ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்...

3 posters

Go down

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்... Empty 2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்...

Post by Powenraj Mon Dec 22, 2014 12:33 am

2ஜி அலைக்கற்றை உரிமத்தை அன்றைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், டி.பி.குரூப் நிறுவனங்கள், கலைஞர் தொலைக்காட்சி, அதற்கு வந்த 200 கோடி ரூபாய், கனிமொழி என இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்தப் புள்ளியில் இணைகிறார்கள் என்பதை, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை விவரித்துள்ள விதம்...

ஷாகித் உஸ்மான் பல்வா: டி.பி.குரூப் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் பங்குதாரர். இவருடைய முக்கியத் தொழில், ரியல் எஸ்டேட். இவர் தன்னுடைய நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையிலும் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கான யோசனையைத் தங்களுடைய அட்வைஸர் ஆனந்த் பட் தெரிவித்தார் என்றும் அதற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் இணைய வேண்டும் என அறிவுறுத்தினார் என்றும் தன்னுடைய சாட்சியில் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குகளை டி.பி.குரூப் நிறுவனங்கள் வாங்கின. மேலும், ஆனந்த் பட், டி.பி.குரூப் நிறுவனங்களுக்கு அட்வைஸராகப் பணியாற்றும் முன் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் அட்வைஸராகப் பணியாற்றியவர். அதனால், அவருக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பற்றி நன்கு தெரியும். ஆகையால், தைரியமாக அந்தத் தொழிலிலும் இறங்கினோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசிப் பால்வா: ஸ்வான் டெலிகாம்/குஷேகான் நிறுவனங்களின் இயக்குநர். டி.பி.குரூப் நிறுவன செயல் இயக்குநர்.

இவர் தனது வாக்குமூலத்தில், 'எங்களுடைய ஸ்வான் டெலிகாம் நிறுவனம், 2ஜி அலைக்கற்றை உரிமத்தைப் பெற்ற உடன், குஷேகான் நிறுவனத்துக்கு ரூ.200 கோடியை கடனாகக் கொடுத்தோம். அதற்கு முறையான ஒப்பந்தங்கள் எதுவும் செய்துகொள்ளவில்லை. ஏனென்றால், டி.பி.குரூப் நிறுவனங்களில் என்னைப்போல், வினோத் கோயங்காவும் ஒரு நிர்வாகி. அதனால், முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் நம்பிக்கையின் பேரில் ரூ.200 கோடியை குஷேகான் நிறுவனத்துக்கு வழங்கினோம்’ என்கிறார்.

கரீம் மொரானி: இயக்குநர்/பங்குதாரர் சினியூக் ஃபிலிம் பிரைவேட் லிமிட்டெடு.

இவர் டி.பி.குரூப் நிறுவனங்களின் பங்குகளையும் வைத்துள்ளார். கரீம் மொரானி, குஷேகான் நிறுவனம் பற்றியும் டி.பி.குரூப் நிறுவனம் பற்றியும் நன்றாக அறிந்து வைத்துள்ளார். காரணம், அந்த நிறுவனங்களின் பங்குகளிலும் பொறுப்புகளிலும் இருக்கும் வினோத் கோயங்கா, கரீம் மொரானியின் பால்யகால நண்பர். அந்த அடிப்படையில் இவருடைய சினியூக் நிறுவனத்துக்கு ரூ.200 கோடியை குஷேகான் நிறுவனம் வழங்கியது என்று தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.

மனோகர் பிரசாத்: இணை நிர்வாக இயக்குநர் ஜெமினி நிறுவனம்.

'ஜெமினி தொலைக்காட்சியில் சரத்குமார் பணியாற்றிய காலத்தில் இருந்து எனக்கு அவரைத் தெரியும். அந்தத் தொடர்பின் மூலம் கலைஞர் தொலைக்காட்சியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துகொண்டோம். மேலும், ஜெமினி நிறுவனம் இதுபோல் மிகப் பெரிய விளம்பர ஒப்பந்தத்தை வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் செய்தது இல்லை. இதன் பொருட்டு சரத்குமார் என்னை சந்திக்க வரும்போது, அவருடன் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் ராஜா சங்கரும் வந்திருந்தார்’ என்று கூறியுள்ளார்.

யுனைட்டெட் ஸ்பிரிட் நிறுவனமும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும் வேறு எந்தத் தொலைக்காட்சியுடனும் இத்தனை பெரிய விளம்பர ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளவில்லை. ஆனால், கலைஞர் தொலைக்காட்சியுடன் மட்டும் இதுபோன்ற ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளன.

சாதிக் பாட்ஷா (மரண மடைந்தவர்): கிரீன் ஹவுஸ் புரமோட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர்.

சாதிக் பாட்ஷாவின் நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரியுடைய மகன் பரமேஸ்குமார், ராசாவின் மூத்த சகோதரர் கலியபெருமாள் ஆகியோர் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். சாதிக் பாட்ஷா தனது வாக்குமூலத்தில், 'ஆ.ராசாவை 199394 காலகட்டத்தில் இருந்தே தெரியும். டெல்லியில் உள்ள ராசாவின் வீட்டில் வைத்தும், சென்னை அரசு விருந்தினர் மாளிகையிலும் அவரை தொடர்ச்சியாக சந்திப்பேன். ராசாவின் நம்பிக்கைக்குரிய தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியாவும் எனக்கு நல்ல நெருக்கம். கோவை மற்றும் நீலகிரியில் உள்ள சில பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் டிரான்ஸ்ஃபர் தொடர்பாக சந்தோலியாவைச் சந்தித்து உள்ளேன். ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ராசா இருந்தபோது அவரை சந்திக்க வருவார்கள். அப்போது அவர்களுடன் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்களை மும்பையில் ஒருமுறை அவர்கள் அலுவலகத்தில் வைத்தும், இரண்டு மூன்று முறை சென்னையில் வைத்தும் சந்தித்துள்ளேன். ஷாகித் உஸ்மான் பல்வா சென்னையில், தமிழகத்தின் அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய வீட்டில் வைத்து சந்தித்தபோது நானும் ராசாவும் உடன் இருந்தோம்’ என்று கூறியுள்ளார்.

ஏ.கே.ஸ்ரீவத்சவா: துணை இயக்குநர், தொலைத்தொடர்புத் துறை. இவருடைய வாக்குமூலத்தில், '10.01.2008 அன்று, அமைச்சர் ராசாவின் தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து உடனடியாக 2ஜி உரிமத்தை வழங்க வேண்டும், நான்கு கவுன்டர்கள் அமைத்து அதில் முதலில் வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்க வேண்டும் என்றார். இதை நான் உள்பட மற்ற அதிகாரிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தோம். உடனே, சந்தோலியா, தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அறைக்கு வரும்படி என்னை அழைத்தார். நான் அங்கு போனதும், இது அமைச்சரின் உத்தரவு. அவருடைய தனி உதவியாளர் சந்தோலியா சொல்வதுபோல், உடனடியாக அலைக்கற்றை உரிமத்தை வழங்குங்கள். அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க நமக்கு அதிகாரம் இல்லை என்று தொலைத்தொடர்புத் துறை செயலாளர் பெகுகுரா என்னிடம் கூறினார்’ என்று கூறியிருக்கிறார்.

ஆசீர்வாதம் ஆச்சாரி: ஆ.ராசாவின் உதவி தனிச் செயலாளர்.

'1999ல் இருந்து 2008 வரை அமைச்சர் ஆ.ராசாவுடன் பல்வேறு வகைகளில் பணியாற்றி உள்ளேன். அமைச்சர் ராசாவுக்கான கடிதங்களை ஆங்கிலத்திலும் இந்தியிலும் தயார் செய்து கொடுப்பது என் வேலை. சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஷாகித் உஸ்மான் பல்வா போன்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது தொடர்ந்து அவரைச் சந்திப்பார்கள். தங்களுடைய திட்டங்களுக்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழ் கேட்பார்கள். இவர்களில் வினோத் கோயங்கா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர், ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான பின்னும் அவரைத் தொடர்ந்து சந்திந்து வந்தார்கள். ஏனென்றால், அப்போது அவர்கள் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து, தொலைத்தொடர்புத் துறையிலும் அடியெடுத்து வைத்திருந்தனர். தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் கலைஞர் தொலைக்காட்சியை தொடங்கிய போது, அதற்காக மத்திய ஒலிபரப்புத் துறையிடம் அனுமதி வாங்குவதற்கு ராசாவை சந்தித்தார் சரத்குமார். அப்போது, ராசா, அன்றைய மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் அவருடைய தனிச் செயலாளர் மனோஜ்குமார் அகர்வால் ஆகியோரிடம் தொலைபேசியிலேயே பேசி அதற்கான அனுமதியை வாங்கினார்’ என தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ஆ.ராசா, விதிமுறைகளை உடைத்து ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்காக 2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கி உள்ளார் என்பது வத்சவா சாட்சியின் மூலம் தெரியவருகிறது. அதற்கு காரணம், அந்த நிறுவனங்களின் இயக்குநர்களான ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிப் பல்வா ஆகியோர் ஆ.ராசா சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோதே அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர். அந்த நெருக்கத்துக்காக ஆ.ராசா விதிமுறைகளை மீறி, அதிகாரிகளின் ஆட்சேபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு 2ஜி உரிமத்தை வழங்கி உள்ளார்.

ஆ.ராசா இந்த நிறுவனங்களுக்குத்தான் 2ஜி அலைக்கற்றை உரிமத்தை வழங்குவார் என்பது அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் முன்பே தெரிந்திருக்கிறது. அதற்கேற்றவாறு அவர்கள் எல்லாவித முன்னேற்பாடுகளுடன் தயாராக இருந்துள்ளனர். ஆசீர்வாதம் ஆச்சாரி, வத்சவா, சாதிக் பாட்ஷா ஆகியோர் சொன்ன சாட்சிகள் மூலம் உறுதியாகி உள்ளன என்று சொல்கிறது குற்றப்பத்திரிகை.

அலைக்கற்றை விவகாரம் ஆபத்துக் கட்டத்தில்தான் இருக்கிறது.

ஜினியர்விகடனிலிருந்து...
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்... Empty Re: 2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்...

Post by ayyasamy ram Mon Dec 22, 2014 6:24 am

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்... 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்... Empty Re: 2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்...

Post by T.N.Balasubramanian Mon Dec 22, 2014 6:45 am

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்... 103459460 2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்... 103459460

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்... Empty Re: 2ஜி அலைக்கற்றை குற்றப்பத்திரிகையில் என்ன இருக்கிறது? சாட்சிகளும்... வாக்குமூலங்களும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சாய்பாபா அறையில் என்ன தான் இருக்கிறது? நீடிக்கும் ரகசியம்
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» சொராபுதீனை என்கவுண்டரில் கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தர விட்டார்; சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum