Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(
4 posters
Page 1 of 1
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(
மதுரை: தமிழகத்தில், பாக்., பயங்கரவாதிகளின் கைவரிசை தொடர்கிறது. தஞ்சை, சரஸ்வதி மகால் நூலக இணையதளத்தை முடக்கி, அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்கள், தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கி, அட்டூழியம் செய்துள்ளனர். 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை முடக்கியவர்கள் குறித்த தகவல்களை தரும்படி, அமெரிக்க நிறுவனத்திடம், தமிழக போலீசார் கேட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் இணையதளம், பாக்., பயங்கரவாதிகள் பெயரில் முடக்கப்பட்டது.நேற்று முன்தினம், மாலை 4:00 மணி முதல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளமான, www.maduraimeenakshi.org திடீரென முடங்கியது. கோவில் நிர்வாகம், தீவிர முயற்சி எடுத்தும், மீண்டும் இணையதளத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.
இதைத் தொடர்ந்து, இரவு 11:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், சஞ்சய் மாத்தூரிடம், கோவில் நிர்வாக அதிகாரி, நடராஜன் புகார் அளித்தார்.முதற்கட்ட விசாரணையில், 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், கோவில் இணையதளம் முடக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதே பெயரில், 'பேஸ்புக்' கணக்கும் துவங்கப்பட்டு உள்ளது. இணையதளத்தின், 'ஆன் - லைன்' தரிசனம், பணம் செலுத்தும் முறை மற்றும் கோவில் போட்டோ, வீடியோக்களை, திட்டமிட்டு முடக்கி உள்ளனர்.
போலீசார் கூறியதாவது:பாக்., பயங்கரவாதிகள் பெயரில், பீதியை உண்டாக்கும் வகையில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள், கோவில் இணையதளத்தை முடக்கி இருக்கலாம் என,சந்தேகம் உள்ளது.எந்த, 'சர்வர்' வழியே முடக்கப்பட்டது; அதை இயக்கியவரின் முகவரி போன்ற விவரங்களை, அமெரிக்க நிறுவனத்திடம் கேட்டுஉள்ளோம். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை நடக்கும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
மீண்டும் இயங்கியது!நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு முடக்கப்பட்டிருந்த கோவில் இணையதளம், நேற்று மாலை 6:00 மணிக்கு, மீண்டும் இயங்கத் துவங்கியது.அடுத்த ஆண்டு கோவிலில் நடக்கும் திருவிழா குறித்த விவரங்கள், 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் தரப்பினர் கூறுகையில், 'இணையதளத்தை மீண்டும் முடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்போதும் போல் பொதுமக்கள் வேண்டிய தகவல்களை பெறலாம்' என்றனர்.
'சர்வரை' நிர்வகிப்பது அமெரிக்க நிறுவனமாம்: *கோவில் இணையதளத்தின், 'சர்வரை' அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, 'ஹாஸ்ட் கேட்டர்' என்ற நிறுவனம், ஒன்றரை ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.
*இதற்காக, கோவில் சார்பில், மாதம், 175 டாலர் (10,500 ரூபாய்) கட்டணம் செலுத்தப்படுகிறது.
*இணையதளத்தின் ரகசிய நுழைவு எண்ணை மாற்றும்படி, அந்நிறுவனத்திற்கு கோவில் சார்பிலும், போலீஸ் சார்பிலும், 'இ - மெயில்' அனுப்பப்பட்டு உள்ளது.
*அமெரிக்க நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி மகால் இணையதளம் மீண்டும் துவங்கியது: பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டிருந்த, தஞ்சை, சரஸ்வதி மகால் நுாலகத்தின் இணையதளம், நேற்று முதல், மீண்டும் செயல்படத் துவங்கியது.தஞ்சை, சரபோஜி அரண்மனைவளாகத்தில், சரஸ்வதி மகால் நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த, மூன்று நாட்களுக்கும் மேலாக, இந்த இணையதளத்தை (www.tmssmlibrary.in), பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், முடக்கி வைத்தனர்.
இது பற்றி, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இணையதளத்தை உருவாக்கிய, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர், முடங்கிய இணையதளத்தை சரி செய்தனர். இதையடுத்து, நேற்று முதல், மீண்டும் இணையதளம் செயல்படத் துவங்கியது.மாவட்ட கலெக்டர், சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:சரஸ்வதி மகால் நுாலக விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விஷமிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து நூல்களும், பாதுகாப்பாக உள்ளன. நூலகத்தின் இணையதளம், தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
தினமலர்
இரண்டு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் இணையதளம், பாக்., பயங்கரவாதிகள் பெயரில் முடக்கப்பட்டது.நேற்று முன்தினம், மாலை 4:00 மணி முதல், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளமான, www.maduraimeenakshi.org திடீரென முடங்கியது. கோவில் நிர்வாகம், தீவிர முயற்சி எடுத்தும், மீண்டும் இணையதளத்தை, பயன்பாட்டிற்கு கொண்டு வரமுடியவில்லை.
இதைத் தொடர்ந்து, இரவு 11:00 மணிக்கு, போலீஸ் கமிஷனர், சஞ்சய் மாத்தூரிடம், கோவில் நிர்வாக அதிகாரி, நடராஜன் புகார் அளித்தார்.முதற்கட்ட விசாரணையில், 'பாகிஸ்தான் டீன் லீட்ஸ்' என்ற பெயரில், கோவில் இணையதளம் முடக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதே பெயரில், 'பேஸ்புக்' கணக்கும் துவங்கப்பட்டு உள்ளது. இணையதளத்தின், 'ஆன் - லைன்' தரிசனம், பணம் செலுத்தும் முறை மற்றும் கோவில் போட்டோ, வீடியோக்களை, திட்டமிட்டு முடக்கி உள்ளனர்.
போலீசார் கூறியதாவது:பாக்., பயங்கரவாதிகள் பெயரில், பீதியை உண்டாக்கும் வகையில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள், கோவில் இணையதளத்தை முடக்கி இருக்கலாம் என,சந்தேகம் உள்ளது.எந்த, 'சர்வர்' வழியே முடக்கப்பட்டது; அதை இயக்கியவரின் முகவரி போன்ற விவரங்களை, அமெரிக்க நிறுவனத்திடம் கேட்டுஉள்ளோம். அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை நடக்கும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
மீண்டும் இயங்கியது!நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு முடக்கப்பட்டிருந்த கோவில் இணையதளம், நேற்று மாலை 6:00 மணிக்கு, மீண்டும் இயங்கத் துவங்கியது.அடுத்த ஆண்டு கோவிலில் நடக்கும் திருவிழா குறித்த விவரங்கள், 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் தரப்பினர் கூறுகையில், 'இணையதளத்தை மீண்டும் முடக்காத வகையில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்போதும் போல் பொதுமக்கள் வேண்டிய தகவல்களை பெறலாம்' என்றனர்.
'சர்வரை' நிர்வகிப்பது அமெரிக்க நிறுவனமாம்: *கோவில் இணையதளத்தின், 'சர்வரை' அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, 'ஹாஸ்ட் கேட்டர்' என்ற நிறுவனம், ஒன்றரை ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.
*இதற்காக, கோவில் சார்பில், மாதம், 175 டாலர் (10,500 ரூபாய்) கட்டணம் செலுத்தப்படுகிறது.
*இணையதளத்தின் ரகசிய நுழைவு எண்ணை மாற்றும்படி, அந்நிறுவனத்திற்கு கோவில் சார்பிலும், போலீஸ் சார்பிலும், 'இ - மெயில்' அனுப்பப்பட்டு உள்ளது.
*அமெரிக்க நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
சரஸ்வதி மகால் இணையதளம் மீண்டும் துவங்கியது: பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டிருந்த, தஞ்சை, சரஸ்வதி மகால் நுாலகத்தின் இணையதளம், நேற்று முதல், மீண்டும் செயல்படத் துவங்கியது.தஞ்சை, சரபோஜி அரண்மனைவளாகத்தில், சரஸ்வதி மகால் நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த, மூன்று நாட்களுக்கும் மேலாக, இந்த இணையதளத்தை (www.tmssmlibrary.in), பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில், மர்ம நபர்கள், முடக்கி வைத்தனர்.
இது பற்றி, நேற்று, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, இணையதளத்தை உருவாக்கிய, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர், முடங்கிய இணையதளத்தை சரி செய்தனர். இதையடுத்து, நேற்று முதல், மீண்டும் இணையதளம் செயல்படத் துவங்கியது.மாவட்ட கலெக்டர், சுப்பையன் வெளியிட்ட அறிக்கை:சரஸ்வதி மகால் நுாலக விவகாரத்தில், சம்பந்தப்பட்ட விஷமிகள் மீது, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனைத்து நூல்களும், பாதுகாப்பாக உள்ளன. நூலகத்தின் இணையதளம், தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும்.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(
சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(
மேற்கோள் செய்த பதிவு: 1109755ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
இருக்கு ராம் அண்ணா, இவங்க நம்பலை அவ்வளவுதான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(
மேற்கோள் செய்த பதிவு: 1109755ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில்
உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?
-
நம்மால் பண்ண முடியும் ஆனால் இந்திய பெஸ்ட் என்று பாரின் காரன் சொன்ன தான நம்புறோம்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணையதளம் முடக்கம் :(
அதெல்லாம் எப்பவோ இந்த தொழில் உத்தி எல்லா நாட்டிலும் வந்துவிட்டது இந்தியாவில் சர்வரை பராமரிப்பதில் நிர்வாக செலவுகள் மிக அதிகம்.ayyasamy ram wrote:சர்வரை இந்தியாவே பராமரிக்கும் தொழில் உத்தி ஏன் இன்னும் வரவில்லை...?-
நம்ம ஆளுங்க தான் 2G அலைகற்றையிலேயே இந்த அளவுக்கு ஆட்டைய போட்டு நம்ம தகவல் தொழில்நுட்ப துறை முன்னேற விடாம பண்ணுறாங்களே இதில் எப்போ நாம் fibre optic தொழில்நுட்பத்தை கொண்டுவருவது.
ஒரு சர்வரை பராமரிக்க ஒரு இணைய இணைப்பும் , ஒரு சுமாரான கணினியும் இருந்தால் போதும். ஆனால் நமது இணையதளத்தை ஒரே நேரத்தில் 10 பேர் பார்த்தால் என்னவாகும் , 1000 பேர் பார்த்தால் என்னவாகும். அல்லது ஒரே நேரத்தில் 10,00,000 பேர் பார்த்தால் கணினி செயல்படாமல் நின்று போய் விடும்.
ஆனால் Hostgator மிகசிறந்த ஒரு hosting நிறுவனம். நமது ஈகரை தளங்களில் கூட ஒரு சில தளங்களை நாம் இங்கு பராமரிக்கிறோம். ஒரு இணையதளத்தை hackers முடக்குவதற்கு ஹோஸ்டிங் நிறுவனம் எந்த அளவிற்கு பொறுப்பாக முடியும் என்று தெரியவில்லை. இந்த தளத்தின் admin கடவுசொல்லை நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்பதை பொறுத்து தான் அதன் பாதுகாப்பு உள்ளது
மீனாட்சியம்மன் இணையதளத்தின் அட்மின் பாஸ்வோர்ட் அந்த அளவிற்கு எளிமையாக இருந்திருக்கிறது அதனால் தான் எளிதாக hack பண்ணியுள்ளார்கள்
Similar topics
» மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை
» பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை
» பாதுகாப்பு வளையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|