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரு இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை இவர் அளவுக்கு தையல்காரர் தைத்து கொடுத்தார்.
அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் சொன்னார்,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார்!" என்று . சாஸ்திரி மாதிரி உன்னத ஆத்மாக்கள் அரிதாகத்தான் அரசியலில் தோன்றுகிறார்கள்!
விக்கிபீடியா + ஹிந்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 !
//அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் சொன்னார்,"எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார்!" என்று . சாஸ்திரி மாதிரி உன்னத ஆத்மாக்கள் அரிதாகத்தான் அரசியலில் தோன்றுகிறார்கள்!//
அன்றும் இதே போல கூடாரவல்லி, ரேடியோ வில் லால் பகதூர் சாஸ்திரி இறப்பு செய்தி கேட்டதும், சாப்பிட எடுத்த சர்க்கரை பொங்கலை அப்படியே வைத்து விட்டு ரொம்ப சோகமாய்.............வருத்தத்துடன் ................ஆபீஸ் கிளம்பிவிட்டாராம் எங்க அப்பா.............அம்மா சொல்வா !
அன்றும் இதே போல கூடாரவல்லி, ரேடியோ வில் லால் பகதூர் சாஸ்திரி இறப்பு செய்தி கேட்டதும், சாப்பிட எடுத்த சர்க்கரை பொங்கலை அப்படியே வைத்து விட்டு ரொம்ப சோகமாய்.............வருத்தத்துடன் ................ஆபீஸ் கிளம்பிவிட்டாராம் எங்க அப்பா.............அம்மா சொல்வா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 !
இன்று லால் பகதூர் சாஸ்த்திரி இறந்த தினம்.................
![லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 ! Shashtri2](https://2img.net/h/pmindia.gov.in/wp-content/uploads/2014/06/shashtri2.jpg)
திரு.லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் இருந்து 7 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள முகல்சராய் சிறிய ரயில்வே நகரத்தில் 1901, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர் தந்தை திரு.லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது மறைந்தார். அப்போது இருபது வயதே ஆன அவருடைய தாயார் தனது 3 குழந்தைகளுடன் அவரது தந்தை வீட்டிற்குச் சென்று குடியேறினார். லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
வறுமையையும் மீறி அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது. மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக வாரணாசியில் உள்ள மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் நானா (சின்ன குழந்தை) என்றே அவர் அழைக்கப்பட்டார். கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்றார்.
அவர் வளர வளர அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய இளவரசர்களுக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மா காந்தியின் செயல் இவரை மிகவும் கவர்ந்தது. அப்போது அவரின் வயது 11 ஆகும். ஆனால், அந்த செயல் தேசிய அளவில் செயல்பட அவர் மனதிற்கு உந்து சக்தியை அளித்தது.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது லால்பகதூருக்கு வயது 16. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார்.
இந்த முடிவு அவர் தாயாரின் நம்பிக்கையைத் தகர்த்தது. இதை ஒரு அழிக்கும் செயலாகக் கருதிய அவரது குடும்பத்தார் அவருக்கு அறிவுறுத்த முடியவில்லை. ஆனால், லால்பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவருக்கு நெருக்கமான அனைவருக்கும் இது தெரியும். ஒருமுறை அவர் முடிவு செய்தால் பிறகு மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் அவருடைய சாதுவான தோற்றத்திற்குள் ஒரு உறுதியான பாறை இருக்கிறது என்றும் தெரியும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி வித்யாபத்திரில் அவர் இணைந்தார். அப்போது நாட்டின் சிறந்த அறிவாளிகள் மற்றும் தேசியவாதிகளின் தாக்கத்தில் அவர் பயின்றார். சாஸ்திரி என்ற இளநிலை பட்டத்தை வித்யா பீடம் அவருக்கு அளித்தது. ஆனால் மக்கள் மனதில் அதுவே அவருடைய பெயராகப் பதிவாகியது.
1927-ல் அவர் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி லலிதா தேவி, மிர்சாபூர் நகரத்தைச் சார்ந்தவர். அவருடைய திருமணம் முழு பாரம்பரியத்துடன் நடைபெற்றாலும் ஒரு விசயத்தில் மட்டும் வித்தியாசமாகவே இருந்தது. சுழல் சக்கரமும், கையால் நெய்யப்பட்ட துணி மட்டுமே சீதனமாக கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளையாக அவர் வேறு எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டியில் உள்ள கடற்கரை வரை யாத்திரை செய்து ஏகாதிபத்திய உப்பு சட்டத்தை தகர்த்தார். திரு.லால்பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கருத்தொளி நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தமாக 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். இந்த போராட்ட சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியின் சாதுவான தற்பெருமையற்ற குணத்தின் அருமையை தேசிய போராட்டத்தின் தலைவர் உணர்ந்திருந்தார். 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க திரு லால் பஹதூர் சாஸ்திரி அழைக்கப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார். உத்தரபிரதேசத்தில் கடின உழைப்புக்கும், திறமைக்கும் லால்பகதூர் சாஸ்திரி என்பது ஒரு மறுபெயராக இருந்தது. 1951-ல் டெல்லிக்கு சென்ற அவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக, நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார். அவருடைய வளர்ச்சி திடமானதாக இருந்தது. ஒரு ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததற்காக தான் பொறுப்பேற்று அதற்கு பொறுப்பனவராக கருதி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இதுபோன்று முன் எப்போதும் நடைபெறாதச் சம்பவத்தை நாடாளுமன்றமும், நாடும் அவரை வெகுவாக புகழந்தது. அப்போது பிரதமராக இருந்த பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் குறித்து பேசுகையில், லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையும் உயர்ந்த லட்சியங்களையும் புகழ்ந்து பேசினார். இந்த சம்பவத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி எந்தவகையிலும் பொறுப்பில்லை என்றாலும் அரசியல் சட்ட அமைப்பில் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக நான் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
ரயில்வே விபத்து குறித்த நீண்ட விவாதத்திற்கு பதில் அளித்த லால்பகதூர் சாஸ்திரி, என்னுடைய சிறிய உருவத்தைப்பார்த்தும், அமைதியாக பேசுவதை வைத்தும் மக்கள் என்னால் உறுதியாக செயல்பட முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். உருவ அமைப்பில் நான் வலிமையானவனாக இல்லாதபோதும், நான் மனதளவில் உறுதியானவன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். அவருடைய அமைச்சரவை செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் செயல்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
பொதுத்தேர்தல்கள் 1952, 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றதற்கு இவருடைய திறமையும், நிர்வாக செயல்பாடும் பெரிதும் உதவியது. லால் பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொது சேவையில் அற்பணித்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் நேர்மைக்காகவும் சிறந்த ஆற்றலுக்காகவும் மக்களால் அவர் நன்கு அறியப்பட்டார். எளிமை, பொறுமை, சிறந்த உள் வலிமை, திடமான ஆற்றல் ஆகிய குணங்களை கொண்ட அவர் மக்களின் மொழியை அறிந்து நடந்தார்.
தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். மகாத்மா காந்தியின் அரசியல் பாடம் இவரை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஆசிரியரை நினைவு கூறும் வகையில் ‘கடின உழைப்பு பிராத்தனைக்கு சமம்’ என்று அவர் ஒரு முறை தெரிவித்தார். மகாத்மா காந்தி வழியில், லால் பகதூர் சாஸ்திரியும் இந்திய கலாச்சாரத்தைச் சிறப்பாக பிரதிபலித்தார்.
திரு.லால்பகதூர் சாஸ்திரி
June 9, 1964 - January 11, 1966 | Congress![லால் பகதூர் சாஸ்திரி மறைந்த தினம் ஜனவரி 11 ! Shashtri2](https://2img.net/h/pmindia.gov.in/wp-content/uploads/2014/06/shashtri2.jpg)
திரு.லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பகுதியில் இருந்து 7 மைல் தொலைவிற்கு அப்பால் உள்ள முகல்சராய் சிறிய ரயில்வே நகரத்தில் 1901, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய அவர் தந்தை திரு.லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது மறைந்தார். அப்போது இருபது வயதே ஆன அவருடைய தாயார் தனது 3 குழந்தைகளுடன் அவரது தந்தை வீட்டிற்குச் சென்று குடியேறினார். லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
வறுமையையும் மீறி அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது. மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக வாரணாசியில் உள்ள மாமா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டில் நானா (சின்ன குழந்தை) என்றே அவர் அழைக்கப்பட்டார். கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்றார்.
அவர் வளர வளர அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான நாட்டின் போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய இளவரசர்களுக்கு கண்டனம் தெரிவித்த மகாத்மா காந்தியின் செயல் இவரை மிகவும் கவர்ந்தது. அப்போது அவரின் வயது 11 ஆகும். ஆனால், அந்த செயல் தேசிய அளவில் செயல்பட அவர் மனதிற்கு உந்து சக்தியை அளித்தது.
ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது லால்பகதூருக்கு வயது 16. காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார்.
இந்த முடிவு அவர் தாயாரின் நம்பிக்கையைத் தகர்த்தது. இதை ஒரு அழிக்கும் செயலாகக் கருதிய அவரது குடும்பத்தார் அவருக்கு அறிவுறுத்த முடியவில்லை. ஆனால், லால்பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். அவருக்கு நெருக்கமான அனைவருக்கும் இது தெரியும். ஒருமுறை அவர் முடிவு செய்தால் பிறகு மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் அவருடைய சாதுவான தோற்றத்திற்குள் ஒரு உறுதியான பாறை இருக்கிறது என்றும் தெரியும்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி வித்யாபத்திரில் அவர் இணைந்தார். அப்போது நாட்டின் சிறந்த அறிவாளிகள் மற்றும் தேசியவாதிகளின் தாக்கத்தில் அவர் பயின்றார். சாஸ்திரி என்ற இளநிலை பட்டத்தை வித்யா பீடம் அவருக்கு அளித்தது. ஆனால் மக்கள் மனதில் அதுவே அவருடைய பெயராகப் பதிவாகியது.
1927-ல் அவர் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி லலிதா தேவி, மிர்சாபூர் நகரத்தைச் சார்ந்தவர். அவருடைய திருமணம் முழு பாரம்பரியத்துடன் நடைபெற்றாலும் ஒரு விசயத்தில் மட்டும் வித்தியாசமாகவே இருந்தது. சுழல் சக்கரமும், கையால் நெய்யப்பட்ட துணி மட்டுமே சீதனமாக கொடுக்கப்பட்டது. மாப்பிள்ளையாக அவர் வேறு எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டியில் உள்ள கடற்கரை வரை யாத்திரை செய்து ஏகாதிபத்திய உப்பு சட்டத்தை தகர்த்தார். திரு.லால்பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கருத்தொளி நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தமாக 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். இந்த போராட்ட சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியின் சாதுவான தற்பெருமையற்ற குணத்தின் அருமையை தேசிய போராட்டத்தின் தலைவர் உணர்ந்திருந்தார். 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க திரு லால் பஹதூர் சாஸ்திரி அழைக்கப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார். உத்தரபிரதேசத்தில் கடின உழைப்புக்கும், திறமைக்கும் லால்பகதூர் சாஸ்திரி என்பது ஒரு மறுபெயராக இருந்தது. 1951-ல் டெல்லிக்கு சென்ற அவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக, நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார். அவருடைய வளர்ச்சி திடமானதாக இருந்தது. ஒரு ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததற்காக தான் பொறுப்பேற்று அதற்கு பொறுப்பனவராக கருதி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
இதுபோன்று முன் எப்போதும் நடைபெறாதச் சம்பவத்தை நாடாளுமன்றமும், நாடும் அவரை வெகுவாக புகழந்தது. அப்போது பிரதமராக இருந்த பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் இச்சம்பவம் குறித்து பேசுகையில், லால்பகதூர் சாஸ்திரியின் நேர்மையும் உயர்ந்த லட்சியங்களையும் புகழ்ந்து பேசினார். இந்த சம்பவத்திற்கு லால்பகதூர் சாஸ்திரி எந்தவகையிலும் பொறுப்பில்லை என்றாலும் அரசியல் சட்ட அமைப்பில் ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதற்காக நான் இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
ரயில்வே விபத்து குறித்த நீண்ட விவாதத்திற்கு பதில் அளித்த லால்பகதூர் சாஸ்திரி, என்னுடைய சிறிய உருவத்தைப்பார்த்தும், அமைதியாக பேசுவதை வைத்தும் மக்கள் என்னால் உறுதியாக செயல்பட முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர். உருவ அமைப்பில் நான் வலிமையானவனாக இல்லாதபோதும், நான் மனதளவில் உறுதியானவன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். அவருடைய அமைச்சரவை செயல்பாடுகளுக்கிடையில் காங்கிரஸ் செயல்பாடுகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
பொதுத்தேர்தல்கள் 1952, 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றதற்கு இவருடைய திறமையும், நிர்வாக செயல்பாடும் பெரிதும் உதவியது. லால் பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொது சேவையில் அற்பணித்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்தில் நேர்மைக்காகவும் சிறந்த ஆற்றலுக்காகவும் மக்களால் அவர் நன்கு அறியப்பட்டார். எளிமை, பொறுமை, சிறந்த உள் வலிமை, திடமான ஆற்றல் ஆகிய குணங்களை கொண்ட அவர் மக்களின் மொழியை அறிந்து நடந்தார்.
தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். மகாத்மா காந்தியின் அரசியல் பாடம் இவரை மிகவும் கவர்ந்தது. அவருடைய ஆசிரியரை நினைவு கூறும் வகையில் ‘கடின உழைப்பு பிராத்தனைக்கு சமம்’ என்று அவர் ஒரு முறை தெரிவித்தார். மகாத்மா காந்தி வழியில், லால் பகதூர் சாஸ்திரியும் இந்திய கலாச்சாரத்தைச் சிறப்பாக பிரதிபலித்தார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அக்டோபர் 2 - லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் !
» லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர்
» கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964
» மலேசியா வாசுதேவன் மறைந்த தினம் (பிப்.20, 2011)
» என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996
» லால் பகதூர் சாஸ்திரி – அரிதான அரசியல் தலைவர்
» கவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964
» மலேசியா வாசுதேவன் மறைந்த தினம் (பிப்.20, 2011)
» என்.டி.ராமாராவ் மறைந்த தினம்: 18-1-1996
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|