ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

+2
ஜாஹீதாபானு
Powenraj
6 posters

Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! Empty பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Post by Powenraj Tue Nov 18, 2014 4:12 pm

பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் என நம் அன்றாடத் தேவைகளில் பால் மற்றும் பால் பொருட்களின் பங்கு அதிகமே. ஆனால், பாலின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதன் காரணமாக நடுத்தர மக்கள் பலரும் தற்போது, பாலுக்கு மாற்று உணவு என்ன என் கிற கோணத்தில் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

'நம் முன்னோர்கள் காலத்தில் காளைகள் உழவுக்காகவும், பசுக்கள் இனப்பெருக்கத்துக்காகவும்தான் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் பசுவின் பாலை மனிதன் பயன்படுத்தத் துவங்கினான். ஆனால், பசுவின் பால் நமக்குத் தேவையற்றது என்பதுதான் உண்மை. ஓர் உயிரை வருத்திப் பெறும் பால் அவசியமில்லாதது!’ என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். அதேசமயம், 'பெரியவர்களுக்கு வேண்டுமானால் பால் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், குழந்தைகளை எப்படி பாலில் இருந்து விலக்கி வைக்க முடியும்?’ என்பது அம்மாக்கள் பலரின் கேள்வி.



இந்தக் கேள்வியை சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீநிவாசனுக்கு மாற்றியபோது, ''குழந்தைகளைப் பொறுத்தவரை தாய்ப்பால்தான் முக்கியம். மாட்டுப்பால் தேவையே இல்லை. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்துக்குக் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஒரு தாயின் மனநிலையே பால் சுரப்புக்குக் காரணம். சிறிய மார்பகம், சத்தில்லாத தேகம் என பால் தராததற்கு பொய்யான காரணங்களை பெண்கள் கண்டுபிடிப்பது முற்றிலும் தவறு. அதேபோல் பால் கொடுப்பதால் மார்பகங் களின் அழகு போய்விடும் என்பதும் வதந்தியே!'' என்ற டாக்டர், பால் சுரப்புக்கு கை கொடுக்கும் வழிமுறைகளைக் குறிப்பிட்டார்.

''பாலூட்ட, முதலில் ஒரு தாய் மனதளவில் தயாராக வேண்டும். தன் குழந்தைக்குத் தன்னால் பால் கொடுக்க முடியும், கொடுக்க வேண்டும் என அவள் நினைத்தாலே, கண்டிப்பாக பால் சுரக்கும். ’வில்லிங் மதர், சக்கிங் பேபி' (willing mother, sucking baby) என்பார்கள். தாய் விருப் பத்துடன் கொடுக்கும்போது, குழந்தையும் பால் குடிக்கும். இதற்காக தாயானவள் தின மும் சாப்பிடும் உணவோடு சற்று கூடுதல் சத்துக்களை சேர்த்துக்கொண்டாலே போதுமானது. அப்படியும் தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், குழந்தையை மார்பகங்களில் சப்புவதற்கு நன்கு பழக்கப் படுத்த வேண்டும். ஒரு குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு சப்ப ஆரம்பிக்கிறதோ அந்த அளவுக்கு பால் சுரப்பதும் அதிகமாகும். இந்த இரு வகைகளிலும் பால் சுரக்கவில்லை என்றால், தாய்க்கும் தாயின் குடும்பத்தினருக்கும் கவுன்சலிங் கொடுத்து காரணத்தைக் கண்டறிய வேண்டுமே ஒழிய, தாய்ப் பால் சுரக்கவில்லை என தானாக முடிவெடுத்து, பால் பவுடரையோ அல்லது பசும்பாலையோ நாடுவது முற்றிலும் தவறு'' என்ற டாக்டர், தாய்ப்பாலின் சிறப்பை நிரூபிக்கும் ஆய்வு முடிவுகளையும் தொட்டுக் காட்டினார்.

'அதிக நாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள், மற்ற குழந்தைகளைவிட மூளை வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், 35 சதவிகித பெண்கள் மட்டுமே முதல் 6 மாதம் தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். இது 100 சதவிகிதமாக உயர வேண்டும். 6 மாதத்துக்குப் பிறகு சத்துமாவுக் கஞ்சி, கிழங்கு வகைகள், பருப்பு, இட்லி முதலான திட உணவுகளைக் குழந்தைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். பாலில் உள்ள கால்சியம் சத்து இந்த உணவுகளின் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும்போது, பசும் பாலின் அவசியம் இல்லை. குழந்தையின் 2 வயதுப் பிறகு குழந்தை விரும்பும்பட்சத்தில் பசும்பாலை அறிமுகப்படுத்த லாம். அதுவரை குழந்தைக்கு பசும்பால் தேவையே இல்லை!'' என்றார் டாக்டர் ஸ்ரீநிவாசன் அழுத்தமாக!



குழந்தைகளுக்குத் தாய்ப் பால் போதும். பெரியவர்கள் பாலை ஒதுக்கிவிட்டால், அவர்களுக்கான மாற்று உணவு?

இதைப் பற்றி டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் கூறுவதை கேட்போமா..?!

''பாலில் உள்ள கால்சியம் சத்து அவசியமான ஒன்றுதான். ஆனால், அதை பாலில் இருந்துதான் பெற வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கால்சியம் சத்து, கேழ்வரகில் நிறையவே இருக்கிறது. அதனால் கேழ்வரகுக் கஞ்சி, கூழ் என உண்ணப் பழக்கலாம். டீ, காபிக்குப் பதிலாக க்ரீன் டீ, துளசி ஜூஸ், கஞ்சி மாதிரியான மாற்று ஆகாரங்களை எடுத்துக்கொள்ள லாம். அசைவம் சாப்பிடுகிறவர் கள், மீன், கருவாடு (இவற்றின் முள்ளில்கூட கால்சியம் இருப்பதால், எலும்பு போல இருக்கும் மீன் முள்களை மட்டும் மென்று சாப்பிடலாம்!) என்று எடுத்துக் கொள்ளலாம். கீரை, சுண்டல், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித் தழை போன்ற பச்சை உணவுகளிலும் பாலுக்கு நிகரான சத்து இருப்பதால், சைவம் சாப்பிடுபவர்கள் இவற்றை நாடலாம். புட்டரிசி தோசை, கேழ்வரகு அடை இதையெல்லாம் உணவில் சேர்ப்பது நல்லது. பசும்பாலை தவிர்க்கவே முடியாத வர்கள், நேரடியாகப் பசுவின் தரம் பார்த்து பாலை வாங்குவது நல்லது. இல்லையென்றால், பசுவிடம் ஏதேனும் நோய் இருந்து அது நமக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது'' என்று எச்சரித்து முடித்தார் ஷைனி.

ஆர்கானிக் பால்!

கும்மிடிபூண்டியில் உள்ள 'ஆஸ்ட்ரா டெய்ரி (Astra dairy)’ ஆர்கானிக் பால் பண்ணையின் இயக்குநர் ராகேஷ் ரவீந்திரன் கூறும்போது, ''எங்கள் பண்ணைப் பசுக்களுக்கு இயற்கையான முறையில் வளர்க்கப்படும் புற்களையும் தாவரங்களையுமே உணவாகக் கொடுக்கிறோம். தாவங்களின் மீது எந்த ரசாயன உரத்தையும் தெளிப்பது கிடையாது. பூச்சித்தாக்குதல் இருந்தால், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சிவிரட்டிகளையே பயன்படுத்துகிறோம். பசுக்களையும் இயற்கையான சூழலில்தான் வளர விடுகிறோம். பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவற்றை வெளியிடங்களில் வாங்கிக் கொடுப்பதும் இல்லை. இந்த மாடுகளுக்கு வெறும் பச்சைத் தாவரமும் தண்ணீரும்தான் உணவு. இதனால் மாடுகளின் உடம்பில் எந்த ரசாயனக் கலப்பும் இருக்காது. இப்படி இயற்கையான முறையில் வளரும் மாடுகளிடமிருந்து கறக்கும் பாலை, உடனுக்குடன் 1 லிட்டர் பாட்டில்களில் அடைப்போம். அதை அப்படியே நேரடியாக வாடிக்கையாளர் களுக்கு விநியோகிப்போம். இதனால் பாலில் எந்தக் கலப்பும் நடக்க வாய்ப்பில்லை. இப்படி இயற்கையாக கிடைப்பதால், இந்தப் பாலின் விலையை லிட்டர் 60 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறோம்!'' என்றார்.

Nandri:vikatan
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! Empty Re: பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Post by ஜாஹீதாபானு Wed Nov 19, 2014 3:18 pm

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! 103459460 பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! Empty Re: பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Post by mbalasaravanan Wed Nov 19, 2014 3:56 pm

நல்ல பதிவு நன்றி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! Empty Re: பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Post by M.Saranya Wed Nov 19, 2014 4:13 pm

நல்ல கருத்துள்ள பகிர்வு ....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! Empty Re: பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Post by krishnaamma Thu Nov 20, 2014 8:19 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு, நன்றி ராஜ் புன்னகை சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! Empty Re: பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Post by விமந்தனி Thu Nov 20, 2014 11:05 pm

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! 103459460


பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபால் சாப்பிடுவது அவசியம்தானா..?! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?! Empty Re: பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum