Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
+10
ராஜா
ayyasamy ram
baskars11
சிவனாசான்
anirudh
krishnaamma
SajeevJino
யினியவன்
T.N.Balasubramanian
விமந்தனி
14 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
ஈகரை உறவுகளுக்கு வணக்கம்! என்னுடைய அடுத்த பதிவாக கருடபுராணம் பற்றிய ஒரு தொகுப்பினை தொடர் பதிவாக தொடர இருக்கிறேன் நண்பர்களே. ‘இறப்பிற்கு பின் நடப்பது என்ன...?’ என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாக சொன்னாலும், சொல்பவர்களே அதனை நிரூபிக்க முடியாமல் திண்டாடுவதால், இப்படி தான் நடக்கும் என்று ஆணித்தரமாக நம்பவும் மனம் மறுக்கிறது.
இறப்புக்கு பின் என்ன நடக்கும், எது நடக்கும்... அதற்கப்புறமும் ஏதேனும் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா... என்ற குறுகுறுப்பு எல்லோர் மனதிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த நெருடல் தான் கருடபுராணம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் அதிகரித்தது. அந்த ஆவல் நிறைவேறியதை உங்களுடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
இதில் வரும் தகவல்கள் வலைதளத்திலிருந்து திரட்டியவையே. நம் தளத்தில் கருடபுராணத்தை பதிவிட நினைத்து இணையத்தில் தேடிய போது பெரும்பாலும் ஆங்கில வடிவத்திலேயே கிடைத்தது. அதிலும் PDF கோப்பாக. கிடைத்த ஒன்றிரண்டு தமிழ் வலைப்பூக்களிலும் முடிவுரை என்பது இல்லாமலிருந்தது. எப்படியோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் தேடி, போதாததற்கு கருடபுராண புத்தகங்களையும் புரட்டி...... ஒருவழியாக பதிவு தயாராகி விட்டது. ஆகவே, இதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட இணைய உலகிற்கு எனது மனமார்ந்த நன்றி.
இதில் சாமான்யர்கள் அறியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பது இதனை படித்த பிறகு தான் தெரிந்தது. தெரிந்து கொள்ளவேண்டிய பல அவசியமான விஷயங்கள் நிறையவே இருக்கிறது.
இதனை படித்தால் மேற்கொண்டு செய்ய இருக்கும் பாவங்களில் இருந்தும், தாம் செய்வது பாவம் என்றே அறியாமல் பாவச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கும் செயல்களில் இருந்தும் - தம்மை காத்துக்கொள்ள வழிகிடைக்கும்.
இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைமுறைக்குட்பட்டு வாழ்ந்த வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாய் எப்படியும் வாழலாம் என்ற கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில், இப்புராணம் - வாழுகின்ற வாழ்க்கையை நெறிமுறையோடு வாழ வழி சொல்லும்.
மனிதர்கள் பயனுற கூறப்பட்டது தான் இந்த புராணம்? அப்படியிருக்க, இன்று பகவத் கீதை பிரபலமடைந்த (சென்றடைந்த) அளவிற்கு, இந்த புராணம் சாமானியர்களிடம் சென்றடையாதது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
துக்க வீடுகளில் படித்தால் நல்லது என்கிறார்கள். ஆனால், துக்க வீட்டில் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று பகவான் விஷ்ணு எங்கும் சொல்லவில்லை. மேலும், துக்கவீடுகளில் படிக்கலாம் என்பதே இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?
கருடபுராணம் என்று ஒன்று இருப்பதே 'அந்நியன்' படம் வந்த பிறகு தானே....!
"கன்னிகாதானங்கள் செய்தல், 100 முறை கோ தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரும் புண்ணியங்களை விட இப்புராணத்தை படித்தாலும், கேட்டாலும் அதிக புண்ணியமுண்டாகும்" என்று இதில் பகவானே ஒரு இடத்தில் சொல்கிறார்.
மொத்த மனித குலம் மேம்படவேண்டுமென உயரிய நோக்கில் திருமாலால் அருளப்பட்ட இதனை குறிப்பிட்ட ஒரு சாரர் மட்டுமே படித்து பயனுற்றுகொண்டிருப்பது சரியா.... என்ற கேள்வியின் விளைவு தான் இத்தொடர் பதிவுக்கான மூலம்.
‘இந்த புராணத்தில் சில நுண்ணிய விவாத, விதண்டாவாத விஷயங்கள் பல உண்டு. சில விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியும். சில விஷயங்களுக்கு நம்மால், மற்றவர்களால் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு விளக்கம் கொடுக்க முடியாது....’ என்பது, என் நலனில் அக்கறைகொண்டவரிடம் இதுகுறித்து கேட்ட போது சொன்ன வார்த்தைகள் இது.
உண்மை தான். ஆனால், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் அப்படியே தான் ஏற்றுக்கொள்வார்கள். விதண்டாவாதம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களானால், விவாதித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.
ஆகவே, நண்பர்களே! இப்பதிவினை நான் துவங்கும் முன் - உங்களிடம் சில வார்த்தைகள்... ஒரு வேண்டுகோளும் கூட....! நம் ஈகரையில் அனைத்து மதத்தவரும், இனத்தவரும் ஒருங்கிணைந்துள்ளோம். ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் மற்றும் சொர்க்கம் – நரகம் என்பதில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் இத்தொடர் பதிவை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பொதுவாக அரசியலும், ஆன்மீகமும் அன்றிலிருந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே தான் இருந்து வருகிறது. அரசியல், நாட்டில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் மலிந்து தான் கிடக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
விவாதம் என்ற பெயரில் எழும் வீண் விதண்டாவாதங்களை தவிர்த்துவிடலாமே. யாரையும் புண்படுத்தாத வகையில் பின்னூட்டமாகும் நியாயமான சந்தேகங்களுக்கு தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கட்டும்.
என்னுடைய இந்த முயற்சியில் நீங்களும் ஒத்துழைப்பு கொடுத்து பங்கெடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
இறப்புக்கு பின் என்ன நடக்கும், எது நடக்கும்... அதற்கப்புறமும் ஏதேனும் நமக்கென்று வாழ்க்கை இருக்கிறதா... என்ற குறுகுறுப்பு எல்லோர் மனதிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த நெருடல் தான் கருடபுராணம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும் என்னுள் அதிகரித்தது. அந்த ஆவல் நிறைவேறியதை உங்களுடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.
இதில் வரும் தகவல்கள் வலைதளத்திலிருந்து திரட்டியவையே. நம் தளத்தில் கருடபுராணத்தை பதிவிட நினைத்து இணையத்தில் தேடிய போது பெரும்பாலும் ஆங்கில வடிவத்திலேயே கிடைத்தது. அதிலும் PDF கோப்பாக. கிடைத்த ஒன்றிரண்டு தமிழ் வலைப்பூக்களிலும் முடிவுரை என்பது இல்லாமலிருந்தது. எப்படியோ அங்கொன்றும், இங்கொன்றுமாய் தேடி, போதாததற்கு கருடபுராண புத்தகங்களையும் புரட்டி...... ஒருவழியாக பதிவு தயாராகி விட்டது. ஆகவே, இதில் முக்கிய பங்கெடுத்துக்கொண்ட இணைய உலகிற்கு எனது மனமார்ந்த நன்றி.
இதில் சாமான்யர்கள் அறியாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்பது இதனை படித்த பிறகு தான் தெரிந்தது. தெரிந்து கொள்ளவேண்டிய பல அவசியமான விஷயங்கள் நிறையவே இருக்கிறது.
இதனை படித்தால் மேற்கொண்டு செய்ய இருக்கும் பாவங்களில் இருந்தும், தாம் செய்வது பாவம் என்றே அறியாமல் பாவச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கும் செயல்களில் இருந்தும் - தம்மை காத்துக்கொள்ள வழிகிடைக்கும்.
இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைமுறைக்குட்பட்டு வாழ்ந்த வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமாய் எப்படியும் வாழலாம் என்ற கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் வேளையில், இப்புராணம் - வாழுகின்ற வாழ்க்கையை நெறிமுறையோடு வாழ வழி சொல்லும்.
மனிதர்கள் பயனுற கூறப்பட்டது தான் இந்த புராணம்? அப்படியிருக்க, இன்று பகவத் கீதை பிரபலமடைந்த (சென்றடைந்த) அளவிற்கு, இந்த புராணம் சாமானியர்களிடம் சென்றடையாதது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
துக்க வீடுகளில் படித்தால் நல்லது என்கிறார்கள். ஆனால், துக்க வீட்டில் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று பகவான் விஷ்ணு எங்கும் சொல்லவில்லை. மேலும், துக்கவீடுகளில் படிக்கலாம் என்பதே இங்கு எத்தனை பேருக்கு தெரியும்?
கருடபுராணம் என்று ஒன்று இருப்பதே 'அந்நியன்' படம் வந்த பிறகு தானே....!
"கன்னிகாதானங்கள் செய்தல், 100 முறை கோ தானம் செய்தல், கயா சிரார்த்தம் செய்தல் ஆகியவற்றால் வரும் புண்ணியங்களை விட இப்புராணத்தை படித்தாலும், கேட்டாலும் அதிக புண்ணியமுண்டாகும்" என்று இதில் பகவானே ஒரு இடத்தில் சொல்கிறார்.
மொத்த மனித குலம் மேம்படவேண்டுமென உயரிய நோக்கில் திருமாலால் அருளப்பட்ட இதனை குறிப்பிட்ட ஒரு சாரர் மட்டுமே படித்து பயனுற்றுகொண்டிருப்பது சரியா.... என்ற கேள்வியின் விளைவு தான் இத்தொடர் பதிவுக்கான மூலம்.
‘இந்த புராணத்தில் சில நுண்ணிய விவாத, விதண்டாவாத விஷயங்கள் பல உண்டு. சில விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியும். சில விஷயங்களுக்கு நம்மால், மற்றவர்களால் ஒத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு விளக்கம் கொடுக்க முடியாது....’ என்பது, என் நலனில் அக்கறைகொண்டவரிடம் இதுகுறித்து கேட்ட போது சொன்ன வார்த்தைகள் இது.
உண்மை தான். ஆனால், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் அப்படியே தான் ஏற்றுக்கொள்வார்கள். விதண்டாவாதம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்து விட்டவர்களானால், விவாதித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.
ஆகவே, நண்பர்களே! இப்பதிவினை நான் துவங்கும் முன் - உங்களிடம் சில வார்த்தைகள்... ஒரு வேண்டுகோளும் கூட....! நம் ஈகரையில் அனைத்து மதத்தவரும், இனத்தவரும் ஒருங்கிணைந்துள்ளோம். ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் மற்றும் சொர்க்கம் – நரகம் என்பதில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் இத்தொடர் பதிவை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பொதுவாக அரசியலும், ஆன்மீகமும் அன்றிலிருந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே தான் இருந்து வருகிறது. அரசியல், நாட்டில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் மலிந்து தான் கிடக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
விவாதம் என்ற பெயரில் எழும் வீண் விதண்டாவாதங்களை தவிர்த்துவிடலாமே. யாரையும் புண்படுத்தாத வகையில் பின்னூட்டமாகும் நியாயமான சந்தேகங்களுக்கு தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கட்டும்.
என்னுடைய இந்த முயற்சியில் நீங்களும் ஒத்துழைப்பு கொடுத்து பங்கெடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
............................................ விமந்தனி
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
யினியவன் wrote:விமந்தனி wrote:உங்களது வம்பு எப்போதுமே கரும்பாய் இருக்குமே அன்றி வசம்பாய் ஆகாது என்பது எனது நம்பிக்கை. என் கணிப்பு சரி தானா யினியவரே?
வம்பு வசம்பாய் இல்லை எனில் வசந்தம் தான், கணிப்பு இனிப்பு தான் போங்க
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
ஆரம்பமே அருமை விமந்தினி ......தொடருங்கள் ....காத்திருக்கேன் படிக்க
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
அருமையான தலைப்பு!!!
அறியாத பலவற்றை அறிய முடியும். வளர்ந்திருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட
அறிய வேண்டிய அரிய நுணுக்கங்கள் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அறியாத பலவற்றை அறிய முடியும். வளர்ந்திருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட
அறிய வேண்டிய அரிய நுணுக்கங்கள் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
anirudh- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
விமந்தனியின் இவ் விவேகமான ஆன்மீக தொடர் பதிவு செயலுக்கு பாராட்டுதலையும் நன்றியும் உரித்தாக்குகின்றேன். வாழ்க வளமுடன்.... அன்பன் பி.எஸ்.டி. ராஜன்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
மிக அருமயான முயற்சி வாழ்த்துகள்.
பாஸ்கர் சு.
பாஸ்கர் சு.
baskars11- பண்பாளர்
- பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
நேத்து அவசரமாய் ஒரு பதிவு போட்டுவிட்டு போய்விட்டேன் விமந்தனி....................நாம் முன்பே இது பற்றி பேசி இருக்கோம் என்று நினைக்கிறேன் .................எனக்கு சில விஷயங்கள் சொல்லணும் விமந்தனி ................பொதுவாக இதை படிக்க யாரும் சொல்வது இல்லை என்பது தான் உண்மை.....அது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை இறந்தவர்கள் வீட்டில் படிப்பார்கள் என்று சொல்வதும்.....என்காத்தில் யாரும் படிக்கலை......................நான் எங்க அப்பா போனதுக்கப்புறம் இங்கு தான் அந்த புத்தகம் பார்த்தேன்.................படிக்கலாம் ...கூடாது..... என்று பேச்சு இருந்ததால் எங்க வாத்தியார் மாமா மற்றும் குடும்ப ஜோசியர் மாமாவை கேட்டுவிட்டு படித்தேன்.....................
அதில் பாருங்கோ, இறந்த பிறகு அந்த ஜீவன் எவ்வளவு கஷ்டத்துக்கு இடை இல் பிரயாணம் செய்கிறது என்பது விரிவாக இருக்கு.......ஒரு இறந்தவர் வீட்டில் அதை படித்தால்...கர்மா பண்ணும் பிள்ளைக்கு மனசு ரொம்ப அதிர்ந்து விடும்.........ஐயோ! நாம சரியா பண்ணாடா என்ன ஆகும்? என்று மனம் பதறும்............ 'காரியங்களை' சிரத்தையாக செய்வான்.....அதுக்குத்தான் அப்போ படிக்க சொல்வார்கள் என்று நினைக்கிறேன்......................
நான் பிறகு படித்ததற்கே மனசு ரொம்ப நடுங்கியது................என் தங்கை இடம் சொன்னேன்..............."நீ படிக்காதே ! என்று.................அவள் எங்க அப்பாவுடன் ரொம்ப attached ..................என் தம்பிகள் எல்லோரும் அயல்நாட்டில் இருக்கா........"மாசிகம்...சோதமம்" செய்யாமல் போய்விட்டால்.......என்கிற நடுக்கம் எனக்குள்.....................
இதை சொன்னதுக்கே அவள் மறுநாள் போன் செய்து ஒரே அழுகை......
" நாம ஏதாவது செயலாமாடி? " என்று......
நான் சொன்னேன் தாராளமாய் செய்யல்லாம் என்று .......
என்ன எப்படி என்றாள்.........
"நன்னா பெருமாளை வேண்டல்லாம், விக்னம் இல்லாமல் அவா செய்யணும் " என்று அவ்வளவு தான் நம்மால் முடிந்தது......
வேண்டுமானால் மற்றொன்றும் செய்யலாம்......வாத்தியார் மாமாவிடம் கேட்கலாம்" என்றேன் .
அது அடுத்த பதிவில்
அதில் பாருங்கோ, இறந்த பிறகு அந்த ஜீவன் எவ்வளவு கஷ்டத்துக்கு இடை இல் பிரயாணம் செய்கிறது என்பது விரிவாக இருக்கு.......ஒரு இறந்தவர் வீட்டில் அதை படித்தால்...கர்மா பண்ணும் பிள்ளைக்கு மனசு ரொம்ப அதிர்ந்து விடும்.........ஐயோ! நாம சரியா பண்ணாடா என்ன ஆகும்? என்று மனம் பதறும்............ 'காரியங்களை' சிரத்தையாக செய்வான்.....அதுக்குத்தான் அப்போ படிக்க சொல்வார்கள் என்று நினைக்கிறேன்......................
நான் பிறகு படித்ததற்கே மனசு ரொம்ப நடுங்கியது................என் தங்கை இடம் சொன்னேன்..............."நீ படிக்காதே ! என்று.................அவள் எங்க அப்பாவுடன் ரொம்ப attached ..................என் தம்பிகள் எல்லோரும் அயல்நாட்டில் இருக்கா........"மாசிகம்...சோதமம்" செய்யாமல் போய்விட்டால்.......என்கிற நடுக்கம் எனக்குள்.....................
இதை சொன்னதுக்கே அவள் மறுநாள் போன் செய்து ஒரே அழுகை......
" நாம ஏதாவது செயலாமாடி? " என்று......
நான் சொன்னேன் தாராளமாய் செய்யல்லாம் என்று .......
என்ன எப்படி என்றாள்.........
"நன்னா பெருமாளை வேண்டல்லாம், விக்னம் இல்லாமல் அவா செய்யணும் " என்று அவ்வளவு தான் நம்மால் முடிந்தது......
வேண்டுமானால் மற்றொன்றும் செய்யலாம்......வாத்தியார் மாமாவிடம் கேட்கலாம்" என்றேன் .
அது அடுத்த பதிவில்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
வாத்தியார் மாமாவும் நானும் பேசியவை...போன் இல்
நான் : மாமா நான் உங்களிடம் கேட்டது போல 'கருட புராணம் " படித்துவிட்டேன்...............கொஞ்சம் சந்தேகம் இருக்கு கேட்கவா?
வாத்தியார் மாமா: கேளும்மா..............தாராளமாய் கேளு
நான் : இல்லமாமா, அதில் ஜீவன் எப்படி கஷ்டத்துடன் பிரயாணம் செய்கிறது இந்த 1 வருடமும் என்று போட்டிருந்தா..............நாம் இங்கு செய்யும் "மாசிகம் சோதகம்" எல்லாம் ஜீவனின் பயணத்தை எளிதாக்கும் என்று போட்டிருக்கு.................
வாத்தியார் மாமா: ம்ம்...ஆமாம்.....
நான்: இப்போ என் தம்பிகள் எல்லோரும் வெளில இருக்கா..........ஏதோ அசந்தர்ப்மாய் அங்கு ஒரு மாசம் செய்ய முடியாமல் போய்விட்டால்......யோசிக்கவே பயமாய் இருக்கு மாமா......அதுதான் உங்களிடம் பேசிடலாம் என்று.................
வாத்தியார் மாமா: ஹா...ஹா...ஹா.... நல்ல பொன்னுமா நீ....நம்ப சாஸ்திரம் அவ்வளவு கூட யோசிக்காதா என்ன ?......நாம முதலில் 12 நாள் காரியம் பண்ணும்போதே எல்லாத்துக்கும் சேர்த்து பண்ணிடுவோம்.......இத 1 வருடமும் மாசாமாசம் மாசியமும், 3 மாசத்து ஒருமுறை 'ஊன மாசியமும்' செய்வது கட்டாயம் என்றாலும் ஏதோ ஒரு அசந்தர்ப்பம் வந்ததால் விட்டுப்போய் இருந்தால் அடுத்ததில் சேர்த்து பண்ணிடுவோம். ...கவலைப்படாதே............மேலும்.......அந்த முதல் 12 நாள் காரியத்தை ரொம்ப சிரத்தையாக, வெளி இல் வாசலில் போகாமல் செய்ய சொல்வதே அதுக்குத்தான் .......அதாவது....செய்யும் கர்த்தாவுக்கே ஏதாவது ஆகிவிட்டால்?.....இந்த 1 வருடத்தில்????????????????......அப்போ போன ஜீவனின் கதி?..............எனவே, safe side நாம் எல்லாமே அந்த 12 நாளில் செய்து விடுவோம்( அன்று செய்ததை சொல்லி காண்பித்தார் ) ..............அதனால் 'போன ஜீவன்' ஏதும் கஷ்டப்படாது.......நிம்மதியாக இரு ..............தங்கை டேயும் சொல்லு.
இதைக்கேட்டதும் தான் எனக்கு நிம்மதி யானது.....................
நான் : மாமா நான் உங்களிடம் கேட்டது போல 'கருட புராணம் " படித்துவிட்டேன்...............கொஞ்சம் சந்தேகம் இருக்கு கேட்கவா?
வாத்தியார் மாமா: கேளும்மா..............தாராளமாய் கேளு
நான் : இல்லமாமா, அதில் ஜீவன் எப்படி கஷ்டத்துடன் பிரயாணம் செய்கிறது இந்த 1 வருடமும் என்று போட்டிருந்தா..............நாம் இங்கு செய்யும் "மாசிகம் சோதகம்" எல்லாம் ஜீவனின் பயணத்தை எளிதாக்கும் என்று போட்டிருக்கு.................
வாத்தியார் மாமா: ம்ம்...ஆமாம்.....
நான்: இப்போ என் தம்பிகள் எல்லோரும் வெளில இருக்கா..........ஏதோ அசந்தர்ப்மாய் அங்கு ஒரு மாசம் செய்ய முடியாமல் போய்விட்டால்......யோசிக்கவே பயமாய் இருக்கு மாமா......அதுதான் உங்களிடம் பேசிடலாம் என்று.................
வாத்தியார் மாமா: ஹா...ஹா...ஹா.... நல்ல பொன்னுமா நீ....நம்ப சாஸ்திரம் அவ்வளவு கூட யோசிக்காதா என்ன ?......நாம முதலில் 12 நாள் காரியம் பண்ணும்போதே எல்லாத்துக்கும் சேர்த்து பண்ணிடுவோம்.......இத 1 வருடமும் மாசாமாசம் மாசியமும், 3 மாசத்து ஒருமுறை 'ஊன மாசியமும்' செய்வது கட்டாயம் என்றாலும் ஏதோ ஒரு அசந்தர்ப்பம் வந்ததால் விட்டுப்போய் இருந்தால் அடுத்ததில் சேர்த்து பண்ணிடுவோம். ...கவலைப்படாதே............மேலும்.......அந்த முதல் 12 நாள் காரியத்தை ரொம்ப சிரத்தையாக, வெளி இல் வாசலில் போகாமல் செய்ய சொல்வதே அதுக்குத்தான் .......அதாவது....செய்யும் கர்த்தாவுக்கே ஏதாவது ஆகிவிட்டால்?.....இந்த 1 வருடத்தில்????????????????......அப்போ போன ஜீவனின் கதி?..............எனவே, safe side நாம் எல்லாமே அந்த 12 நாளில் செய்து விடுவோம்( அன்று செய்ததை சொல்லி காண்பித்தார் ) ..............அதனால் 'போன ஜீவன்' ஏதும் கஷ்டப்படாது.......நிம்மதியாக இரு ..............தங்கை டேயும் சொல்லு.
இதைக்கேட்டதும் தான் எனக்கு நிம்மதி யானது.....................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
இதில் நிறைய விதண்டா வாதம் வரும் தான்........நீங்கள் கேட்டது போல "ஒரு சாராருக்கு" மாத்திரம் தானா இதெல்லாம் என்று கேட்டால் ....என் ஒரே பதில்...............அவா அவா வாங்கிண்டு வந்த வரம்.................நாம் எந்த வழி வந்தோமே.....அதில் என்ன சொல்லி இருக்கோ அதை follow பண்ணனும் அவ்வளவு தான்....................
கேவலம் மனிதர்கள் ஏற்படுத்திய படிப்பிலேயே CBSC, MATRICULATION, STATE BOARD, ICIC, ANGELO INDIAN என 1008 சிலபஸ் இருக்கும் போது.....................இதில் இருக்காதா என்ன? அவா அவர்களுக்கு அவர்கள் படித்த, படிக்கும் சிலபஸ் படி நடக்கணும் .....பரிக்ஷை எழுதணும்..............அது போலத்தானே இதுவும்?......என்ன சரியா?...............
ஒரு வேண்டுகோள் விமந்தனி...............இந்த திரியை நீங்க 'நட்பு' லிருந்து 'இந்து' வுக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன்.......
2. தலைப்பும் " கருடபுராணம்....தொடர் பதிவு" என்றோ...." கருடபுராணம் ஒரு அலசல்" என்றோ மாற்றலாம் என்று நினைக்கிறேன்.....
யோசித்து செய்யுங்கள்..இது என்னுடைய தாழ்மையான கருத்து.....அவ்வளவே
மேலும் பேசலாம்.....................
கேவலம் மனிதர்கள் ஏற்படுத்திய படிப்பிலேயே CBSC, MATRICULATION, STATE BOARD, ICIC, ANGELO INDIAN என 1008 சிலபஸ் இருக்கும் போது.....................இதில் இருக்காதா என்ன? அவா அவர்களுக்கு அவர்கள் படித்த, படிக்கும் சிலபஸ் படி நடக்கணும் .....பரிக்ஷை எழுதணும்..............அது போலத்தானே இதுவும்?......என்ன சரியா?...............
ஒரு வேண்டுகோள் விமந்தனி...............இந்த திரியை நீங்க 'நட்பு' லிருந்து 'இந்து' வுக்கு மாற்றலாம் என்று நினைக்கிறேன்.......
2. தலைப்பும் " கருடபுராணம்....தொடர் பதிவு" என்றோ...." கருடபுராணம் ஒரு அலசல்" என்றோ மாற்றலாம் என்று நினைக்கிறேன்.....
யோசித்து செய்யுங்கள்..இது என்னுடைய தாழ்மையான கருத்து.....அவ்வளவே
மேலும் பேசலாம்.....................
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது என்னுடைய அடுத்த மைல் கல் – விமந்தனி
ஒரு வேண்டுகோளும் கூட....! நம் ஈகரையில் அனைத்து மதத்தவரும், இனத்தவரும் ஒருங்கிணைந்துள்ளோம். ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் மற்றும் சொர்க்கம் – நரகம் என்பதில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் இத்தொடர் பதிவை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பொதுவாக அரசியலும், ஆன்மீகமும் அன்றிலிருந்து சர்ச்சைக்கு உரிய விஷயமாகவே தான் இருந்து வருகிறது. அரசியல், நாட்டில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் மலிந்து தான் கிடக்கிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
விவாதம் என்ற பெயரில் எழும் வீண் விதண்டாவாதங்களை தவிர்த்துவிடலாமே. யாரையும் புண்படுத்தாத வகையில் பின்னூட்டமாகும் நியாயமான சந்தேகங்களுக்கு தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்கட்டும்.
மிக அருமையான முன்னுரை , இதற்கு அப்புறமும் என்ன தயக்கம்
தொடருங்கள் படிக்க ஆவலாக உள்ளோம்.
20 நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்து 21 நூற்றாண்டின் இதுவரைக்கும் நடந்த நடந்துகொண்டிருக்கும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் விளைவு இன்று எந்த விசயமும் எங்கும் கிணற்று நீர் போல தேங்கி கிடப்பதே இல்லை. அனைத்தும் இணையத்தில் பரவி கிடக்கிறது. இணையத்தில் தேடினால் கிடைக்காத செய்திகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்தும் கிடைக்கும் போது
உங்களின் இந்த "கருடபுராணம்" முயற்சியும் பெருவெற்றி பெரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
பொதுவாக இறப்பிற்கு பின் என்ன நடக்கும் என்பதை அனைத்து மதங்களும் விரிவாக சொல்லியுள்ளன , ஏற்றுகொள்பவர்கள் ஏற்றுகொள்ளட்டும் மாற்றுகருத்து உள்ளவர்கள் மற்றவர்களின் மனம் புண்படாத அளவிற்கு தங்களின் கருத்துகளை கூறலாம்.
அதற்கும் மேல் விதண்டாவாதமாக கருத்து சொல்லுபவர்களுக்கு , நமது நிர்வாக குழு தகுந்த பதில் சொல்லும். அதனால் தயங்காமல் உங்களின் பதிவுகளை ஆரம்பியுங்கள்
சஜீவ் சொல்வது போல ஈகரையிலும் இந்த பதிவு ஒரு மைல் கல்லாக இருக்க வாழ்த்துகள் விமன்தனி அவர்களே
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» சாலையோர மைல் கல்
» சிறிய மைல் கல் - பதிவு 100
» மைல் கல்லில் பைக் மோதிஒருவர் பலி
» நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி
» சாலையோர மைல் கல்
» சிறிய மைல் கல் - பதிவு 100
» மைல் கல்லில் பைக் மோதிஒருவர் பலி
» நானும் பறக்கப்போகிறேன் - விமந்தனி
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|