புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_lcapஆண்டாளும் அழகர்கோயிலும்! I_voting_barஆண்டாளும் அழகர்கோயிலும்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாளும் அழகர்கோயிலும்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 12:45 am

மதுரையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கே, மலையடிவாரத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் கள்ளழகர் பெருமாள். இது, 93வது திவ்விய தேசம். திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் தொடர்பு உண்டு.

இங்கே அருளும் உத்ஸவர்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். இவருக்குஸ்ரீ சுந்தரபாஹூ என்றும் திருப்பெயர் உண்டு. பெயருக்கேற்ப கொள்ளைஅழகு இவர்.

மார்பில் கருந்துளசியும், ஒரு காதில் குழல் அணியும், கருடக் கொடியும், கலப்பையும், சிலம்பாறு போன்று வளைந்து திகழும் வில்லும், வாளும் கொண்டு எழிலுற அருளும் இவரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்!

''வேறெங்கும் இல்லாத வகை யில், இங்கே அமர்ந்த திருக் கோலத்தில், சந்தோஷம் பூத்துக் குலுங்குகிற திருமுகத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள். அதுமட்டுமா? ஆண்டாள் கிளி அவளின் இடது தோளில் அமர்ந்திருக்கும். இங்கே ஆண்டாள், பெருமாளுக்கு இடப்புறம் அருள்கிறாள்'' என்று பூரிப்புடன் சொல்லும் கோயிலின் சுதர்சன நாமாவளி பட்டர், இந்த திருத்தலம் குறித்த கோதை ஆண்டாளின் பாடலழகையும் சிலிர்ப்புடன் விவரித்தார்:

''ஒருமுறை, பிரிவுத் துயரில் வாடித் தவித்தாள் கோதை. அப்போது, இங்கு மழை பெய்து, பூமி குளிர்ந்துபோயிருந்தன. சோலையில் பூக்கள் பூத்து, மணம் பரப்பின. இதில் இன்னும் நொந்து போன ஆண்டாள், திருமாலிருஞ்சோலை நாயகனிடம் தன் புலம்பலைப் பாடலாகப் பாடுகிறாள்...

சிந்துரச் செம்பொடிப்போல்

திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே

எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான்

சுழலையினின் றுய்துங்கொலோ

-எனப் பாடி, 'நான் உய்வேனோ?’ என வினவுகிறாள். அதுமட்டுமா?

பைம்பொழில் வாழ்குயில்காள்!

மயில்காள்! ஒண் கருவிளைகாள்!

வம்பக் களங்கனிகாள்!

வண்ணப்பூவை நறுமலர்காள்!

ஐம்பெரும் பாதகர்காள்!

அணிமாலிருஞ் சோலைநின்ற

எம்பெரு மானுடைய

நிறமுங்களுக் கென்செய்வதே?

-என அங்கு வாழும் பறவைகளிடம் 'அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?’ எனக் கோபம் கொள்கிறாள்!'' என்று விவரித்தவர், அடுத்து 'நாறு நறும்பொழில்மா...’ என்கிற பாசுரம் மூலம் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாள் அக்கார அடிசில் படைப்பதாகப் பாடியதையும் பகிர்ந்துகொண்டார்.

நாறு நறும்பொழில்மா

லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறு தடாவில் வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறு தடா நிறைந்த

அக்கார வடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று

வந்திவை கொள்ளுங் கொலோ!

-என்று, தான் சமர்ப்பிக்கும் அக்கார வடிசலை அழகர் ஏற்பாரோ, மாட்டாரோ எனஅந்தப் பாடலில் உருகுகிறாள் கோதை.

இவ்வாறு ஆண்டாள் நாச்சியார் திருமொழியில், இப்பெருமாளுக்கு 100 தடா வெண்ணெயும்,100தடா அக்காரவடிசிலும் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார்.

'இன்றைக்கும், மார்கழி துவங்கிவிட்டால், நூறு டபராக்களில் அக்கார வடிசல் பிரசாதமும், நூறு கிண்ணங்களில் வெண்ணெய் கல்கண்டும் நைவேத்தியமும் செய்யப்படுகிறது. மார்கழி 27ம் நாள், இதை விழாவாகவே கொண்டாடி வருகிறோம். அன்றைக்கு கோயிலின் அர்த்த மண்டபத்தில், அலங்காரம் செய்யப்பட்ட உத்ஸவரைத் தரிசிக்கலாம். அனைவருக்கும் அக்கார வடிசல் பிரசாதம் வழங்கப்படும்'' என்கிறார்சுதர்சன நாமாவளி பட்டர்.

நாமும் கோதையின் வழியில் அழகரை வழிபட்டு அருள்பெறுவோம்.

நன்றி:சக்திவிகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 5:01 am

ஆண்டாளும் அழகர்கோயிலும்! 103459460
-
(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில்
பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது
6, 7, பாசுரங்களை மிகவும் பக்தியோடு அநுசந்திப்பது
வழக்கம்.

ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில்
வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக
சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம்
உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக