Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
4 posters
Page 1 of 1
தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச தீவிரவாதி தாவூத் இப்ராகிம்
கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிமும், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளான். இதனால் கடந்த 2003–ம் ஆண்டு அவனை ‘சர்வதேச தீவிரவாதி’ என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவன் ஈடுபட்டு வருவதால், 2006–ம் ஆண்டு அவனை வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி எனவும் அமெரிக்கா அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தாவூத்துக்கு எதிராக சர்வதேச போலீசார் கைது வாரண்டு பிறப்பித்தனர். இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சூத்ரதாரியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கர தீவிரவாதிகளான அப்துல் கரிம் துண்டா, யாசின் பத்கல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது மீண்டும் உறுதியானது
இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தனியார் செய்தி சேனல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர் பாய்ஸ்
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம்மை, சுட்டுக் கொல்ல இந்திய உளவு அமைப்பு 'ரா' ரகசிய நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுமார் ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானிற்குள் சென்று தாவூத் இப்ராகிம்மை அழித்துவிட இந்தியாவின் உளவு அமைப்பான ரா 2013ம் ஆண்டு திட்டமிட்டது. தாவூத் இப்ராகிம்மை வேட்டயாடும் இந்த நடவடிக்கைக்கு 'சூப்பர் பாய்ஸ்' என்று பெயரிடப்பட்டது.
'சூப்பர் பாய்ஸ்' நடவடிக்கைக்கு 'ரா' அமைப்பில் இருந்து 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு பயிற்சி பெற்ற அவர்களுக்கு சூடான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் நாட்டு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு சென்றனர்.
கண்காணிப்பு
பாகிஸ்தானுக்குள் சென்றதும், 9 பேர்கள் கொண்ட இந்திய குழு தாவூத் இப்ராகிம்மின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்தது.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இருந்துள்ளான். கிளிப்டன் சாலையில் தினமும் காரில் சென்றுவந்துள்ளான். சாலையில் பாகிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான். அவனது நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் கண்காணிக்கப்பட்டது.
இஸ்ரேல் உளவு அமைப்பு உதவி
தாவூத் இப்ராகிம்மை கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' வின் திட்டத்திற்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் பெரும் உதவிகரமாக செயல்பட்டது.
கராச்சி நகரில் தாவூத் இப்ராகிமின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அவனை சுட்டுத் தள்ள திட்டம் வகுக்கப்பட்டது. அவன் வழக்கமாக செல்லும் சாலையில், அவனது காரை சூப்பர் பாய்ஸ் வீரர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.
கடந்த 2013 -ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம்மிற்கு நாள் குறிக்கப்பட்டது. கராச்சியின் கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் தாவூத் இப்ராகிம் மிகவும் பாதுகாப்பாக வசித்து வந்தான். கிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அவனை, அங்குள்ள ஒரு தர்கா பகுதியில் சுட்டுத் தள்ள சூப்பர் பாய்ஸ் குழு முடிவெடுத்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் 9 வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தயாராக பதுங்கி இருந்தனர்.
ரகசிய தொலைபேசி
செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் அவனை சுட்டுக் கொல்ல தயாராக இருந்த நிலையில், சூப்பர் பாய்ஸ் வீரர்களுக்கு ரகசிய தொலைபேசி வந்தது.
சூப்பர் பாய்ஸ் வீரர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு, தாவூத் இப்ராகிமின் கார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரகசிய தொலைபேசி அழைப்பு வந்தது. ரகசிய தொலைபேசியில் கிடைத்த உத்தரவின் பேரில் தாவூத்தை கொல்லாமல் வீரர்கள் திரும்பிவிட்டனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகவும் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு தீட்டப்பட்டு திட்டம் வெற்றியை அடையும் போது கைவிடப்பட்டது.
ரகசிய தொலைபேசி அழைப்பு யாரிடம் இருந்து வந்தது, நீண்ட நாள் திட்டம் வெற்றியடையும் நிலையில், ஒரு நிமிடத்தில் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? என்பது குறித்த எந்த தகவலும் தெரியவரவில்லை.
-dailythanthi
சர்வதேச தீவிரவாதி தாவூத் இப்ராகிம்
கடந்த 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமான தாவூத் இப்ராகிமும், அல்–கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளான். இதனால் கடந்த 2003–ம் ஆண்டு அவனை ‘சர்வதேச தீவிரவாதி’ என அமெரிக்கா அறிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் தொழிலில் அவன் ஈடுபட்டு வருவதால், 2006–ம் ஆண்டு அவனை வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரி எனவும் அமெரிக்கா அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தாவூத்துக்கு எதிராக சர்வதேச போலீசார் கைது வாரண்டு பிறப்பித்தனர். இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாட்டம்
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சூத்ரதாரியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கர தீவிரவாதிகளான அப்துல் கரிம் துண்டா, யாசின் பத்கல் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது மீண்டும் உறுதியானது
இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை சுட்டுக் கொல்ல, இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தொலைபேசி உத்தரவால் கைவிடப்பட்டதாக தனியார் செய்தி சேனல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூப்பர் பாய்ஸ்
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தாவூத் இப்ராகிம்மை, சுட்டுக் கொல்ல இந்திய உளவு அமைப்பு 'ரா' ரகசிய நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் சுமார் ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானிற்குள் சென்று தாவூத் இப்ராகிம்மை அழித்துவிட இந்தியாவின் உளவு அமைப்பான ரா 2013ம் ஆண்டு திட்டமிட்டது. தாவூத் இப்ராகிம்மை வேட்டயாடும் இந்த நடவடிக்கைக்கு 'சூப்பர் பாய்ஸ்' என்று பெயரிடப்பட்டது.
'சூப்பர் பாய்ஸ்' நடவடிக்கைக்கு 'ரா' அமைப்பில் இருந்து 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு பயிற்சி பெற்ற அவர்களுக்கு சூடான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் நாட்டு பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது. அவர்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு சென்றனர்.
கண்காணிப்பு
பாகிஸ்தானுக்குள் சென்றதும், 9 பேர்கள் கொண்ட இந்திய குழு தாவூத் இப்ராகிம்மின் நடவடிக்கையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்தது.
தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இருந்துள்ளான். கிளிப்டன் சாலையில் தினமும் காரில் சென்றுவந்துள்ளான். சாலையில் பாகிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான். அவனது நடவடிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் கண்காணிக்கப்பட்டது.
இஸ்ரேல் உளவு அமைப்பு உதவி
தாவூத் இப்ராகிம்மை கொல்ல இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' வின் திட்டத்திற்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் பெரும் உதவிகரமாக செயல்பட்டது.
கராச்சி நகரில் தாவூத் இப்ராகிமின் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு, அவனை சுட்டுத் தள்ள திட்டம் வகுக்கப்பட்டது. அவன் வழக்கமாக செல்லும் சாலையில், அவனது காரை சூப்பர் பாய்ஸ் வீரர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.
கடந்த 2013 -ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம்மிற்கு நாள் குறிக்கப்பட்டது. கராச்சியின் கிளிப்டன் சாலையில் உள்ள வீட்டில் தாவூத் இப்ராகிம் மிகவும் பாதுகாப்பாக வசித்து வந்தான். கிஸ்தான் ராணுவ வீட்டு வசதி வாரிய பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அவனை, அங்குள்ள ஒரு தர்கா பகுதியில் சுட்டுத் தள்ள சூப்பர் பாய்ஸ் குழு முடிவெடுத்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் 9 வீரர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தயாராக பதுங்கி இருந்தனர்.
ரகசிய தொலைபேசி
செப்டம்பர் 13-ம் தேதி தாவூத் இப்ராகிம் செல்லும் சாலையில் அவனை சுட்டுக் கொல்ல தயாராக இருந்த நிலையில், சூப்பர் பாய்ஸ் வீரர்களுக்கு ரகசிய தொலைபேசி வந்தது.
சூப்பர் பாய்ஸ் வீரர்கள் பதுங்கியிருந்த இடத்திற்கு, தாவூத் இப்ராகிமின் கார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரகசிய தொலைபேசி அழைப்பு வந்தது. ரகசிய தொலைபேசியில் கிடைத்த உத்தரவின் பேரில் தாவூத்தை கொல்லாமல் வீரர்கள் திரும்பிவிட்டனர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீகவும் நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு தீட்டப்பட்டு திட்டம் வெற்றியை அடையும் போது கைவிடப்பட்டது.
ரகசிய தொலைபேசி அழைப்பு யாரிடம் இருந்து வந்தது, நீண்ட நாள் திட்டம் வெற்றியடையும் நிலையில், ஒரு நிமிடத்தில் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? என்பது குறித்த எந்த தகவலும் தெரியவரவில்லை.
-dailythanthi
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
இது ஒரு ஊகத்தின் அடிப்படையில் உள்ள
செய்தியாக தெரிகிறதே..!
-
செய்தியாக தெரிகிறதே..!
-
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
.
இதை முதலில் வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம்
எனக்கு தெரிந்த வரை . ஏதேனும் காரியங்களுக்காக இது போன்ற mission -கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது உண்டு.
இருந்தாலும் கட்டுரையின் உண்மை தன்மை பற்றி சரியாக கூற முடியவில்லை
ஒரு வேளை நடந்திருக்கலாம் ...அல்லது அவர்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அஜித் கே தோவல் பதவியை விட்டு ஓய்வு பெறும் முன்பு ஹபீஸ் சையது கொல்லப்படுவது உறுதி
இதை முதலில் வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம்
எனக்கு தெரிந்த வரை . ஏதேனும் காரியங்களுக்காக இது போன்ற mission -கள் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது உண்டு.
இருந்தாலும் கட்டுரையின் உண்மை தன்மை பற்றி சரியாக கூற முடியவில்லை
ஒரு வேளை நடந்திருக்கலாம் ...அல்லது அவர்கள் யூகத்தின் அடிப்படையில் சொல்லி இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அஜித் கே தோவல் பதவியை விட்டு ஓய்வு பெறும் முன்பு ஹபீஸ் சையது கொல்லப்படுவது உறுதி
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1109483mbalasaravanan wrote:சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
இதை வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம் . அதை மொழி பெயர்த்து தமிழ் பேபரில் வெளியிட்டிருப்பார்கள்.
IBN 7 ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ..அந்த கட்டுரைக்கு சரியான ஆதாரத்தை அது காட்டவில்லை
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: தாவூத் இப்ராகிம்மை சுட்டுக் கொல்ல இந்தியா முயற்சி, கடைசி நேர உத்தரவால் கைவிடப்பட்டது - தகவல்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1109624SajeevJino wrote:மேற்கோள் செய்த பதிவு: 1109483mbalasaravanan wrote:சந்தேகம் எனில் பேப்பரில் வராதே
இதை வெளியிட்டது IBN 7 செய்தி நிறுவனம் . அதை மொழி பெயர்த்து தமிழ் பேபரில் வெளியிட்டிருப்பார்கள்.
IBN 7 ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ..அந்த கட்டுரைக்கு சரியான ஆதாரத்தை அது காட்டவில்லை
சரி நண்பரே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» தாவூத் தம்பியை கொல்ல சோட்டா ராஜன் முயற்சி
» பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல ராஜபக்ச மகன் முயற்சி?
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» மோடியை கொல்ல ஐ.எஸ்.ஐ. திட்டம்; தாவூத் இப்ராகிமிடம் பொறுப்பு ஒப்படைப்பு!
» கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபயா- ராணுவ தளபதி
» பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல ராஜபக்ச மகன் முயற்சி?
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை சுட்டுக் கொல்ல முயற்சி-காயமின்றி தப்பினார்
» மோடியை கொல்ல ஐ.எஸ்.ஐ. திட்டம்; தாவூத் இப்ராகிமிடம் பொறுப்பு ஒப்படைப்பு!
» கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபயா- ராணுவ தளபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|