Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
3 posters
Page 1 of 1
21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
டிசம்பர் 21, மார்கழி மாத அமாவாசை அதுவும் தவிர ஹனுமத் ஜெயந்தி எப்படிப்பட்ட விசேஷமான நாள்!
ஹனுமன் என்று நினைத்தாலே அவருடைய கம்பீரமும், கூடவே பக்திகலந்த அவரது பணிவும் கண்ணுக்குள் நிறைகிறது.
“ அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவகிம்வத:
ராமதூத க்ருபா சிந்தோ மத்கார்யம் சாதயப் ப்ரபோ”
ஹனுமனை நினைத்தாலே எப்படிப்பட்ட காரியமானாலும் அதில் ஜெயம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அபூர்வ தெய்வம் அல்லவோ ஹனுமன்?
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) 0fc8rl1uQHWFQZGe9IBr+namakkal-anjaneya](https://www.filepicker.io/api/file/0fc8rl1uQHWFQZGe9IBr+namakkal-anjaneya.jpg)
ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். அத்தகைய சிறந்த ராம பக்தர்தான் ஆஞ்சனேயர், தன் மார்பைக் கிழித்து அதன் உள்ளே ஸ்ரீ ராமனையும் ஸீதாப்பிராட்டியும் வீற்றிருப்பதைக் காட்டிய இந்த ராம பக்தன் அந்த ராம நாமத்திலேயே தானே அடங்கி விடுவதாக உணர்கிறார். எனவே எங்கெங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கைகளுடன் ஆனந்த பாஷ்பக் கண்ணுடன் இன்றும் தோன்றுபவர்தான் இந்த சிரஞ்சீவி அனுமன். வைணவ சம்பிராயத்தில் " சிறிய திருவடி" என்று குறிக்கப்படுகிறார் இவர்.
ஹனுமன் என்று நினைத்தாலே அவருடைய கம்பீரமும், கூடவே பக்திகலந்த அவரது பணிவும் கண்ணுக்குள் நிறைகிறது.
“ அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவகிம்வத:
ராமதூத க்ருபா சிந்தோ மத்கார்யம் சாதயப் ப்ரபோ”
ஹனுமனை நினைத்தாலே எப்படிப்பட்ட காரியமானாலும் அதில் ஜெயம் கிடைத்துவிடும். அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அபூர்வ தெய்வம் அல்லவோ ஹனுமன்?
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) 0fc8rl1uQHWFQZGe9IBr+namakkal-anjaneya](https://www.filepicker.io/api/file/0fc8rl1uQHWFQZGe9IBr+namakkal-anjaneya.jpg)
ஆண்டவனை தொழுவதை விட அவருடைய மெய்யடியார்களை தொழுவது சிறந்த பலனைத் தரும். அத்தகைய சிறந்த ராம பக்தர்தான் ஆஞ்சனேயர், தன் மார்பைக் கிழித்து அதன் உள்ளே ஸ்ரீ ராமனையும் ஸீதாப்பிராட்டியும் வீற்றிருப்பதைக் காட்டிய இந்த ராம பக்தன் அந்த ராம நாமத்திலேயே தானே அடங்கி விடுவதாக உணர்கிறார். எனவே எங்கெங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சிரமேற் கூப்பிய கைகளுடன் ஆனந்த பாஷ்பக் கண்ணுடன் இன்றும் தோன்றுபவர்தான் இந்த சிரஞ்சீவி அனுமன். வைணவ சம்பிராயத்தில் " சிறிய திருவடி" என்று குறிக்கப்படுகிறார் இவர்.
Last edited by krishnaamma on Fri Dec 19, 2014 2:50 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
அனுமன் கடலைக் குளம் போல் செய்தவர், அரக்கர்களை கொசுவைப்போல செய்தவர், ராமயணமாகிய சிறந்த மாலையின் ரத்னம் போன்று விளங்குபவர், அஞ்ஜனா தேவியின் ஆனந்தப் புதல்வர், ஜானகியின் துன்பத்தை துடைத்தவர். வாயு வேகமும், மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர்,புத்திமான்களில் சிறந்தவர் அதனால் தான் கம்ப நாடரும் தமது ராம காதையிலே மாருதியை "சொல்லின் செல்வன்" என்று குறிப்பிடுகின்றார்.அடக்கத்தின் இலக்கணமாகத் திகழ்பவர் அனுமன்.
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) Kd2ReIKSEuDsdyXQ7jJF+hanuman-meets-sita-in-ashok-vatika](https://www.filepicker.io/api/file/kd2ReIKSEuDsdyXQ7jJF+hanuman-meets-sita-in-ashok-vatika.jpg)
ஶ்ரீ ராமனால் இயலாத காரியம் இந்த ஈரேழு லோகத்திலும் இருக்கிறதா என்ன?ஆனாலும் அந்த ஶ்ரீ ராமனே தன் காரியத்தை, அதாவது சீதா தேவியை தன்னோடு இணைத்து வைக்க ஹனுமனைத்தானே நியமித்தார்! அப்படியானால் ஹனுமனால் இயலாத காரியம் இல்லவே இல்லை ஏன்று வானவர்க்கும் மண்ணுலகத்தாருக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் உணர்த்தவே ஶ்ரீ ராமன் ஹனுமனை அவ்விதம் பணித்தார்! என்ன ஒரு ஆச்சரியமான கருணை ஶ்ரீ ராமனுக்கு.
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) Kd2ReIKSEuDsdyXQ7jJF+hanuman-meets-sita-in-ashok-vatika](https://www.filepicker.io/api/file/kd2ReIKSEuDsdyXQ7jJF+hanuman-meets-sita-in-ashok-vatika.jpg)
ஶ்ரீ ராமனால் இயலாத காரியம் இந்த ஈரேழு லோகத்திலும் இருக்கிறதா என்ன?ஆனாலும் அந்த ஶ்ரீ ராமனே தன் காரியத்தை, அதாவது சீதா தேவியை தன்னோடு இணைத்து வைக்க ஹனுமனைத்தானே நியமித்தார்! அப்படியானால் ஹனுமனால் இயலாத காரியம் இல்லவே இல்லை ஏன்று வானவர்க்கும் மண்ணுலகத்தாருக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் உணர்த்தவே ஶ்ரீ ராமன் ஹனுமனை அவ்விதம் பணித்தார்! என்ன ஒரு ஆச்சரியமான கருணை ஶ்ரீ ராமனுக்கு.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
அஞ்சனையின் கருவில் வாயுதேவனால் பதிக்கப் பெற்று அஞ்சனையின் வயிற்றில் கருவாகி உருவாகி வளர்ந்த அஞ்சனை மைந்தன் ஹனுமான்.
சிறு வயதிலேயே வானில் பறக்கும் சக்தி பெற்றிருந்த ஹனுமான் சூரியனை ஒரு சிவப்புப் பழம் என்று எண்ணி அதைப் பிடிக்க வானிலே உயர்ந்து சூரியனின அருகிலே சென்றார். அப்போது சூரிய சக்தியின் வெப்பம் தாங்காமல் தலைகீழாக பூமியிலே வந்து விழுந்ததனால் அவருடைய முகமும் அப்படி ஆனது என்பர். ஆனால் இதிலே ஒரு மறைபொருள் இருக்கிறது!
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) O3GrZ3KcThKSlafabMwQ+080213_0744_HanumanChal1](https://www.filepicker.io/api/file/O3GrZ3KcThKSlafabMwQ+080213_0744_HanumanChal1.jpg)
சூரியனின் அருகிலே செல்ல முடியுமா? அப்படி யாராலும் செய்ய முடியாத காரியத்தை குழந்தைப் பருவத்திலேயே செய்த மஹா பராக்கிரமசாலி ஹனுமன். அவரின் வீரத்தையும் பராக்ரமத்தையும் கண்டு வியந்து சூரிய பகவானே தன் அருளை ஹனுமனுக்கு அளித்தார் என்பர் பெரியோர், அப்படிப்பட்ட ஹனுமான் மிகச் சிலருக்கே கிடைத்த காடாலிங்கனம் என்னும் ஆலிங்கனத்தை அடைந்தார். ஆமாம் பரம்பொருளான ஶ்ரீ ராமனின் அணைப்பு அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா.கிடைத்ததே ஹனுமனுக்கு. அதுதான் காடாலிங்கனம்.
சிறு வயதிலேயே வானில் பறக்கும் சக்தி பெற்றிருந்த ஹனுமான் சூரியனை ஒரு சிவப்புப் பழம் என்று எண்ணி அதைப் பிடிக்க வானிலே உயர்ந்து சூரியனின அருகிலே சென்றார். அப்போது சூரிய சக்தியின் வெப்பம் தாங்காமல் தலைகீழாக பூமியிலே வந்து விழுந்ததனால் அவருடைய முகமும் அப்படி ஆனது என்பர். ஆனால் இதிலே ஒரு மறைபொருள் இருக்கிறது!
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) O3GrZ3KcThKSlafabMwQ+080213_0744_HanumanChal1](https://www.filepicker.io/api/file/O3GrZ3KcThKSlafabMwQ+080213_0744_HanumanChal1.jpg)
சூரியனின் அருகிலே செல்ல முடியுமா? அப்படி யாராலும் செய்ய முடியாத காரியத்தை குழந்தைப் பருவத்திலேயே செய்த மஹா பராக்கிரமசாலி ஹனுமன். அவரின் வீரத்தையும் பராக்ரமத்தையும் கண்டு வியந்து சூரிய பகவானே தன் அருளை ஹனுமனுக்கு அளித்தார் என்பர் பெரியோர், அப்படிப்பட்ட ஹனுமான் மிகச் சிலருக்கே கிடைத்த காடாலிங்கனம் என்னும் ஆலிங்கனத்தை அடைந்தார். ஆமாம் பரம்பொருளான ஶ்ரீ ராமனின் அணைப்பு அவ்வளவு எளிதில் கிடைத்திடுமா.கிடைத்ததே ஹனுமனுக்கு. அதுதான் காடாலிங்கனம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
ஆமாம் சீதாதேவியை கண்டுபிடித்து தன்னோடு சேர்த்து வைத்த ஹனுமனுக்கு என்ன பரிசளித்தால் பொருத்தமாயிருக்கும் என்று யோசித்து ஶ்ரீராமன் ஹனுமனை அழைத்து கருணையோடு அவரை தன் மார்போடணைத்து ஆலிங்கனம் செய்து கொன்டாராம். இதைவிடப் பேறு வேறென்ன இருக்க முடியும், இதைவிட உயர்ந்த பரிசு வேறென்ன இருக்கமுடியும்?
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) 9hIehkaMQCOs48cxU2hC+pbaac064_ram_and_hanuman(1)](https://www.filepicker.io/api/file/9hIehkaMQCOs48cxU2hC+pbaac064_ram_and_hanuman(1).jpg)
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) 9hIehkaMQCOs48cxU2hC+pbaac064_ram_and_hanuman(1)](https://www.filepicker.io/api/file/9hIehkaMQCOs48cxU2hC+pbaac064_ram_and_hanuman(1).jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
சஞ்சீவினி மலையைக் கொணர்ந்து , ராமர் மற்றும் லக்ஷ்மணனின் உயிரைக் காப்பற்றியவர், தீக்குளிக்க சென்ற பரதனை முன்னே சென்று காப்பாற்றியவர். தூதுவனாக சென்று சீதாப்பிராட்டியிடம் ராமனைப்பற்றியும், ராமனிடம் ஸீதையின் இருப்பிடத்தையும் கூறி அனுமன் பண்ணிய தூதுத்யம் பூரண பலன் கொடுத்தது. (ஆனால் கிருஷ்ணராக பெருமாள் சென்ற தூது வெற்றி பெறவில்லை ) எனவே தான் திருவள்ளுரில் ராஜ வைத்தியராக பள்ளி கொண்டிருக்கும் வீர ராவகப் பெருமாளைப் பற்றி கூற வந்த திருமங்கை ஆழ்வார் " அந்த அஞ்சனேயனை தூது அனுப்பியவன் தான் இங்கு பள்ளி கொண்டிருக்கின்றான் என்று கூறினார்."
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) YbLtubRCeSp2fbVTmzPA+download(1)](https://www.filepicker.io/api/file/ybLtubRCeSp2fbVTmzPA+download(1).jpg)
இதையே விளக்கும் ராமாயணத்தின் சிறந்த பகுதியான " சுந்தர காண்டத்தையே" தன்னுள் அடக்கி விட்ட ஒரு பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன் மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் ஸீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான் என்று பாடுகிறார் கவிசக்கரவர்த்தி கம்பர்.
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) YbLtubRCeSp2fbVTmzPA+download(1)](https://www.filepicker.io/api/file/ybLtubRCeSp2fbVTmzPA+download(1).jpg)
இதையே விளக்கும் ராமாயணத்தின் சிறந்த பகுதியான " சுந்தர காண்டத்தையே" தன்னுள் அடக்கி விட்ட ஒரு பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்று தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற ஆரணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மையளித்து காப்பான்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு புத்திரன் அனுமன் மற்றொரு பூதமான கடலைத் (தண்ணீர்) தாண்டி ஆகாய வழியில் ஸ்ரீ இராமருக்காக பூமிப் பிராட்டியின் மகள் ஸீதா தேவியைக் கண்டு இலங்கைக்கு நெருப்பு வைத்தார் அந்த இராமதூதன் நம்மை காப்பான் என்று பாடுகிறார் கவிசக்கரவர்த்தி கம்பர்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
பாரத தேசமெங்கும் ஸாங்கூலன்,அஸாத்ய ஸாதகன், ராம தூதன்,கிருபாஸ’ந்து, வாயு புத்ரன்,கபிசிரேஷ்டன்,மஹா தீரன், பஜ்ரங்க பலி, பவனஜன், மஹா பலன், மாருதி, என்று பல் வேறு நாமங்களாலும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார் இவர்.
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) PAJtJ8cBSKK8unrfnvhS+rama_sita_hanuman](https://www.filepicker.io/api/file/pAJtJ8cBSKK8unrfnvhS+rama_sita_hanuman.jpg)
அப்படிப்பட்ட திவ்யமான பரிசை பெற்ற , இறைவன் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் காடாலிங்கனத்தைப் பெற்ற ஹனுமனுக்கு திவ்ய மங்களம். ஹனுமனை மனதாரநேசிப்போம், மனதார வணங்குவோம். அவன் பாத கமலத்தில் , 1008 முறையோ, 108 முறையோ அல்லது ஒரே ஒரு முறையோ ஶ்ரீ ராம ஜெயம் என்று எழுதி வைத்தாலே நம் வாழ்வில் எல்லா மங்களங்களும் உண்டாகும். ஏனென்றால் ஹனுமனுக்கு மிகவும் பிடித்தது ஶ்ரீ ராமநாமம் மட்டுமே.
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) HXRsMfSDTip8yjBCw2QW+ALWARPETANJANEYARVADAIVENNAI](https://www.filepicker.io/api/file/HXRsMfSDTip8yjBCw2QW+ALWARPETANJANEYARVADAIVENNAI.JPG)
அதனால் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் அருள் பெற்ற ஹனுமனுக்கு உகந்த துளசி மாலையை அணிவித்து அவருடைய பாதாரவிந்தங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஶ்ரீ ராமஜெயம் எழுதி வைத்து அவரை வணங்கி வாழ்வில் எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் நாமும் பெறுவோம்.
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) QAUyZBBETxmfqqLvXZUC+download(2)](https://www.filepicker.io/api/file/QAUyZBBETxmfqqLvXZUC+download(2).jpg)
ஜெய் ஶ்ரீராம் !
ஜெய் ஆஞ்சனேயா!
ஜெய் ஸ்ரீ பஜரங்க பலி !
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) PAJtJ8cBSKK8unrfnvhS+rama_sita_hanuman](https://www.filepicker.io/api/file/pAJtJ8cBSKK8unrfnvhS+rama_sita_hanuman.jpg)
அப்படிப்பட்ட திவ்யமான பரிசை பெற்ற , இறைவன் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் காடாலிங்கனத்தைப் பெற்ற ஹனுமனுக்கு திவ்ய மங்களம். ஹனுமனை மனதாரநேசிப்போம், மனதார வணங்குவோம். அவன் பாத கமலத்தில் , 1008 முறையோ, 108 முறையோ அல்லது ஒரே ஒரு முறையோ ஶ்ரீ ராம ஜெயம் என்று எழுதி வைத்தாலே நம் வாழ்வில் எல்லா மங்களங்களும் உண்டாகும். ஏனென்றால் ஹனுமனுக்கு மிகவும் பிடித்தது ஶ்ரீ ராமநாமம் மட்டுமே.
அதனால் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் அருள் பெற்ற ஹனுமனுக்கு உகந்த துளசி மாலையை அணிவித்து அவருடைய பாதாரவிந்தங்களில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஶ்ரீ ராமஜெயம் எழுதி வைத்து அவரை வணங்கி வாழ்வில் எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் நாமும் பெறுவோம்.
![21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :) QAUyZBBETxmfqqLvXZUC+download(2)](https://www.filepicker.io/api/file/QAUyZBBETxmfqqLvXZUC+download(2).jpg)
ஜெய் ஶ்ரீராம் !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஜெய் ஆஞ்சனேயா!
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஜெய் ஸ்ரீ பஜரங்க பலி !
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
படங்கள் மற்றும் கதைகள் இணையத்திலிருந்து எடுத்தேன்
போன வருடம் நான் போட்ட பதிவின் லிங்க் இது......இதில் ஹனுமான் சாலிசா தமிழ் அர்த்தத்துடன் இருக்கு
ஹனுமத் ஜெயந்தி !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
போன வருடம் நான் போட்ட பதிவின் லிங்க் இது......இதில் ஹனுமான் சாலிசா தமிழ் அர்த்தத்துடன் இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஹனுமத் ஜெயந்தி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
என்ன யாரும் படிக்கலையா? .......நாளை ஹனுமத் ஜெயந்தி ...அவரைப்பற்றி படித்தல் அவரை ஸ்மரித்தல் புண்ணியம் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 21st. Dec.ஹனுமத் ஜெயந்தி ...என் 29000 வது பதிவு - கிருஷ்ணாம்மா :)
யாரும் படிக்கல போல... எனக்கு இதெல்லாம் புரியாது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|