Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
+13
கௌசிகன்
சிவா
Mano Red
mbalasaravanan
Dr.S.Soundarapandian
ராஜா
rajaalways
T.N.Balasubramanian
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
விமந்தனி
17 posters
Page 2 of 28
Page 2 of 28 • 1, 2, 3 ... 15 ... 28
கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
First topic message reminder :
அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்
கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய
அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும்
மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும்.
கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய
Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 12:56 am; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
4. நவீன விஞ்ஞானம் கூட தடுமாறக்கூடிய உடலைப் பற்றிய விளக்கங்களை, கருடபுராணம் துல்லியமாய் நம் கண் முன் வைக்கிறது.
உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள், தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள், இருபது நகங்கள், முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும், மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம், இரத்தம் நூறு பலம், கொழுப்பு பத்து பலம், தோலின் எடை ஏழு பலம், மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம், மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.
நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களை, நவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.
(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது), மூன்று தோலா = ஒரு பலம், ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம், அதாவது ஒரு பலம் என்பது 6/5 அவுன்ஸ்)
உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள், தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள், இருபது நகங்கள், முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும், மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம், இரத்தம் நூறு பலம், கொழுப்பு பத்து பலம், தோலின் எடை ஏழு பலம், மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம், மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.
நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களை, நவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.
(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது), மூன்று தோலா = ஒரு பலம், ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம், அதாவது ஒரு பலம் என்பது 6/5 அவுன்ஸ்)
Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 1:47 am; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
தொடருங்கள் விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
நல்ல துவக்கம் - நல்ல எழுத்து நடை - தொடருங்கள் விமந்தனி
(நான் படித்து, புரிந்து, புரிந்துகொள்ள கேள்வி எல்லாம் கேப்பேன்னு எதிர்பார்க்கக் கூடாது ஓகேயா?)
(சாமி நீ படிச்சு என்ன படுத்தாம இருந்தா கோடி புண்ணியம் உனக்கு ன்னு சொன்ன மாதிரி கேட்டதே)
(நான் படித்து, புரிந்து, புரிந்துகொள்ள கேள்வி எல்லாம் கேப்பேன்னு எதிர்பார்க்கக் கூடாது ஓகேயா?)
(சாமி நீ படிச்சு என்ன படுத்தாம இருந்தா கோடி புண்ணியம் உனக்கு ன்னு சொன்ன மாதிரி கேட்டதே)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
அருமையான பதிவு தோழி...
தொடருங்கள் உங்கள் பதிவை...
காத்திருக்கிறேன் ஆவலாய்...
தொடருங்கள் உங்கள் பதிவை...
காத்திருக்கிறேன் ஆவலாய்...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
வாழ்த்துக்கள் விமந்தனி !
கைதேர்ந்த சிற்பி செதுக்கிடும் சிலை போல் ,
காலம் காலமாக ,ஆன்மீக சொற்றொடர் ஆற்றும் பௌராணிகர் போல்,
நீங்கள் சமர்பித்த , கன்னித்தொடர்,
படிக்கையில் ,புலவர் கீரன் , சுகி சிவம் இவர்களை நினைவு கூறியது .
யாரறிவார் சுசித்ரா (கமலா மூர்த்தி பேத்தி ), வாரியாரின் சீடை , மங்கையர்க்கரசி
இவர்களுக்கு போட்டியாக நீங்களும் வரலாம் , கதாகாலட்சேபம் பண்ண ஆரம்பித்தால் .
நம்பர் நாலு ---தெளிவான தெரிவிப்பு .
ரமணியன்
கைதேர்ந்த சிற்பி செதுக்கிடும் சிலை போல் ,
காலம் காலமாக ,ஆன்மீக சொற்றொடர் ஆற்றும் பௌராணிகர் போல்,
நீங்கள் சமர்பித்த , கன்னித்தொடர்,
படிக்கையில் ,புலவர் கீரன் , சுகி சிவம் இவர்களை நினைவு கூறியது .
யாரறிவார் சுசித்ரா (கமலா மூர்த்தி பேத்தி ), வாரியாரின் சீடை , மங்கையர்க்கரசி
இவர்களுக்கு போட்டியாக நீங்களும் வரலாம் , கதாகாலட்சேபம் பண்ண ஆரம்பித்தால் .
நம்பர் நாலு ---தெளிவான தெரிவிப்பு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் விமந்தனி !
கைதேர்ந்த சிற்பி செதுக்கிடும் சிலை போல் ,
காலம் காலமாக ,ஆன்மீக சொற்றொடர் ஆற்றும் பௌராணிகர் போல்,
நீங்கள் சமர்பித்த , கன்னித்தொடர்,
படிக்கையில் ,புலவர் கீரன் , சுகி சிவம் இவர்களை நினைவு கூறியது .
யாரறிவார் சுசித்ரா (கமலா மூர்த்தி பேத்தி ), வாரியாரின் சீடை , மங்கையர்க்கரசி
இவர்களுக்கு போட்டியாக நீங்களும் வரலாம் , கதாகாலட்சேபம் பண்ண ஆரம்பித்தால் .
நம்பர் நாலு ---தெளிவான தெரிவிப்பு .
ரமணியன்
எல்லா புகழும் இணையம் ஒன்றனுக்கே தான்.....
அங்கொன்றும், இங்கொன்றுமாய் இறைந்து கிடப்பதை ஒன்று சேர்ப்பதில் போய் என்ன பெரிதாய் இருக்கமுடியும்....?
அங்கொன்றும், இங்கொன்றுமாய் இறைந்து கிடப்பதை ஒன்று சேர்ப்பதில் போய் என்ன பெரிதாய் இருக்கமுடியும்....?
Last edited by விமந்தனி on Sun Apr 26, 2015 1:06 pm; edited 4 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
5. “பறவைகளுக்கு அரசே! உலகில் எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்கள் உள்ளன. அவை அண்டகம், உற்பிசம், சராவுசம், சுவேதசம் என்று நான்கு வகையில் உள்ளன.
“அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர்.
வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன.
“கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள்.
“மண், பொருள் , ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான்.
“இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழ்வும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள்.
“ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து, ‘கிழப் பிணமே! வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட!’ என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு, மனம்பொறுமிக்கிடப்பான்.ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.
“கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எது அதிகமாயினும் பெண்டுபிள்ளைகள் அதிகமாகிப் பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான்.
“உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான்.ஆசைகளால் நோயுற்று மாண்டு விடுகின்றான். ஒருவரும் தனக்கு துணையில்லாமல் ஒருவனாகவே யாருக்கும் சொல்லாமல் மடிந்து போகிறான். பொய்யான பத்திரங்கள் எழுதி பொய் சொல்லி, ஏமாற்றி, வழிப்பறி, கொலை புரிந்து, தீயச் செயல்களைச் செய்து, தான் சேர்த்த பொருள்களை, உரியவருக்கு அளித்து, பழி பாவங்களோடு போகிறான்.
“அவன் மனைவி மக்கள் பாவங்களில் பங்கு ஏற்றுக் கொள்வாரில்லை. முக்திக்குச் சாதனமான, தவம், தருமம், தானம் செய்து, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை செய்வதே உத்தமமாகும்.” இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார்.
“அண்டகம் என்ற வகையில் முட்டையிலிருந்து இருபத்தோரு லட்சம் பறவைகள் தோன்றின. உற்பிச வகையில் இருபத்தோரு லட்சம் மரஞ், செடி, கொடி, தாவர வகைகள் தோன்றின. கருப்பப் பையிலிருந்து தோன்றுவதான சிராயுசம் வகையில் இருபத்தோரு லட்சம் மனிதர்கள் தோன்றினர்.
வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் இருபத்தோரு லட்சம் கொசு முதலியவைகளும் தோன்றியுள்ளன.
“கருடா! பிறவிகள் அனைத்திலும் மானுடப் பிறவி அரிதினும் அரிது. மனிதப் பிறவியே புண்ணியப் பிறவியாகும். எல்லா விதத்திலும் மானிடப் பிறவியே சிறப்புடையது. புண்ணியத்தால் அடைந்த மானுடப் பிறவியால் பாக்கியம் அடையாதவர்கள், தமக்குத் தானே வஞ்சனை செய்து கொள்பவர்களாவார்கள்.
“மண், பொருள் , ஆசைகள் எனப்படும் இம்மூன்று ஆசைகளால், மயக்கமுற்று செய்யத் தகாதவற்றைச் செய்து தன் மனசாட்சிக்கும், மனிதாபிமான உணர்வுக்கும், மாறுபாடான தீயச் செயல்களைச் செய்து, தர்மங்களை அறியாமல் உழல்பவன் எவனோ, அவன் மிருகங்களுக்கு ஒப்பாவான்.
“இதனால் அறிவுணர்வும், அன்புணர்வும், அறநெறி வாழ்வும் வளராது. அளவில்லாமல் ஆசைகள் வளர்ந்து கொண்டேயிருக்கும். ஆசையே அழிவுக்குக் காரணம் என்று போதிக்கும் மகான்களோ, யாவராலும் போற்றப்பட்டு, நம் இறுதி நாளான அந்திம காலத்தில் சுவர்க்க லோகத்தை அடைவார்கள்.
“ஆசைக்கு அடிமையானவர்கள் வயோதிகப் பருவம் வந்ததும், தன் புத்திரர், பௌத்திரர்கள் துணித்து, ‘கிழப் பிணமே! வாய் திறவாமலே வெறுமனே விழுந்து கிட!’ என்று இழித்தும், பழித்தும், அதட்டியும் பேசும் ஏச்சு மொழியைக் கேட்டு, மனம்பொறுமிக்கிடப்பான்.ஆகையால் கல்வியும் வித்தையும் கற்றுணர்ந்தவனேயானாலும் ஞானம் (மெய்யறிவு) இல்லாவிட்டால் பொண்ணுக்கு அடிமையாகி கிடப்பான்.
“கருடா! இந்திரிய உணர்வினாலேயே ஒவ்வோர் ஜீவராசிகள் நாசம் அடையும் போது பஞ்ச இந்திரிய இச்சைகளையுடைய மனிதன் அடையக்கூடிய கேடுகள் கொஞ்சமாகயிராது என்பதில் சந்தேகமில்லை. இல்லற வாழ்வின் சுகதுக்கங்களில் எது அதிகமாயினும் பெண்டுபிள்ளைகள் அதிகமாகிப் பந்தபாசத்தால் கட்டுண்ட மனிதன் நிம்மதியடைய மாட்டான்.
“உலகில் மனிதன் பிறந்து பிறந்தே இறக்கிறான்.ஆசைகளால் நோயுற்று மாண்டு விடுகின்றான். ஒருவரும் தனக்கு துணையில்லாமல் ஒருவனாகவே யாருக்கும் சொல்லாமல் மடிந்து போகிறான். பொய்யான பத்திரங்கள் எழுதி பொய் சொல்லி, ஏமாற்றி, வழிப்பறி, கொலை புரிந்து, தீயச் செயல்களைச் செய்து, தான் சேர்த்த பொருள்களை, உரியவருக்கு அளித்து, பழி பாவங்களோடு போகிறான்.
“அவன் மனைவி மக்கள் பாவங்களில் பங்கு ஏற்றுக் கொள்வாரில்லை. முக்திக்குச் சாதனமான, தவம், தருமம், தானம் செய்து, பிரபக்தி மார்க்கம் எனப்படும் தேவ சேவைகளை செய்வதே உத்தமமாகும்.” இவ்வாறு ஸ்ரீ நாராயணர் உணர்த்தியருளினார்.
Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 1:49 am; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
6. பெரும்பாலான மக்களால் ஒருவித பயத்தோடு பார்க்கப்படும் எமலோகத்தில், மனிதர்களுக்கான கணக்கு- வழக்கை பார்ப்பவர் சித்ர குப்தன், இவர் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான். அதனால்தான், இவருக்கு சித்ர குப்தன் என்ற பெயர் ஏற்பட்டது.
பூலோக வாழ்வை முடித்துக் கொள்ளும் உயிர்கள் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வதாக பெரும்பாலான பேர் நம்புகிறார்கள்.
ஒவ்வொருவரும் செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, அவர்கள் செல்வது நரகமா? அல்லது சொர்க்கமா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது நம்பிக்கை. யார் என்னென்ன புண்ணியம் செய்தார்கள்? பாவம் செய்தவர்கள் யார்-யார்? இதற்கெல்லாம் ஒரு கணக்கு-வழக்கு வேண்டும் அல்லவா? அதை, கவனிப்பவர்தான் சித்ரகுப்தன்.
ஆரம்பத்தில் எம தர்மராஜா தான் இந்த கணக்கு-வழக்கை எல்லாம் பார்த்து வந்தார். அவரது வேலைப்பளு அதிகமானதால் சிவபெருமானிடம் சென்று தனக்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்.சிவபெருமானும் ஒரு சித்திரத்தை வரைந்து கொடுத்து, இவனைப்போல் ஒருவனை படைக்குமாறு பிரம்மாவை கேட்டுக் கொண்டார்.
பிரம்மாவும் அதன்படியே ஒருவனை சித்ரா பவுர்ணமி நாளில் படைத்தார். அவரே சித்ரகுப்தன். நரகலோகம் செல்லும் மனித உயிர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுவதாக கூறுகிறது கருட புராணம்.
அடுத்தவன் மனைவியை அபகரித்துக் கொண்டவர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கப்படுவார்கள்...
கொலை செய்தவர்கள் உலக்கையால் அடித்து, பாழுங்கிணற்றில் தள்ளப்படுவார்கள்...
மனைவிக்கு துரோகம் செய்தவர்களின் இரண்டு கண்களும் பிடுங்கப்படும்... - இப்படி பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்று பட்டியலிடுகிறது கருடபுராணம்.
ஒருவரது உயிர் செல்ல வேண்டியது சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்காக? என்பதை எம தர்மராஜாவிடம் எடுத்துரைக்கும் சித்ரகுப்தன், சற்று குள்ளமான வடிவம் கொண்டவர். வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஒரு ஏட்டையும் தாங்கி, வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடித்து அமர்ந்தபடியும் காட்சித்தருவார்.
சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும், நரகத்தில் குறைந்த பட்ச தண்டனை வேண்டும் என்றாலும், இவர் அருள் ஒருவருக்கு இருந்தால்தான் முடியும்.
சித்ரா பவுர்ணமி அன்று இவரை மனம் உருகி வழிபடுவதன் மூலமும், செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும், எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் அவர் அருளை எளிதில் பெறலாம்.
பூலோக வாழ்வை முடித்துக் கொள்ளும் உயிர்கள் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு செல்வதாக பெரும்பாலான பேர் நம்புகிறார்கள்.
ஒவ்வொருவரும் செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, அவர்கள் செல்வது நரகமா? அல்லது சொர்க்கமா? என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது நம்பிக்கை. யார் என்னென்ன புண்ணியம் செய்தார்கள்? பாவம் செய்தவர்கள் யார்-யார்? இதற்கெல்லாம் ஒரு கணக்கு-வழக்கு வேண்டும் அல்லவா? அதை, கவனிப்பவர்தான் சித்ரகுப்தன்.
ஆரம்பத்தில் எம தர்மராஜா தான் இந்த கணக்கு-வழக்கை எல்லாம் பார்த்து வந்தார். அவரது வேலைப்பளு அதிகமானதால் சிவபெருமானிடம் சென்று தனக்கு உதவியாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்.சிவபெருமானும் ஒரு சித்திரத்தை வரைந்து கொடுத்து, இவனைப்போல் ஒருவனை படைக்குமாறு பிரம்மாவை கேட்டுக் கொண்டார்.
பிரம்மாவும் அதன்படியே ஒருவனை சித்ரா பவுர்ணமி நாளில் படைத்தார். அவரே சித்ரகுப்தன். நரகலோகம் செல்லும் மனித உயிர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப பல்வேறு தண்டனைகள் வழங்கப்படுவதாக கூறுகிறது கருட புராணம்.
அடுத்தவன் மனைவியை அபகரித்துக் கொண்டவர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கப்படுவார்கள்...
கொலை செய்தவர்கள் உலக்கையால் அடித்து, பாழுங்கிணற்றில் தள்ளப்படுவார்கள்...
மனைவிக்கு துரோகம் செய்தவர்களின் இரண்டு கண்களும் பிடுங்கப்படும்... - இப்படி பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்று பட்டியலிடுகிறது கருடபுராணம்.
ஒருவரது உயிர் செல்ல வேண்டியது சொர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்காக? என்பதை எம தர்மராஜாவிடம் எடுத்துரைக்கும் சித்ரகுப்தன், சற்று குள்ளமான வடிவம் கொண்டவர். வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஒரு ஏட்டையும் தாங்கி, வலது காலை ஊன்றியபடியும், இடது காலை மடித்து அமர்ந்தபடியும் காட்சித்தருவார்.
சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும், நரகத்தில் குறைந்த பட்ச தண்டனை வேண்டும் என்றாலும், இவர் அருள் ஒருவருக்கு இருந்தால்தான் முடியும்.
சித்ரா பவுர்ணமி அன்று இவரை மனம் உருகி வழிபடுவதன் மூலமும், செய்த பாவங்களுக்கு தகுந்த பரிகாரம் செய்வதன் மூலமும், எந்த சூழ்நிலையிலும் பாவம் செய்யாது இருப்பதன் மூலமும் அவர் அருளை எளிதில் பெறலாம்.
Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 1:49 am; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
7. காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். நாங்கள் சென்ற ஞாயிறு காலை செம கூட்டம் ! சிறிய கோயில் தான். உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கது.
Last edited by விமந்தனி on Sat Aug 08, 2015 1:52 am; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
8. கருடாழ்வார் ஸ்ரீமந் நாராயண பகவானைத் தொழுது, “வைகுண்ட நாதரே! மனிதர்களுக்கு மிகவும் கொடியதான பிரேத ஜென்மம் வராமல் ஒழியும் மார்க்கம் எது என்பதை தேவரீர் தயவு செய்து கூறியருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.” என்ற கருடனை நோக்கி ஸ்ரீமந் நாராயணன் கூறலானார்.
“ஒ கருடா! மனிதர்கள் இறந்தவுடன், பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பிய யாவரும், ஐந்து வயதுக்கும் மேற்பட்ட யார் இறந்தாலும், அவருக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க, கர்மம் செய்பவன் விருஷோற்சர்க்கம் செய்தல் அவசியம்.
“இந்தக் கருமத்தைத் தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. இறந்தவருக்கு பிரேத ஜென்மம் வருவதில்லை. இறந்தவர்களுக்கு இறந்த பதினொன்றாம் நாள் விருஷோற்சனம் என்ற கர்மங்கள் தன் புத்திரனாவது, மனைவியாவது ஆண், பெண் வயிற்றுப் பிள்ளையாவது, பெண்ணாயினும் செய்யலாம். ஆனால், புத்திரன் செய்வது தான் சிறந்தது. கர்மம் செய்யாமல் சிரார்த்தம் மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை.
“பிள்ளையில்லாமலும், பெண்ணில்லாமலும் ஒருவர் இறந்து, உரிய உத்திரக் கிரியைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் இரவு பகலாக பசியோடும், தாகத்தோடும் ‘ஐயையோ....!’ என்று கூச்சல்லிட்ட வண்ணம் உலகமெங்கும் நெடுங்காலம் வரை அலைந்து, திரிந்து பிறகு புழுக்கள், கிருமிகள் முதலிய ஜென்மங்கள் எடுத்து, பிறந்து பிறந்து மரிப்பான்.
“யாருமேயில்லாதவன் உயிரோடிருக்கும் போதே சாவதற்கு முன்பாக, நற்கர்மங்கள் செய்யக் கடவன்...” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.
“ஒ கருடா! மனிதர்கள் இறந்தவுடன், பிரேத ஜென்மத்தை நிவர்த்திக்க விரும்பிய யாவரும், ஐந்து வயதுக்கும் மேற்பட்ட யார் இறந்தாலும், அவருக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க, கர்மம் செய்பவன் விருஷோற்சர்க்கம் செய்தல் அவசியம்.
“இந்தக் கருமத்தைத் தவிர வேறு கர்மங்கள் செய்வதற்கில்லை. இறந்தவருக்கு பிரேத ஜென்மம் வருவதில்லை. இறந்தவர்களுக்கு இறந்த பதினொன்றாம் நாள் விருஷோற்சனம் என்ற கர்மங்கள் தன் புத்திரனாவது, மனைவியாவது ஆண், பெண் வயிற்றுப் பிள்ளையாவது, பெண்ணாயினும் செய்யலாம். ஆனால், புத்திரன் செய்வது தான் சிறந்தது. கர்மம் செய்யாமல் சிரார்த்தம் மட்டும் செய்வதால் எந்த பலனுமில்லை.
“பிள்ளையில்லாமலும், பெண்ணில்லாமலும் ஒருவர் இறந்து, உரிய உத்திரக் கிரியைகளைச் செய்யாமல் விட்டுவிட்டால் அவன் இரவு பகலாக பசியோடும், தாகத்தோடும் ‘ஐயையோ....!’ என்று கூச்சல்லிட்ட வண்ணம் உலகமெங்கும் நெடுங்காலம் வரை அலைந்து, திரிந்து பிறகு புழுக்கள், கிருமிகள் முதலிய ஜென்மங்கள் எடுத்து, பிறந்து பிறந்து மரிப்பான்.
“யாருமேயில்லாதவன் உயிரோடிருக்கும் போதே சாவதற்கு முன்பாக, நற்கர்மங்கள் செய்யக் கடவன்...” என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 2 of 28 • 1, 2, 3 ... 15 ... 28
Similar topics
» கருட புராணம்
» ஸ்ரீ கருட புராணம் உரை நடை வடிவில்
» கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!
» கருட புராணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய
» உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
» ஸ்ரீ கருட புராணம் உரை நடை வடிவில்
» கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!
» கருட புராணம் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய
» உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
Page 2 of 28
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|