Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’ இசைக்குயில்களின் இல்லறம்...
Page 1 of 1
புரிதல் இருந்தால், பிரிதல் இருக்காது!’’ இசைக்குயில்களின் இல்லறம்...
டிசம்பர் மாத சங்கீத சீஸனில் இசையில் கரைந்துகொண்டிருக்கும் பாடகிகள் சுதா ரகுநாதனும், மஹதி ஸ்ரீகுமாரும்! மேடையில் இவர்களை நாம் அறிவோம்... ‘இவர்களின் வீடுகளில் எப்படி..?!’
- சொல்கிறார்கள் இசைக் குயில்களின் இணைக் குயில்கள்!
‘‘இதைவிட சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்கா என்னங்கிற நிறைவான வாழ்க்கை எனக்குக் கிடைக்கக் காரணம், சுதா!’’ என்று அன்பால் அறிமுகம் கொடுக்கிறார், சுதா ரகுநாதனின் கணவர் எம்.சி. ரகுநாதன்!
‘‘சுதாவை நான் ‘சுதாம்மா’னுதான் கூப்பிடுவேன். சுதாம்மாவுக்கும் எனக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தின திருமணம். அவங்களோட சமயோஜித புத்தி, ஞாபகசக்தி, எல்லோரையும் கவரும் பேச்சு, டிரெஸ்ஸிங் சென்ஸ்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தினமும் தவறாம யோகா பண்ணுவாங்க. கச்சேரிகளில் பிஸியா இருந்தாலும், குடும்பத்தையும் அழகா பேலன்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய மொழிகள் தெரியும். சூப்பரா சமைப்பாங்க. மத்தவங்களோட மனசு புரிஞ்சு நடந்துக்கிறதுல அவங்களுக்கு நிகர் அவங்கதான். உறவுகளில் யாருக்காவது பிறந்தநாள், திருமணநாள் என்றாலோ, விசேஷங்கள் வந்தாலோ... சம்பந்தப்பட்ட நபருக்குப் பிடிச்ச மாதிரி கிஃப்ட் வாங்க ரொம்ப மெனக்கெடுவாங்க. எங்க பசங்க கௌஷிக்கையும், மாளவிகாவையும் படிப்பிலும் பழக்கவழக்கத்திலும் பர்ஃபெக்ட்டா வளர்த்தெடுத்திருக்கிற ‘சூப்பர் மாம்’ அவங்க!
சுதாம்மா பாடுறதுல ‘நாட்டைக்குறிஞ்சி’ங்கற ராகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல ‘சொன்னதை செய்திட சாகசமா’ங்கற பாடல்ல வர்ற ‘என்னம்மோ என்னை மயக்கிவிட்டு’ங்கிற வரியை அவங்க பாடக் கேட்கும்போது, சொர்க்கத்தை செவியால் பார்த்த மாதிரி இருக்கும் எனக்கு. அவங்க ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும்போது அந்த முகவரி, நேரம், கார் டிரைவர்னு எல்லாவிதத்திலும் அவங்களுக்கு 100 பர்சன்ட் உதவியா இருப்பேன். அவங்களோட எல்லா கச்சேரிகளுக்கும் போக எனக்கு நேரம் கிடைக்காது. என்றாலும், நேரம் கிடைக்கும்போது மிஸ் பண்ணாமல் போயிடுவேன். நான் ரொம்ப பெருமைப்படுற விஷயம், அவங்க வாங்கின ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத கலாநிதி’, கலைமாமணி விருதுகள்தான்!'' என்று சொல்லும் ரகுநாதன்,
``என் பிசினஸ் டென்ஷன்ல நான் குரலை உயர்த்திப் பேசினா, சுதாம்மா அமைதியாயிடுவாங்க. அவங்க டென்ஷனா இருக்கும்போது நான் அமைதியாயிடுவேன். இந்தப் புரிதல்தான் எங்க வீட்டை இசையைப் போல தாலாட்டுது!’’ என்கிறார் சுதாவைப் பார்த்தபடியே!
மஹதியின் கணவர் ஸ்ரீகுமார், முகம் மற்றும் வாய் சீரமைப்பு நிபுணர். சென்னை, மதுரவாயல், மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். அரும்பாக்கத்தில் கிளினிக் நடத்துவதுடன், பல்வேறு மருத்துவமனை களில் கன்சல்டன்ட்டாகவும் இருக்கிறார். ‘‘எங்களோடது அரேஞ்ச்டு கம் லவ் மேரேஜ்! ரெண்டு குடும்பமும் ஃப்ரெண்ட்ஸ். எனக்கு கர்னாடிக் மியூசிக்கில் ரொம்ப ஆர்வம். மஹதி அம்மாகிட்டதான் நான் புல்லாங் குழல் கத்துக்கிட்டேன். என் தம்பி ஸ்ரீநாத், மஹதி அப்பாகிட்ட கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டார். ரெண்டு குடும்பமும் எங்களுக்கு கல்யாணம் பண்றதா முடிவெடுத்து, நாலு வருஷம் கழிச்சுதான் திருமணம் நடந்தது. அந்த இடைப்பட்ட காலத்தை எங்க புரிதலை அடர்த்தியாக்க பயன்படுத்திக்கிட்டோம்.
கேரியர் உமன் பலரும், ‘கல்யாணத்துக்கு அப்புறம் நான் என் சுதந்திரத்தையே இழந்துட்டேன்’னு புலம்புறதுண்டு. அதனால, எந்த சந்தர்ப்பத்திலும் மஹதியோட கேரியர் பாதிக்கப்படக் கூடாதுங்கறதுல நானும், என் குடும்பமும் உறுதியா இருந்தோம். பேங்க்ல வேலை பார்க்கிற எங்கம்மா மல்லிகா பலராமன், மஹதியை மகளாதான் நடத்துவாங்க. பிப்ரவரி 27 என் பையன் சமர்த் பிறந்தான். பிப்ரவரி 16 வரைக்கும் கச்சேரி பண்ணினாங்க மஹதி. குழந்தை பிறந்த நாலு மாசத்துக்குள்ள மறுபடியும் மேடை ஏற ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவு சின்சியர். ரெண்டு பேருமே குழந்தையைப் பார்த்துக்கிறதுல சம பங்கு எடுத்துக்குவோம். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் ‘நாம்’ என்ற ஆங்கிளில்தான் ரெண்டு பேரும் யோசிப்போம்.
2001-ம் வருஷம் ‘காதல் ஜாதி’ படத்துல இளையராஜா சார் இசையில பாடின ‘என்னை மறந்தாலும்’ பாடல்தான் மஹதி பாடின முதல் திரையிசைப் பாட்டு. அந்த வாய்ஸ்... சான்ஸே இல்லை! அப்புறம் ‘சாமி’ படத்தில் இவங்க பாடின ‘ஐய்யய்யோ ஐய்யய்யோ பிடிச்சிருக்கு’ பாடலும், ‘பீமா’ படத்துல ‘முதல் மழை என்னை நனைத்ததே’ பாடலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
சூப்பரா சமைப்பாங்க. பனீர் வெஜ் டிஷ், ஃபிரைடு ரைஸ் இது ரெண்டும் மஹதியோட ஸ்பெஷல். மஹதியை நான் ‘குட்டு’, ‘மாய்’னு செல்லமா கூப்பிடுவேன். எனக்கு டிராயிங்ல இன்ட்ரஸ்ட். என்னோட ஒவ்வொரு ஓவியத்தையும் ப்ளஸ், மைனஸ் சொல்லி மெருகேற்றுவது மாய்தான்'' எனச் சொல்லும் ஸ்ரீகுமார் சொன்ன ஹேப்பி லைஃப் சீக்ரெட் -
‘‘எப்ப பேசணும்... எப்ப வாயை மூடிக்கணும்கிறத கணவன் - மனைவி ரெண்டு பேருமே தெளிவா தெரிஞ்சு வெச்சிருக்கோம்! இந்த மார்கழி சீஸனில் அவங்க ரொம்ப பிஸியா இருக்கறதால... குழந்தையோட ஃபுல் கேர் டேக்கரா பதவி ஏத்துக்கிட்டேன்'' என்று சொல்லி சிரிக்கிறார்.
நன்றி:அவள்விகடன்
- சொல்கிறார்கள் இசைக் குயில்களின் இணைக் குயில்கள்!
‘‘இதைவிட சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்கா என்னங்கிற நிறைவான வாழ்க்கை எனக்குக் கிடைக்கக் காரணம், சுதா!’’ என்று அன்பால் அறிமுகம் கொடுக்கிறார், சுதா ரகுநாதனின் கணவர் எம்.சி. ரகுநாதன்!
‘‘சுதாவை நான் ‘சுதாம்மா’னுதான் கூப்பிடுவேன். சுதாம்மாவுக்கும் எனக்கும் பெரியவர்கள் பார்த்து நடத்தின திருமணம். அவங்களோட சமயோஜித புத்தி, ஞாபகசக்தி, எல்லோரையும் கவரும் பேச்சு, டிரெஸ்ஸிங் சென்ஸ்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். தினமும் தவறாம யோகா பண்ணுவாங்க. கச்சேரிகளில் பிஸியா இருந்தாலும், குடும்பத்தையும் அழகா பேலன்ஸ் பண்ணுவாங்க. அவங்களுக்கு நிறைய மொழிகள் தெரியும். சூப்பரா சமைப்பாங்க. மத்தவங்களோட மனசு புரிஞ்சு நடந்துக்கிறதுல அவங்களுக்கு நிகர் அவங்கதான். உறவுகளில் யாருக்காவது பிறந்தநாள், திருமணநாள் என்றாலோ, விசேஷங்கள் வந்தாலோ... சம்பந்தப்பட்ட நபருக்குப் பிடிச்ச மாதிரி கிஃப்ட் வாங்க ரொம்ப மெனக்கெடுவாங்க. எங்க பசங்க கௌஷிக்கையும், மாளவிகாவையும் படிப்பிலும் பழக்கவழக்கத்திலும் பர்ஃபெக்ட்டா வளர்த்தெடுத்திருக்கிற ‘சூப்பர் மாம்’ அவங்க!
சுதாம்மா பாடுறதுல ‘நாட்டைக்குறிஞ்சி’ங்கற ராகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல ‘சொன்னதை செய்திட சாகசமா’ங்கற பாடல்ல வர்ற ‘என்னம்மோ என்னை மயக்கிவிட்டு’ங்கிற வரியை அவங்க பாடக் கேட்கும்போது, சொர்க்கத்தை செவியால் பார்த்த மாதிரி இருக்கும் எனக்கு. அவங்க ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும்போது அந்த முகவரி, நேரம், கார் டிரைவர்னு எல்லாவிதத்திலும் அவங்களுக்கு 100 பர்சன்ட் உதவியா இருப்பேன். அவங்களோட எல்லா கச்சேரிகளுக்கும் போக எனக்கு நேரம் கிடைக்காது. என்றாலும், நேரம் கிடைக்கும்போது மிஸ் பண்ணாமல் போயிடுவேன். நான் ரொம்ப பெருமைப்படுற விஷயம், அவங்க வாங்கின ‘பத்மஸ்ரீ’, ‘சங்கீத கலாநிதி’, கலைமாமணி விருதுகள்தான்!'' என்று சொல்லும் ரகுநாதன்,
``என் பிசினஸ் டென்ஷன்ல நான் குரலை உயர்த்திப் பேசினா, சுதாம்மா அமைதியாயிடுவாங்க. அவங்க டென்ஷனா இருக்கும்போது நான் அமைதியாயிடுவேன். இந்தப் புரிதல்தான் எங்க வீட்டை இசையைப் போல தாலாட்டுது!’’ என்கிறார் சுதாவைப் பார்த்தபடியே!
மஹதியின் கணவர் ஸ்ரீகுமார், முகம் மற்றும் வாய் சீரமைப்பு நிபுணர். சென்னை, மதுரவாயல், மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். அரும்பாக்கத்தில் கிளினிக் நடத்துவதுடன், பல்வேறு மருத்துவமனை களில் கன்சல்டன்ட்டாகவும் இருக்கிறார். ‘‘எங்களோடது அரேஞ்ச்டு கம் லவ் மேரேஜ்! ரெண்டு குடும்பமும் ஃப்ரெண்ட்ஸ். எனக்கு கர்னாடிக் மியூசிக்கில் ரொம்ப ஆர்வம். மஹதி அம்மாகிட்டதான் நான் புல்லாங் குழல் கத்துக்கிட்டேன். என் தம்பி ஸ்ரீநாத், மஹதி அப்பாகிட்ட கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டார். ரெண்டு குடும்பமும் எங்களுக்கு கல்யாணம் பண்றதா முடிவெடுத்து, நாலு வருஷம் கழிச்சுதான் திருமணம் நடந்தது. அந்த இடைப்பட்ட காலத்தை எங்க புரிதலை அடர்த்தியாக்க பயன்படுத்திக்கிட்டோம்.
கேரியர் உமன் பலரும், ‘கல்யாணத்துக்கு அப்புறம் நான் என் சுதந்திரத்தையே இழந்துட்டேன்’னு புலம்புறதுண்டு. அதனால, எந்த சந்தர்ப்பத்திலும் மஹதியோட கேரியர் பாதிக்கப்படக் கூடாதுங்கறதுல நானும், என் குடும்பமும் உறுதியா இருந்தோம். பேங்க்ல வேலை பார்க்கிற எங்கம்மா மல்லிகா பலராமன், மஹதியை மகளாதான் நடத்துவாங்க. பிப்ரவரி 27 என் பையன் சமர்த் பிறந்தான். பிப்ரவரி 16 வரைக்கும் கச்சேரி பண்ணினாங்க மஹதி. குழந்தை பிறந்த நாலு மாசத்துக்குள்ள மறுபடியும் மேடை ஏற ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவு சின்சியர். ரெண்டு பேருமே குழந்தையைப் பார்த்துக்கிறதுல சம பங்கு எடுத்துக்குவோம். குடும்பம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்தையும் ‘நாம்’ என்ற ஆங்கிளில்தான் ரெண்டு பேரும் யோசிப்போம்.
2001-ம் வருஷம் ‘காதல் ஜாதி’ படத்துல இளையராஜா சார் இசையில பாடின ‘என்னை மறந்தாலும்’ பாடல்தான் மஹதி பாடின முதல் திரையிசைப் பாட்டு. அந்த வாய்ஸ்... சான்ஸே இல்லை! அப்புறம் ‘சாமி’ படத்தில் இவங்க பாடின ‘ஐய்யய்யோ ஐய்யய்யோ பிடிச்சிருக்கு’ பாடலும், ‘பீமா’ படத்துல ‘முதல் மழை என்னை நனைத்ததே’ பாடலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
சூப்பரா சமைப்பாங்க. பனீர் வெஜ் டிஷ், ஃபிரைடு ரைஸ் இது ரெண்டும் மஹதியோட ஸ்பெஷல். மஹதியை நான் ‘குட்டு’, ‘மாய்’னு செல்லமா கூப்பிடுவேன். எனக்கு டிராயிங்ல இன்ட்ரஸ்ட். என்னோட ஒவ்வொரு ஓவியத்தையும் ப்ளஸ், மைனஸ் சொல்லி மெருகேற்றுவது மாய்தான்'' எனச் சொல்லும் ஸ்ரீகுமார் சொன்ன ஹேப்பி லைஃப் சீக்ரெட் -
‘‘எப்ப பேசணும்... எப்ப வாயை மூடிக்கணும்கிறத கணவன் - மனைவி ரெண்டு பேருமே தெளிவா தெரிஞ்சு வெச்சிருக்கோம்! இந்த மார்கழி சீஸனில் அவங்க ரொம்ப பிஸியா இருக்கறதால... குழந்தையோட ஃபுல் கேர் டேக்கரா பதவி ஏத்துக்கிட்டேன்'' என்று சொல்லி சிரிக்கிறார்.
நன்றி:அவள்விகடன்
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|