ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters

Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Dec 31, 2014 12:00 am

First topic message reminder :

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 YQqKaon7S42OfUH6nYTz+karudapuranam-1

மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.



கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய


Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Wed Jan 28, 2015 2:31 pm

22. பிரேத ஜென்மம் விளைவிக்கும் துன்பம்.


ருடன் கேசவனைத் தொழுது, “ஸ்வாமி! பாவங்களில் எத்தகைய பாவத்தை செய்தவன், பிரேத ஜென்மத்தை அடைகிறான்? அந்த பிரேத ஜென்மத்திலிருந்து எப்படி நீங்குகிறான்? அந்த பிரேத ஜென்மதொடு பூவுலகில் சஞ்சரிப்பது உண்டா அல்லது யமனுடைய காவலிலேயே கிடப்பானோ? இவற்றையெல்லாம் அடியேனுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும்!” என்று வேண்ட, திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
                                   
“வைன தேயனே! பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதையடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான்.

“யார் ஒருவன், இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீவாய் நரகங்களை யெல்லாம் அனுபவிப்பான். மோசம் செய்து அபகரிக்கும் பாவியினும் கொடும்பாவி ஒருவனும் இருக்க மாட்டான்.

“பிரேத ரூபத்தில் யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். பித்ருக்களின் தினத்தில் பிதுர்களை வீட்டுக்குள்ளே போக விடாமல் தடுத்து துரத்துவான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் அனுபவிக்க விடமாட்டான். தன் புத்திரன் முதலியோருக்கு சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான்.” என்று கூறி அருளினார்.
             
அப்போது பறவை வேந்தன் பெருமாளை நோக்கி, “ஆதிமூர்த்தி! பிரேத ஜென்மமடைந்தவர் வேறு என்ன செய்வான்? எவ்விதமாக தோற்றமளிப்பான்? பிரேத ஜென்மம் அடைந்திருக்கிறான் என்பதை எப்படி அறிய முடியும்? இவற்றைத் தயவு செய்து நவின்றருள வேண்டும்!” என்று வேண்ட ஸ்ரீமன் நாராயணர் கூறுகிறார்.
                   
“வைன தேயா! பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகம் பிடிப்பான். தருமங்கள். தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும் திருவன, பத்ரி முதலிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை, ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது.

“நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோனுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும்.

“பாவங்களையே செய்வதும், குழந்தைகள் பிறந்து, பிறந்து இறப்பதற்கும், சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், பசுக்களை போஷிக்க முடியாமற் போவதற்கும், நண்பனோடு விரோதிக்க நேரத்தாலும், வைதிக உபவாச தினமாகிய ஏகாதசி தினத்தில் அன்னம் உண்ணுதலும், ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போவதற்கும், தந்தை தாயாரை இகழ்வதற்கும், அயலாரை கொல்ல முயற்சிப்பதற்கும், இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடுவதர்க்கும், அதர்மங்களையே எண்ணுதலும், பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போதலும், புத்திரன் பகைவனைப் போல தூசிப்பதர்க்கும், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழ்வதற்கும்..... இவைகளெல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனாலேயே தோன்றுவனவாகும்.

“கருடா! யாருக்கு பிரேத ஜென்மதோஷம் நேரிட்டிருகிறதோ, துக்கமும் துன்பமும் சூழ்ந்து கொண்டே இருக்கும். பிரேத ஜென்மத்தை யடைந்தவன் பயங்கரமான முகத்தோடும் வாள் போன்ற பற்களோடும் தன் குடும்பத்தாரின் கனவில் தோன்றி, ‘அயோ! என்னைக் காப்பாற்றுவோர் யாருமில்லையா?’ என்று பசிதாகத்தோடு வருந்துவான். ‘என் பிரேத ஜென்மம் நீங்கவில்லையே...’ என்று கதறுவான்.” என்றார் திருமால்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Wed Jan 28, 2015 6:59 pm

ம்.... அவன் செய்த பாவங்கள் அவன் வம்சத்தையும் தாக்கும் என்பது சரியாக இருக்கே ?...................தொடருங்கள் விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Thu Feb 05, 2015 5:50 pm

23. ஆவிவடிவம் உடலைவிட்டு விலகும்பொழுது.....


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Astralproj

விவடிவம் உடலைவிட்டு விலகும்பொழுது நாம் வாழ்ந்து முடிந்துவிட்ட வாழ்க்கை முழுவதும் மூலை முடுக்குகள் உட்பட நம் மனக்கண் முன் படக்காட்சி போல் ஒருகணம் தோன்றி மறையும். நாம் பெற்ற அனுபவங்கள் நாம் புரிந்த நல்வினை, தீவினைகள் நாம் அடைந்த வெற்றிகள் தோல்விகள் நமது விருப்புவெறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து ஆத்மாவின் சூட்சம ஒளியில்  பதிவாகிவிடுகிறது. காரண சரீரத்தில் நிறுத்தி வைக்கப்படும் இப்பதிவின் வினைப்பயனாகவே நமது அடுத்த நிலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதைதான் பகவத் கீதையும் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றது!

ஒருவன் எவ்வளவு தான், தனது வாழ்நாளின், தீய செயல்கள் செய்திருந்தாலும், அவனது மரணம் நிகழும் கணத்தில் உள்ள அவனது மனநிலையே, அவனது அடுத்த பிறப்பைத் தீர்மானிக்கின்றது என்று கூறுகின்றது! இதையே தான் சைவ மதமும், மறைபொருளாகக் கூறுகின்றது!

மரணம் ஏற்படும் நேரம், எதிர்வு கூறப்பட முடியாததால், எப்போதும் இறைவனையே நினைத்துக்கொண்டிருக்கும் படி, அது கூறுகின்றது!
'நமசிவாய' அல்லது 'சரவணபவ' அல்லது ' சிவ சிவா' என்பதும், தமது பிள்ளைகளுக்குத் தெய்வங்களின் பெயர்களை வைத்து அழைப்பதுவும்,  இந்த இறை நினைவை எப்போதுமே மறக்காமல் இருப்பதற்காகவே.

விரதங்கள், ஆலயதரிசனங்கள், தீட்சைகள் என்பனவும், இதே நோக்கத்திற்காகவே அனுஷ்டிக்கப்படுகின்றன!

ஆனால், இவை எல்லோருக்கும் அவசியமில்லை! ஆசைகளில் தமது மனதை அதிகம் அலைய விடாதவர்களுக்கு (ஜீவன் முத்தர்/ சித்தர்கள்/ ஞானிகள்) மேலுள்ளவை அவசியமில்லை!

ஆயினும், நமது ஆலயவழிபாடானது, அதன் உண்மையான நோக்கத்தில் இருந்து விலகி, ஆசைகளையும், ஆணவத்தையும், தனி மனித அகங்காரங்களையும், வளர்க்கும் ஒரு இடமாக மாறி வருகின்றது மிகவும் கவலைக்குரியது!

சாதாரண உடைகள் அணிந்து வழிபாடு செய்ய வேண்டிய நாம், இன்று விலையுயர்ந்த சேலைகளும், பட்டு வேட்டிகளும், புலிப் பல்லுச் சங்கிலிகளும், அணிந்து செல்வதோடு மட்டுமன்றி, நாம் வணங்கும் தெய்வங்களுக்கும் அதையே செய்கின்றோம்!


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Thu Feb 05, 2015 5:57 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

09. அந்தகூபம்


யிர்களை சித்ரவதை செய்தல், கொடுமையாக கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகமிது. கொடிய மிருகங்கள் கடித்து குதறும் நிலை ஏற்படும். வித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்து துன்புறுத்தும்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by யினியவன் Thu Feb 05, 2015 5:59 pm

தொடர்ந்து படிக்காததில் ஒரு வசதி தான் - நிறைய தண்டனையில் இருந்து தப்பிச்சுட்டோம்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by krishnaamma Thu Feb 05, 2015 6:28 pm

யினியவன் wrote:தொடர்ந்து படிக்காததில் ஒரு வசதி தான் - நிறைய தண்டனையில் இருந்து தப்பிச்சுட்டோம்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119244

நீங்க படிக்க வேண்டாம், யார் படிக்கணுமோ, யார் குறிச்சு வெச்சுக்கணுமோ 'அவர்' கண்டிப்பாய் நம் ஒவ்வொருவருக்கும் தனி பேஜ் போட்டு ' குறிச்சு ' வைத்திருப்பார் இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Feb 06, 2015 11:10 pm

24. தோஷ பரிகாரமும், முதன்மையானவர்களை பூஜித்தலும்.


“நைமிசாரணிய வாசிகளே! இவ்வாறு திருமால் கூறியதும் கருடாழ்வார், ஸ்ரீ மந்நாராயனமூர்த்தியைத் தொழுது “ஜெனார்தனா! பிரேத ஜென்மத்தையடைந்தவன் அந்த ஜென்மதிலிருந்து எவ்வாறு நீங்குவான்? எவ்வளவு காலம் ஒருவனுக்குப் பிரேத ஜென்மம் பிடித்திருக்கும்? இவற்றைக் கூற வேண்டும்.” என்று பிரார்த்தித்தான்.

அதற்கு திருமால் அவனை நோக்கி கூறலானார்.

***

“பட்சி ராஜனே! பிரேத ஜென்மத்தையடைந்தவன், தன் உறவினர்களின் கனவில் தோன்றினாலும், துன்பத்திற்கு மேல் துன்பங்கள் செய்தாலும் அதைப் பற்றி பெரியோரிடம் தெரிவித்து அவர்கள் விதிக்கும் தர்ம விதிகளில் சித்தம் வைத்து மாமரம், தென்னை மரம், சண்பகம், அரசு முதலிய விருட்சங்களை வைத்துப் பயிர் செய்ய வேண்டும். மலர் செடிகளை உண்டாக்கி நந்தவனம், அமைக்க வேண்டும். பசுக்கூட்டங்களை வயிறார மேய்வதன் பொருட்டு பசும்புல் வளரத் தக்க நிலங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். தண்ணீருக்காக குளம் வெட்ட வேண்டும். பகவத் கைங்கரியம் பாகவத கைங்கரியம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Article-2276119-177A4127000005DC-659_960x649
                     
“கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி முதலிய நதிகளில் நீராடித் தானதர்மங்களைச் செய்ய வேண்டும். துன்பங்கள் எப்போது வருகின்றதோ, அப்போதெல்லாம் இவற்றை எல்லாம் அவசியமாக செய்ய வேண்டும். செய்யாவிட்டால் துன்பங்கள் மேலும் மேலும் விருத்தி யாகும்.

“பிரேத ஜென்மத் தோஷத்தால் தர்மச் செயல்களில் புத்தி நாடாமலிருக்க கூடும். பக்தியும் ஏற்படாமல் போகலாம். புத்தி நாடாவிட்டாலும், பக்தி வராவிட்டாலும் எவன் ஊக்கத்துடன் முயன்று அந்தந்த தர்மச் செயல்களைச் செய்கிறானோ அவன் இன்பமடைவான்.

“அதனால் பிரேத ஜென்மத்தை அடைந்தவனும் இன்பமடைந்து பூவுலகத்தை யடைந்து அங்கு தனது பிரேத சரீரத்தை நீக்கிக் கொள்வான். அவன் தனது குலம் விளங்க ஒரு புத்திரனை உண்டாகிக் கொள்வான் என்றருளினார்.
                       
அதற்கு கருட பகவான் திருமாலை நோக்கி, “ஆராவமுதே! ஒருவனுக்கு தன் குலத்தில் ஒருவன் பிரேத ஜென்மமடைந்திருகிறான் என்பது தெரியவில்லை. அப்பிரேத ஜென்மமடைந்தவன் சொப்பனத்தில் வந்து சொல்லவுமில்லை. அப்படியிருக்க, அவனுக்கும் அவன் குலத்தினருக்கும் துன்பம் மட்டுமே உண்டாகிறது. அவன் பெரியோரிடம் அந்த விஷயத்தை சொல்லி செய்ய வேண்டியவை யாவை...? என்று கேட்கிறான்.

“அவர்களும் பிரேத ஜென்ம தோஷத்தால் தான் இத்தகைய துன்பங்கள் நேரிடுகின்றன என்று சொல்கிறார்கள். அப்போது அவன் செய்ய வேண்டியவை யாவை? அவற்றைச் சொல்ல வேண்டும்.” என்று கேட்டான். திருமால் கருடனை நோக்கி கூறலானார்.
                         
“ஒ! புள்ளரசே!  இது போன்ற சமயங்களில் பெரியோர் செய்வதைச் சத்தியம் என்றே உறுதியாக நம்ப வேண்டும். ஸ்நானம், ஜெபம், ஓமம், தானம், தவம் முதலியவைகளால் ஒருவன் தன் பாவங்களை நிவர்த்தி செய்து கொண்டு, நாராயண பலி செய்தல் வேண்டும்.

“பாவங்களை நிவர்த்தி செய்து கொள்ளாமல் நாராயண பலி செய்வதற்கு முயன்றால் அது நிறைவேறாமல் செய்யும் பொருட்டுப் பூதப் பிரேதப் பைசாசங்கள் பெரிய தடைகளை ஏற்ப்படுத்தும்.

“புண்ணிய காலங்களில் புண்ணிய ஷேத்திரங்களில் பிதுர்களைக் குறித்து எவன் ஒருவன் தானதர்மங்களைச் செய்கிறானோ, அவன் பூதப் பிரேத பைசாசங்களால் தொந்திரவும், துன்பமும் அடைய மாட்டான்.
                         
“சரீரத்தை உண்டாகுவதாலும் நல்ல நெறிகளைப் போதிப்பதாலும். தாய், தந்தை, குரு மூவரும் முதன்மையானவர்கள். எந்தக் காலத்திலும் அவர்களைப் பூஜிப்பது மனிதனின் கடமை.

“தாய், தந்தை மரித்த பிறகு அவர்களைக் குறித்துத் தானம் தர்மங்களை எவன் செய்கிறானோ அவற்றின் பயனை அவனே அடைகிறான். புத் என்ற நரகத்திலிருந்து தாய், தந்தையரைக் கரையேற்றுவதனாலேயே மகனுக்குப் புத்திரன் என்ற பெயர் உண்டாயிற்று. எவன் ஒருவன் தாய் தந்தையர் சொற்படி நடவாமல் தன் பெண்டு பிள்ளைகளின் சொற்படி நடக்கிறானோ, புலையனிலும் புலையனாவான்.  

“ஒ, கருடா! கிணற்றிலாவது நதியிலாவது விழுந்து மரித்தவனுக்கும், வாளால் வெட்டப்பட்டு இறந்தவனுக்கும் தற்கொலை செய்து கொண்டவனுக்கும் ஓராண்டுக் காலம் வரையிலும் எந்தவிதக் கிரியைகளும் செய்யலாகாது. கர்மம் செய்வதற்கும் குடும்பத்தில் திருமணம் முதலிய வைபவங்களையும் விசேஷ தர்மங்களையும் செய்யலாகாது. தீர்த்த யாத்திரை, சேஷ்திராடனம் முதலியவற்றிலும் ஈடுபடலாகாது. வருஷ முடிவில் கர்மம் செய்து அதன் பிறகு யாவுஞ் செய்யலாம்.” என்று கூறியருளினார்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Feb 06, 2015 11:16 pm

25. இந்து மதத்தில் காமம் பற்றிய கோட்பாடு


ந்து மதத்தில் காமம் பற்றிய கோட்பாடு சமுதாய நன்மையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. மனைவியைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் பெற்ற தாய்க்குச் சமம்.

மேல் நாடுகளில்-பெற்ற தாயைத் தவிர அனைத்து பெண்களும் மனைவிக்குச் சமம்.  இந்து தர்ம கோட்பாட்டால் காம நோய்கள் உருவாகுவதே குறைவு. மேல்நாட்டுக் கோட்பாட்டால் காம நோய்களால் பாதிக்கப் படாதவர்கள் குறைவு.    

ஒரு தொழில் ஸ்தானத்தில் (அலுவலகம் அல்லது தொழிற்சாலை அல்லது பணியிடம்) ஒருமுறை காம நடவடிக்கை நிகழ்ந்துவிட்டால் அங்கிருந்து தொழில் தேவதை வெளியேறிவிடும்.

காம தேவனின் ஆட்சி துவங்கிவிடும். காமம் சார்ந்த நடவடிக்கைகள் நடந்தால்-தொழில் நலிவடையத்துவங்கும்.

ஒரு பெண்ணை அவளது அனுமதி-ஆசையின்றி அவளிடம் உறவு கொண்டால்.... அந்த வினாடி முதல் அந்த ஆணின் வாழ்க்கை, குடும்ப அமைப்பு சர்வ நாசமடையத் துவங்கிவிடும்.

ஒரு தனிமனிதனது நிலையே இப்படி என்றால், இந்தத் தவற்றை ஒரு நாட்டின் மன்னன் செய்தால்...?

இதைத் தான் பில்கிளிண்டன் செய்தார். அமெரிக்கா நாசமடையத் துவங்கியுள்ளது இதனால் கூட இருக்கலாம்  என்பது புரிகிறதா? பில்கிளிண்டன் தனது அலுவலக உதவியாளினி மோனிகா லெவின்ஸ்கியிடம் மேலே சொன்னது போலத் தான் நடந்து கொண்டார். இதற்குப் பரிகாரம் கிடையாது. இதற்குண்டான தண்டனை என்னவென்று தெரியுமா? கருடபுராணம் கூறுகிறது: விந்துக் கடலில் வாழ்க்கை வாழ வேண்டும். விந்து தான் மூன்று வேளை உணவும்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by விமந்தனி Fri Feb 06, 2015 11:20 pm

நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...

10. அக்னி குண்டம்


பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது கார்யங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னி குண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.


கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by T.N.Balasubramanian Sat Feb 07, 2015 4:28 pm

யினியவன் wrote:தொடர்ந்து படிக்காததில் ஒரு வசதி தான் - நிறைய தண்டனையில் இருந்து தப்பிச்சுட்டோம்ல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119244

அப்பிடி எல்லாம் தப்பிக்க முடியாது .
படிக்காமல் விட்டதற்காக , கூடுதல் தண்டனையும் உண்டு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருட புராணம் - தெரிந்து கொள்வோம். - Page 13 Empty Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 28 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 28  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum