புதிய பதிவுகள்
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
80 Posts - 45%
heezulia
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
80 Posts - 45%
mohamed nizamudeen
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
5 Posts - 3%
prajai
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 2%
vista
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
2 Posts - 1%
mini
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
Anthony raj
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%
balki1949
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
437 Posts - 56%
heezulia
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
278 Posts - 36%
mohamed nizamudeen
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
24 Posts - 3%
prajai
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
5 Posts - 1%
mini
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
4 Posts - 1%
vista
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கொங்குத் தமிழ் Poll_c10கொங்குத் தமிழ் Poll_m10கொங்குத் தமிழ் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொங்குத் தமிழ்


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Thu Nov 06, 2014 10:36 am

கொங்குத் தமிழ்
கொங்குத் தமிழ் என்பது கொங்கு நாட்டு மக்கள் பேசும் தமிழ் மொழி ஆகும். கொங்கு என்ற சொல்லுக்குத் தேன், பூந்தாது என்று பொருள். ஆயினும் அதற்கும் இந்த நாட்டின் பெயருக்கும் தொடர்பிருப்பதாக இன்னும் மொழியியல்படிச் சான்றுகள் இல்லை.
தமிழின் சிறப்பு ‘ழ’ என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு ‘ற’ மற்றும் ‘ங்’ என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, “தண்ணிவார்த்துகுட்டு”, ‘தண்ணிஊத்திக்கிட்டு’ என்று கூறுவார்கள்.
மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ். ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் ‘ங்கோ’ போட்டு மரியாதையாகப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது ‘ங்கோ’ என்பதற்கு பதில் ‘ங்’ போட்டும் பேசுவார்கள். சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று ‘கோ’ வை சொல்லாமல் முழுங்கி விடுவார்கள்.


கொங்குப் பகுதியில் புழங்கும் சில சொற்கள் (அகரவரிசையில்)
* அக்கட்ட, அக்கட்டு. அக்கட்டாலே – அந்த இடம், அந்த இடத்திலே. “நீ அக்கட்டாலே போய் உட்காரு”
* அங்கராக்கு – சட்டை
* அட்டாரி, அட்டாலி – பரண்
* அப்பச்சி , அப்புச்சி- தாய்வழித் தாத்தா
* அப்பு – அறை. (அவள ஓங்கி ஒரு அப்பு அப்புடா, செவுனி திலும்பரப்பல)
* அம்மாயி – அம்மாவின் அம்மா
* அப்பத்தாள் – அப்பாவின் அம்மா
* ஆம்பாடு – காலும் இடுப்பும் சேரும் மடிப்பான இடம் (ஆம்பாட்டிலே தேய்த்துக் குளி)
* இக்கட்டு – இந்த இடம்
* இட்டாரி (இட்டேறி) – தடம் (வயல்களினிடையே செல்லும் வரப்புப்பாதை, வண்டிப்பாதை)
* இண்டம் பிடித்தவன் – கஞ்சன்
* உண்டி – (sample) = உண்ணும் பதம்? – தர்பூசணியில் உண்டிபோட்டுக்கொடு; எப்படி இருக்கிறதென்று பார்க்கலாம்
* ஊக்காலி (?ஊர்க்காலி)- பெரியவர்கள் சொல் மதியாமல் தான்தோன்றித்தனமாக சுற்றுபவர்களை ஊக்காலி என்பர். ( ரவுடி )
* எச்சு – அதிகம்.
* எகத்தாளம் – நக்கல், பரிகாசம்
* ஏகமாக – மிகுதியாக
* ஒட்டுக்கா – ஒரேயடியாக, இணைந்து (இரண்டு பேரும் ஒட்டுக்காகப் போயிட்டு வாருங்கள் – இருவரும் இணைந்து சென்று வாருங்கள்)
* ஒடக்கான் – ஓணான்
* ஒப்பிட்டு – போளி
* ஒளப்பிரி – உளறு “இவன் என்ன இப்படி ஒளப்பிரிக்கிறான்”
* ஒறம்பற – உறவினர் (உறவின்மு்றை) – விருந்தினர்
* ஓரியாட்டம் – சண்டை: அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான்.
* கட்டுத்தரை – மாட்டுத் தொழுவம்
* கட்டிச்சோற்று விருந்து – கட்டிச்சாத விருந்து , வளைகாப்பு
* கரடு – சிறு குன்று
* கண்ணாலம் – கல்யாணம் \ திருமணம்
* கூம்பு – கார்த்திகை தீபம் ( கூம்பு அவிகிறதுக்குள்ளே அந்தக் காரியத்தைப் பண்ணிடு )
* குரல்வளை \ தொண்டை
* கோடு – கடைசி ( கோட்டுக்கடை – கடைசிக்கடை, அந்த கோட்டில பாரு – அந்த கடைசில பாரு)
* சாடை பேசுறான் – மறைமுகமாக தாக்கிப் பேசுகிறான்
* சிலுவாடு – சிறு சேமிப்பு
* சீரழி – நிலைகுலைதல் (அங்கிங்கே அலைந்து சீரழியவேண்டாம்)
* சீராட்டு – கோபம். (கட்டிக் கொடுத்து மூணுமாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே பிள்ளை சீராடிட்டு வந்துவிட்டது)
* சுல்லான் (சுள்ளான்?) – கொசு
* செம்புலிகுட்டி – செம்மறியாட்டுக்குட்டி
* சோங்கு – சோலைபோலும் மரஞ்செடித்தொகுதி
* தாரை – பாதை
* தொண்டுப்பட்டி – மாடு/ஆடு அடைக்கும் இடம், தொழுவம் – ஆட்டைத் தொண்டுப்பட்டியிலே அடை
* துழாவு – தேடு
* நலுங்கு – உடல் நலம் குன்றிய ( குழந்தைகள் உடல் நலம் குன்றி இருந்தால் மட்டுமே நலுங்கு என்ற சொல்லை புழங்குவார்கள், பெரியவர்களுக்கு இச்சொல்லை பயன் படுத்த மாட்டார்கள் – அவங்க குழந்தை நலுங்கிகிச்சாம் )
* நாயம் – பேச்சு ( அவன் பேச்சு யாருக்கு வேணும் – அவன் நாயம் யாருக்கு வேணும், அங்க என்னடா பேச்சு – அங்க என்னடா நாயம் )
* நோக்காடு – நோய், வலி: அவனுக்கென்ன நோக்காடோ தெரியலை. இன்றைக்கு வரக் காணோம்.
* நோம்பி – (நோன்பு) திருவிழா
* பவுதியாயி நோம்பி – பகவதி அம்மன் திருவிழா
* படு – குளம்போன்ற ஆழமில்லாத நீர்நிலை
* பழமை – பேச்சு ( அங்க என்ன பேச்சு – அங்க என்ன பழமை )
* பாலி – குளத்தை விடச் சிறிய நீர்நிலை.
* பிரி – பெருகு, கொழு (“பெண்கள் மாசமாக இருக்கும்பொழுது வயிறு பிரியும்”)
* புண்ணியாசனை – (< வடமொழி: புண்யாகவசனம்) புதுமனை புகுவிழா
* பெருக்கான் – பெருச்சாளி
* பொக்கென்று – வருத்தமாக (மிட்டாய் தரேனென்று சொல்லிட்டுத் தராமல் இருந்தால் குழந்தை பொக்கென்று போயிடும்)
* பொட்டாட்ட – அமைதியாக இருத்தல்
* பொடக்காலி – புழக்கடை
* பொடனி, பொடனை – (புடனி, பிடனி, பிடரி) பின்கழுத்து
* பொறந்தவன் – உடன் பிறந்த சகோதரர்
* பொறந்தவள் – உடன் பிறந்த சகோதரரி
* மச்சாண்டார் – கணவனின் அண்ணன்
* மழைக்காயிதம் – பாலிதீன் காகிதம்
* மலங்காடு – மலைக்காடு
* முக்கு – முனை, மூலை, வளைவு
* வெகு – அதிக
* வெள்ளாமை – வேளாண்மை \ விவசாயம்.

நன்றி
பண்ணையார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 06, 2014 2:58 pm

அருமை, இதில் அதிக சொற்களை நான் பயன்படுத்துகிறேன்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 06, 2014 4:35 pm

மரியாதை கொடுத்துப் பேசும் தமிழ் கொங்குத் தமிழ்

  நாயந்தானுங்கோ !!


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக