ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
ayyasamy ram
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
VENKUSADAS
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 

Top posting users this month
heezulia
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
ayyasamy ram
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 
VENKUSADAS
2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_m102015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015 புத்தாண்டு பலன்கள் !

+5
Aathira
mbalasaravanan
T.N.Balasubramanian
M.M.SENTHIL
krishnaamma
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:13 pm

First topic message reminder :

மேஷம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.
வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும்.

புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கிய ரீதியாக அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையும். நெருங்கியவர்கள் ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மற்றவருக்கு நல்லது செய்ய நினைத்தாலும் அது உங்களுக்கே வீண் பிரச்சசினைகளை ஏற்படுத்தி விடும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது போன்ற யாவும் மன நிம்மதியை உண்டாக்கும். ஆண்டின் பிற்பாதியில் குரு 5-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவும் தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் தடைகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். பணவரவுகள் சரளமான நிலையில் இருக்கும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கடன்களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

பெண்களுக்கு

அஷ்டமச் சனி நடைபெறுவதும், குரு 4-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கிய வர்களிடையே கருத்து வேறுபாடு, பணவரவில் நெருக்கடி போன்றவை ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் வாயுத் தொல்லை, அஜீரணக் கோளாறு போன்றவை உண்டாகும். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் பலமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடையின்றிக் கைகூடும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதிலேயே வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு எதிலும் லாபமான நிலை உண்டாகும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியலில் உடனிருப்பவர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள் வது நல்லது. பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை. பத்திரிகை நண்பர் களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் வதந்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆண்டின் பிற்பாதி ஒரளவுக்கு சாதகமளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் உங்களுக்கு சிறப்பாகக் கிட்டும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பின்பு வாழ்வில் ஓரளவுக்கு முன்னேற்றமும் நல்ல விளைச்சலும் உண்டாகும். சந்தையிலும் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். பூமி, மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டு.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய மறைமுக எதிர்ப்புகள், கிசுகிசுக்கள் போன்றவற்றால் மனநிம்மதி குறையும். பணவரவுகளிலும் தேக்க நிலை ஏற்படும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப்பின் நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு வந்து சேரும். சுக வாழ்க்கைக்கு பஞ்சம் இருக்காது.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியருக்கு இந்த ஆண்டின் தொடக்கமானது சற்று சோதனை நிறைந்தாகவே இருக்கும். கல்வியில் ஈடுபாடு குறையும் என்றாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சிக்குப் பின் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:30 pm

சிம்மம் ராசி - மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 4-ல் சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற பிரச்சினைகளும் நெருங்கியவர்களால் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொண்டு அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 24-01-2015 காலை 09.14 மணி முதல்26-01-2015 பகல் 11.48 மணி வரை.

பிப்ரவரி

பஞ்சம ஸ்தானமான 5-ல் புதனும் 6-ல் சூரியனும் சஞ்சரிக்கவுள்ளதால் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். என்றாலும் எதிலும் சற்று கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெறுவதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 20-02-2015 இரவு 07.15 மணி முதல் 22-02-2015 இரவு 08.01 மணி வரை.

மார்ச்

குடும்ப ஸ்தானமான 2-ல் ராகுவும் அஷ்டம ஸ்தானமான 8-ல் செவ்வாய், சுக்கிரன், கேதுவும் சஞ்சாரம் செய்வதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களும், அசையும்- அசையா சொத்துகளால் வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறைவதோடு, நெருங்கியவர்களாலும், வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத் துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு கூடும். அம்மன் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-03-2015 காலை 06.34 மணி முதல்22-03-2015 காலை 06.29 மணி வரை.

ஏப்ரல்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியனும் விரய ஸ்தானத்தில் குருவும் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப் பளு அதிகரிப்பதுடன் உயரதிகாரிகளிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்: 16-04-2015 மாலை 04.55 மணி முதல்18-04-2015 மாலை 05.22 மணி வரை.

மே

பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியனும் 10-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலுண்டாகும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் அமையும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கொடுக்கும். தொழில், வியாபாரம் சிறப்படையும். ஆஞ்சனேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 13-05-2015 இரவு 12.50 மணி முதல் 16-05-2015 அதிகாலை 02.41 மணி வரை.

ஜூன்

இம்மாதம் ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருக்குமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 10-06-2015 காலை 06.39 மணி முதல்12-06-2015 காலை 09.31 மணி வரை.

ஜூலை

லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது பணவரவுகள் தேவைக்கேற்றப்படி இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. புத்திர வழியில் அடிக்கடி மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அம்மன், விநாயகர் வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்: 07-07-2015 பகல் 12.08 மணி முதல் 09-07-2015 மதியம் 03.07 மணி வரை.

ஆகஸ்ட்

முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். என்றாலும் விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சுகவாழ்வு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பணவரவுகள் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சிவ வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம் 03-08-2015 இரவு 07.11 மணி முதல் 05-08-2015 இரவு 08.57 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசியில் குருவும் 2-ல் ராகுவும் 12-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆராக்கியத்தில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். பணவரவுகள் சுமாராகத் தானிருக்கும். நெருங்கியவர்களே துரோகம் செய்யக்கூடுமென்பதால் உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடனிருப்பது நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும். துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 31-08-2015 காலை 04.39 மணி முதல் 02-09-2015 அதிகாலை 04.48 மணி வரை. மற்றும் 27-09-2015 பகல் 03.37 மணி முதல் 29.09.2015 மதியம் 03.00 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசியில் குரு, செவ்வாயும், 4-ல் சனியும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு எதிலும் வெற்றிகளைப் பெறமுடியும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பொருளாதார நிலை சற்றே உயரும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர்கள். குடும்பத்திலும் நிம்மதியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-10-2015 அதிகாலை 02.18 மணி முதல் 27-10-2015 அதிகாலை 02.12 மணி வரை.

நவம்பர்

இம்மாத முற்பாதி வரை சூரியன் 3-ல் சஞ்ரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்துமென்றாலும் ஜென்ம ராசியில் குருவும், 4-ல் சனியும் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாகத்தானிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும். சனி பகவானை வழிபடுவதன் மூலம் நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 21-11-2015 காலை 10.48 மணி முதல் 23-11-2015 மதியம் 12.07 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசியில் குருவும் 2-ல் செவ்வாய், ராகுவும் 4-ல் சூரியன், சனியும் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகளும் அதனால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 18-12-2015 மதியம் 04.48 மணி முதல்20-12-2015 இரவு 07.44 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1, 2, 3, 9; நிறம் – வெள்ளை, சிவப்பு; கிழமை – ஞாயிறு, திங்கள்; கல் – மாணிக்கம்; திசை- கிழக்கு; தெய்வம் – சிவன்.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு சனி இந்த ஆண்டு 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால் சனிக் கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை குரு விரய ஸ்தானத்திலும் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதி தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி நெய் வழிபடுவது நல்லது. அந்தணர்களுக்கு தானங்கள் செய்வது உத்தமம். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சாரம் செய்வதால் துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:33 pm

கன்னி ராசி பஞ்சாங்க ஜோதிடம்
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

அனைவரிடமும் சகஜமாகப் பழகினாலும் அளந்துபேசும் தன்மையுடைய கன்னி ராசி நேயர்களே! கடந்த காலங்களில் நடைபெற்ற ஏழரைச்சனி முழுமையாக முடிந்து இந்த 2015-ஆம் ஆண்டில் சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், பொருளாதாரரீதியாக மேன்மையும் கொடுக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் திருமண சுப காரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா தேவைகளும் நிறைவாகப் பூர்த்தியாகும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் யாவும் வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரரீதியாக மேன்மைமிகு பலன்கள் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் கௌரவங்களும் தேடி வரும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானமாகிய 12-ஆம் வீட்டுக்கு மாறுதலாகவிருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்களுக்கு வீண் செலவுகள், வீண் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும், சனி பகவான் 3-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். பிரிந்துசென்ற உறவினர்கள் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கடன்களனைத்தும் குறையும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டிருப்பவர்களும் படிப்படியான ஆரோக்கிய முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வருடம் முழுவதும் ஆயுள் காரகனான சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானத்திலிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்கள் மனநிலையும், உடல் நிலையும் மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரால் இருந்த பிரச்சினைகள் மருத்துவச் செலவுகள் யாவும் குறைந்து நிம்மதி நிலவும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் எல்லா தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகிச் சென்றவர்கள்கூட தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். சிலருக்கு பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு விரய ஸ்தானத்திற்குச் செல்லவிருப்பதால் பணவிஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையக் கூடிய காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. எதிர்பார்க்கும் கௌரவப் பதவிகளும் ஊதிய உயர்வுகளும் தேடி வரும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து உயரதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள் உங்களிடமுள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களாலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் சிறப்பாக அமையும். நல்ல நிர்வாகத் திறமையும் உங்களிடம் பளிச்சிடும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபத்தை அடையமுடியும். போட்டி, பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் மறைவதால் புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். சொன்ன நேரத்திற்கு ஆர்டர்களையும் சப்ளை செய்வதால் மேலும் மேலும் முன்னேற்றங்களைப் பெறமுடியும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியமானது இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதார மேன்மை, திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு போன்றவையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி யுண்டாகும். எடுக்கும் காரியங்களை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள் சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகங்களும் உண்டாகும். பணிபுரியக்கூடிய பெண்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்போருக்கு நல்ல வருமானம் கிட்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும். வரும் குருப்பெயர்ச்சிக்குப்பின் பண விஷயங்களில் கவனமுடனிருத்தல் நல்லது.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகளுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்கள் செல்வாக்குக்கு காரகனான சனியே 3-ல் சஞ்சரிப்பதால் மக்களின் அமோக ஆதரவும் உங்கள் பக்கமே இருக்கும். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆற்றலும் மறைமுக எதிர்ப்புகளை வெல்லும் வலிமையும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை, காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையைப் பெறமுடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். வங்கிக் கடன் பெற்றவர்களுக்கு எதிர்பாராத தனசேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம், குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமும் யாவும் சிறப்படையும்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமே. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்த கதாபாத்திரங்களில் நடிக்கமுடியும். உங்களின் திறமைகளுக்கு நல்ல தீனி கிடைப்பதால் ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் இருக்காது. புதிய கார், பங்களா போன்றவற்றையும் வாங்கிக்குவிப்பீர்கள்.

மாணவ- மாணவியருக்கு

மாணவ- மாணவியர்களின் கல்வித் திறன் மேலோங்கும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளும் உங்களால் பெருமையடையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தேடிவரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் கிட்டும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுகளையும் தட்டிச்செல்வீர்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:34 pm

கன்னி ராசி-மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சினைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். எடுக்கும் முயற்சிகள னைத்திலும் வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரம் போட்டிகளின்றி நடைபெற்று லாபத்தை அள்ளித்தரும். பெயர், புகழ், உயர்வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 26-01-2015 பகல் 11.48 மணி முதல் 28-01-2015 மாலை 05.12 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் சனியும் 6-ல் செவ்வாயும் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதுமட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியன் 6-ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களின் பலமும் வலிமையும் கூடி எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி ஏற்றங்கள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். விநாயகப் பெருமானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 22-02-2015 இரவு 08.01 மணி முதல் 24-02-2015 இரவு 11.46 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் சூரியனும் சஞ்சாரம்செய்வது அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் லாபத்தினைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக்கூட லாபங்கள் பெருகும். உத்தியோகஸ்தர் களும் உயர்வடைவார்கள். 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறு பாடுகள் தோன்றிமறையும். முருக வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 22-03-2015 காலை 06.29 மணி முதல் 24-03-2015 காலை 08.35 மணி வரை.

ஏப்ரல்

இம்மாதம் ராசிக்கு 7-ல் சூரியனும் 8-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. தேவையில்லாத அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்திலிருப்பதால் வீண் விரயங்களும், பொருளாதாரத் தடைகளும் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் சில காலம் தள்ளிவைப்பது உத்தமம். உத்தியோகஸ் தர்களுக்கு இடமாற்றங்கள் உண்டாகும். சஷ்டி விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 18-04-2015 மாலை 05.22 மணி முதல் 20-04-2015 மாலை 06.54 மணி வரை.

மே

ஜென்ம ராசியில் ராகுவும் 8-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென் றாலும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குரு சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். சிவனையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 16-05-2015 அதிகாலை 02.41 மணி முதல் 18-05-2015 அதிகாலை 04.52மணி வரை.

ஜூன்

லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரனும் மாத பிற்பாதியில் 10-ல் சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்து லாபமும் அபிவிருத்தியும் பெருகும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகளையும் தற்போது மேற்கொள்ளலாம். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 12-06-2015 காலை 09.31 மணி முதல் 14-06-2015 மதியம் 01.04 மணி வரை.

ஜூலை

ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாயும் 11-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் செய்யும் தொழிலில் லாபங்கள் பெருகும். பணவரவுகள் சிறப்பாக அமைவதுடன் அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாகக் கைகூடும். வரும் 5-ஆம் தேதி முதல் குரு விரய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். துர்க்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 09-07.2015 மதியம் 03.07 மணி முதல் 11-07-2015 இரவு 07.18 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொட்டது துலங்கும். எதிலும் நற்பலன்களையே பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலமென்பதால் முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் குரு விரய ஸ்தானத்தில் இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 05-08-2015 இரவு 08.57 மணி முதல் 07-08-2015 இரவு 12.41 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் 5-ஆம் தேதி முதல் சனி 3-ல் சஞ்சரிப்பது எல்லா வகையிலும் ஏற்றங்களை ஏற்படுத்துமென்றாலும் விரய ஸ்தானத்தில் சூரியன், குரு சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். பிரதோஷ விரதமிருப்பது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 02-09-2015 அதிகாலை 04.48 மணி முதல் 04-09-2014 காலை 07.02 மணி வரை; மற்றும் 29-09-2015 மதியம் 03.00 மணி முதல் 01-10-2015 மதியம் 03.39 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசியில் சூரியன், ராகுவும், 12-ல் குரு, செவ்வாயும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பென்பதால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். என்றாலும் சனி பகவான் சாதகமாக 3-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்திலுள்ளவர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாமலிருக்கும். தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 27-10-2015 அதிகாலை 02.12 மணி முதல் 29-10-2015 அதிகாலை 02.14 மணி வரை.

நவம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்க விருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும். முருக வழிபாடு, சஷ்டி விரதம் இருக்கவும்.
சந்திராஷ்டமம்: 23-11-2015 மதியம் 12.07 மணி முதல் 25-11-2015 மதியம் 01.04 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு சஞ்சரித்தாலும் 3-ல் சூரியன் சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்கும் பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். குரு 12-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் மேலோங்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்
சந்திராஷ்டமம்: 20-12-2015 இரவு 07.44 மணி முதல் 22-12-2015 இரவு 10.04 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 4, 5, 6, 7, 8; நிறம் – பச்சை, நீலம்; கிழமை- புதன், சனி; கல்- மரகதப் பச்சை; திசை – வடக்கு; தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு.

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்ப கிரகங்களான ராகு- கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது. குரு பகவான் 05-07-2015 முதல் 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:36 pm

துலாம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ வெளிக்காட் டாமல் தன்னுடைய கருத்துகளைக்கூட சிந்தித்து வெளிப்படுத்தும் துலா ராசி நேயர்களே! உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகன் என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவானும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவேண்டிய ஆண்டாகும். உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தை அடையமுடியும்.

குடும்பம், பொருளாதாரம்

இந்த வருடம் முழுவதும் சனி பகவான் குடும்ப ஸ்தானத்திலேயே சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களிடம் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் நீங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆண்டின் தொடக்கத்தில் சற்று பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும், குருப்பெயர்ச்சிக்குப் பின் பணவரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் ஊதிய உயர்வும் கிட்டும். கடன் களும் குறையும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்திற்குச் செல்ல உள்ளார். இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

பெண்களுக்கு

இந்த ஆண்டும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடர்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் உறவுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம்போன்ற மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் சுமைகளும் குறையும். புத்திரர்களால் சிறுசிறு மனக்குழப்பங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. சிலருக்கு அசையாச் சொத்துகளை வாங்கிச்சேர்க்கும் யோகமும் உண்டு.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு ஏழரைச் சனி தொடருவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடனிருப்பது நல்லது என்றாலும் ஜூலை 5-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். வம்பு வழக்குகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி வாக்கு ஸ்தானத்தி லிருப்பதால் உங்கள் பேச்சாலேயே உங்களுக்கு பிரச்சினைகள் உண்டாகும். மக்களின் செல்வாக்கினைப் பெற அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப் பின் வெளியூர், வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும் மகசூல் ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெறமுடியாமல் போகுமென்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக்கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்தமுடியாமல் போகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினாலும் குருப் பெயர்ச்சிக்குப்பின் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். ரசிகர்களின் ஆதரவும் பெருகும். பண விவகாரங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற கிசுகிசுக்களால் பத்திரிகைகளில் வீண் வதந்திகள் ஏற்படும்.

மாணவ- மாணவியருக்கு

மாணவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் கட்டாயம் படிப்பில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். கூடாதார் நட்பை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. குருப்பெயர்ச்சிக்குப்பின் கல்வியில் தானாகவே ஈடுபாடு ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி உங்களுக்கே கிட்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:37 pm

துலாம் ராசி-மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதியில்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரத்திலும் நல்ல லாபம் காணமுடியும். சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 01-01-2015 பகல் 11.47 மணி முதல் 03-01-2015 இரவு 07.24 மணி வரை; மற்றும் 28-01-2015 மாலை 05.12 மணி முதல் 31-01-2015 பகல் 01.17 மணி வரை.

பிப்ரவரி

குடும்ப ஸ்தானமான 2-ல் சனியும் சுக ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வது குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தக்கூடிய அமைப்பென்றாலும் 10-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவுக்கு லாபம் கிட்டும். புதிய முயற்சிகளிலும் சாதகப் பலன் அமையும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 24-02-2015 இரவு 11.46 மணி முதல் 27-02-2015 காலை 07.01 மணி வரை.

மார்ச்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் குடும்ப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். துர்க்கை யம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 24-03-2015 காலை 08.35 மணி முதல் 26-03-2015 மதியம் 02.15 மணி வரை.

ஏப்ரல்

ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதாலும் 10-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதாலும் செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தையும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளையும் ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபங்களை அடையமுடியும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 20-04-2015 மாலை 06.54 மணி முதல் 22-04-2015 இரவு 11.10 மணி வரை.

மே

கிரக நிலைகள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதால் சிறுசிறு நற்பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். மாத பிற்பாதியில் சூரியன் 8-ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பதால் எதிலும் கவனம் தேவை. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்றாலும் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதால் வீண் பிரச்சினைகளும் குறையும். பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.
சந்திராஷ்டமம்: 18-05-2015அதிகாலை 04.52 மணி முதல் 20-05-2015 காலை 08.50 மணி வரை.

ஜூன்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். தொழில், வியாபாரத்திலும் வீண் விரயங்களும், கூட்டாளிகளிடையே பிரச்சினைகளும் உண்டாகும். சஷ்டி விரதம், பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளவும்.
சந்திராஷ்டமம்: 14-06-2015 மதியம் 01.04 மணி முதல் 16-06-2015 மாலை 05.42 மணி வரை.

ஜூலை

இம்மாதம் வரும் 5-ஆம் தேதி முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் பணம் பல வழிகளில் தேடிவரும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். பண வரவு களிலிருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். அசையாச் சொத்து வாங்கும் யோகமும் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமுடன் செயல்பட்டால் நற்பலன்களை அடையலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 11-07-2015 இரவு 07.18 மணி முதல் 13-07-2015 இரவு 12.56 மணி வரை.

ஆகஸ்ட்

லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் லாபம் பெருகும். மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தொழில், வியாபாரரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளி மற்றும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் அமைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தாராள தனவரவுகளும் உண்டாவதோடு மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பொருளாதாரம் உயர் வடையும். துர்க்கையம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 07-08-2015 இரவு 12.41 மணி முதல் 10-08-2015 காலை 06.42 மணி வரை.

செப்டம்பர்

செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எதிலும் ஏற்றமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகளுக்குப் பஞ்சமிருக்காது. குடும்பச் சூழலும் மிகச் சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். எடுக்கும் காரியங்களில் வெற்றிபெறுவீர்கள். தொழில், வியாபாரமும் தடையின்றி நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 04-09-2015 காலை 07.02 மணி முதல் 06-09-2015 மதியம் 12.17 மணி வரை.

அக்டோபர்

ஏழரைச் சனி தொடர்ந்தாலும் 11-ல் செவ்வாய், குரு இருப்பதால் எதையும் சாதிக்கமுடியும். தொழில், வியாபாரரீதியாக நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். திருமண சுப காரியங்களும் கைகூடும். பிரதோஷ கால விரதமிருப்பது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 01-10-2015 மதியம் 03.39 மணி முதல் 03-10-2015 இரவு 07.14 மணி வரை; மற்றும் 29-10-2015 அதிகாலை 02.14 மணி முதல் 31-10-2015 காலை 04.21 மணி வரை.

நவம்பர்

ஏழரைச் சனி தொடர்வதும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பென்றாலும் 11-ல் குரு, செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உத்தியோகஸ்தர்களும் பணியில் நிம்மதியுடன் இருக்கமுடியும். வேலைப் பளு சற்று கூடும். சிவ வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 25-11-2015 மதியம் 01.04 மணி முதல் 27-11-2015 மதியம் 02.50 மணி வரை.

டிசம்பர்

லாப ஸ்தானத்தில் குருவும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலையானது மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். எதிரிகளை வெல்லக்கூடிய வலிமையும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 22-12-2015 இரவு 10.04 மணி முதல் 24-12-2015 இரவு 12.46 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5, 6, 7, 8; நிறம்- வெள்ளை, பச்சை; கிழமை – வெள்ளி, புதன்; திசை – தென்கிழக்கு; கல் – வைரம்; தெய்வம் – லட்சுமி.

பரிகாரம்

துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தொடர்ந்து ஆஞ்சநேயரை வழிபடுவது, திருநள்ளாறு சென்று வருவது நல்லது. 05-07-2015 வரை குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். சர்ப கிரகமான ராகு 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:38 pm

விருச்சிகம் ராசி பஞ்சாங்க ஜோதிடம்
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

எதையும் திறமையாகச் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! இந்த 2015-ஆம் ஆண்டில் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருகிறது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். உற்றார்- உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். பொன், பொருள் சேர்க்கைகளும் அமையும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு குரு மாற்றத்திற்குப் பிறகு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், அஜீரணக் கோளாறு, உடல் சோர்வு, மந்தமான நிலை உண்டாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். என்றாலும் இந்த வருட ஜூலை 5-ம் தேதி வரை குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடும் ஆற்றலும் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது, நெருங்கியவர்களின் பிரச்சினைகளில் தலையீடுசெய்யாதிருப்பது போன்றவை உடல் நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது வீண் அலைச்சலைக் குறைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி, சுபிட்சம், பொருளாதார மேன்மை, திருமண சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், புத்திர வழியில் பூரிப்பு போன்றவை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதால் கடன்களும் குறையும். உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுவதாலும், வரும் ஜீலை 5-ஆம் தேதி முதல் குரு ஜீவன ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் மிகவும் நற்பலனைத் தரும்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும் ஜூலை 5 வரை குரு 9-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் உண்டாகும். குரு மாற்றத்திற்குப்பின் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து, அனைவரையும் அனுசரித்து நடப்பது, மற்றவர்களுக்கும் பணி நிமித்தமாக உதவிகளைச் செய்வது போன்றவை நற்பலனைத் தரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கமானது அற்புதமான நற்பலனை உண்டாக்கும். குரு 9-ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வங்கிக் கடன்களும் தீரும். குரு மாற்றத்திற்குப்பின் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும்.

பெண்களுக்கு

இந்த வருடம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உண்டாகலாம். கணவன்- மனைவி அனுசரித்துச் செல்வதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்ப ஒற்றுமையைக் காப்பாற்ற உதவும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கைகூடும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் சிக்கனத்தைக் கையாள்வதும் மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் 9-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவை சிறப்படையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளிலும் நல்ல லாபம் கிட்டும் என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின்பு பண விவகாரங்களில் வீண் பிரச்சினைகளை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடுமென்பதால் பெரிய தொகைகளை தவிர்த்துவிடவும்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற சற்று கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல் போகுமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளிலும் தடையும் தாமதமும் உண்டாகும். கட்சிப் பணிக்காக நிறைய செலவுசெய்ய நேரிடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலை சோர்வடையும்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இருக்காது. புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். காய், கனி, பூ வகைகள் மூலம் ஓரளவுக்கு லாபங்களைப் பெறமுடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். ஆண்டின் முற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.

கலைஞர்களுக்கு

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு சிறப்பான பலனை ஏற்படுத்தும். ஏழரைச் சனி நடைபெறுவது, தொழிலில் முன்னேற்றத் தடைகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பலமாக சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான வாழ்க்கையும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பின்பு எதிலும் கவனமுடன் செயல்படுவதும், உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடவும்.

மாணவ- மாணவியர்களுக்கு

மாணவர்களின் கல்விநிலை சற்று மந்தமாகத்தானிருக்கும். எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட முடியாத அளவுக்கு படிப்பில் கவனம் குறையும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து வழிநடத்திச் செல்வது மிகவும் நல்லது. தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களைத் தவிர்க்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:40 pm

விருச்சிகம் ராசி - மாதப் பலன்கள்

ஜனவரி

ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவது சாதகமற்ற அமைப்பென்றாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதும் பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரத்திலும் மந்தநிலை விலகி லாபம் அமையும். கொடுக்கல்- வாங்கலிலும் பிரச்சினைகள் விலகி சகஜநிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவார்கள். சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 03-01-2015 இரவு 07.24 மணி முதல் 06-01-2015 அதிகாலை 04.55 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியனும் 9-ல் குருவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் பொருளாதாரரீதியாக மேன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். பணவரவுகளும் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களும் தடை விலகி கைகூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். ஆஞ்சனேயரை வழிபட்டால் எதையும் சமாளித்து வெற்றியடைய முடியும்.
சந்திராஷ்டமம்: 31-01-2015 பகல் 01.17 மணி முதல் 02-02-2015 11.28 மணிவரை; மற்றும் 27-02-2015 காலை 07.01 மணி முதல் 01-03-2015 மாலை 05.17 மணி வரை.

மார்ச்

சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலும் 9-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதாலும் வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும் என்றாலும் லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் ஓரளவுக்கு ஏற்றத்தை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிட முடியும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். சிவனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 26-03-2015 மதியம் 02.15 மணி முதல் 28-03-2015 இரவு 11.35 மணி வரை.

ஏப்ரல்

ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மையையும், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலையும் உண்டாக்கும். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 22-04-2015 இரவு 11.10 மணி முதல் 25-04-2015 காலை 07.12 மணிவரை

மே

ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியனும் 9-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரரீதியாகவும் முன்னேற்றத்தை அடைவீர்கள். பணவரவுகள் சரளமாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகக்கூடிய அமைப்பும் கொடுக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறமுடியும். உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படுவார்கள். தினமும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 20-05-2015 காலை 08.50 மணி முதல் 22-05-2015 மதியம் 03.53 மணி வரை.

ஜூன்

9-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துமென்றாலும் மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதை தவிர்ப்பதும் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும் நல்லது. பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உற்றார்- உறவினர்களாலும் மனநிம்மதி குறையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-06-2015 மாலை 05.42 மணி முதல் 18-06-2015 இரவு 12.40 மணிவரை.

ஜூலை

அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகள் நிலவினாலும் லாபம் குறையாது. உத்தியோகஸ்தர்கள் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க நேரிடுமென்றாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். முருக வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.
சந்திராஷ்டமம்: 13-07-2015 இரவு 12.56 மணி முதல் 16-07-2015 காலை 08.30 மணி வரை.

ஆகஸ்ட்

ராசிக்கு 9-ல் சூரியன் செவ்வாயும் 11-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் ஓரளவுக்கு அனுகூலங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும் அமைப்பும், எல்லா வகையிலும் லாபங்கள் உண்டாகக் கூடிய நிலையும் ஏற்படுமென்றாலும், குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் அபி விருத்தியைப் பெருக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 10-08-2015 காலை 06.42 மணி முதல் 12-08-2015 மதியம் 02.59 மணிவரை.

செப்டம்பர்

மாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் எல்லா வகையிலும் லாபங்களை ஏற்படுத்தும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகள னைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். எதிர்பாராத உதவிகளும் தேடிவரும். தொழில், வியாபாரத்தில் மேன்மைகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் 06-09-2015 மதியம் 12.17 மணி முதல் 08-09-2015 இரவு 08.38 மணி வரை.

அக்டோபர்

ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாயும் 11-ல் சூரியன் ராகுவும் சஞ்சாரம் செய்வது தொழில்ரீதியாக முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அமைப் பாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். எனவே ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத் தேவைகளுக்காக சில நேரங்களில் கடன் வாங்கவும் நேரிடும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். சனி பகவானை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 03-10-2015 இரவு 07.14 மணி முதல் 06-10-2015 அதிகாலை 02.38 மணிவரை.

நவம்பர்

ஜென்ம ராசியில் சனியும், 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண் விரயங்களும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். 6-ஆம் தேதி முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பிரதோஷ விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 31-10-2015 காலை 04.21 மணி முதல் 02-11-2015 காலை 10.11 மணிவரை; மற்றும் 27-11-2015 மதியம் 02.50 மணி முதல் 29-11-2015 இரவு 07.27 மணிவரை

டிசம்பர்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 11-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களுக்குள்ள பணநெருக்கடிகளும் மறைமுக எதிர்ப்பு களும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தினைப் பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றத்தைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்துவது உத்தமம். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்: 24-12-2015 இரவு 12.46 மணி முதல் 27-12-2015 காலை 05.18 மணிவரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1, 2, 3, 9; நிறம்- ஆழ்சிவப்பு, மஞ்சள்; கிழமை- செவ்வாய், வியாழன்; திசை- தெற்கு; கல் – பவளம்; தெய்வம்- முருகன்.

பரிகாரம்

விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் சனிக்கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 05-07-2015 முதல் குரு 10-ல் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. கேது 5-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by T.N.Balasubramanian Wed Dec 17, 2014 12:40 pm

மற்றவை எப்போது ?
மற்றவையில்தான் என்னோடது !!
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:41 pm

தனுசு ராசி பஞ்சாங்க ஜோதிடம்
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றிகள் பல பெறக்கூடிய தனுசு ராசி நேயர்களே! இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ராசியாதிபதி குரு பகவானும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராசிக்கு 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பில்லை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தாலும் உங்களின் உழைப்பாலும் எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ராசியாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் சனியால் ஏற்படும் பிரச்சினைகள் யாவும் ஓரளவுக்கு குறையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒருசில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டு முழுவதும் ஆயுள் காரகன் சனி பகவான் விரயஸ்தானமான 12-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அவ்வளவு சிறப்பான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தேவையற்ற பயணங்கள் அலைச்சல், டென்ஷன், மந்த நிலை, கை கால் வலி போன்றவை உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ணமுடியாத நிலை ஏற்படும். அன்றாடப் பணிகளைக்கூட மிகவும் நிதானமாகத்தான் செய்வீர்கள். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் உடல் உபாதைகளும், வீண் செலவுகளும் படிப்படியாகக் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப ஒற்றுமையானது ஆண்டின் தொடக்கத்தில் சுமாராகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் தடைகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் மற்றும் வீடு, மனையை புதுப்பிப்பதற்காக செலவுகளைச் செய்யநேரிடலாம். வரும் ஜூலை 5-ஆம் தேதி ராசியாதிபதி குரு பகவான் 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பதால் சனியால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைந்து குடும் பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, திருமண சுபகாரியங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்பு போன்றவை உண்டாகும். கடன்களும் படிப்படியாகக் குறையும். செலவுகளும் கட்டுக்குள்ளிருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சிறுசிறு பிரச்சினைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், புதிய இடத்தில் உணவு முறைகளோடும், உடன்பணிபுரிபவர்களிடமும் ஒத்துப்போகமுடியாத நிலை உண்டாகும். என்றாலும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவு உங்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தும் என்றாலும் வேலைப் பளு குறையாது. நிறைய உழைக்க வேண்டி வரும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாகச் செயல்படமாட்டார்கள். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். சனி இந்த வருடம் சாதகமின்றி சஞ்சரித்தாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். ஓரளவுக்கு லாபமும் கிட்டும். போட்டிகளையும் சமாளித்து விடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.

பெண்களுக்கு

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். இந்த ஆண்டு சனி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுப காரியங்களும் கைகூடும். புத்திர வழியில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு 8-ல் சாதகமற்று சஞ்சரிப்பதாலும், சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதாலும் பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சினைகள், விரயங்கள் ஏற்படும். எனவே பெரிய தொகைகளை பிறருக்கு கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்திற்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

அரசியல்வாதிகள் எதிலும் கவனமுடன் செயல்படவேண்டிய ஆண்டாகும். மக்கள் செல்வாக்கிற்கு காரகனான சனி 12-ல் சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் மக்களிடம் ஆதரவு குறையும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாமல் போகும். கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகளை செய்யநேரிடும். எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்படுவதன் மூலம் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

விவசாயிகளுக்கு
விவசாயிகளுக்கு மகசூல் சுமாராகத்தான் இருக்குமென்றாலும் பட்ட பாட்டிற்கான பலன்களைப் பெற்றுவிடுவீர்கள். வங்கிக் கடன்கள் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காது. தாமதம் ஆகும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். புதிய நவீன கருவிகள் வாங்கும் நோக்கங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. புழு, பூச்சிகளின் தொல்லைகளால் சில வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்தில் ஆண்டின் பிற்பாதியில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும்.

கலைஞர்களுக்கு

ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும் குருப்பெயர்ச்சிக்குப் பின் வாய்ப்புகள் நல்லதாகத் தேடிவரும். இந்த ஆண்டு நிறைய தேவையற்ற அலைச்சல்களும், சுகவாழ்வு பாதிப்படையக்கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். பணவரவுகள் ஆண்டின் பிற்பாதியில் சிறப்பாக இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.

மாணவ- மாணவியருக்கு

கல்வியில் மந்தமான நிலை இருக்கும். எதையும் எளிதில் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கு ஞாபக மறதி, மனக் குழப்பங்கள் உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு குறையும். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கவனம் தேவை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by krishnaamma Wed Dec 17, 2014 12:42 pm

தனுசு - மாதப் பலன்கள்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 10-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்ற முடியுமென்றாலும் ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நம்பிய கூட்டாளிகளே துரோகம் செய்வார்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். சனிக்கிழமைகளில் சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 06-01-2015 அதிகாலை 04.55 மணி முதல் 08-01-2015 மாலை 04.28 மணி வரை.

பிப்ரவரி

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணவரவுகள் ஏற்றத்தாழ்வுடன் இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதமடையும். தினமும் விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 02-02-2015 11.28 மணி முதல் 04-02-2015 இரவு 11.17 மணி வரை.

மார்ச்

ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதும் ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், குடும்பத்தில் வீண் விரயங்களும் உண்டாகும் என்றாலும் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும், நல்ல வரன்கள் தேடிவரும். பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிலிருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 01-03-2015 மாலை 05.17 மணி முதல் 04-03-2015 காலை 05.26 மணி வரை; மற்றும் 28-03-2015 இரவு 11.35 மணி முதல் 31-03-2015 பகல் 11.40 மணி வரை.

ஏப்ரல்

சுக ஸ்தானமான 4-ல் சூரியனும் 5-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளே ஏற்படும். கடன்கள் சற்று குறையும். நிறைய பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்றாலும் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 25-04-2015 காலை 07.12 மணி முதல் 27-04-2015 மாலை 06.37 மணிவரை.

மே

இம்மாதம் 2-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாயும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பணவரவுகளில் தடைகள் ஏற்படாது. குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளால் சற்று லாபம் கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 22-05-2015 மதியம் 03.53 மணி முதல் 25-05-2015 அதிகாலை 02.27 மணி வரை

ஜூன்

ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் 12-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் வீண் விரயங்கள் குறையும். உங்களது பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். பணவரவுகளில் நல்ல மேன்மைகள் ஏற்படுவதால் கடன்கள் சற்றே தீரும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 18-06-2015 இரவு 12.40 மணி முதல் 21-06-2015 காலை 10.41 மணி வரை.

ஜூலை

களத்திர ஸ்தானமான 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது குடும்பத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துமென்றாலும் 5-ஆம் தேதி முதல் குரு 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் திருமண சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் குடியேறும். கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களிலிருந்த மனசஞ்சலங்கள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். சிலர் மனதில் நினைத்தவரையே கைப்பிடித்து மகிழ்வர். பிரதோஷ விரதம் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 16-07-2015 காலை 08.30 மணி முதல் 18-07-2015 மாலை 06.31 மணி வரை.

ஆகஸ்ட்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுமென்றாலும் குரு 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் ஏற்படாது. மங்களகர மான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிகள் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமையும். புதிய பூமி, நிலம், வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். சஷ்டி விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 12-08-2015 மதியம் 02.59 மணி முதல் 15-08-2015 அதிகாலை 01.28 மணி வரை.

செப்டம்பர்

குரு 9-ல் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 10-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும், செய்யும் தொழிலில் நல்ல மேன்மைகள் ஏற்படும். என்றாலும் 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். முருகப்பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 08-09-2015 இரவு 08.38 மணி முதல் 11-09-2015 காலை 07.34 மணி வரை.

அக்டோபர்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 9-ல் குரு, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் எல்லா வகையிலும் முன்னேற்றங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம், அசையும்- அசையாச் சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வுகளைப் பெற்றாலும் வேலைப் பளு சற்று கூடுதலாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 06-10-2015 அதிகாலை 02.38 மணி முதல் 08-10-2015 மதியம் 01.27 மணி வரை.

நவம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குருவும் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமெடுப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். கனவுகள் அனைத்தும் நனவாகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 02-11-2015 காலை 10.11 மணி முதல் 04-11-2015 இரவு 08.03 மணி வரை; மற்றும் 29-11-2015 இரவு 07.27 மணி முதல் 02-12-2015 அதிகாலை 04.01 மணி வரை.

டிசம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குருவும், 11-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வது தாராள தனவரவுகளை உண்டாக்கும் அமைப்பென்றாலும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள் ஏற்படுமென்பதால் எதிலும் கவனம் தேவை. தனவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொண்டால் லாபத்தினைப் பெறமுடியும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்களும் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது, பிரதோஷ கால விரதமிருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 27-12-2015 காலை 05.18 மணி முதல் 29-12-2015 மதியம் 01.03 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2, 3, 9; கிழமை – வியாழன், திங்கள்; திசை – வடகிழக்கு; நிறம் – மஞ்சள், சிகப்பு; கல் -புஷ்பராகம்; தெய்வம் – தட்சிணாமூர்த்தி.

பரிகாரம்

தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் எள் எண்ணெயில் தீப மேற்றுவது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்வது, திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015 புத்தாண்டு பலன்கள் ! - Page 2 Empty Re: 2015 புத்தாண்டு பலன்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum