Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
+3
நவீன்
M.Saranya
ayyasamy ram
7 posters
Page 1 of 1
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
’ஹலோ நான் படம் பண்ணப் போறேங்க…குட்டிப் புலி படத்துல உங்க கேரக்டர் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நீங்கதான் என் படத்தோட வில்லன். உங்ககிட்ட எப்ப கதை சொல்லலாம்’’னு ஒரு போன் வர, நம்ம படத்தை கூட பாக்காமலே…. வெறும் ’கேள்விப்பட்டேன்’னு சொல்லி போன் பண்றாருனா..இவரு பெரிய டைரக்டரா இருப்பாருன்னு நினைச்சு, சரிங்க சார் எங்க வரணும்…எப்ப வரணும்னு கேட்டுட்டு போனை வச்சுட்டேன்…
-
அதுக்கப்புறம் என்னாச்சுங்கிறது தான் இப்ப நான் சொல்ல போறது’’ என சுவாரஸ்யம் கூட்டி பேச ஆரம்பித்தார் நடிகர் குட்டிப்புலி ராஜசிம்மன்.
-
-
போன்ல பேசுன அந்த டைரக்டரை எப்படியாவது சந்திக்கணும்னு பவானியில் இருந்தவரை கோயம்புத்தூர்க்கு வர சொன்னேன். அவரை நான் இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்ல. ஒரு பஸ் ஸ்டாப்ல இருக்குறதா சொல்லி என்னை வரச் சொன்னார். நானும் அவர் சொன்ன பஸ் ஸ்டாப்புக்கு போனேன். அங்க நாலஞ்சு பொண்ணுங்களும் பார்வையில்லாத ஒருவர் கண்ணாடி போட்டுட்டும் உட்கார்ந்துட்டு இருந்தாங்க.
-
இவர் மட்டும் அந்த இடத்துல இல்ல… ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன். அவர் வரலை… சரி… எதுக்கும் இன்னொரு தரம் அவருக்கு போன் பண்ணி பாப்போம்னு போன் பண்ணதும் பக்கதுல இருந்தவர் போன்ல ரிங் டோன் கேட்டுச்சு. அதை நான் கண்டுக்காம லைன் ஆன் ஆனதும் ஹலோன்னு சொல்றேன்… அவரும் ஹலோன்னு சொல்றார்.. திரும்ப திரும்ப நம்ப முடியாம ஹலோ சொல்லி பாக்குறேன். அது அவரே தான். போனை கட் பண்ணிட்டு அவர் பக்கதுல போயி நிக்குறேன். அவருக்கு நான் நிக்குறது தெரியல. அந்த பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்த பார்வையில்லாதவர் தான் நான் தேடி வந்த டைரக்டர்.” கொஞ்சமாய் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறார் ராஜசிம்மன்.
’’என் பேரு ஸ்ரீதர் சார். எனக்கு சொந்த ஊர் பவானி. சினிமாவுல டைரக்டர் ஆகணும். அதான் என் ஆசை’’ன்னு சொன்னார். என்னால ஆச்சரியத்தை அடக்கவே முடியலை. எப்படிங்க பிறவியிலேயே உங்களுக்கு பார்வை இல்லையான்னு கேட்டதும் கண்ணாடியை கழட்டினார். அப்படியே நான் அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டேன்.
-
ஒரு கண் சுத்தமாவே இல்லாம கண் இருக்குற இடத்துல வெறும் பள்ளம் மட்டும் தான் இருந்துச்சு. இன்னொரு கண்ணுல சுத்தமா பார்வை இல்ல. எப்படி ஆச்சுன்னு கேட்டப்ப, 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்ஸிடண்ட்ல கண்ணே பிதுங்கி வெளிய வந்துருச்சு. இன்னொரு கண்ணுலயும் பார்வை போயிடுச்சு. நான் உயிர் பொழச்சத்தே பெரிய விசயம்’னு அவர் சொன்னப்ப நான் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
-
-
பார்வையில்லாத நிலையிலும் உதவி இயக்குனர்கள் உதவியோட படம் பண்ணிடுவேன்னு சொன்ன அவரோட தன்னம்பிக்கைக்கு ஏதாவது பண்ணனும்னு தோனிச்சு. அவருக்கு கண் பார்வை கொண்டு வர அளவுக்கு என் கிட்டயும் பணம் இல்ல. அவருக்காகவே ‘ஆஹனா’ங்கிற பேர்ல ஒரு பவுண்டேஷன் ஆரம்பிச்சு அவருக்கு கண் பார்வை கிடைக்க தொடர்ந்து ரெண்டு மூணு மருத்துவமனைகளுக்கு கூட்டிட்டுப் போனேன்.
-
இப்போ 2 தடவை அவருக்கு ஆபரேஷன் செய்த பிறகு அவரோட ஒரு கண்ணுல மட்டும் 40 சதவீத அளவுக்கு பார்வை கிடைச்சது. இந்த சம்பவம் நடந்து சரியா ஒரு வருஷம் ஆகுது.
இப்பவும் அவர் அதே வெறியோட டைரக்டர் ஆகணும்னு தீவிரமா இயங்கிட்டு இருக்குறார். அவருக்கு பார்வை இல்லாத சமயத்துலயே படம் எடுத்து ரிலீஸ் பண்ணியிருந்தார்னா ’பார்வை இல்லாத முதல் மாற்றுத்திறனாளி இயக்குநர்’ங்குற பேரு அவருக்கு கிடைச்சிருக்கும். அந்த அளவுக்கு அவர் திறமையானவர்னு சொல்றதுக்காக இதை நான் சொல்றேன். எங்கேயோ சென்னையில இருந்த நான் கோயம்புத்தூர் போயி எதுக்கு அவரை சந்திச்சிருக்கணும்…
-
யோசிச்சப்ப ஒரு விஷயம்தான் தோணுச்சு. இவர் மூலமா ஆரம்பிச்ச பவுண்டேஷனுக்கும் ஒரு வருசம் ஆகுது. அது மூலமா நாலு பேருக்கு நல்லது செய்ய முடியுது. என்னால முடிஞ்ச வரைக்கும் அவரோட பார்வையை ஓரளவுக்கு கொண்டு வந்துட்டேன். ஆண்டவன்தான் மீதி கண்ணை திறக்கணும்.’’ நெஞ்சத்தில் கை வைத்து விடை பெறுகிறார் ராஜசிம்மன்!
-பொன்.விமலா
நன்றி: நியூஸ் விகடன்
Re: ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
அருமையான பதிவு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
ஆண்டவன்தான் மீதி கண்ணை திறக்கணும்
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
ஆஹானு சொல்லற அளவிற்கு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க காரணமாக இருந்தவருக்கும் ,
ஆரம்பித்தவருக்கும் ஆஹா ஓஹோன்னு ஒரு பெரியப் பாராட்டு
ரமணியன்
ஆரம்பித்தவருக்கும் ஆஹா ஓஹோன்னு ஒரு பெரியப் பாராட்டு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
குட்டிப்புலி படத்துல அவரோட நடிப்பு, பார்வை எனக்கு பிடித்திருந்தது. இப்போ
உதவி செய்யும் குணம் பற்றி தெரிந்ததும் மனிதர் மேலும் முன்னேறி உதவிகள் பல
புரிய ஆண்டவர் அருள் புரிய வேண்டும்.
உதவி செய்யும் குணம் பற்றி தெரிந்ததும் மனிதர் மேலும் முன்னேறி உதவிகள் பல
புரிய ஆண்டவர் அருள் புரிய வேண்டும்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
ஆண்டவன் அருள் புரிய வேண்டும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்
மிக, மிக பாராட்டப்பட வேண்டியவர்கள் இருவருமே... தன் குறையை, ஒரு குறையாய் எண்ணாமல் சாதிக்க வேண்டும் என்று வெறி கொண்ட அந்த கண் பார்வையற்ற இளைஞரும், அவருக்காய் தொண்டுள்ளம் ஆரம்பித்த ராஜசிம்மனுக்கும் இறைவன் எப்போதும் உடன் இருந்து காக்கட்டும்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Similar topics
» மிருகம்பாதி கிறிக்கற் மீதி
» கதை பாதி ...காஸ்ட்யூம்ஸ் மீதி!
» ஆடை பாதி, சர்ச்சை மீதி!
» முதல் பார்வை: அச்சம் என்பது மடமையடா - காதல் பாதி ஆக்ஷன் மீதி!
» பாதி மாயம் மீதி பிரசாதம்!
» கதை பாதி ...காஸ்ட்யூம்ஸ் மீதி!
» ஆடை பாதி, சர்ச்சை மீதி!
» முதல் பார்வை: அச்சம் என்பது மடமையடா - காதல் பாதி ஆக்ஷன் மீதி!
» பாதி மாயம் மீதி பிரசாதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|