ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

+2
சிவனாசான்
Powenraj
6 posters

Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by Powenraj Wed Dec 24, 2014 6:33 pm

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகள், நாட்டிலேயே அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013-14ம் கல்வி ஆண்டில் இந்திய அளவில் விதிமுறைகளைப் பின்பற்றாத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 233. இதில் 45 கல்லூரிகள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வோர் ஆண்டும் விதிகளை மீறுவதில் தமிழகக் கல்லூரிகளுக்கே முதல் இடம்.

உரிய கட்டட வசதி இல்லாதது, அதிகக் கட்டணம் வசூலிப்பது, லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிப்பது, தகுதியான ஆசிரியர்களை நியமிக்காதது... எனப் பொறியியல் கல்லூரிகளின் மோசடிகளை 'விதிமீறல்’ என்றுகூடச் சொல்ல முடியாது; அது பட்டவர்த்தமான பகல் கொள்ளை. கடந்த காலங்களில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தமிழ்நாட்டில் விதிகளைப் பின்பற்றாத ஐந்து பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடியிருக்கிறது. ஆனால், அது மற்ற கல்லூரிகளின் அணுகுமுறையில் எந்தவித மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. மாறாக, கல்லூரிக்குத் தாமதமாக வந்தால் ஓர் அபராதத் தொகை, விடுமுறை எடுத்தால் ஓர் அபராதத் தொகை... என இன்னும் புதுப் புது வழிகளில் பணம் வசூலிக்கிறார்கள்.

இப்படி பணம் கறக்கும் பொறியியல் கல்லூரிகள், அதற்குரிய தரமான கல்வியைத் தருவது இல்லை. அங்கே படிப்பை முடித்து வெளியேறும் பொறியாளர்களில் திறன்மிக்கவர்களின் சதவிகிதம் மிக மிகக் குறைவு. நான்கு ஆண்டு காலம் பெற்றோரின் கனவை, உழைப்பை, சேமிப்பை உறிஞ்சி, மாணவர்களை மந்தைகளைப்போல நடத்தி, பணம் பிடுங்கி, வெறும் கூடுகளாகத் திருப்பி அனுப்புகிறார்கள். இந்த அரசியல் அதிகார சூதாட்டத்தை நடத்துபவர்கள்தான் கல்வித் தந்தைகளாக வலம் வருகின்றனர். திட்டம் தீட்டுவதும் இவர்களே; திட்டம் போட்டு அதை ஒழித்துக்கட்டுவதும் இவர்களே.

முதலில், அரசு நிர்ணயித்ததைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் அத்தனை கல்லூரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கற்பிக்க உரிய வசதிகள் இல்லாத கல்லூரிகளின் உரிமங்களை ரத்துசெய்ய வேண்டும். விதிகளைப் பின்பற்றாத கல்லூரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு, அந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கும் அனுமதிக்கும் கோமாளித்தனத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.

கல்வியில் கலப்படத்தை அனுமதிப்பது ஒரு தலைமுறையின் வளர்ச்சியையே முடமாக்கும் கொடும் செயல். அதை இனியும் அனுமதிக்கக் கூடாது!

ஆனந்தவிகடனிலிருந்து...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty Re: முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by சிவனாசான் Wed Dec 24, 2014 8:09 pm

அன்பரே நல்ல பதிவு...............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty Re: முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by Dr.S.Soundarapandian Wed Dec 24, 2014 8:19 pm

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  1571444738 முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty Re: முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by ayyasamy ram Wed Dec 24, 2014 8:40 pm

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty Re: முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by T.N.Balasubramanian Wed Dec 24, 2014 9:57 pm

ஆயிரம் அன்னதான சத்திரம் கட்டுதலிலும் சாலச் சிறந்தது
ஆங்கோர் ஏழைக்கு எழ்த்தறிவித்தல் என்று பாரதி அன்றே பாடினான் .
எழுத்து அறிவு தருகிறேன் --ஏழைக்கு அல்ல !
நான் கள்ளத்தனமாக பணம் சம்பாத்தித்து ,
நான் கொள்ளை லாபம் அடித்து ,பணக்காரன் ஆக ,
கல்வி புகட்டுகிறேன் .,என்கிறான் இன்றைய அரசியல்வாதி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty Re: முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by ராஜா Thu Dec 25, 2014 11:18 am

T.N.Balasubramanian wrote:ஆயிரம் அன்னதான சத்திரம் கட்டுதலிலும் சாலச் சிறந்தது
ஆங்கோர் ஏழைக்கு எழ்த்தறிவித்தல் என்று பாரதி அன்றே பாடினான் .
எழுத்து அறிவு தருகிறேன் --ஏழைக்கு அல்ல !
நான் கள்ளத்தனமாக பணம் சம்பாத்தித்து ,
நான் கொள்ளை லாபம் அடித்து ,பணக்காரன் ஆக ,
கல்வி புகட்டுகிறேன் .,என்கிறான் இன்றைய அரசியல்வாதி .
ரமணியன்


உண்மை ஐயா ... இன்று கலை,அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் கல்லூரிகள் தான் அதிகம், எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான் ஆனால் திறமை என்று பார்க்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.

இலங்கையை சேர்ந்த நண்பர்கள் சொல்வது , அங்கெல்லாம் பொறியியல் & மருத்துவம் இரண்டிற்கும் தேசிய அளவிலான Merit அடிப்படையில் தான் இடமாம் அதுவும் அரசு பல்கலைகழகங்கள் மட்டும் தானாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty Re: முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by T.N.Balasubramanian Thu Dec 25, 2014 8:19 pm

இலங்கையை சேர்ந்த நண்பர்கள் சொல்வது , அங்கெல்லாம் பொறியியல் & மருத்துவம் இரண்டிற்கும் தேசிய அளவிலான Merit அடிப்படையில் தான் இடமாம் அதுவும் அரசு பல்கலைகழகங்கள் மட்டும் தானாம்.

நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபாடு உடைய அரசியல்வாதிகள் இதைத்தான் செய்வார்கள் .
தன்னுடைய முன்னேற்றத்தில் ஈடுபாடு உடைய அரசியல்வாதி ,
தற்போதைய முறையையே கடைப் பிடிப்பான் .
பொறியியல் , மருத்துவம் அன்றி , வானியல் /அணு ஆராய்ச்சியும் , அகில இந்திய merit இல் தான் தரப்பட வேண்டும்.

இன்று கலை,அறிவியல் கல்லூரிகளை விட பொறியியல் கல்லூரிகள் தான் அதிகம், எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான் ஆனால் திறமை என்று பார்க்கும் போது வருத்தம் தான் மேலிடுகிறது.
உண்மை . கலை /அறிவியல் கல்லூரிகளில் அதிகம் நன்கொடை எதிர் பார்க்கமுடியாது . பொறி இயல் ,
மருத்துவத்தில் அதிகம் நன்கொடை . நன்கொடை கொடுத்து அட்மிசன் வாங்கி , அரைகுறையாக படித்து
தன்னிகர் பல்கலை கழகங்கள் , தங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்ள , அள்ளி மார்க் அளித்து , பாஸ் பண்ண வைத்து .......வேறென்ன அவலம் தான் .
மருத்துவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் , மெடிகல் ரெப் சொல்வதை , செயல் படுத்துபவர்கள் .
பொறியியல் மாணவர்கள் - பரிதாபம் . எனக்கு தெரிந்த ஒரு பையன் 4 வருடமாக வேலை இல்லை .
இவ்வளவிற்கும் IT படித்தவர் . Data entry பண்ணிக்கொண்டு இருப்பார். மாதம் 3000/- கிடைத்தல் அரிது .
முன்பு மாதிரி மெக்கனிகல், எலெக்ட்ரிகல் எஞ்சினீரிங் lab வைக்க முதலீடு அதிகம் செலவழிக்க வேண்டும் என்று , எல்லாம் IT தான் .
முன்னோக்கி போவதாக நினைத்து , பின்னோக்கி போகிறோம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?  Empty Re: முதல் இடம் நோக்கி முன்னேறுவது பெருமைதான். ஆனால், எதில்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» எந்தஎந்த மாநிலம் எதில் எதில் முதலிடம்?
» உயரம் இரண்டே அடி... ஆனால் 4 லிட்டர் பால்... கின்னஸில் இடம் பெற்ற நாட்டு மாடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum