புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத முற்றுகையில் தமிழகம்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் என்பது நமக்குத் தெரியும். அது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளும்கூட. 'வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி நல்லாட்சி தினமாக அனுசரிக்கப்படும்’ என்றும், 'இதையொட்டி மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படும்’ என்றும் மத்திய அரசின் பள்ளிக் கல்விச் செயலாளர் சார்பில் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு கிறிஸ்துமஸ் நாளைக் குறிவைத்து, அதற்கு வேறு ஓர் அடையாளம் பூசப்பார்க்கும் இந்தச் செயல் அப்பட்டமான மதவாத நடவடிக்கை என, நாடு முழுக்கக் கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில்... மத்திய அரசு பின்வாங்கிக்கொண்டது.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் 57 முஸ்லிம் குடும்பங்கள், 'தாய் மதத்துக்குத் திரும்புவதாக’ ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது. அதாவது அவர்கள் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக அறிவித்தது. ஆனால் அதன் பின் அந்த 57 குடும்பத்தினரும் ஊடகங்களுக்குத் தந்த பேட்டிகளோ வேறு மாதிரி இருந்தன. 'நாங்கள் எல்லோரும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, பண்ணையார்களால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள். கடந்த 17 ஆண்டுகளாக இந்தச் சாக்கடை நிறைந்த குடிசைப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம். திடீரென ஒருநாள் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான அடையாள அட்டை வாங்கித் தருவதாகவும், அதன் மூலம் நிறைய வசதிகள் கிடைக்கும் என்றும் சொல்லி எங்களை அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு கட்டாய மதமாற்றம் செய்துவிட்டனர்’ என்றனர்.
இந்தச் சூடு குறைவதற்குள்ளாக டிசம்பர் 25-ம் தேதி இன்னுமொரு மெகா மதமாற்ற புராஜெக்ட்டை கையில் எடுத்தன இந்துத்துவ அமைப்புகள். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்துத்துவ அமைப்புகளுக்கான தலைமைப் பீடமாக விளங்கினாலும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், சிவசேனா, அனுமன் சேனா, ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என இந்துத்துவ சக்திகள் நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் இயங்கிவருகின்றன. இவை அரசியல் முகங்களைக் கொண்டவை. தமிழ்நாட்டில் செயல்படும் 'நல்லோர் வட்டம்’ போன்றவையும் இந்துத்துவ இயக்கங்களின் இன்னொரு பிரிவுதான். இந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 'தரம் சக்ரா சமிதி’ (Dharam jagran samiti) என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் உ.பி மாநிலம் அலிகாரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருந்தே வீடு வீடாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் எழுதப்பட்டிருந்த விஷயத்தைப் படித்த எல்லோரும் ஒரு கணம் அதிர்ந்துபோனார்கள்.
ஏராளமான கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் அவர்களின் தாய் மதமான இந்து மதத்துக்குத் திரும்ப விரும்புவதாகவும் ghar wapsi), இதற்கு நிறைய நிதி தேவைப்படுவதாகவும் சொன்னது அந்த நோட்டீஸ். ஒரு கிறிஸ்துவரை மதமாற்ற இரண்டு லட்சம் ரூபாயும், ஒரு முஸ்லிமை மதமாற்ற ஐந்து லட்சம் ரூபாயும் தேவை என அந்த நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது. ஆண்டு ஒன்றுக்கு இரண்டு லட்சம் பேரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், அதில் ஒரு லட்சம் பேர் கிறிஸ்துவர்கள், ஒரு லட்சம் பேர் முஸ்லிம்கள் என்றும் சொன்னது. முதல் கட்டமாக இந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி 5,000 முஸ்லிம்களையும் 1,000 கிறிஸ்துவர்களையும் மதமாற்றம் செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவும்பட்டது.
ஆக்ரா, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இதனால் மதமாற்ற அறிவிப்பு அங்கு பதற்றத்தை விதைத்தது. யோகி ஆதித்தியநாத் என்கிற சாமியார்தான் மதமாற்றத்தைச் செய்துவைப்பவர். இவர் சாமியார் மட்டும் அல்ல... பா.ஜ.க எம்.பி-யும்கூட. 1998-ல் இருந்து இந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் பா.ஜ.க சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாக இருந்துவருபவர். பா.ஜ.க-வின் வலுவான இந்துத்துவ முகங்களில் ஒருவர். இவர்தான் மதமாற்றத்தையே நடத்துபவர் என்ற நிலையில், இது பா.ஜ.க-வின் நேரடியான நிகழ்ச்சி நிரல் என்பது வெளிப்படை. அவரும் இதை மறுக்கவில்லை.
'இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்போது யாரும் இதை ஒரு பிரச்னையாகப் பேசவில்லை. அங்கு இருந்து இங்கு வரும்போது மட்டும் ஊடகங்கள் வேண்டும் என்றே இதை சர்ச்சையாக்குகின்றன’ என்றார் ஆதித்தியாநாத். பிரச்னை, மதம் மாறுவது அல்ல; மதம் 'மாற்றுவது’தான்!
இத்தகைய மதமாற்றத்தின்போது முக்கியமான ஒரு கேள்வி எழும். மற்ற மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு மாற்றப்படுவோர் எந்தச் சாதியில் சேர்க்கப்படுவார்கள்? இதுவரை இதற்குத் தெளிவான பதில் சொல்லப்பட்டது இல்லை. தற்போதைய அலிகார் மதமாற்ற சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்துக்களில் இதற்கான பதில் இருக்கிறது.
இதுபற்றி பேசிய எழுத்தாளர் அ.மார்க்ஸ், ''மதம் மாற்றம் செய்யப்படும் கிறிஸ்துவர்களை 'வால்மிகி சமாஜ்’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். அதாவது அவர்கள் தலித்கள். 'இவர்கள் இந்து மதத்தின் பாதங்கள். இவர்கள் இல்லாமல் இந்து மதம் முழுமை அடையாது’ என்றும் சொல்கிறார்கள். இந்து மதத்தின் நான்கு வர்ண கருத்துக்குறித்து நினைத்துப் பாருங்கள். அதில் தலித்கள், பிரம்மனின் பாதத்தில் இருந்து பிறப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, கிறிஸ்துவர்கள் இந்து மதத்துக்கு மாற்றப்படும்போது தலித்களாகவே கருதப்படுவார்கள். அதேபோல முஸ்லிம்கள், தாகூர் மற்றும் பிராமணர்கள் ஆகியோர் உயர் சாதியினராம். 'இழந்துவிட்ட வர்ணப் பெருமையை எடுத்துக் கூறி அவர்களை மதமாற்றத்துக்கு சம்மதிக்கவைத்தோம்’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். இப்படி இந்து மதத்தின் வர்ணப் பாகுபாட்டில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஆர்.எஸ்.எஸ் கவனமாக இருக்கிறது'' என்கிறார் அ.மார்க்ஸ்.
கடந்த நவம்பர் 9-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் ஒன்பது நகரங்களில் நடைபெற்றது. காக்கி அரைக்கால் சட்டை, தொப்பி என சீருடை அணிந்துகொண்டு ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும் காவல் துறை அனுமதி மறுத்தது. இறுதியில் ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அந்த ஊர்வலத்திலும் அதற்கு முன்னும் பின்னுமான அறிவிப்புகள், அறிக்கைகளிலும் ராஜேந்திர சோழன் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். ராஜேந்திர சோழன் முடிசூட்டிக் கொண்டதன் 1,000-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதும் அந்த ஊர்வலத்தின் நோக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பொதுவாக ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசிய அமைப்புகளின் கவனத்துக்கு உரியவர்கள். முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு தமிழ் அடையாளத்துடன் இணைத்துக்கொண்டு களம் இறங்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ஸின் அதிகாரபூர்வ இந்தி வாரப் பத்திரிகையான 'பஞ்சன்யா’வின் ஆசிரியராக இருந்த தருண் விஜய், இப்போது பா.ஜ.க-வின் எம்.பி-யாக இருக்கிறார். இவர் தமிழ் மொழியின் மேன்மைகுறித்து சமீப காலமாக அடிக்கடி பேசிவருகிறார். இதற்காக கவிஞர் வைரமுத்து தலைமையில் இவருக்கு ஒரு பாராட்டு விழாகூட சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது.
இந்தத் தமிழ்ப் பற்றின் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் நோக்கங்கள் இருக்கக்கூடுமா? 'நிச்சயம் இருக்கிறது’ என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்வது இதைத்தான்... 'தமிழ்நாட்டில் 'இந்து-முஸ்லிம்’, 'இந்து-கிறிஸ்துவர்’ என்ற மத துவேஷங்கள் எடுபடுவது இல்லை. இந்தியா முழுவதும் தனது வளர்ச்சிக்கு பா.ஜ.க பயன்படுத்தும் அஸ்திரங்கள் தமிழ்நாட்டில் செல்லுபடியாவது இல்லை. ஏனெனில் இங்கு தந்தை பெரியார் முன்னெடுத்த திராவிட அரசியலின் மிச்சம் இன்னும் இருக்கிறது. எனவே இங்குள்ள சூழலுக்கு ஏற்ப புதிய வழிமுறையைப் பின்பற்றத் தொடங்கி உள்ளது பா.ஜ.க. அதில் ஒன்றுதான் தமிழ்ப் பெருமையை கையில் எடுப்பது’ என்ற கருத்தை பலர் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். கர்நாடகாவில் லிங்காயத் சாதியை குறிவைத்துக் களம் இறங்கி செறிவான வாக்குவங்கியைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்த பா.ஜ.க., அதே பாணியை இங்கும் பின்பற்ற முயற்சிக்கிறது
''பா.ஜ.க-வின் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது. புதிய தலைமுறையின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளும் திறனுடன் எந்த அரசியல் கட்சியும் இல்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு பா.ஜ.க-வுக்கு இது சிறந்த வாய்ப்பு. என்னுடைய கணிப்புப்படி வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 15 சதவிகித வாக்குகளை வாங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், வடக்கில் முஸாஃபர் நகர்போல தமிழ்நாட்டில் வன்முறை வழிமுறையைக் கையில் எடுப்பார்கள் என நான் நம்பவில்லை. இது அமித்ஷாக்களின் காலம். ஒருபக்கம் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை இன்னும் இறுக்கமாக்கிக்கொண்டே, கடுமையான பிரசாரம் மூலம்தான் பா.ஜ.க வளர முயற்சிக்கும்'' என்கிறார் எழுத்தாளர் 'ஆழி’ செந்தில்நாதன்.
'ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, விரைவில் வரவிருக்கும் தி.மு.க மீதான 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு போன்றவை, தமிழக அரசியல் சூழலில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது’ எனக் கூறும் பா.ஜ.க., அந்த வெற்றிடத்தைத் தங்களால்தான் நிரப்ப முடியும் என்றும் கூறுகிறது. அதற்கு, மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள இந்த நேரத்தைவிட பொருத்தமான சந்தர்ப்பம் வேறு எது?
நன்றி:ஆனந்தவிகடன்
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் 57 முஸ்லிம் குடும்பங்கள், 'தாய் மதத்துக்குத் திரும்புவதாக’ ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது. அதாவது அவர்கள் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளதாக அறிவித்தது. ஆனால் அதன் பின் அந்த 57 குடும்பத்தினரும் ஊடகங்களுக்குத் தந்த பேட்டிகளோ வேறு மாதிரி இருந்தன. 'நாங்கள் எல்லோரும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, பண்ணையார்களால் துரத்தி அடிக்கப்பட்டவர்கள். கடந்த 17 ஆண்டுகளாக இந்தச் சாக்கடை நிறைந்த குடிசைப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம். திடீரென ஒருநாள் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான அடையாள அட்டை வாங்கித் தருவதாகவும், அதன் மூலம் நிறைய வசதிகள் கிடைக்கும் என்றும் சொல்லி எங்களை அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு கட்டாய மதமாற்றம் செய்துவிட்டனர்’ என்றனர்.
இந்தச் சூடு குறைவதற்குள்ளாக டிசம்பர் 25-ம் தேதி இன்னுமொரு மெகா மதமாற்ற புராஜெக்ட்டை கையில் எடுத்தன இந்துத்துவ அமைப்புகள். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்துத்துவ அமைப்புகளுக்கான தலைமைப் பீடமாக விளங்கினாலும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், சிவசேனா, அனுமன் சேனா, ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என இந்துத்துவ சக்திகள் நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் இயங்கிவருகின்றன. இவை அரசியல் முகங்களைக் கொண்டவை. தமிழ்நாட்டில் செயல்படும் 'நல்லோர் வட்டம்’ போன்றவையும் இந்துத்துவ இயக்கங்களின் இன்னொரு பிரிவுதான். இந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 'தரம் சக்ரா சமிதி’ (Dharam jagran samiti) என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் உ.பி மாநிலம் அலிகாரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருந்தே வீடு வீடாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதில் எழுதப்பட்டிருந்த விஷயத்தைப் படித்த எல்லோரும் ஒரு கணம் அதிர்ந்துபோனார்கள்.
ஏராளமான கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் அவர்களின் தாய் மதமான இந்து மதத்துக்குத் திரும்ப விரும்புவதாகவும் ghar wapsi), இதற்கு நிறைய நிதி தேவைப்படுவதாகவும் சொன்னது அந்த நோட்டீஸ். ஒரு கிறிஸ்துவரை மதமாற்ற இரண்டு லட்சம் ரூபாயும், ஒரு முஸ்லிமை மதமாற்ற ஐந்து லட்சம் ரூபாயும் தேவை என அந்த நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது. ஆண்டு ஒன்றுக்கு இரண்டு லட்சம் பேரை மதமாற்றம் செய்ய இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், அதில் ஒரு லட்சம் பேர் கிறிஸ்துவர்கள், ஒரு லட்சம் பேர் முஸ்லிம்கள் என்றும் சொன்னது. முதல் கட்டமாக இந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி 5,000 முஸ்லிம்களையும் 1,000 கிறிஸ்துவர்களையும் மதமாற்றம் செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவும்பட்டது.
ஆக்ரா, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இதனால் மதமாற்ற அறிவிப்பு அங்கு பதற்றத்தை விதைத்தது. யோகி ஆதித்தியநாத் என்கிற சாமியார்தான் மதமாற்றத்தைச் செய்துவைப்பவர். இவர் சாமியார் மட்டும் அல்ல... பா.ஜ.க எம்.பி-யும்கூட. 1998-ல் இருந்து இந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் பா.ஜ.க சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாக இருந்துவருபவர். பா.ஜ.க-வின் வலுவான இந்துத்துவ முகங்களில் ஒருவர். இவர்தான் மதமாற்றத்தையே நடத்துபவர் என்ற நிலையில், இது பா.ஜ.க-வின் நேரடியான நிகழ்ச்சி நிரல் என்பது வெளிப்படை. அவரும் இதை மறுக்கவில்லை.
'இந்து மதத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்துவ மதத்துக்கு மாறும்போது யாரும் இதை ஒரு பிரச்னையாகப் பேசவில்லை. அங்கு இருந்து இங்கு வரும்போது மட்டும் ஊடகங்கள் வேண்டும் என்றே இதை சர்ச்சையாக்குகின்றன’ என்றார் ஆதித்தியாநாத். பிரச்னை, மதம் மாறுவது அல்ல; மதம் 'மாற்றுவது’தான்!
இத்தகைய மதமாற்றத்தின்போது முக்கியமான ஒரு கேள்வி எழும். மற்ற மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு மாற்றப்படுவோர் எந்தச் சாதியில் சேர்க்கப்படுவார்கள்? இதுவரை இதற்குத் தெளிவான பதில் சொல்லப்பட்டது இல்லை. தற்போதைய அலிகார் மதமாற்ற சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்துக்களில் இதற்கான பதில் இருக்கிறது.
இதுபற்றி பேசிய எழுத்தாளர் அ.மார்க்ஸ், ''மதம் மாற்றம் செய்யப்படும் கிறிஸ்துவர்களை 'வால்மிகி சமாஜ்’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். அதாவது அவர்கள் தலித்கள். 'இவர்கள் இந்து மதத்தின் பாதங்கள். இவர்கள் இல்லாமல் இந்து மதம் முழுமை அடையாது’ என்றும் சொல்கிறார்கள். இந்து மதத்தின் நான்கு வர்ண கருத்துக்குறித்து நினைத்துப் பாருங்கள். அதில் தலித்கள், பிரம்மனின் பாதத்தில் இருந்து பிறப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆகவே, கிறிஸ்துவர்கள் இந்து மதத்துக்கு மாற்றப்படும்போது தலித்களாகவே கருதப்படுவார்கள். அதேபோல முஸ்லிம்கள், தாகூர் மற்றும் பிராமணர்கள் ஆகியோர் உயர் சாதியினராம். 'இழந்துவிட்ட வர்ணப் பெருமையை எடுத்துக் கூறி அவர்களை மதமாற்றத்துக்கு சம்மதிக்கவைத்தோம்’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். இப்படி இந்து மதத்தின் வர்ணப் பாகுபாட்டில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் ஆர்.எஸ்.எஸ் கவனமாக இருக்கிறது'' என்கிறார் அ.மார்க்ஸ்.
கடந்த நவம்பர் 9-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பு தமிழ்நாடு முழுவதும் ஒன்பது நகரங்களில் நடைபெற்றது. காக்கி அரைக்கால் சட்டை, தொப்பி என சீருடை அணிந்துகொண்டு ஏராளமானோர் ஊர்வலம் சென்றனர். நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும் காவல் துறை அனுமதி மறுத்தது. இறுதியில் ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அந்த ஊர்வலத்திலும் அதற்கு முன்னும் பின்னுமான அறிவிப்புகள், அறிக்கைகளிலும் ராஜேந்திர சோழன் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார். ராஜேந்திர சோழன் முடிசூட்டிக் கொண்டதன் 1,000-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதும் அந்த ஊர்வலத்தின் நோக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பொதுவாக ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசிய அமைப்புகளின் கவனத்துக்கு உரியவர்கள். முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ் தன்னை ஒரு தமிழ் அடையாளத்துடன் இணைத்துக்கொண்டு களம் இறங்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ஸின் அதிகாரபூர்வ இந்தி வாரப் பத்திரிகையான 'பஞ்சன்யா’வின் ஆசிரியராக இருந்த தருண் விஜய், இப்போது பா.ஜ.க-வின் எம்.பி-யாக இருக்கிறார். இவர் தமிழ் மொழியின் மேன்மைகுறித்து சமீப காலமாக அடிக்கடி பேசிவருகிறார். இதற்காக கவிஞர் வைரமுத்து தலைமையில் இவருக்கு ஒரு பாராட்டு விழாகூட சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்டது.
இந்தத் தமிழ்ப் பற்றின் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் நோக்கங்கள் இருக்கக்கூடுமா? 'நிச்சயம் இருக்கிறது’ என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்வது இதைத்தான்... 'தமிழ்நாட்டில் 'இந்து-முஸ்லிம்’, 'இந்து-கிறிஸ்துவர்’ என்ற மத துவேஷங்கள் எடுபடுவது இல்லை. இந்தியா முழுவதும் தனது வளர்ச்சிக்கு பா.ஜ.க பயன்படுத்தும் அஸ்திரங்கள் தமிழ்நாட்டில் செல்லுபடியாவது இல்லை. ஏனெனில் இங்கு தந்தை பெரியார் முன்னெடுத்த திராவிட அரசியலின் மிச்சம் இன்னும் இருக்கிறது. எனவே இங்குள்ள சூழலுக்கு ஏற்ப புதிய வழிமுறையைப் பின்பற்றத் தொடங்கி உள்ளது பா.ஜ.க. அதில் ஒன்றுதான் தமிழ்ப் பெருமையை கையில் எடுப்பது’ என்ற கருத்தை பலர் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். கர்நாடகாவில் லிங்காயத் சாதியை குறிவைத்துக் களம் இறங்கி செறிவான வாக்குவங்கியைக் கைப்பற்றும் அளவுக்கு வளர்ந்த பா.ஜ.க., அதே பாணியை இங்கும் பின்பற்ற முயற்சிக்கிறது
''பா.ஜ.க-வின் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட முடியாது. புதிய தலைமுறையின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ளும் திறனுடன் எந்த அரசியல் கட்சியும் இல்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு பா.ஜ.க-வுக்கு இது சிறந்த வாய்ப்பு. என்னுடைய கணிப்புப்படி வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 15 சதவிகித வாக்குகளை வாங்க வாய்ப்பு உள்ளது. ஆனால், வடக்கில் முஸாஃபர் நகர்போல தமிழ்நாட்டில் வன்முறை வழிமுறையைக் கையில் எடுப்பார்கள் என நான் நம்பவில்லை. இது அமித்ஷாக்களின் காலம். ஒருபக்கம் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு அரசியலை இன்னும் இறுக்கமாக்கிக்கொண்டே, கடுமையான பிரசாரம் மூலம்தான் பா.ஜ.க வளர முயற்சிக்கும்'' என்கிறார் எழுத்தாளர் 'ஆழி’ செந்தில்நாதன்.
'ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, விரைவில் வரவிருக்கும் தி.மு.க மீதான 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு போன்றவை, தமிழக அரசியல் சூழலில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது’ எனக் கூறும் பா.ஜ.க., அந்த வெற்றிடத்தைத் தங்களால்தான் நிரப்ப முடியும் என்றும் கூறுகிறது. அதற்கு, மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள இந்த நேரத்தைவிட பொருத்தமான சந்தர்ப்பம் வேறு எது?
நன்றி:ஆனந்தவிகடன்
இன்று தமிழக மக்கள் அரசியல் அறிவில் மிகவும் தெளிவடைந்து இருக்கிறார்கள். முன்புபோல மேடைப்பேச்சுகளில் மயங்கியோ,அல்லது பொய் பிரச்சாரங்களுக்கோ,அல்லது சலுகைகளுக்காகவோ,
தமிழக மக்கள் ஏமாந்து போகமாட்டார்கள்.
பா.ஜா.க. வின் தமிழ் விரோத, தமிழர் விரோத கொள்கைகளுக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
கட்டாய மத மாற்றம் என்பது கடும் கண்டனத்திற்கு உரியது...
இதை இந்துத்துவ அமைப்புகள் நடத்துவதை மக்கள் யாவரும் அறிந்து அவர்கள் தோண்டும் குழியில் விழாமல் இருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து ஒரு கிறிஸ்தவர் ஆனால் பா.ஜா.கா.வில் எம்.பீ. பதவியில் இருக்கும் ஒருவர் நம் தேசத்தை இந்துத்துவ அல்லது இந்துக்களின் நாடு என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியும் கூட பா.ஜா.கா. தலைமை எந்த ஒரு சலனமும் இன்றி இருந்தது...
இந்த நடவடிக்கைகள் இப்போது எல்லா தொலைக்காட்சியிலும் பரவலாய் போடப்படுகிறது...இதற்கும் மௌனம் சாதிக்கிறது. எல்லா விடயங்களை பற்றியும் பேசும் நம் பிரதமர் இதைப்பற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன்?
இதை இந்துத்துவ அமைப்புகள் நடத்துவதை மக்கள் யாவரும் அறிந்து அவர்கள் தோண்டும் குழியில் விழாமல் இருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து ஒரு கிறிஸ்தவர் ஆனால் பா.ஜா.கா.வில் எம்.பீ. பதவியில் இருக்கும் ஒருவர் நம் தேசத்தை இந்துத்துவ அல்லது இந்துக்களின் நாடு என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியும் கூட பா.ஜா.கா. தலைமை எந்த ஒரு சலனமும் இன்றி இருந்தது...
இந்த நடவடிக்கைகள் இப்போது எல்லா தொலைக்காட்சியிலும் பரவலாய் போடப்படுகிறது...இதற்கும் மௌனம் சாதிக்கிறது. எல்லா விடயங்களை பற்றியும் பேசும் நம் பிரதமர் இதைப்பற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன்?
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1111726M.Saranya wrote:கட்டாய மத மாற்றம் என்பது கடும் கண்டனத்திற்கு உரியது...
இதை இந்துத்துவ அமைப்புகள் நடத்துவதை மக்கள் யாவரும் அறிந்து அவர்கள் தோண்டும் குழியில் விழாமல் இருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து ஒரு கிறிஸ்தவர் ஆனால் பா.ஜா.கா.வில் எம்.பீ. பதவியில் இருக்கும் ஒருவர் நம் தேசத்தை இந்துத்துவ அல்லது இந்துக்களின் நாடு என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியும் கூட பா.ஜா.கா. தலைமை எந்த ஒரு சலனமும் இன்றி இருந்தது...
இந்த நடவடிக்கைகள் இப்போது எல்லா தொலைக்காட்சியிலும் பரவலாய் போடப்படுகிறது...இதற்கும் மௌனம் சாதிக்கிறது. எல்லா விடயங்களை பற்றியும் பேசும் நம் பிரதமர் இதைப்பற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன்?
உண்மை சரண்யா,
மிகவும் பழமை வாய்ந்த இந்துமதம் முன் எப்போதுமே மற்றவர்களை மதம் மாற்ற முனைந்ததில்லை,
இந்து மதத்தின் உண்மைகளை உணர்ந்து தாமாக வந்து இணைந்தவர்கள்தான் இருக்கிறார்கள்.
மத மாற்றம் செய்வது இந்து மதத்தின் உண்மைகளை உணராதவர்கள் செய்யும் வேலையாகும்.
அப்படி செய்வது இந்துமதத்தின் உண்மைகளில் சந்தேகத்தை உண்டாக்கும்.
சர்க்கரை இருக்குமிடம் தேடி எறும்புகள் வரும், சர்க்கரையை கொண்டுசென்று எறும்பின் புற்றில் போடவேண்டிய அவசியம் இல்லை.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இந்துமதம் சாதிகள் இல்லாதவரை மிகவும் கண்ணியமானதாய் இருந்தது...
அதற்கென்று தனி மரியாதையும் இருந்தது...
ஆனால் இப்போது...
மெத்த படித்தவர்களும் மதம் என்ற போர்வையில் அறிவிலிகள் போன்றல்லவா உள்ளனர்..
இதுவே என் வேதனை.....
அதற்கென்று தனி மரியாதையும் இருந்தது...
ஆனால் இப்போது...
மெத்த படித்தவர்களும் மதம் என்ற போர்வையில் அறிவிலிகள் போன்றல்லவா உள்ளனர்..
இதுவே என் வேதனை.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|