Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters
Page 11 of 28
Page 11 of 28 • 1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
First topic message reminder :
அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்
கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய
அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்
மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.
கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய
Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
இரண்டுமே இரவில் விழித்திருப்பவை தான். இதில், யார் ஆந்தை யார் கோட்டான் என்று சந்தேகம் வேறு உங்களுக்கு. நல்லவேளை வவ்வாலை விட்டுவிட்டீர்களே கிருஷ்ணாம்மா...... [/quote]விமந்தனி wrote:
இதுல யார் ஆந்தை யார் கோட்டான் என்றும் சொல்லிடுங்கோ நீங்களே
அட ..............ஆமாம் இல்ல ......................சட்டென்று இவைத்தான் நினைவுக்கு வந்தது விமந்தனி .....சின்ன வயசுல பாட்டி திட்டுவா "எதுக்கு இப்படி 'கோட்டனாட்டம்' ராத்தூக்கம் இல்லாம கண்ணு முழிக்கிறே ? " என்று .....................அது நினைவுக்கு வந்தது..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:
ரமணியன்
ஹ... ஹா... ஹா... நீங்கள் டீசன்ட்டாக நடு இரவு பக்ஷிகள் என்று பாரின் லாங்குவேஜில் சொன்னீர்கள். ஆந்தையா... கோட்டானா என்று கிருஷ்ணாம்மா லோக்கல் பாஷையில் சொல்லிவிட்டார். அவ்வளவு தான்.
எப்பவும் நாம் தானே ஐயாவை பார்த்து ஓடுவோம் விமந்தனி, இன்று ஐயாவே ஓடிவிட்டார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
ம்.................படிக்கவே பயங்கரமாய் இருக்கு .........தொடருங்கள் விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
T.N.Balasubramanian wrote:அருமை , விமந்தனி !பெரியோர்களையும், பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும், பட்டினி பொட்டும் வதைத்து உதாசீனம் செய்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.
இன்று பரவி வரும் முதியோர் அனாதை இல்லங்களை பார்க்கையில் ,
காலசூத்திரத்தில் , இடம் கிடைக்காமல் , திண்டாடுவோர் ,பட்டியல்
மிகவும் நீண்டதாகவே இருக்கும் .
ரமணியன்
உண்மை தான் ஐயா. நம்மவர்கள் அங்கேயும் houseful ஆக்கிவிடுவார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
பின்னே அவரைப்போய் நம்மில் யார் ஆந்தை..? யார் கோட்டான்...? என்று கேட்டால்....... அவர் யாரை ஆந்தை என்றும், யாரை கோட்டானென்றும் சொல்லுவார்?krishnaamma wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:
ரமணியன்
ஹ... ஹா... ஹா... நீங்கள் டீசன்ட்டாக நடு இரவு பக்ஷிகள் என்று பாரின் லாங்குவேஜில் சொன்னீர்கள். ஆந்தையா... கோட்டானா என்று கிருஷ்ணாம்மா லோக்கல் பாஷையில் சொல்லிவிட்டார். அவ்வளவு தான்.
எப்பவும் நாம் தானே ஐயாவை பார்த்து ஓடுவோம் விமந்தனி, இன்று ஐயாவே ஓடிவிட்டார்
அப்புறம் நம்மிடம் மாட்டிக்கொண்டு அந்த பட்சிகள் மாதிரி அவரால் தான் விழிக்க முடியுமா....? அதன் விளைவு தான் இந்த ஓட்டம்..........
(ஐயா மன்னிக்க....!)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
19. ஸ்ரீ கருடராணத்தை வீட்டில் படிக்கலாமா?
படித்தால் / கேட்டால் குளிக்க வேண்டுமா? இறந்தவர் வீட்டில் மட்டும் தான் கூறவேண்டுமா? இதைப்போல் பல கேள்விகள், சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது.
பகவானிடம் கருடன் கேட்ட கேள்விகளை விட, மிக அதிகமாகவே இவர்கள் கேட்டு மற்றவர்களை குழப்பி, தானும் குழம்புகின்றனர்.
ஒரு சாமியாரிடம், ஒரு சமையல் கலைஞர் வணங்கி, “மனம் மிகவும் சஞ்சலமாக இருக்கிறது. நீங்கள் தான் அருளவேண்டும்.” என்றார்.
சாமியார் கேட்டார், “நீ எந்த தொழில் செய்து கொண்டிருக்கிறாய்?”
அதற்கு அவர், “நான் சமையல் செய்கிறேன். அதுவும் 40 வருட அனுபவம்” என்றார்.
“அப்படியென்றால் சாம்பாருக்கும், ரசத்திற்கும் என்ன வித்தியாசம்? குழம்பு (சாம்பார்) ஏன் கலங்கலாகவும், ரசம் ஏன் தெளிவாகவும் உள்ளது?” என்று கேட்டார் சாமியார்.
சமையல்காரர் விழித்தார். சாமியாரே தொடர்ந்தார்.
“ரசத்தில் எந்த காயும் போடுவதில்லை. (தக்காளி இந்த காலத்தில் தான். அதுவும் மடிசமையலில் இல்லை) அதனால், தெளிவாக உள்ளது. குழம்பில் காய் போடுகிறோம். அதற்கு ‘தான்’ என்று பெயர். தான் இருப்பதால் (தான் என்ற அஹங்காரம்) குழம்பி உள்ளது. தான் என்று ஏதும் இல்லாத ரசம் தெளிவாக உள்ளது” என்று அவர் செய்யும் வேலை வைத்தே விளக்கம் அளித்தார்.
மனம் தெளிவாக இருந்தால் வாயு தேவர் அந்தர்யாமி பகவான் எப்போதும் மனதில் இருந்து காப்பார், நல்வழி காட்டுவார்.
நம் வீட்டில் செய்யக்கூடடதை எல்லாம் செய்கிறோம். அப்போதெல்லாம் சாஸ்த்திரம் பார்ப்பதில்லையே? வீட்டு வரவேற்பறையில் உள்ள டிவியில் அந்திம சம்ஸ்காரங்கள் முழுவதையும் தொடரில் உன்னிப்பாக பார்க்கிறோம். சௌச ஆசமனங்களை முறையாக செய்யாமல், குல தர்மத்தை மறந்து விட்ட நிலையில், பகவான் ஸ்ரீ வேதவ்யாஸரால் அருளிய மாபெரும் பொக்கிஷம், ஸ்ரீ பகவானால் அவர் வாயாலேயே கூறப்பட்ட கருடபுராணத்தை கேட்டால் பாவமா? கேட்டுவிட்டால் குளிக்க வேண்டுமா?
ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத்கீதையை எப்படி படிக்கின்றோமோ, அதே போல, இதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது தான்.
முக்கியமாக இறந்தவர் வீட்டில் மட்டும் சொல்வது என்பது மரபு. துக்க நேரத்தில் கேட்டால்தான் பெரியவர்களின் சம்ஸ்காரம் நன்றாக செய்வார்கள் என்பதால் வந்திருக்கலாம். வீட்டில் படித்தால் தப்பில்லை என்பது பெரியோர்கள் அபிப்ராயம். கேட்டாலோ, படித்தாலோ குளிக்கவேண்டும் என்பது தவறான கருத்து.
-கல்கத்தா ஆர். குருப்ரஸாத், ஸ்ரீரங்கம்.
பகவானிடம் கருடன் கேட்ட கேள்விகளை விட, மிக அதிகமாகவே இவர்கள் கேட்டு மற்றவர்களை குழப்பி, தானும் குழம்புகின்றனர்.
ஒரு சாமியாரிடம், ஒரு சமையல் கலைஞர் வணங்கி, “மனம் மிகவும் சஞ்சலமாக இருக்கிறது. நீங்கள் தான் அருளவேண்டும்.” என்றார்.
சாமியார் கேட்டார், “நீ எந்த தொழில் செய்து கொண்டிருக்கிறாய்?”
அதற்கு அவர், “நான் சமையல் செய்கிறேன். அதுவும் 40 வருட அனுபவம்” என்றார்.
“அப்படியென்றால் சாம்பாருக்கும், ரசத்திற்கும் என்ன வித்தியாசம்? குழம்பு (சாம்பார்) ஏன் கலங்கலாகவும், ரசம் ஏன் தெளிவாகவும் உள்ளது?” என்று கேட்டார் சாமியார்.
சமையல்காரர் விழித்தார். சாமியாரே தொடர்ந்தார்.
“ரசத்தில் எந்த காயும் போடுவதில்லை. (தக்காளி இந்த காலத்தில் தான். அதுவும் மடிசமையலில் இல்லை) அதனால், தெளிவாக உள்ளது. குழம்பில் காய் போடுகிறோம். அதற்கு ‘தான்’ என்று பெயர். தான் இருப்பதால் (தான் என்ற அஹங்காரம்) குழம்பி உள்ளது. தான் என்று ஏதும் இல்லாத ரசம் தெளிவாக உள்ளது” என்று அவர் செய்யும் வேலை வைத்தே விளக்கம் அளித்தார்.
மனம் தெளிவாக இருந்தால் வாயு தேவர் அந்தர்யாமி பகவான் எப்போதும் மனதில் இருந்து காப்பார், நல்வழி காட்டுவார்.
நம் வீட்டில் செய்யக்கூடடதை எல்லாம் செய்கிறோம். அப்போதெல்லாம் சாஸ்த்திரம் பார்ப்பதில்லையே? வீட்டு வரவேற்பறையில் உள்ள டிவியில் அந்திம சம்ஸ்காரங்கள் முழுவதையும் தொடரில் உன்னிப்பாக பார்க்கிறோம். சௌச ஆசமனங்களை முறையாக செய்யாமல், குல தர்மத்தை மறந்து விட்ட நிலையில், பகவான் ஸ்ரீ வேதவ்யாஸரால் அருளிய மாபெரும் பொக்கிஷம், ஸ்ரீ பகவானால் அவர் வாயாலேயே கூறப்பட்ட கருடபுராணத்தை கேட்டால் பாவமா? கேட்டுவிட்டால் குளிக்க வேண்டுமா?
ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத்கீதையை எப்படி படிக்கின்றோமோ, அதே போல, இதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது தான்.
முக்கியமாக இறந்தவர் வீட்டில் மட்டும் சொல்வது என்பது மரபு. துக்க நேரத்தில் கேட்டால்தான் பெரியவர்களின் சம்ஸ்காரம் நன்றாக செய்வார்கள் என்பதால் வந்திருக்கலாம். வீட்டில் படித்தால் தப்பில்லை என்பது பெரியோர்கள் அபிப்ராயம். கேட்டாலோ, படித்தாலோ குளிக்கவேண்டும் என்பது தவறான கருத்து.
-கல்கத்தா ஆர். குருப்ரஸாத், ஸ்ரீரங்கம்.
Last edited by விமந்தனி on Fri Jan 23, 2015 12:20 am; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...
07. அசிபத்திரம்
தெய்வ நிந்தனை செய்தவர்களும், தர்மநெறியை விட்டு, அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிபடுவார்கள். இனம் புரியாத பயம் உண்டாகும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
//முக்கியமாக இறந்தவர் வீட்டில் மட்டும் சொல்வது என்பது மரபு. துக்க நேரத்தில் கேட்டால்தான் பெரியவர்களின் சம்ஸ்காரம் நன்றாக செய்வார்கள் என்பதால் வந்திருக்கலாம்.//
அந்த நேரத்தில் மனம் ரொம்ப நெகிழ்வாக இருக்கும் , இதைக்கேட்கும் பிள்ளைகள் பய பக்தியுடன் தன் தாயார் தகப்பனாருக்கு ரொம்ப ஸ்ரத்தையாக காரியம் செய்வார்கள் ...இது சத்தியம் !
அந்த நேரத்தில் மனம் ரொம்ப நெகிழ்வாக இருக்கும் , இதைக்கேட்கும் பிள்ளைகள் பய பக்தியுடன் தன் தாயார் தகப்பனாருக்கு ரொம்ப ஸ்ரத்தையாக காரியம் செய்வார்கள் ...இது சத்தியம் !
Last edited by krishnaamma on Fri Jan 23, 2015 12:35 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
20. யமபுரியும், யமதர்மராஜனும்
“பறவைகளுக்கு அரசே! அங்குஷ்ட பரிமாணமுள்ள ஜீவன் கர்ம சரீரம் பெற்று வன்னிமரத்தை விட்டு யமகிங்கரர்களுடன் 20 காத தூரவழி விஸ்தாரமுள்ள சித்திரகுப்தனது பட்டினத்தின் வழியாக யமபுரிக்குச் செல்வான்.
“அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும்.
“எனவே, இறந்தவனைக் குறித்துப் பூவுலகில் இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.
“இத்தகைய தானங்களால் யமபுரியுல்லுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே காலதாமத படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்மராஜனுக்குத் தெரிவிப்பார்கள்.
“கருடா! பாபம் செய்த ஜீவனுக்கோ! அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும். அவனுக்கு தர்ம ராஜனாகிய யமனும் அவனது தூதர்களும், அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்த பாவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு பயந்து பயங்கரமாக ஓலமிடுவான்.
“புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்மராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான். புண்ணியம் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து இறைவனின் தெய்வீக ஆட்சியை கண்டு வியப்பான்.
“யம தர்மராஜன் ஒருவனேதான் என்றாலும், ‘பாபிக்குப் பயங்கர ரூபதொடும், புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபதொடும்’ தோன்றுவான். புண்ணியஞ் செய்த ஜீவன் யமனருகே தோன்றுவானாயின், 'இந்த ஜீவன் மண்டல மார்க்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்' என்று தான் வீற்றிருக்கும் சிம்மாசனிதிலிருந்து சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யம தூதர்களும் வரிசையாக மரியாதை செலுத்துவார்கள்.
“பாவஞ் செய்த ஜீவனை பாசத்தில் கட்டிப் பிணைத்து உலக்கையால் ஓச்சி ஆடுமாடுகளைப் போல இழுத்துக் கொண்டு காலன்முன் நிறுத்துவார்கள். அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜென்மம் அடைவான்.
“அதிகம் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஜீவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று தேவனாக மாறித் தேவருலகம் செல்வான். பாபம் செய்தவனாகின் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான். உடல் நடுங்க பயப்படுவான். தூதர்கள் யமதர்மன் கட்டளை ஏற்று நரகத்தில் விழுந்து பிறகு கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவான்.
“அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.
“செல்வந்தன், அறிவிலே பேரறிஞன், வலுவிலே பலசாலி, கலைத் துறையில் பெருங் கலைஞன், விஞ்ஞானி, மதத் தலைவர் என்றெல்லாம் புகழ்ப் பெறுவான். அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அரைஞான் கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவன் ஜீவன் பிரிந்த உடனே, அவன் உடலை குழியில் புதைத்து மண்ணோடு மண்ணாகும்.
“மானிடப் பிறவி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு நீங்கிப் பிறத்தல் அரிது. ஒழுக்கத்தில் பெற வேண்டிய முக்தியை பெறவில்லை என்றால், தவம் முதலியவற்றைச் செய்து வருந்தித் தன் கரத்தில் அடைந்த அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச் சிந்தி பூமியில் கவிழ்ந்தவனுக்கு ஒப்பாகுவான்!” என்று திருமால் ஓதியருளினார்.
“அந்த யம பட்டணம் புண்ணியஞ் செய்தோரின் பார்வைக்கு மிகவும் ரம்மியமாகக் காணப்படும்.
“எனவே, இறந்தவனைக் குறித்துப் பூவுலகில் இரும்பாலாகிய ஊன்றுகோல், உப்பு, பருத்தி, எள்ளோடு பாத்திரம் ஆகிய பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.
“இத்தகைய தானங்களால் யமபுரியுல்லுள்ள யமபரிசாரகர்கள் மிகவும் மகிழ்ந்து ஜீவன் யம பட்டினத்தை நெருங்கியதுமே காலதாமத படுத்தாமல் அவன் வந்திருப்பதை யமதர்மராஜனுக்குத் தெரிவிப்பார்கள்.
“கருடா! பாபம் செய்த ஜீவனுக்கோ! அந்த யமபுரியே பயங்கரமாகத் தோன்றும். அவனுக்கு தர்ம ராஜனாகிய யமனும் அவனது தூதர்களும், அஞ்சத்தக்க பயங்கர ரூபத்தோடு தோற்றமளிப்பார்கள். அந்த பாவஞ் செய்தவனும் அவர்களைக் கண்டு பயந்து பயங்கரமாக ஓலமிடுவான்.
“புண்ணியஞ் செய்த ஜீவனுக்கு யமதர்மராஜன் நல்ல ரூபத்தோடு தோற்றமளிப்பான். புண்ணியம் செய்த ஜீவன் யமனைக் கண்டு மகிழ்ந்து இறைவனின் தெய்வீக ஆட்சியை கண்டு வியப்பான்.
“யம தர்மராஜன் ஒருவனேதான் என்றாலும், ‘பாபிக்குப் பயங்கர ரூபதொடும், புண்ணியஞ் செய்தவனுக்கு நல்ல ரூபதொடும்’ தோன்றுவான். புண்ணியஞ் செய்த ஜீவன் யமனருகே தோன்றுவானாயின், 'இந்த ஜீவன் மண்டல மார்க்கமாக பிரம்ம லோகம் சேரத் தக்கவன்' என்று தான் வீற்றிருக்கும் சிம்மாசனிதிலிருந்து சட்டென்று எழுந்து நின்று மரியாதை செலுத்துவான். யம தூதர்களும் வரிசையாக மரியாதை செலுத்துவார்கள்.
“பாவஞ் செய்த ஜீவனை பாசத்தில் கட்டிப் பிணைத்து உலக்கையால் ஓச்சி ஆடுமாடுகளைப் போல இழுத்துக் கொண்டு காலன்முன் நிறுத்துவார்கள். அங்கு பூர்வ ஜென்மத்தில் அந்த ஜீவன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப வேறு ஜென்மம் அடைவான்.
“அதிகம் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஜீவன் யம தூதர்களால் துன்புறுத்தப்படாமல் யமதர்மன் முன்பு சென்று தேவனாக மாறித் தேவருலகம் செல்வான். பாபம் செய்தவனாகின் யமதர்மனைக் காண்பதற்கும் அஞ்சுவான். உடல் நடுங்க பயப்படுவான். தூதர்கள் யமதர்மன் கட்டளை ஏற்று நரகத்தில் விழுந்து பிறகு கிருமி புழு முதலியவற்றின் ஜென்மத்தை அடைவான்.
“அந்த ஜீவனுக்குப் புண்ணியம் மிதமாக இருக்குமானால் முன்பு போல் மானிடப் பிறவியை பெறுவான். தான தருமங்களைச் செய்தவன் யாராயினும், எந்த ஜென்மத்தை அடைந்தாலும் அவன் செய்த தானதர்ம பயன்களை அந்த ஜென்மத்தில் அடைவான்.
“செல்வந்தன், அறிவிலே பேரறிஞன், வலுவிலே பலசாலி, கலைத் துறையில் பெருங் கலைஞன், விஞ்ஞானி, மதத் தலைவர் என்றெல்லாம் புகழ்ப் பெறுவான். அவன் இறந்தவுடனேயே அவன் உடலில் அரைஞான் கயிறு கூட அறுத்தெறியப்பட்டு விடும். அவன் ஜீவன் பிரிந்த உடனே, அவன் உடலை குழியில் புதைத்து மண்ணோடு மண்ணாகும்.
“மானிடப் பிறவி கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, மலடு நீங்கிப் பிறத்தல் அரிது. ஒழுக்கத்தில் பெற வேண்டிய முக்தியை பெறவில்லை என்றால், தவம் முதலியவற்றைச் செய்து வருந்தித் தன் கரத்தில் அடைந்த அமிர்தம் நிறைந்த பொற்கவசத்தைச் சிந்தி பூமியில் கவிழ்ந்தவனுக்கு ஒப்பாகுவான்!” என்று திருமால் ஓதியருளினார்.
“தர்மத்துவஜன் என்ற ஒருவன், சதாசர்வ காலமும், யமனருகிலேயே இருந்து கொண்டிருப்பான். பூமியில் இறந்தவனைக் குறித்து கோதுமை, கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயிறு, துவரை ஆகிய இந்த ஏழு வகையான தானியங்களைப் பாத்திரங்களில் வைத்துத் தானஞ் செய்தால், அந்தத் தர்மத்துவஜன் திருப்தி அடைந்து யமனிடத்தில் ‘இந்த ஜீவன் நல்லவன், புண்ணியஞ் செய்த புனிதன்!’ என்று விண்ணபஞ் செய்வான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
நரக தண்டனைகளை நிச்சயிப்பது நாமே...
08. பன்றி முகம்
குற்றமற்றவரை தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்கு புறம்பாக அநீதிக்கு துணைபோவதும் அதர்மமாகும். இந்நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதி படுவார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 11 of 28 • 1 ... 7 ... 10, 11, 12 ... 19 ... 28
Similar topics
» கருட புராணம்
» ஸ்ரீ கருட புராணம் உரை நடை வடிவில்
» கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!
» கருட புராணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய
» உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
» ஸ்ரீ கருட புராணம் உரை நடை வடிவில்
» கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!
» கருட புராணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய
» உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
Page 11 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|