Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதக் கடைசி: பணப் பிரச்னையைத் தீர்க்க சில வழிகள்!
4 posters
Page 1 of 1
மாதக் கடைசி: பணப் பிரச்னையைத் தீர்க்க சில வழிகள்!
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு முதல் வாரத்தில் எப்படியும் சம்பளம் கிடைத்துவிடும். சம்பளம் கிடைத்த 20 நாட்கள் எந்த விதமான பிரச்னையும் இல்லாமல் நாட்கள் நகரும். 20 ஆம் தேதிக்குப் பிறகுதான் பிரச்னை ஆரம்பிக்கும்.
இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதற்கு என்ன செய்வது என்பதில் ஆரம்பித்து, அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது கூட சிரமமாக இருக்கும். இருவர் வேலைக்குப் போகும் வீடுகளிலும் இந்தப் பிரச்னை இருக்கும்.
இந்தப் பிரச்னையில் சிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொரு மாதமும் இந்தப் பிரச்னை வரும்போதெல்லாம் அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் குறிப்பிட்ட தொகையைத் தனியாக எடுத்துவைத்துவிட வேண்டும் என சபதம் எடுப்போம். ஆனால், அதை ஒருபோதும் செய்யமாட்டோம். சபதம் எல்லாம் காற்றில் பறந்துபோகும். இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கு ஒரேவழி திட்டமிடல்தான்.
* சம்பளம் கைக்குக் கிடைத்ததும் குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக வைத்துவிட வேண்டும். அதேபோல, சேமிப்பு அல்லது ஏதாவது கடனுக்காக இ.சி.எஸ். கொடுத்திருந்தால் அந்தத் தொகை போக மீதமுள்ள தொகையில் அந்த மாத செலவுக்கான பட்ஜெட்டை திட்டமிடுவது நல்லது.
*பட்ஜெட் போடும்போது செலவுகளை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்வது நல்லது. அதாவது, தேவையான செலவு, தேவையில்லாத செலவு என பிரித்து பட்ஜெட் போடலாம். இதில் தேவையான செலவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், தேவையில்லாத செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது.
* ஹோட்டல், ஷாப்பிங், அவுட்டிங் போன்ற செலவுகளை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாகச் செய்வது நல்லது. கிரெடிட் கார்டு பில்லை சரியாகத் திரும்பச் செலுத்துபவர்கள் அதைப் பயன்படுத்தலாம். இல்லையெனில், டெபிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும். ஏனெனில், கார்டு மூலமாக செலவு செய்யும்போது எந்த தேதியில் என்ன செலவு செய்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், ஒரு மாதத்தில் 2, 3 முறை ஹோட்டலுக்குப் போயிருந்தால் அதை எளிதாகக் கண்டுபிடித்து குறைக்க முடியும்.
* பார்த்த பொருட்களை எல்லாம் வாங்கும் மனநிலைக் கொண்டவர்கள், ஷாப்பிங் செல்லும்போது என்ன பொருள் வாங்கப் போகிறோம், அதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதைத் திட்டமிட்டு அதற்குத் தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்துச் செல்வது நல்ல பழக்கமாக இருக்கும்.
*சம்பளம் வந்தவுடனேயே கிரெடிட் கார்டு பில், மின்சாரக் கட்டணம் போன்ற கட்டணங்களைச் செலுத்திவிடுவது நல்லது. இல்லையெனில் இன்றைக்கு, நாளைக்கு என கடைசியில், கட்டணத்தைச் செலுத்த கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும்.
*மாத கடைசியில் பிரச்னைகளைச் சமாளிக்க எடுத்து வைக்கும் தொகையை வங்கிக் கணக்கு அல்லது ஆர்.டி.யில் சேமித்து வைப்பது நல்லது. இந்த வங்கி கணக்குக்கான டெபிட் கார்டை தேவையானபோது மட்டும் பயன்படுத்துவது நல்லது. எப்போதுமே இந்த கார்டை கையில் வைத்திருந்தால், அது செலவு செய்வதற்கான வழியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
*நண்பர்கள் அல்லது உடன் வேலைபார்ப்பவர்களிடம் கடன் வாங்கி எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. ஏனெனில், இந்தப் பழக்கம் தொடர்ந்தால் அதிகக் கடன் வாங்க வைக்கும். இதுவும் ஒருவகையில் செலவை அதிகரிக்கும்.
* எல்லா செலவுகளுக்கும் ஒரு வரையறை வைத்துக்கொள்வது நல்லது. செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும் திட்டமிட்டு அதற்குள் செலவை வைத்துக்கொள்வது நல்லது.
இதையெல்லாம் சரியாகச் செய்தாலே மாதக் கடைசியிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
- இரா.ரூபாவதி
--முக நூல் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடுவதற்கு என்ன செய்வது என்பதில் ஆரம்பித்து, அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது கூட சிரமமாக இருக்கும். இருவர் வேலைக்குப் போகும் வீடுகளிலும் இந்தப் பிரச்னை இருக்கும்.
இந்தப் பிரச்னையில் சிக்காதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒவ்வொரு மாதமும் இந்தப் பிரச்னை வரும்போதெல்லாம் அடுத்த மாதம் சம்பளம் வந்ததும் குறிப்பிட்ட தொகையைத் தனியாக எடுத்துவைத்துவிட வேண்டும் என சபதம் எடுப்போம். ஆனால், அதை ஒருபோதும் செய்யமாட்டோம். சபதம் எல்லாம் காற்றில் பறந்துபோகும். இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுவதற்கு ஒரேவழி திட்டமிடல்தான்.
* சம்பளம் கைக்குக் கிடைத்ததும் குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக வைத்துவிட வேண்டும். அதேபோல, சேமிப்பு அல்லது ஏதாவது கடனுக்காக இ.சி.எஸ். கொடுத்திருந்தால் அந்தத் தொகை போக மீதமுள்ள தொகையில் அந்த மாத செலவுக்கான பட்ஜெட்டை திட்டமிடுவது நல்லது.
*பட்ஜெட் போடும்போது செலவுகளை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்வது நல்லது. அதாவது, தேவையான செலவு, தேவையில்லாத செலவு என பிரித்து பட்ஜெட் போடலாம். இதில் தேவையான செலவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், தேவையில்லாத செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது.
* ஹோட்டல், ஷாப்பிங், அவுட்டிங் போன்ற செலவுகளை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாகச் செய்வது நல்லது. கிரெடிட் கார்டு பில்லை சரியாகத் திரும்பச் செலுத்துபவர்கள் அதைப் பயன்படுத்தலாம். இல்லையெனில், டெபிட் கார்டை பயன்படுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும். ஏனெனில், கார்டு மூலமாக செலவு செய்யும்போது எந்த தேதியில் என்ன செலவு செய்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், ஒரு மாதத்தில் 2, 3 முறை ஹோட்டலுக்குப் போயிருந்தால் அதை எளிதாகக் கண்டுபிடித்து குறைக்க முடியும்.
* பார்த்த பொருட்களை எல்லாம் வாங்கும் மனநிலைக் கொண்டவர்கள், ஷாப்பிங் செல்லும்போது என்ன பொருள் வாங்கப் போகிறோம், அதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதைத் திட்டமிட்டு அதற்குத் தேவையான பணத்தை மட்டும் கையில் எடுத்துச் செல்வது நல்ல பழக்கமாக இருக்கும்.
*சம்பளம் வந்தவுடனேயே கிரெடிட் கார்டு பில், மின்சாரக் கட்டணம் போன்ற கட்டணங்களைச் செலுத்திவிடுவது நல்லது. இல்லையெனில் இன்றைக்கு, நாளைக்கு என கடைசியில், கட்டணத்தைச் செலுத்த கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும்.
*மாத கடைசியில் பிரச்னைகளைச் சமாளிக்க எடுத்து வைக்கும் தொகையை வங்கிக் கணக்கு அல்லது ஆர்.டி.யில் சேமித்து வைப்பது நல்லது. இந்த வங்கி கணக்குக்கான டெபிட் கார்டை தேவையானபோது மட்டும் பயன்படுத்துவது நல்லது. எப்போதுமே இந்த கார்டை கையில் வைத்திருந்தால், அது செலவு செய்வதற்கான வழியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
*நண்பர்கள் அல்லது உடன் வேலைபார்ப்பவர்களிடம் கடன் வாங்கி எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. ஏனெனில், இந்தப் பழக்கம் தொடர்ந்தால் அதிகக் கடன் வாங்க வைக்கும். இதுவும் ஒருவகையில் செலவை அதிகரிக்கும்.
* எல்லா செலவுகளுக்கும் ஒரு வரையறை வைத்துக்கொள்வது நல்லது. செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதையும் திட்டமிட்டு அதற்குள் செலவை வைத்துக்கொள்வது நல்லது.
இதையெல்லாம் சரியாகச் செய்தாலே மாதக் கடைசியிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
- இரா.ரூபாவதி
-ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மாதக் கடைசி: பணப் பிரச்னையைத் தீர்க்க சில வழிகள்!
நல்ல தகவல் நன்றி பாலாஜி
தேவைப்படும்போது வாங்கிக்குறேனு சொல்லி நான் என் பொண்ணுகிட்ட குடுத்து வைப்பேன் . ஆனா 2 நாளில் திரும்பவும் வாங்கிடுவேன்.
அப்புறம் எதுக்குமா குடுக்குறனு திட்டுவா
தேவைப்படும்போது வாங்கிக்குறேனு சொல்லி நான் என் பொண்ணுகிட்ட குடுத்து வைப்பேன் . ஆனா 2 நாளில் திரும்பவும் வாங்கிடுவேன்.
அப்புறம் எதுக்குமா குடுக்குறனு திட்டுவா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாதக் கடைசி: பணப் பிரச்னையைத் தீர்க்க சில வழிகள்!
ரொக்கமாக கொடுக்கவேண்டிய செலவுகளை மாத முதலில் செய்து விட்டு ,பின்பு உபயோகப்படுத்தக்கூடிய இடங்களில் கார்டை தேய்க்கலாம் . (பெட்ரோல் உள்பட). கண்மூடித்தனமாக செலவு செய்வதை தவிர்த்தாலே ,
மாதக்கடைசி தட்டுப்பாடு வரவே வராது .
சிறு வயது முதலே நான் கற்றுக்கொண்ட பாடம் . வரவுக்கு தக்க செலவு செய்யவே ஆசைபடுவேன் .
பணம் இல்லாததால் ,வாங்கவில்லை என்ற கவலை அடைந்ததே இல்லை .
ரமணியன்
மாதக்கடைசி தட்டுப்பாடு வரவே வராது .
சிறு வயது முதலே நான் கற்றுக்கொண்ட பாடம் . வரவுக்கு தக்க செலவு செய்யவே ஆசைபடுவேன் .
பணம் இல்லாததால் ,வாங்கவில்லை என்ற கவலை அடைந்ததே இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மாதக் கடைசி: பணப் பிரச்னையைத் தீர்க்க சில வழிகள்!
நல்ல பகிர்வு பாலாஜி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!
» பணப் பரிவர்த்தனை-கூடுதல் கவனம் தேவை
» நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
» பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
» பணப் பரிவர்த்தனை-கூடுதல் கவனம் தேவை
» நீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்க வழிகள் இருக்கு!
» பாகிஸ்தான் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்த ஆடுகள்..!
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|