ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் தலைகாக்கும் !

4 posters

Go down

தர்மம் தலைகாக்கும் ! Empty தர்மம் தலைகாக்கும் !

Post by krishnaamma Mon Dec 01, 2014 9:14 pm

'கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை; பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை' என்பது கிராமத்து சொலவடை. தர்மம் என்பது நம் கர்மா எனும் உண்டியலில் சேமிக்கப்படும் பொற்காசுகள். எவ்வளவு சேமிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் பிறப்பு அமையும்.
கிஞ்சன்வாடி எனும் கிராமத்தில், கேசவதாசர் என்பவர் ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். அவருக்கு தட்சணை கொடுப்பதற்காக, பாண்டுரங்கனின் அடியாரான துக்காராம் ஏற்பாட்டின்படி, ஊர் பெரியவர்கள் வசூல் செய்தனர். அப்போது, மாதவன் என்ற வியாபாரியிடம் பொருள் கேட்டனர். அவரோ, 'அட போங்க... எப்ப பாரு இந்த துக்காராம் பஜனை, கதாகாலட்சேபம் அது, இதுன்னு கத்திக்கிட்டே இருப்பார். இப்ப, அவர் கூட கேசவதாசர்ன்னு இன்னொருத்தர் வேற சேர்ந்துட்டாரு. எதுவும் கொடுக்க மாட்டேன் போங்க...' என்று விரட்டினார்.
பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் சாமர்த்தியசாலியாக இருந்தார் மாதவன். தன் மனைவி எதையாவது கொடுத்து விடுவாள் என நினைத்து, விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைத்து விட்டார். அதன் காரணமாக, பொருள் கேட்டு வந்த அடியவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாததால், வீடெங்கிலும் தேடி, உடைந்து போன ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து, 'ஐயா... இதை விற்று, அதன் மூலம் கிடைப்பதை, உங்கள் நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றாள் மாதவனின் மனைவி.
அவர்களும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.
அதை கண்ட மாதவன், 'அடடே...என் மனைவி தங்கப் பாத்திரத்தை தந்திருக்கிறாளே... கொண்டு போங்கள்...' என்று சிரித்துக் கொண்டே ஏளனமாக கூறினார்.
அடியவர்களிடம் இருந்து பாத்திரத்தை வாங்கிய துக்காராம், 'அந்த பெண்மணி மிகுந்த பக்தி கொண்டவர்; தர்ம சிந்தனை கொண்ட அந்த உத்தமி தந்த இந்த அலுமினியப் பாத்திரம், தங்கப் பாத்திரத்திற்கு இணையானது...' என்றார். அதே வினாடியில், துக்காராம் கையில் இருந்த அலுமினியப் பாத்திரம், தங்கமாக மாறியது.
இந்தத் தகவல் ஊரெங்கும் பரவியது. வியாபாரி மாதவன் அதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தார். 'இந்த ஊர்க்காரர்கள், என் மனைவியை ஏமாற்றி, தங்கப் பாத்திரத்தை வாங்கி வந்து விட்டனர்; அதைத் திருப்பித் தாருங்கள்...' என்றார்.
துக்காராமும் அப்பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தார். அதை மாதவன் வாங்கியதும், பழையபடியே அலுமினியமாக மாறியது. எரிச்சலோடு அவர், அதை துக்காராமிடமே திருப்பித் தந்தார். இவர் கைக்கு வந்ததும் அது தங்கமாக மாறியது.
மாதவன் திகைக்க, 'மாதவா... உத்தமியான உன் மனைவி, தர்ம சிந்தனையுடன் தந்த இந்த பாத்திரம் அவள் மனதைப் போலவே தங்கமாக மாறியது...' என்றவர், 'மாதவா... நாம் சம்பாதிக்கும் செல்வத்திற்கு அரசு, (வரி மற்றும் இதர அரசு காரியங்கள்) இயற்கை, (பஞ்சம், வெள்ளம், காற்று, நெருப்பு ஆகியவைகளால் விளையும் சேதம்) திருடர்கள், (திருட்டு, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகியவை மூலமாகவும்) தர்மம் (தெய்வ காரியங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவுவது) இந்த நான்கு பேரும் பங்காளிகள்.
'இந்த நான்கிலும், நான்காவதாகச் சொல்லப்பட்ட தர்மத்தை நாம் செய்தால், அந்தப் புண்ணியத்தின் பலத்தால், மற்ற மூன்று பங்காளிகளும், நம்மை நெருங்க மாட்டார்கள்; ஆகையால், இருக்கும் போதும், இறந்த பின்பும் நன்மை தரக்கூடியது தர்மம் மட்டுமே...' என்றார்.
இவ்வாறு சொல்லி முடித்ததும், துக்காராமின் காலில் விழுந்து வணங்கிய மாதவன், 'என் செல்வங்களை எல்லாம், இனி, தர்மத்திற்கே பயன்படுத்துவேன்...' என்றார்.
'ஈயார் தேட்டை தீயார் கொள்வர்' என்று அவ்வையார் இடித்துரைப்பதை மனதில் வைத்து, தர்மம் செய்வது நம் வாழ்வியல் கடமைகளில் ஒன்று என்பதை நினைவில் வைப்போம்!

பி.என்.பரசுராமன்

விதுர நீதி!: எவன் (அரசன்) மற்றவர்களின் நம்பிக்கையை பெற்று விடுகிறானோ, குற்றவாளிகளுக்கு பொருத்தமான தண்டனை கொடுக்கிறானோ, தண்டனையின் அளவை சரியாக தெரிந்து வைத்துள்ளானோ, எப்போது, கருணை காட்டி, மன்னிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறானோ - அவனை, செல்வமும், செல்வாக்கும் தேடி வரும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் தலைகாக்கும் ! Empty Re: தர்மம் தலைகாக்கும் !

Post by M.M.SENTHIL Mon Dec 01, 2014 10:08 pm

மிக அர்த்தமுள்ள பகிர்வு அம்மா...

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், தர்மம் செய்வது மிக பெரிய பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தர்மம் தலைகாக்கும் ! Empty Re: தர்மம் தலைகாக்கும் !

Post by விமந்தனி Mon Dec 01, 2014 10:52 pm

தர்மம் தலைகாக்கும் ! 3838410834 தர்மம் தலைகாக்கும் ! 3838410834


தர்மம் தலைகாக்கும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதர்மம் தலைகாக்கும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தர்மம் தலைகாக்கும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தர்மம் தலைகாக்கும் ! Empty Re: தர்மம் தலைகாக்கும் !

Post by ayyasamy ram Tue Dec 02, 2014 10:53 am

தர்மம் தலைகாக்கும் ! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தர்மம் தலைகாக்கும் ! Empty Re: தர்மம் தலைகாக்கும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum