புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
91 Posts - 61%
heezulia
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
7 Posts - 5%
eraeravi
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
1 Post - 1%
viyasan
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
283 Posts - 45%
heezulia
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
19 Posts - 3%
prajai
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_m10சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 29, 2014 11:01 am

சோழர் குல மாணிக்கம் செம்பியன் மாதேவியார். இவர் சேர மன்னருள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர்.

சோழ மன்னர் முதல் பராந்தக சோழனின் (கி.பி.907–953) இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழனும், (கி.பி.957–970) அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பும் தன் மகன் மதுராந்தகன் என்னும் உத்தம சோழன் (கி.பி.970–985) ஆட்சி புரிந்ததை கண்டவர். பின்பு ஆட்சியேற்ற அருள் மொழிவர்மன் என்னும் ராஜராஜ சோழன் (கி.பி.985–1014) ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இம்மாதரசி ஆறு சோழ மன்னர்கள் சோழ மண்டலத்தை ஆள்வதனை காணும் பேறு பெற்றவர். இவரை போல் வாழ்ந்த பேரரசி ஒருவரை உலகில் காண இயலாது.

இவர் ஆறு பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றை சோழர் சரித்திர நூற்கள் குறிப்பிடுகின்றன. இச்சோழப் பேரரசி அரசர் குடியில் பிறந்தவர். தன் மாமனார், தன் கணவன், தன் கணவனின் தம்பி அரிஞ்சய சோழன் சுந்தரசோழன், மகன் உத்தமசோழன், பேரன் ராசராசன் காலத்தில் வாழ்ந்தவர். கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல் சிறுவனாக இருந்த மகன் உத்தம சோழனை வளர்த்தெடுத்தத் தாயாக விளங்கினார். இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் இவருக்கு பிறந்த ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி, தேவனையும் பாட்டியாக இருந்து வளர்த்தார்.

சுந்தரசோழன் இறந்த பிறகு அருண்மொழி தேவனை பெற்றெடுத்த வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறி உயிர் துறந்ததும் சுந்தரசோழனின் மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் பாட்டியாக விளங்கினார். அப்போது அருண்மொழி தேவனுக்கு வயது 5. பிற்காலத்தில் மாபெரும் பேரரசனாக ராஜராஜன் விளங்கியமைக்கு செம்பியன் மாதேவியின் வளர்ப்பு நிலை முக்கிய பங்காற்றியது. இவரை மாபெரும் பேரரசனாகவும், திருமுறைகளை மீட்டெடுத்து, பண்முறைகளையும் மீட்டெடுத்து பண்முறை அடிப்படையில் திருமுறைகளை ராசராசன் தொகுப்பதற்கு இவரின் வளர்ப்பே காரணமாக விளங்கியது.

ராசராசனை பேரரசனாகவும், கோவில் கட்டுமானம் செய்யும் படைப்பாளியாகவும், மக்களை நேசித்த பேரரசனாகவும், ஆட்சியில் பல்வேறு சிறப்புகளை பெறுவதற்கு இவரின் வளர்ப்பு நிலையும், ராசராசனின் தமக்கை குந்தவை நாச்சியாரின் வளர்ப்பும் வழிகாட்டுதலும் காரணமாக விளங்கின.

இதனால் ராசராசன் தனக்கு பிறந்த 3 பிள்ளைகளுக்கு தமக்கு உறுதுணையாக நின்ற மூவரின் பெயரை சூட்டினான். முதலாவதாக தனக்கு பிறந்த மூத்த மகளுக்கு தன் பாட்டியின் சிறப்பு பெயரான மாதேவிஅடிகள் என்று பெயரிட்டான். 2–வது மகளுக்கு தமக்கை குந்தவையின் பெயரை வைத்தான். தனது மகனுக்கு செம்பியன் மாதேவியாரின் மகன் மதுராந்தகன் பெயரை வைத்தான். இம்மதுராந்தகனே பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் என்று அழைக்கப்பெற்றான்.

இம்மாதேவியார் பெயரால் மழ நாட்டில் ஓர் ஊர் உள்ளது. இது இன்றும் செம்பியக்குடி என்று அழைக்கப்பெறுகிறது. இவரது கணவர் கண்டிராதித்தர் பெயரில் கண்டராதித்தம் என்ற ஊர் உள்ளது. இவ்வம்மையார் பெயரில் நாகப்பட்டினத்தின் அருகில் செம்பியன்மாதேவி என்கிற ஊர் உள்ளது. இவ்வூரில் கயிலாயநாதர் கோவில் உள்ளது. இறைவன் பெயர் கயிலாயமுடைய மாதேவர். இறைவி பெயர் பெரிய நாயகி. மூன்று நிலை ராசகோபுரம் உள்ளது.

கயிலாய நாதர் கோவில் செம்பியன் மாதேவியரால் கட்டப்பட்டதாகும். ராஜேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் செம்பியன் மாதேவியின் படிமத்தை இக்கோவிலில் கி.பி.1019–ல் நிறுவினான். (பிற்கால சோழர் சரித்திரம் ப.90) இதன் வழிபாட்டிற்கு வேண்டிய நிவந்தங்கள் அளித்தான். இதனை கல்வெட்டுக்குறிப்பு (481–1925) குறிப்பிடுகின்றது. பிற்காலத்தில் இவருக்கு வெண்கல சிலையையும் அமைத்துள்ளனர். இத்திருவுருவத்தை இன்றும் இவ்வூர் மக்கள் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் என சீர்வரிசையில் பொருட்களை எடுத்து வந்து ஆராதனை செய்து வருகின்றனர்.

செம்பியன் மாதேவியின் மகன் உத்தம சோழனுக்கு மனைவியர் பலர் இருந்தனர் என்று செம்பியன் மாதேவி ஊரின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பட்டன தானதுங்கி, மழபாடித்தென்னவன் மாதேவி, இருங்கோளர்மகள், வானவன்மாதேவி, விழுப்பரையர் மகள் கிழானடிகள், பழவேட்டையர் மகள், பட்டத்தரசி திரிபுவன மாதேவி அன்றியும் பஞ்சவன் மாதேவி, சொர்ணமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் எனப் பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் தம் மாமியார் செம்பியன்மாதேவி பெயரால் அமைத்த திருக்கயிலாய முடையார் ஆலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், திங்கள் வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் பல அளித்தமையை கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

இவ்வம்மையார்க்கு நெடுநாட்கள் குழந்தையின்றி இருந்தது. பின்பு மதுராந்தகன் என்னும் உத்தம சோழனை மகனாகப் பெற்றார். மகன் குழந்தையாய் இருந்தமையால் கண்டராதித்தன் தம்பி அரிஞ்சய சோழன் இளவரசு பட்டம் பெற்றான். கி.பி.954–ல் அரிஞ்சய சோழன் இளவரசு பட்டம் பெற்றான். கி.பி.957–ல் கண்டராதித்த சோழன் இறந்தார். இளம் புதல்வனைக் காக்க வேண்டியும் சிவஞான செல்வராக விளங்கிய சிவத்தொண்டுகளை ஆற்ற வேண்டியும் இவ்வம்மையார் உயிர் வாழ்ந்தார். சிவ தொண்டுகள் செய்வதிலேயே பெரும் கவனம் செலுத்தினார்.

திருநல்லம்திருமுறை தலங்களுள் திருநல்லமும் ஒன்றாகும். சோழநாட்டு தென்கரை தலங்களுக்குள் ஒன்று இன்று இத்தலத்தை கோனரிராஜபுரம் என்று அழைக்கின்றனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலை கற்றளியாக்கி தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என அழைத்திட செம்பியன் மாதேவியார் ஏற்பாடு செய்தார்.

இக்கோவிலில் தன் கணவன் இங்குள்ள இறைவனை வழிபடுவது போல் ஒரு படிமத்தையும் வைத்தார். அப்படிமத்தின் கீழ் உள்ள கல்வெட்டில் ஸ்வஸ்திஸ்ரீ கண்டராதித்தஸ்ரீ தேவர் தேவியார் மாதேவடிகளாரான ஸ்ரீ செம்பியன்மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ கண்டராதித்தத் தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையாருக்கு திருக்கற்றளி எழுந்தருளிவித்த இத்தகுக் கற்றளியிலேயே திருநல்ல முடையாரை திருவடி தொழுகின்றாராக எழுந்தருளிவித்த கண்டராதித்த தேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இத்திருக்கோவிலில் நாள்தோறும் வழிபாடும் பிறவிழாக்களும் நடைபெறுவதற்கு செம்பியன்மாதேவி நிலங்கள் வழங்கியுள்ளார்.

இவ்வம்மையார் கற்றளியாக்கிய கோவில்களுக்குள் விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலும் ஒன்றாகும். இறைவன் பெயர் பழமலைநாதர். இறைவி பெயர் பெரியநாயகி. இக்கோவிலின் இப்பொழுதுள்ள சுற்றளி செம்பியன் மாதேவியால் கட்ட பெற்றதாகும். இக்கோவில் உத்தமசோழனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் கி.பி.982–ல் கற்றளியாக்கப்பட்டுள்ளது. இவர் இக்கோவில் அன்றி இக்கோவிலில் உள்ள ஸ்நபந மண்டபம், கோபுரம், சுற்றாலை, பரிவாரத் தேவதைகளுக்கான கோவில் கட்டி உள்ளார்.

இவ்வமையார் திருவாரூர் அறநெறிக் கோவிலை சுற்றியாக்கியுள்ளார். திருத்துருத்தி என்று அழைக்கப்பெற்ற குத்தாலம் சொன்னவாறு அறிவார் கோவிலையும் கற்றளியாக அமைத்து தந்துள்ளார். திருமணஞ்சேரி கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார். ஆநாங்கூர் கோவிலையும் கற்றளியாக அமைத்துள்ளார். திருக்கோடிக்கா கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார்.

தென்குரங்காடு துறை ஆபத் சகாயேஸ்வரர், பவளகட கொடியம்மை கோவிலை கற்றளியாக்கி உள்ளார். கல்வெட்டில் இறைவன் திருக்குரங்காடு துறை மகாதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். செம்பியன்மா தேவியாரை குறிப்பிடும் பொழுது உத்தமதேவரை திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் மாதேவடிகளாரான செம்பியன் மாதேவியார் என்று குறிப்பிடப்படுகிறார்.

இவ்வம்மையாரின் இறுதி திருப்பணி பெற்ற கோவில் திருவக்கரை கோவிலாகும். இக்கோவில் ராஜராஜ சோழன் ஆட்சியின் 16–ம் ஆண்டாகிய கி.பி.1001–ல் கற்றளியாக்க பெற்றுள்ளது மற்றும் இக்கோவிலுக்கு இவ்வம்மையார் செய்த தொண்டுகளும் குறிப்பிட பெற்றுள்ளன. இதன் பிறகு இவ்வம்மையார் பற்றிய குறிப்புகள் காணப் பெறவில்லை. எனவே கி.பி.1001–ல் இவர் சிவனடியை அடைந்திருக்க வாய்ப்புள்ளது.

இம்மாபெரும் பேரரசி 1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன், 2. கணவர் கண்டராதித்தன், 3. கொழுந்தன் அரிஞ்சய சோழன், 4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன், 5. தன் மகன் உத்தம சோழன், 6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் காலம் வரை வாழ்ந்து சிவாலயங்களை கற்றளிகளாக்கியும், நாள் வழிபாட்டிற்கும் மாத வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் அளித்தும், சோழ அரசை நிலையான அரசாக்கிய குலமாணிக்கமாக திகழ்கிறார்.

பிற்காலத்தில் சோழ வம்சத்து பெண்கள் திருக்கோவில்களில் நிவந்தம் அளிக்கும் மரபைத் தோற்றுவித்தார். இவ்வம்மையார் உய்யக்கொண்டான் திருமலை என்னும் திருக்கற்குடியில் விழுமியர்க்கு பொன்னாலும் மணியாலும் இழைத்த திருமுடி அளித்தார். இம்மரபு பின் வந்தோராலும் பின்பற்றப்பட்டன. இவர் மேற்கொண்ட அறப்பணிகள் பிற்காலத்தவருக்கு வழிகோலியுள்ளன. இவ்வம்மையார் வரலாற்று ஆசிரியர்களால் பெண்ணுலகம் போற்றும் மாதேவ அடிகளாராகவும் சோழர் குல மாணிக்கமாகவும், உத்தம சீலியாகவும் போற்றப்படுகிறார்.

அரியலூர் மாவட்டம் திருமழப்பாடி அருகே உள்ள செம்பியக்குடி கிராமத்தில் அவதரித்த செம்பியன் மாதேவிக்கு அவ்வூர் மக்கள் 1000 கிலோவில் ஐம்பொன் சிலை செய்ய முடிவு செய்து உள்ளனர். இதற்காக செம்பியன் மாதேவி அறக்கட்டளை நிறுவி தலைவர் சைவராஜ் தலைமையில் பொதுமக்களிடம் சிலை செய்தற்காக தங்கம், பித்தளை உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வருகிறார்கள். இப்பணிக்கு தஞ்சை மாவட்டத்தில் இருந்தும் மக்கள் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

செம்பியன் மாதேவி சிலை செய்யப்பட்டு அவர் பிறந்த நாளான வருகிற 2015–ம் ஆண்டு சித்திரை மாதம் கோட்டை நட்சத்திர நாளில் நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

– முனைவர் சண்முக. செல்வகணபதி, தஞ்சாவூர்.

நன்றி -maalaimalar

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 3:05 pm

அருமை..அருமை...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சோழர் குல மாணிக்கமாக திகழ்ந்த செம்பியன் மாதேவி W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக