Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
+3
அகிலன்
T.N.Balasubramanian
ராஜா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
First topic message reminder :
இந்த சனிபெயர்ச்சி குறிப்புகள் அனைத்தும் தினத்தந்தியில் இருந்து எடுத்து பகிரப்பட்டது.
நன்றி - தினத்தந்தி
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை - (45/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
கவனத்துடன் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்!
தளராத மனதோடு பணியாற்றி வரலாறு படைக்கும் மேஷ ராசி நேயர்களே!
திட்டம் போட்டு செயலாற்றுவதில் கெட்டிக்காரர்களாக விளங்கும் உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டது. இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், இப்பொழுது எட்டாமிடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு ஏராளமான மாற்றங்களை வழங்கப்போகிறார்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், எட்டில் சஞ்சரிக்கும் பொழுது தொழில்மாற்றச் சிந்தனைகள், இடமாற்றச் சிந்தனைகள், வீடு மாற்றச் சிந்தனைகள் மற்றும் நாடுமாற்றச் சிந்தனைகள் போன்றவை ஏற்படுவது இயல்புதான்.
வலிமை வாய்ந்த சனியால் நாம் வளர்ச்சியைக் காணவும், தளர்ச்சியில் இருந்து அகலவும் செலுத்த வேண்டியது பக்தியும், யுக்தியும் தான். நீங்கள் தினந்தோறும் பக்தி செலுத்தி பாராயணமாக, 'கருநிறக் காகம் ஏறிக் காசினி தன்னைக் காக்கும்' என்ற கவசத்தைப் பாடுவதன் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். யுக்தி என்பது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்க காலத்தில் நீங்கள் எதையும் யோசித்து நுணுக்கமாக செய்வதாகும்.
மூன்றாண்டு காலங்கள் எட்டாமிடத்தில் முற்றுகையிடும் சனியால், வேண்டிய நற்பலன்களைப் பெற வேண்டுமானால் தன்னம்பிக்கையும், தைரியமும் தான் உங்களுக்கு அவசியம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய், 'தைரிய காரகன்' தானே!. எனவே தாக்குதல்களைச் சமாளித்து முன்னேறும் தன்மை இயல்பாகவே உங்களுக்கு உண்டு.
இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்திலும் அது இருக்கும் இடம், பார்க்கும் கிரகம், அதோடு இணைந்திருக்கும் கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் தாராபலம் பார்க்க வேண்டும். பின்னர் உங்களுக்குரிய யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளையும், தசாபுத்திக்கேற்ப அனுகூலம் தரும் தெய்வத்தைக் கண்டறிந்து அதற்குரிய வழிபாடுகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் முன்னேற்றத்தின் முதற்படிக்கு நீங்கள் செல்லலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிட, இனி டிசம்பர் 16 முதல், காக வாகனத்தானை கைகூப்பித் தொழ வேண்டியது அவசியமாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்!
மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். இதுவரை உங்களுக்கு கண்டகச் சனியாக இருந்தது. இனி மார்கழி 1-ந் தேதி முதல் அஷ்டமத்துச் சனியாக அடியெடுத்து வைக்கிறது. அஷ்டமத்துச் சனி எல்லோருக்கும் பாதிப்பை கொடுத்தாலும், உங்களைப் பொறுத்தவரை உற்சாகத்தோடு பணிபுரிய வைக்கப்போகிறார். காரணம் சனிப்பெயர்ச்சியான சில நாட்களிலேயே குருபகவான் கடக ராசிக்கு வக்ரமாக சென்று, அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்துள்ள சனியை தனது அருள் பார்வையால் பார்க்கப் போகிறார். எனவே ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது.
உங்களுக்கோ அல்லது குடும்பத் தினருக்கோ ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும். எனவே சனியையும், குருவையும் வாரந்தோறும் வழிபட்டு வருவது நல்லது.
அதே நேரத்தில் சுக்ரன் மற்றும் புதனின் ஆதிக்க திசாபுத்தி நடப்பவர்கள், எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நல்ல திசாபுத்தி நடைபெற்றால், சனியால் ஏற்படும் சோதனைகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும். நல்ல தெசாபுத்திகள் நடைபெறுமானால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். குடும்பத்தில் வீண் விரயங்களை தடுக்க, சுபவிரயங்களைச் செய்யலாம்.
மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!
உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும் சனியால், குடும்பச் செலவுகள் கூடும். இரவு, பகலாக கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களை திருப்திப் படுத்த பலவித போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். படபடப்பு, கோபம் போன்றவை வந்திணையும்.
நிதானத்தோடு செயல்படுவதாலும், கோபத்தைக் குறைத்துக் கொண்டு குணத்தோடு நடந்து கொள்வதாலும், சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபட இயலும்.
சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். அவர்களுக்குத் தேவையான ஆடை, ஆபரணங்களை அதிகம் வாங்கிக் கொடுப்பீர்கள். கல்யாணக் கனவுகளை நனவாக்கத் திட்டமிடுவீர்கள்.
எந்தக் காரியத்தையும் உங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்வதே நல்லது. பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினையை, பேச்சு வார்த்தையிலேயே சுமுகமாக முடித்துக் கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால், குடும்ப பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. முதல் ஆறு மாதங்களும், கடைசி 6 மாதங்களும், நடுவில் 6 மாதங்களும் சனியின் வலிமை அதிகரிக்கும். அக்காலத்தில் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
யோகபலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடும், பாக்கியாதிபதிக்குரிய கிழமையோடும் இணையும் நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்தால், உத்தி யோகம் மேன்மை அடையும்.
தெசாபுத்தி பலம் இழந்து இருப்பவர்களுக்கு, செய்யும் வேலையைவிட்டுவிட்டுப் புதிய வேலை தேடும் சூழ்நிலை உருவாகும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, தனித்து இயங்க முற்படுவார்கள். அனுசரித்துச் செல்வதன் மூலமே நன்மைகளைப் பெற முடியும்.
குதூகலம் தரும் குருப் பெயர்ச்சி காலம்!
விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகின்றது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.
சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 1, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பங்காளிப் பகை மாறும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பு, மரியாதை உயரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைக் குரு பார்க்கப் போகின்றார். எனவே குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் பங்குதாரர்களாக புதியவர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். வியாபார இழப்புகளை ஈடுசெய்வீர்கள். அந்நிய தேசம் அல்லது பிற மாநிலங்களில் பணிபுரிய செய்த ஏற்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி அனுகூலமாக இருக்கும்.
துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் நேரடிப் பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும். வங்கிச் சேமிப்பு உயரும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!
8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலுக்கு மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். கோவில் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். சர்ப்பசாந்தி செய்தால் சந்தோஷ வாய்ப்பு தேடிவரும்.
27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வது கடினம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். ராகு-கேது பிரீதி நலம் தரும்.
சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..
உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டிலும் மூன்று முறை வக்ரம் பெறும்பொழுது, வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறியே வந்துகொண்டு இருக்கும். குடும்பச் சுமை கூடும். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கடுமையாக முயற்சித்தும் காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அந்நிய தேசத்தில் இருப்பவர்கள் அரைகுறையாகப் பணியை முடித்துக் கொண்டு வர நேரிடலாம். இல்லத்தில் உள்ளவர்கள் எல்லாம் எதிரியாக இருக்கிறார்களே! என்று நினைப்பீர்கள். ஆயினும் அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகள் விரைவில் சுமுகமாக முடியும். அதற்கு அடித்தளமாக காலையில் கணபதியையும், மாலையில் சனி பகவானையும், அதன்பிறகு அனுமனையும் வழிபட்டு வந்தால் துயரங்கள் விலகி ஓடும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும்.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சனி பகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி உங்களுக்கு சகல யோகமும் வழங்குவார். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில், தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில் சென்று விநாயகர் மற்றும் நவக்கிரகம் அனைத்தையும் வழிபட்டு வருவது நல்லது. அருகிலுள்ள திருமங்கலக்குடி மங்களேஸ்வரர் வழிபாடும், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கும்.
இந்த சனிபெயர்ச்சி குறிப்புகள் அனைத்தும் தினத்தந்தியில் இருந்து எடுத்து பகிரப்பட்டது.
நன்றி - தினத்தந்தி
அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை - (45/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
கவனத்துடன் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்!
தளராத மனதோடு பணியாற்றி வரலாறு படைக்கும் மேஷ ராசி நேயர்களே!
திட்டம் போட்டு செயலாற்றுவதில் கெட்டிக்காரர்களாக விளங்கும் உங்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வந்துவிட்டது. இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், இப்பொழுது எட்டாமிடத்தில் சஞ்சரித்து உங்களுக்கு ஏராளமான மாற்றங்களை வழங்கப்போகிறார்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், எட்டில் சஞ்சரிக்கும் பொழுது தொழில்மாற்றச் சிந்தனைகள், இடமாற்றச் சிந்தனைகள், வீடு மாற்றச் சிந்தனைகள் மற்றும் நாடுமாற்றச் சிந்தனைகள் போன்றவை ஏற்படுவது இயல்புதான்.
வலிமை வாய்ந்த சனியால் நாம் வளர்ச்சியைக் காணவும், தளர்ச்சியில் இருந்து அகலவும் செலுத்த வேண்டியது பக்தியும், யுக்தியும் தான். நீங்கள் தினந்தோறும் பக்தி செலுத்தி பாராயணமாக, 'கருநிறக் காகம் ஏறிக் காசினி தன்னைக் காக்கும்' என்ற கவசத்தைப் பாடுவதன் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். யுக்தி என்பது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்க காலத்தில் நீங்கள் எதையும் யோசித்து நுணுக்கமாக செய்வதாகும்.
மூன்றாண்டு காலங்கள் எட்டாமிடத்தில் முற்றுகையிடும் சனியால், வேண்டிய நற்பலன்களைப் பெற வேண்டுமானால் தன்னம்பிக்கையும், தைரியமும் தான் உங்களுக்கு அவசியம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய், 'தைரிய காரகன்' தானே!. எனவே தாக்குதல்களைச் சமாளித்து முன்னேறும் தன்மை இயல்பாகவே உங்களுக்கு உண்டு.
இருப்பினும் உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து, நவாம்சத்திலும் அது இருக்கும் இடம், பார்க்கும் கிரகம், அதோடு இணைந்திருக்கும் கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் தாராபலம் பார்க்க வேண்டும். பின்னர் உங்களுக்குரிய யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளையும், தசாபுத்திக்கேற்ப அனுகூலம் தரும் தெய்வத்தைக் கண்டறிந்து அதற்குரிய வழிபாடுகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் முன்னேற்றத்தின் முதற்படிக்கு நீங்கள் செல்லலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிட, இனி டிசம்பர் 16 முதல், காக வாகனத்தானை கைகூப்பித் தொழ வேண்டியது அவசியமாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்!
மாபெரும் கிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் சனிபகவான். இதுவரை உங்களுக்கு கண்டகச் சனியாக இருந்தது. இனி மார்கழி 1-ந் தேதி முதல் அஷ்டமத்துச் சனியாக அடியெடுத்து வைக்கிறது. அஷ்டமத்துச் சனி எல்லோருக்கும் பாதிப்பை கொடுத்தாலும், உங்களைப் பொறுத்தவரை உற்சாகத்தோடு பணிபுரிய வைக்கப்போகிறார். காரணம் சனிப்பெயர்ச்சியான சில நாட்களிலேயே குருபகவான் கடக ராசிக்கு வக்ரமாக சென்று, அஷ்டமத்தில் அடியெடுத்து வைத்துள்ள சனியை தனது அருள் பார்வையால் பார்க்கப் போகிறார். எனவே ஆச்சரியப்படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது.
உங்களுக்கோ அல்லது குடும்பத் தினருக்கோ ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும். எனவே சனியையும், குருவையும் வாரந்தோறும் வழிபட்டு வருவது நல்லது.
அதே நேரத்தில் சுக்ரன் மற்றும் புதனின் ஆதிக்க திசாபுத்தி நடப்பவர்கள், எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நல்ல திசாபுத்தி நடைபெற்றால், சனியால் ஏற்படும் சோதனைகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உருவாகும். நல்ல தெசாபுத்திகள் நடைபெறுமானால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். குடும்பத்தில் வீண் விரயங்களை தடுக்க, சுபவிரயங்களைச் செய்யலாம்.
மந்தனின் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!
உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனிபகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் பார்வை 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கும் சனியால், குடும்பச் செலவுகள் கூடும். இரவு, பகலாக கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களை திருப்திப் படுத்த பலவித போராட்டங்களைச் சந்திக்க நேரிடும். படபடப்பு, கோபம் போன்றவை வந்திணையும்.
நிதானத்தோடு செயல்படுவதாலும், கோபத்தைக் குறைத்துக் கொண்டு குணத்தோடு நடந்து கொள்வதாலும், சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபட இயலும்.
சனியின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். அவர்களுக்குத் தேவையான ஆடை, ஆபரணங்களை அதிகம் வாங்கிக் கொடுப்பீர்கள். கல்யாணக் கனவுகளை நனவாக்கத் திட்டமிடுவீர்கள்.
எந்தக் காரியத்தையும் உங்கள் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்வதே நல்லது. பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினையை, பேச்சு வார்த்தையிலேயே சுமுகமாக முடித்துக் கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால், குடும்ப பெரியவர்களின் உடல்நலனில் கவனம் தேவை. முதல் ஆறு மாதங்களும், கடைசி 6 மாதங்களும், நடுவில் 6 மாதங்களும் சனியின் வலிமை அதிகரிக்கும். அக்காலத்தில் விநாயகர் மற்றும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
யோகபலம் பெற்ற நட்சத்திரம், உங்கள் ராசிநாதனுக்குரிய கிழமையோடும், பாக்கியாதிபதிக்குரிய கிழமையோடும் இணையும் நாளில் சிறப்பு வழிபாடுகளை செய்தால், உத்தி யோகம் மேன்மை அடையும்.
தெசாபுத்தி பலம் இழந்து இருப்பவர்களுக்கு, செய்யும் வேலையைவிட்டுவிட்டுப் புதிய வேலை தேடும் சூழ்நிலை உருவாகும். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, தனித்து இயங்க முற்படுவார்கள். அனுசரித்துச் செல்வதன் மூலமே நன்மைகளைப் பெற முடியும்.
குதூகலம் தரும் குருப் பெயர்ச்சி காலம்!
விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகின்றது. 5.7.2015-ல் சிம்ம ராசியிலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார்.
சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை பலத்தால் 1, 9, 11 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. எனவே உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். பங்காளிப் பகை மாறும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பு, மரியாதை உயரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
கன்னி ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைக் குரு பார்க்கப் போகின்றார். எனவே குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். தொழில் பங்குதாரர்களாக புதியவர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். வியாபார இழப்புகளை ஈடுசெய்வீர்கள். அந்நிய தேசம் அல்லது பிற மாநிலங்களில் பணிபுரிய செய்த ஏற்பாடுகளில் வெற்றி கிடைக்கும். வீடு கட்டும் முயற்சி அனுகூலமாக இருக்கும்.
துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் நேரடிப் பார்வை உங்கள் ராசியிலும், 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும். வங்கிச் சேமிப்பு உயரும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!
8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழிலுக்கு மாற்று இனத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். கோவில் திருப்பணிக்கு செலவிட்டு மகிழ்வீர்கள். சர்ப்பசாந்தி செய்தால் சந்தோஷ வாய்ப்பு தேடிவரும்.
27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது, தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. பணத்தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வது கடினம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். ராகு-கேது பிரீதி நலம் தரும்.
சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..
உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டிலும் மூன்று முறை வக்ரம் பெறும்பொழுது, வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறியே வந்துகொண்டு இருக்கும். குடும்பச் சுமை கூடும். தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கடுமையாக முயற்சித்தும் காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். அந்நிய தேசத்தில் இருப்பவர்கள் அரைகுறையாகப் பணியை முடித்துக் கொண்டு வர நேரிடலாம். இல்லத்தில் உள்ளவர்கள் எல்லாம் எதிரியாக இருக்கிறார்களே! என்று நினைப்பீர்கள். ஆயினும் அஷ்டமத்துச் சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகள் விரைவில் சுமுகமாக முடியும். அதற்கு அடித்தளமாக காலையில் கணபதியையும், மாலையில் சனி பகவானையும், அதன்பிறகு அனுமனையும் வழிபட்டு வந்தால் துயரங்கள் விலகி ஓடும். தொடர்கதையாய் வந்த கடன் சுமை குறையும்.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சனி பகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனி உங்களுக்கு சகல யோகமும் வழங்குவார். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில், தஞ்சை மாவட்டம் சூரியனார் கோவில் சென்று விநாயகர் மற்றும் நவக்கிரகம் அனைத்தையும் வழிபட்டு வருவது நல்லது. அருகிலுள்ள திருமங்கலக்குடி மங்களேஸ்வரர் வழிபாடும், மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொடுக்கும்.
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:
அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை (60/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)
விருச்சிகத்தில் வந்தது சனி! விருத்தியம்சம்தான் இனி!
நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கும்ப ராசி அன்பர்களே!
அனுபவமே சிறந்த ஆசான் என்று சொல்லும் உங்களுக்கு, இதுவரை 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் இப்பொழுது 10-ம் இடத்தில் சஞ்சரித்து பலவித முன்னேற்றங்களை வழங்கப் போகிறார். உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாக அமைகிறது. 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி முத்தான தொழிலை அமைத்துக் கொடுக்கும். வரும் வாய்ப்பு களை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித் தனமாகும்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை சனி ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குகின்றார். எனவே லாபத்தை கொடுப்பவராகவும், விரயத்தைத் தருபவராகவும் சனிபகவானே விளங்குகின்றார். 10-ம் இடம் கர்ம ஸ்தானம் என்பதால் பெற்றோர்களின் உடல் நிலையில் பிரச்சினைகள் உருவாகி மறையும். அவர்களின் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி வலுவாக இருந்தால் பாதிப்புகள் ஏற்படாது.
பொதுவாக தொழில் ஸ்தானத்தில் விரயாதிபதி சஞ்சரிக்கும் பொழுது தொழிலில் கூடுதல் விரயம் ஏற்படுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இந்த முறை பெயர்ச்சியாகும் சனி உங்களுக்கு குரு பார்வையில் விளங்கும் சனியாக இருக்கிறது. சனிப்பெயர்ச்சியான சில நாட்களிலேயே அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று மீண்டும் குருபகவான் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசி குருவிற்கு உச்ச வீடாகும். எனவே உச்சம் பெற்ற குரு உங்கள் ராசிநாதன் சனியைப் பார்ப்பது மிகுந்த யோகத்தை தரும்.
பொதுவாக உங்கள் ராசியைப் பொறுத்தவரை எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் இடத்திற்கு அதிபதியாக சந்திரன் விளங்குகிறார். எனவே சந்திரபலம் நன்றாக இருந்தால் எதிரிகளால் தொல்லை ஏற்படாது. வியாதிகளில் சிக்கித் தவிர்க்க மாட்டீர்கள். கடன்சுமை கட்டுப்பாடாக இருக்கும். எனவே அந்த சந்திர பலத்தைக் கூட்டிக் கொள்ள நிலவு நிறைந்த நாளிலும், மறைந்த நாளிலும் வழிபாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் விளங்குகிறார். எனவே முருகப்பெருமான் வழிபாட்டையும் முறையாக செய்து வந்தால், தொழிலில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். குறிப்பாக வள்ளி தெய்வானையோடு இணைந்த ஆறுமுகப் பெருமான் வழிபாடு உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும்.
உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலை அறிந்து நவாம்சத்திலும் இருக்கும் இடமறிந்து அதோடு இணைந்த கிரகம், பார்க்கும் கிரகம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்ற விதத்தில் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
பத்தாமிடத்திற்கு வந்த முத்தான சனி!
சனி பகவான், இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். இப்பொழுது தொழில் மற்றும் செயல் ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாமிடத்திற்குச் செல்லப் போகிறார். ராசிநாதனே பத்தில் சஞ்சரிக்கும் பொழுது, புதிய திருப்பங்கள் நிறைய ஏற்படும்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமிருக்காது. பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்தும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கலாம்.
உங்கள் சுய ஜாதகத்தையும். குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பாருங்கள். தொழில் ஸ்தானம் யாருடைய ஜாதகத்தில் வலுவாக இருக்கிறதோ அவர்கள் பெயரில் தொடங்குவது தான் லாபம் தரும்.
ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்கள் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வார்கள். ஒருசிலர் மற்றவர்கள் உற்பத்திசெய்த பொருளை வாங்கி விற்பதன் மூலம் லாபம் காணலாம். இதில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற விதத்தில் தொழிலை அமைத்துக்கொள்ள வாய்ப்புகள் கைகூடி வரும்.
10-ல் சஞ்சரிக்கும் சனி தொழில் முயற்சியில் வெற்றி கொடுத்தாலும், பெற்றோர் மற்றும் சகோதர வழியில் பிரச்சினைகளைக் கொடுக்கவும் காரணமாக இருப்பார். எனவே சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது நல்லது. செவ்வாய் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் வார வழிபாடாக சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
மந்தன் சனியால் ஏற்படும் மகத்தான பலன்கள்!
உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்ரித்து வந்த சனிபகவானின் பார்வை 4,7,12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. சனியின் பார்வையால் அந்த இடங்களுக்கு உரிய ஆதிபத்யங்களில் எல்லாம் நல்ல மாற்றங்கள் வரப்போகின்றன.
குறிப்பாக நான்காம் இடத்தை சனி பார்த்தால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ளுங்கள்.
நான்காமிடம் தாய் ஸ்தானம் என்பதால் தாயின் உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. சுய ஜாதகத்தில் தெசாபுத்திக் கேற்ற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்ளுங்கள். பிரதோஷ காலத்தில் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று நந்தியெம்பெருமானை வழிபாடு செய்தால் வளமும், நலமும் கிடைக்கும்.
சப்தம ஸ்தானத்தைச் சனி பார்ப்பதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும் காலமாகும். பேசி விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேர்ந்து மகிழ்ச்சியை வரவழைக்கும். விலகி இருந்த தம்பதியர் இணையும் வாய்ப்பு, விருப்ப ஓய்வு பெற்று வேலையில் இருப்பவர்கள் தொழில் செய்யும் வாய்ப்பும் உருவாகும்.
12-ம் இடத்தைச் சனி பார்ப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். எனவே வீண் விரயங்களாகாமல் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. குறிப்பாக வீடு வாங்கும் முயற்சி அல்லது வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் செலுத்துங்கள்.
குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!
விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி வரப் போகின்றது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.
குரு சிம்மத்தில் சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியை நேரடியாக பார்க்கிறார். எனவே பணவரவு திருப்திகரமாக இருக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனமகிழ்ச்சியோடு இருக்க குடும்பத்தினர் வழிவகுத்துக் கொடுப்பர். சிம்ம குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. எனவே சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களுக்கு முக்கியப் புள்ளிகள் வைக்க முன்வருவீர்கள்.
கன்னி ராசியில் சஞ்சரிக்கும் பொழுது அஷ்டம ஸ்தானம் என்பதால் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதிர்பாராத இழப்புகளும் உருவாகலாம். அதன் பார்வை 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுக ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் சந்தோஷங்கள் வந்து சேரும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும்.
துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை மீண்டும் உங்கள் ராசியில் பதிகிறது. அதுமட்டுமல்ல, உடன்பிறப்புகள் ஸ்தானத்திலும், புத்திர ஸ்தானத்திலும் பதிவாகிறது. சனி நின்ற இடத்திற்கு பலன், குரு பார்த்த இடத்திற்கு பலன் என்பதால் இப்பொழுது துலாத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் சகாய ஸ்தானத்தையும், புத்திர ஸ்தானத்தையும் பார்ப்பதால் பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!
8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது உங்கள் ராசியிலேயே கேது சஞ்சரிக்கிறார். எனவே, சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் இருக்கிறீர்கள். ஏற்றமும், இறக்கமும் இணைந்தே வரும். இதற்கு பரிகாரமாக யோக பலம்பெற்ற நாளில் உங்களுக்கு அனுகூலம் தரும் ஸ்தலத்தை தேர்ந் தெடுத்து நாக சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. 7-ல் ராகு இருப்பதால் வாழ்க்கைத்துணை வழியே பிரச்சினைகள் வந்துஅகலும்.
27.7.2017-ல் கடகத்தில் ராகுவும், மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அப்பொழுது 6-ம் இடத்து ராகு அஷ்டலட்சுமி யோகத்தை உங்களுக்கு வழங்கும். எனவே பொருளாதார நிலை உயரும். திடீர், திடீரென தனலாபம் வந்து திக்கு முக்காட வைக்கும். உறவினர்கள் பகை மாறும். ஊர்மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..
உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விரயாதிபதியாக மட்டுமல்லாமல் ராசிநாதனாகவும் சனி விளங்குவதால், வீண் விரயங்கள் ஏற்படலாம். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். தடைகளும் தாமதங்களும் ஆட்கொள்ளும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். இது போன்ற காலங் களில் ஆதியந்தபிரபு வழிபாடும், அனுமன் வழிபாடும் உங்களுக்கு உகந்ததாக அமையும்.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று சனிபகவானை வழிபட்டு வருவதோடு, அதன் சன்னிதியில் எள்தீபம் வைத்து துதி பாடுங்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறி நல்ல திருப்பங்கள் உருவாகும். சிறப்பு வழிபாடாக தஞ்சை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வலம்புரி விநாயகர், செல்வ முத்துக்குமரன், வைத்தியநாதன், தையல்நாயகி, அங்காரகன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் வழிபட்டு வாருங்கள்.
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
சனிபெயர்ச்சி பலன்கள்
Down
16-12-2014 முதல் 15-12-2017 வரை சனிப்பெயர்ச்சி பலன்கள்:
பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி வரை (80/100)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)
ஒன்பதாமிடத்தில் சனி! உயர்வுகள் வந்திடும் இனி!
வந்த விருந்தினர்களை வரவேற்பால் திணறடிக்கும் மீன ராசி அன்பர்களே!
கடமைக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அஷ்டமத்துச் சனி விலகி ஆனந்தமான வாழ்க்கையை இப்பொழுது வழங்கப் போகிறது.
இந்தச் சனிப்பெயர்ச்சியால் மிகமிக நற்பலன்களை பெறும் ராசிகளில் முதன்மையான ராசியாக, உங்கள் ராசிதான் விளங்கப் போகின்றது.
இனி நல்லநேரம் இல்லம் தேடிவரப் போகிறது. ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். மருத்துவச் செலவுகள் குறையும். சீரோடும், சிறப்போடும் வாழ வழிவகுத்துக் கொள்ளப் போகிறீர்கள். செல்வநிலையில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவீர்கள். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வீண் பழிகளிலிருந்து விலகும் சூழ்நிலை அமையும்.
அரைகுறையாக நின்ற பணி இனி மீதியும் தொடரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்கப் போகிறார்கள். கூட்டு முயற்சியில் லாபம் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டாலும், கட்டிய வீட்டாலும் வந்த பிரச்சினை அகலும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆயத்தம் செய்வீர்கள். படிப்படியாக உடல் நலம் சீராகும். பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும். கொடுக்கல்-வாங்கல்களில் இதுவரை இருந்த ஏமாற்றங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைப்பதற்கு புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.
விலகிய சனியை விலகும் நாளிலேயே கும்பிட்டு மகிழ்வது நல்லது. பொதுவாக திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் குளித்து அங்குள்ள காக வாகனச் சனியை வழிபட்டு வந்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களும், சிரமங்களும் அகலும். திருக்கொள்ளிக் காட்டிலுள்ள பொங்கு சனீஸ்வரர் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.
ஆதியந்தப் பிரபு படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து பாதி அருகம்புல்லையும், பாதி வெற்றிலை மாலையையும் இணைத்து அணிவித்து வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வடக்கு நோக்கிய பிள்ளையாரையும், வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் இதுபோன்ற காலங்களில் வழிபட்டால் தடைகற்கள் அகலும்.
உங்கள் சுய ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையறிந்து, நவாம்சத்திலும் சனிபகவான் இருக்கும் இடம், அதைப் பார்க்கும் கிரகம், அதோடு இணைந்த கிரகம் அனைத்தையும் ஆராய்ந்து நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும் தெய்வ வழிபாடுகள்தான் உங்கள் எதிர்காலத்தை இனிமையாக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக ஒன்பதாமிடத்தில் சனி உலா வரும்பொழுது பொன், பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வீர்கள். பகை பாராட்டிப் பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் தானாக வந்திணைவர். பொதுவாக போராட்டமான வாழ்க்கை மாறி பூந்தோட்டமான வாழ்க்கை அமையும். எனவே கசந்த காலங்கள் மாறி வசந்த காலங்கள் உருவாக காக வாகனத்தானையும், அனுமனையும் கைகூப்பித் தொழுவது நல்லது.
ஒன்பதாம் இடத்து சனி பொன் பொருள் தருமா?
சனிபகவான், உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனிபகவான் லாபத்தையும், கொடுத்து விரயத்தையும் கொடுப்பதற்கு மூலகாரணமாக இருக்கிறார். நீங்கள் பெற்றோர்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் செய்ய வேண்டியதை முறையாக செய்வீர்கள். இழப்புகளை ஈடுசெய்யும் விதத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். இடமாற்றம், ஊர்மாற்றம், நாடுமாற்றம், வாகன மாற்றம், தொழில் மாற்றம் உருவாகும்.
பொதுவாக ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி, பொன் பொருள் வாங்கப் போட்ட திட்டத்தை நிறைவேற்றுவார். மண், பூமி வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே நடைபெற தெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வது நல்லது. திருச்சி அருகில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள தலையெழுத்தை மாற்றும் பிரம்ம தேவரையும், அதற்கு அருகில் ஊட்டத்தூரில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் உள்ள பிரளயகால நந்தியையும் காலபைரவரையும் வழிபட்டு உங்கள் கவலைகளை போக்கிக் கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் விபரீத ராஜயோக அடிப்படையில், சில நல்ல காரியங்கள் திடீர் திடீர் என நடைபெறும். பொருளாதார நிலை உயரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உத்தியோக ஸ்தானம் பலப்படுவதால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இடத்திற்கு மாறுதல்களும் கிடைக்கும். சனியின் பார்வை லாப ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளர்ச்சி கூடும். தொகை வரவு திருப்திகரமாக இருக்கும். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாற்று இனத்தவர்கள் உங்கள் மனதிற்கேற்ற விதத்தில் நடந்து கொள்வார்கள்.
குதூகலம் தரும் குருப்பெயர்ச்சிக் காலம்!
விருச்சிக ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. 5.7.2015-ல் சிம்மத்திலும், 2.8.2016-ல் கன்னி ராசியிலும், 2.9.2017-ல் துலாம் ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகிறார்.
சிம்மத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குலதெய்வ பிரார்த்தனைகளை மேற்கொள்வீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறும். கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் இருந்தவர்கள் விருப்ப ஓய்வு பெற்று, சுயதொழில் தொடங்க முன்வருவர். அடிக்கடி பயணங்கள் அதிகரிக்கும்.
கன்னி ராசியில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடத்தில் பதிவாகிறது. எனவே ராசியைப் பார்க்கும் குரு யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றியைக் கொடுப்பார். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். கீர்த்தி பெருகும். கெடுதல்கள் மறையும். பணப்பற்றாக்குறை அகலும். 11-ம் இடம் புனிதமடைவதால் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். பயணங்களால் பலன் கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து நண்பர்கள் உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வருவர். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் வாய்ப்பும் உண்டு.
துலாம் ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. எனவே தொழிலில் எதிர்பாராத இழப்புகள் உருவாகும். எனவே கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். குருவின் பார்வை 2,4,12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பார்க்கும் குருவால் குடும்பச் சுமை குறையும். வீடுகட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் ஈடுபட்டிருப்போருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்!
8.1.2016-ல் சிம்மத்தில் ராகுவும், கும்பத்தில் கேதுவும் சஞ்சரிக்கும் பொழுது எதிரிகளின் பலம் மேலோங்கியிருக்கும். எதைச் செய்தாலும் யோசித்துச் செய்வது நல்லது. உதிரி வருமானங்கள் குறையலாம். உடனிருப்பவர்களால் கடன்சுமை கூடும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். ஊர்மாற்றச் சிந்தனைகளும், நாடுமாற்றச் சிந்தனைகளும் மேலோங்கும். 12-ல் கேது இருப்பதால் பயணத்தில் விழிப்புணர்ச்சி தேவை. இதுபோன்ற நேரங்களில் ராகு-கேது பிரீதி செய்து கொள்வது நல்லது.
27.7.2017-ல் கடகத்தில் ராகுவும்,மகரத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். புத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். அதன் எதிர்கால நலன் கருதி ஒரு பெரும் தொகையைச் செலவு செய்யப் போகிறீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் தலைதூக்கும். புதிய முடிவெடுத்து சொத்துக்களை பராமரிக்க ஏற்பாடு செய்வீர்கள். பங்காளிப் பகை மாறும். கேதுவின் ஆதிக்கத்தால் மாற்றுக்கருத்துடையோர் உங்கள் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முன்வருவர். பழைய தொழிலைக் கொடுத்துவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் அகலும்.
சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற..
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் மூன்று முறை வக்ரம் பெறுகிறார். 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் வக்ரம் பெறும் பொழுது நன்மையையும், தீமையையும் கலந்தே செய்வார். சனி உங்கள் ராசியைப் பொறுத்தவரை லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குகிறார். லாபாதிபதி வக்ரம் பெறுவது நல்லதல்ல. வருமானத் தடைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் வந்தும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற கவலை அதிகரிக்கும். தொழிலில் இழப்பு களையும், ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வங்கிச் சேமிப்பு கரைகிறதே என்ற கவலைப்படுவீர்க்ள். அதே நேரத்தில் விரயாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். விரயத்தைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். வீடுமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். இது போன்ற காலங்களில் குருவழிபாடும், சனி வழிபாடும் சஞ்சலங்களைத் தீர்க்கும்.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற வழிபாடு!
சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவாலயத்திற்கு சென்று சனிபகவான் சன்னிதியில் எள்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதோடு காகத்திற்கும் சோறு வைப்பது நல்லது. சிறப்பு வழிபாடாக தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று யோகபலம் பெற்ற நாளில் விநாயகர், முருகப்பெருமான், பிரகதீஸ்வரர், அம்பிகை நந்தி எம்பெருமான், தெட்சிணாமூர்த்தி, வாராகி ஆகியவற்றை வழிபட்டு வாருங்கள். நந்தி வழிபாடு நலம் சேர்க்கும். வாராகி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.
- நன்றி தினத்தந்தி
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
நன்றி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
விரிவான விளக்கம் தந்திருக்கிறார் சோதிடர்
நன்றி.
நன்றி.
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
16-12-2014 முதல் 15-12-2017 வரை பலன்கள் சொல்லபட்டிருக்கிறதே...
-
சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாறுவாரே...!
-
-
சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாறுவாரே...!
-
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1108314ayyasamy ram wrote:16-12-2014 முதல் 15-12-2017 வரை பலன்கள் சொல்லபட்டிருக்கிறதே...
-
சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வீடு மாறுவாரே...!
-
நானும் இந்த தவறை தலைப்பில் கண்டேன் .
ஒரு வேளை, சனி பெயர்ச்சி மட்டும் இன்றி , குரு பெயர்ச்சி , ராகு -கேது பெயர்ச்சி 2017 வரை சொல்லி இருப்பதால் இந்த தலைப்பாக இருக்குமோ என்று சமாதானப் படுத்திக் கொண்டேன் .
எப்படி இருப்பினும் சனி , (16-12-2014/ 15-06-2016) , 16-06-2016 அன்று அடுத்த வீட்டிற்கு மாறுகிறார் .
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Dec 08, 2014 7:45 am; edited 2 times in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
நன்றி.....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
T.N.Balasubramanian wrote:நானும் இந்த தவறை தலைப்பில் கண்டேன் .
ஒரு வேளை, சனி பெயர்ச்சி மட்டும் இன்றி , குரு பெயர்ச்சி , ராகு -கேது பெயர்ச்சி 2017 வரை சொல்லி இருப்பதால் இந்த தலைப்பாக இருக்குமோ என்று சமாதானப் படுத்திக் கொண்டேன் .
எப்படி இருப்பினும் சனி , (16-12-2014/ 15-06-2016) , 16-06-2016 அன்று அடுத்த வீட்டிற்கு மாறுகிறார் .
ரமணியன்
Re: விரிவான சனிபெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசியினருக்கும்
ஜோசியம் என்பது ஒரு கணக்குதான்...
-
எனது நண்பர் அடிக்கடி ஜாதகம் பார்ப்பார்.
அவருக்கு விரைவில் கரும காரியம் பண்ண
வேண்டிய கால கட்டம் இருப்பதாக சொன்னார்
சோதிடர்.
-
அவரும் தன்னுடைய தாயாருக்கு அடிக்கடி உடல்
நலம் குன்றி வருவதை நினைத்து தாயாருக்குத்தான்
கண்டம் என்று நினைத்துக் கொண்டார்
-
ஆனால் நடந்தது வேறு...!
-
பத்தாவது படிக்கும் அவரது மகன் வகுப்பில்
ஆசிரியர ஏதோ கடுமையாக சொன்னார்
என்பதால் வீட்டிலேயே பகலில் தூக்கில்
தொங்கி விட்டான்...!!
-
ஆகவே கண்டம் இருக்கிறது என்று பொதுவாகதான்
சோதிடர் சொல்வார்கள்..
-
மேலும் இவை பொதுவான பலன்களே...
அவரவர் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி வலுவாக
இருந்தால் அதற்கேற்ப பலன்கள் மாறும் என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்
-
-
எனது நண்பர் அடிக்கடி ஜாதகம் பார்ப்பார்.
அவருக்கு விரைவில் கரும காரியம் பண்ண
வேண்டிய கால கட்டம் இருப்பதாக சொன்னார்
சோதிடர்.
-
அவரும் தன்னுடைய தாயாருக்கு அடிக்கடி உடல்
நலம் குன்றி வருவதை நினைத்து தாயாருக்குத்தான்
கண்டம் என்று நினைத்துக் கொண்டார்
-
ஆனால் நடந்தது வேறு...!
-
பத்தாவது படிக்கும் அவரது மகன் வகுப்பில்
ஆசிரியர ஏதோ கடுமையாக சொன்னார்
என்பதால் வீட்டிலேயே பகலில் தூக்கில்
தொங்கி விட்டான்...!!
-
ஆகவே கண்டம் இருக்கிறது என்று பொதுவாகதான்
சோதிடர் சொல்வார்கள்..
-
மேலும் இவை பொதுவான பலன்களே...
அவரவர் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி வலுவாக
இருந்தால் அதற்கேற்ப பலன்கள் மாறும் என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்
-
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சனிபெயர்ச்சி பலன் 2009
» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
» அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.
» அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.
» கைரேகை சோதிடம் - விரிவான பார்வை
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
» அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.
» அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|