புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
25 Posts - 39%
heezulia
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
7 Posts - 2%
prajai
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுதாங்க போலீஸ்! Poll_c10இதுதாங்க போலீஸ்! Poll_m10இதுதாங்க போலீஸ்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதாங்க போலீஸ்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 12:33 am

நகரங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷனின் 'மாமூல் வாழ்க்கை’ ஜெகஜோதியாக இருக்கும். ஆனால் கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்களின் வரவுசெலவுக் கணக்குகள் பற்றிய ஸ்கேனிங்தான் இது.

ஜமுக்காளம், ஆலமரம், சொம்பு இவை எதுவும் இல்லாத பஞ்சாயத்துக்கூடம் மாதிரிதான் கிராமத்து போலீஸ் ஸ்டேஷன்கள். மூணு வருடங்களுக்கு மேல் ஒரு காவலர் அதே ஸ்டேஷனில் இருக்கக் கூடாதுங்கிறது விதி. ஆனா ஃபெவிக்கால் போட்டு ஒட்டியது மாதிரி ஓர் ஏட்டய்யா அங்கேயே இருப்பார். மாற்றலாகி வரும் அதிகாரிகளுக்கு அவர்தான் ஏரியா மக்களின் ப்ரொஃபைலை விலாவாரியாக விளக்குவார். கையில் காசிருக்கும் அதிகாரிகள் கல்லா நல்லா கட்டும் சரகமாக 'வாங்கி’ போய்விடுவார்கள். ஏட்டாக இருந்து எஸ்.ஐயாகி, பின் இன்ஸ்பெக்டரானவரோ அல்லது எஸ்.ஐயாக வேலைக்குச் சேர்ந்து ஏகப்பட்ட ப்ளாக் லிஸ்ட்டில் இருந்து ரிட்டயர்டாக ஒன்று அல்லது இரண்டு வருடம் இருக்கும்போது இன்ஸ்பெக்டர் ப்ரொமோஷன் கிடைத்த யாராவது ஒருவர்தான் அங்கே டிரான்ஸ்ஃபரில் வருவார்.

பெரும்பாலும் நிலம் சார்ந்த பிரச்னைகள், வரவு செலவு பஞ்சாயத்துகள் அல்லது காதல் பிரச்னைகள்தான் வரும். அடிதடியெல்லாம் நகரம், மாநகரம் அளவுக்கு இருக்காது. நிலப்பிரச்னையென்றால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புகார் அளிக்க வந்த நபர்தான் நல்லவர் என்கிற அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கும். புகார் செய்யப்பட்டவர் ஊரின் பெரிய மனிதர் என்றால், 'ஏண்டா... அவர் மேலேயே கம்ப்ளைன்ட்டா?’ என ரெண்டு அடியைப் போட்டு அனுப்பிவிடுவர்கள். புகார் என்பதை வாயால் சொன்னால் போதும். விசாரணை துவங்கிவிடும்.

'அய்யா. என் தம்பிகாரன் அவன் பங்கை வித்துப்புட்டான். அதை வாங்கின இந்தாளு வரப்பு 2 அடி சேர்த்துக் கட்டிட்டாரு’ இதுதான் புகாராக இருக்கும். வரப்பு கட்டியவன் சோப்ளாங்கியாக இருந்தால், ஏட்டையா லெவலிலேயே பஞ்சாயத்து வெறும் 2,000 ரூபாய் செலவில் (இருதரப்பும் ஆளுக்கு 1,000 ரூபாய் போட்டு) முடிந்துவிடும். இரண்டு பேரில் யாராவது கொஞ்சம் விபரமாக சட்டம் பேசினால், எஸ்.ஐயிடம் போகும். 'விளைச்சல் பூமியில எச்சி துப்பினாக்கூட ஆறு மாசம் உள்ள போடலாம், சட்டத்தில் இடமிருக்கு (!)’ என்றபடி உடனடியாக எப்.ஐ.ஆர் போடப்போவதாகச் சொல்லி வரப்பு கட்டியவனை உட்கார வைத்து 'வெயிட்’ பார்ப்பார். உட்காரவைக்கப்பட்ட ஆளுக்கு லெட்டர்பேடு கட்சிக்கார ஆளாவது வருவார். 'இந்தப் பஞ்சாயத்து கோர்ட்டுக்குப் போனா 15 வருஷமாகும். அதனால சுமுகமாகப் போங்க’ என்று தீர்ப்பளித்து அனுப்பிவைப்பார். கடைசியில் இரு தரப்புக்கும் சேர்த்து 5,000 ப்ளஸ் டீ கடைக்கு 500 என செலவாகியிருக்கும். நில விவகாரங்களில் காவல் துறை தலையிடக் கூடாதென்பதால் பெரும்பாலும் நில விவகாரங்கள் பஞ்சாயத்தாகத்தான் பேசி முடிக்கப்படும்.

எந்த கிராமத்து ஸ்டேஷனுக்கு திடீர் விசிட் அடித்தாலும் சரக்கைப் போட்டு சொத்தில் பங்கு கேட்டு அப்பனை அடித்த ஒரு மகனாவது கண்டிப்பாக லாக்அப்பில் இருப்பார். அவரை 'வெச்சு’ விசாரித்தாலும் சரி, காலையில் ரிமாண்டுக்கு அனுப்பினாலும் சரி அதுவரையில் ஒவ்வொரு வேளையும் உணவளிக்க வேண்டும். அதற்கு அரசு ஒதுக்கியுள்ள தொகை ஒரு நாளைக்கு 10 ரூபாய்.

யாரையாவது ரிமாண்ட் செய்ய வேண்டுமென்றால் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அங்கிருந்து ஜெயிலுக்குக் கொண்டு செல்ல வேண்டும். குற்றவாளியை அழைத்துச் செல்லும்போது ஓடிவிட்டால், காவலுக்குப் போன போலீஸார்தான் சஸ்பெண்ட் ஆவார்கள். மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு போவதுபோல போக வேண்டும் என்பதால், பெரும்பாலும் ஆட்டோ அல்லது டாக்சிகள்தான். பில் தொகையை போலீஸார்தான் அழ வேண்டும். போக்குவரத்துக்கு என பணம் ஒதுக்கவில்லை. வழியில் கைதி சாப்பாடு வேண்டும் என்றால், காவலுக்குப் போகும் போலீஸ்தான் வாங்கிக்கொடுக்க வேண்டும். வயிற்றில் பசியோடு கைதிகளை சிறைக்காவலர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை.

அந்த ஸ்டேஷன் பக்கத்தில் ஏதாவது பரிகாரத்துக்குப் பிரசித்தி பெற்ற கோயில் இருந்தால், தொலைந்தார்கள் ஏட்டய்யாக்களும் கான்ஸ்டபிள் களும். வாரம் முழுவதும் யாராவது 'அய்யாக்களின்’ உறவினர்கள் வந்தபடி இருப்பார்கள். அவர்கள் மனம் மகிழ அனுப்பி வைப்பதே இவர்களுக்கு பரிகாரம் செய் ததுபோல் இருக்கும். நகரத்து ஸ்டேஷன்கள் போல பீட் காசு, பெட்டிக்கடை வசூல், பார் வசூல் போன் றவைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் காதல் பஞ்சாயத்துகள்தான் பெரிய இன்கம் ஸோர்ஸ். 'எவ்வளவு செலவானாலும் சரி, என் சொத்து முழுசும் போனாலும் பரவாயில்லை, என் பொண்ணு எனக்கு வேணும்’ என்றபடி காதலனுடன் ஓடிப்போன மகளை கண்டுபிடிக்கச் சொல்லிப் படியேறும் தகப்பனைப் பார்க்கும்போது கிரில்லில் சுற்றிக்கொண்டிருக்கும் சிக்கனைப் பார்ப்பது போலத்தான் இருக்கும்!

நன்றிடைம்பாஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 5:09 am

இதுதாங்க போலீஸ்! 103459460
-
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலைன்னு
ஒரு பழமொழி இருக்காமே...!!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 25, 2014 9:30 pm

கிராமத்து போலீசின் உண்மை நிலைமை பதிவு சூப்பருங்க




இதுதாங்க போலீஸ்! Mஇதுதாங்க போலீஸ்! Uஇதுதாங்க போலீஸ்! Tஇதுதாங்க போலீஸ்! Hஇதுதாங்க போலீஸ்! Uஇதுதாங்க போலீஸ்! Mஇதுதாங்க போலீஸ்! Oஇதுதாங்க போலீஸ்! Hஇதுதாங்க போலீஸ்! Aஇதுதாங்க போலீஸ்! Mஇதுதாங்க போலீஸ்! Eஇதுதாங்க போலீஸ்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 25, 2014 10:00 pm

புட்டு புட்டு வைக்க பட்டுள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 25, 2014 10:38 pm

அடப்பாவமே ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Dec 26, 2014 4:43 am

இவ்வாரான நிகழ்வுகளுக்கு அரசியல்கட்சி ஆட்சி செய்வதால் ஏற்படும் அவலம். பயிறுக்கு வேலி போல ..சட்டத்திற்கு காவல்துறை.........வேலியே பயிரை மேய்தகதை என்றால் உதாரணத்திற்கு உங்களின் இப் பதிவை யே கொள்ளலாம்...........உண்மை இதுதானே.........நடக்குது......

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக